Thursday, November 18, 2004

எல்லாரும் நல்லா இருக்கீங்களா??

வீரப்பன், ஜெயெந்திரர், தனுஷ்-ஐஸ்வர்யா'ன்னு பல விறுவிறுப்பான, பரபரப்பான, செய்திகளுக்கு நடுவாலயும், இந்த 'ராசா'வை காணமுன்னு நேத்திக்கு உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் அவுஙகவுங்க வீட்டுல, அலுவலகத்தில, அவுங்களோட கணிணி முன்னாடி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கங்கிற செய்தி, என்னுடய ஜப்பான் நாட்டு ரசிகையான செல்வி.ஜியாவூ(!) சித்த முன்னாடி என்னை என்னோட கைத்தொலைபேசியில கூப்பிட்டு சொல்லித்தாங்க தெரிய வந்துச்சு.

உலகமெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களின் நலன் கருதி(!),
அவர்களுடைய ஆர்ப்பாட்டத்திற்க்கு மதிப்பு குடுத்து,
அதுமட்டுமில்லாம,
தனிமடல் மூலமாக என் பதிவை பத்தி வருத்ததோட விசாரிச்ச, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என்னுடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்கி,
கொஞ்ச நாளா கண்டுக்காம விட்டிருந்த என்னோட இந்த பதிவை மறுபடியும் தூசு தட்டி ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கனுங்க..

//
டேய்.. டேய்.. இது அடுக்குமா, இத்தனை நாளா பதிவு செஞ்சு, உன்னோட hitcounter இப்பத்தான் 2000த்தை தாண்டியிருக்கு, இதுக்கே பல்லாயிரக்கனக்கான ரசிகர்களா??..ம்ம்

சரி..சரி.. ஒரு பேச்சுக்கு ஒரு வார்த்தை சொன்னா, உடனே கோவிச்சுக்குவீங்களே!
//

தூசு தட்டியாச்சு... இனி என்ன..??

அது தெரிஞ்சா நான் எழுதிர மாட்டனா?
அதைதாங்க யோசிச்சிட்டு இருக்கேன்.. அவசரப்படாதீங்க..


No comments: