Friday, June 25, 2004

எங்கிருந்தாலும் வாழ்க!!!!

வலைப்பதிவு செய்யரவங்க எல்லாரும் சென்னை மாநகரத்தில்.. சைதைக்கரையோரம் ஒரு மீட்டிங் போடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. எல்லாரும் வந்து கலந்துக்கனும்னு நம்ம கிருபாக்கன்னு கூப்பிட்டிருக்குது..
நம்ம பா.ரா. வருவாங்க , ஐகாரஸ்பிரகாஷ் வருவாங்க , கிருபாக்கன்னு வருவாங்க, மற்றும் நம்ம உறவு வலைப்பதிவுக்காரங்க எல்லாரும் வருவாங்க.. நாமளும் போலாம்னு நினைக்கும் போது நல்லாத்தாங்க இருக்கு.. (அதுலயும் பீச்சோர பானி பூரி வேறயாமே!!) ஆனா இங்கே தென்னந்தோப்பையும், மாடு கண்ணுகளையும் விட்டுட்டு நான்பாட்டுக்கு சென்னப்பட்டனம் வந்துட்டா.. அப்புறம் இங்கே நடக்கபோற பானிப்பட் யுத்தத்த நினைச்சு பார்த்து, நமக்கு உக்கடம் பஸ்டாண்ட் பானி பூரியே போதும்னு மனசதேத்திக்கிட்டேனுங்க.. (ஆஹா!!! உக்கடம் பஸ்டாண்ட் பானி பூரி.. அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சுருச்சேய்!!) எல்லத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்ங்க!! (இத தான் எங்க ஊருல 'ஆசை இருக்கு தாசில் செய்ய, ஆனா அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'ம்பாங்க!!... என்ன ஒரு வித்தியாசம் .. நான் மாடு மேய்கிறேன்..)

ஆகவே நண்பர்களே... " நான் எங்கே இருந்தாலும் என் மனசு உங்க மீட்டிங்க சுத்தி சுத்தியே வரும்" (இதை மட்டும் கொஞ்சம் பாரதிராஜா பட கிளைமக்ஸ் வசனம் மாதிரி படிச்சுக்கோங்க.!! )... யாருப்பா அங்கே 'அப்பா நிம்மதி!!!'ன்னு குரல் குடுக்கிறது..!!!!

கூட்டம் நம்ம கிருபா ஆசைப்படி சூப்பரா சொதப்ப.. எல்லாம் வல்ல பாபாவை.. ச்சே..அது பழசு.. எல்லாம் வல்ல 'ஜக்குபாய்'ய வேண்டி என்னோட இந்த பதிவை முடிச்சுக்கிறேனுங்க

All the Best Folks.......Hats Off to all the initiators ....

No comments: