Wednesday, October 27, 2004

பேரும் தெரியாம, மொழியும் தெரியாம, ஒரு விமர்சனம்.

நான் பொதுவா இந்த சீரியல் பார்க்கிற நேரத்துல (7-9 மணி வரை) வீட்டு பக்கமே போறதில்லைங்க, நேத்து மழையினால கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போக வேண்டியதா போச்சு, என்ன செய்யறதுன்னு தெரியாம ரிமோட்ட கையில எடுத்துட்டு சும்மா எல்லா சேனலையும் ஒரு சுத்து வந்தேன். (நான் வீட்டுக்குள்ளார வந்து ரிமோட்ட கையில எடுத்துட்டா, அப்புறம் நம்ம வீட்டுல யாரும் டீ.வி. பக்கமே வரமாட்டாங்க!).. சும்மா அப்படியே சுத்திட்டு இருந்தப்போ, திடீர்ன்னு ஒரு சேனல்ல நம்ம மொளனிகா சாயல்ல ஒரு சின்ன பொண்ணு பாட்டு பாடுற மாதிரி இருந்துச்சு, டக்குனு நிறுத்தி பார்த்தா, "தேஜா டீ.வி" யில நிஜமாவே மொளனிகா தான்.. கொஞ்சம் சின்ன வயசு மொளனிகா, எதோ படம்ன்னு கொஞ்சம் அசுவராசியமா மறுபடியும் சேனல் தாவ ஆரம்பிச்சுட்டேன், ஒரு சுத்து சுத்தி மறுபடியும் 'தேஜா'பக்கம் வந்தா இப்போ அடர்த்தியான தாடியோட, அழுக்கு கோட்டு ஒண்ணு போட்டுகிட்டு பானுசந்தர், சரி ஒரு ரெண்டு நிமிஷம் பார்க்கலாம்னு அதே சேனல்ல நின்னுட்டேன், அப்புறம் தான், அதிகமா லைட்டிங் இல்லாதது, மோளனிகா கூட பஸ்ஸுல இருந்த பொண்ணு வச்சிருந்த பெரிய சிவப்பு பொட்டு, இதெல்லாம் கவனிச்சேன்.. ஓஹோ, நம்ம பாலுமகேந்திரா படம் போலிருக்குன்னு அப்படியே டீ.வி. முன்னால செட்டிலாகிட்டேன்.

நமக்கு தெலுங்கு சுத்தமா தெல்லேதுன்னாலும், பாலுமஹேந்திரா பெருசா வசனத்தை நம்பி படமெடுக்க மாட்டாருங்கிற தைரியத்துல முழு படத்தையும் பார்த்தேன். அங்கங்க கொஞ்சம் வசனம் புரியலைன்னாலும் மொத்தமா கதையும் சம்பவங்களும் புரிஞ்சதுனால ரசிச்சு பார்த்தேன்..

ரொம்ப சிக்கலெல்லாம் இல்லாத கதை, ஹீரோ முரளி (பானுசந்தர்) ஒரு ஆனாதை பாரஸ்ட் ஆபீசர், புதுசா டிரான்ஸ்பர் ஆகி ஆதிவாசி குடியிருப்பை ஒட்டுன காட்டுக்கு வேலைக்கு போறாரு(அப்புறம் பாரஸ்ட் ஆபிஸர் வேற எங்க போவாரு!). அங்க அவர் பாவம் சமைக்க தெரியாம கஷ்ட்டப்பட, அந்த பழங்குடி கூட்டத்துல இருக்கிற ஒரு குடிகார மரவெட்டி கிழவனோட பொண்ணு துளசி (அர்ச்சனா) சமைச்சு குடுக்க வருது. அந்த பொண்ணுமேல அவருக்கு ஒரு இது.. (ஆனா சொல்லிக்கிறதில்லை).. திடீர்ன்னு ஒரு நாள் ஊருல இருக்கிற அவரோட நண்பனை பார்க்க போறாரு, அங்க அந்த நண்பன் ஒரு விபத்துல சிக்கி செத்து போனதை கேள்விப்பட்டு, இனி அவருக்கு துளசிய விட்டா யாருமில்லைன்னு சோகமா திரும்பி வர்றார்.. இந்த இடத்துல இருந்து தான் படத்தோட கதை ஆரம்பமாகுது.. சோகமா திரும்பி வர்ற முரளியை போலீஸ் வேறொரு கிரிமினெல்லோட சாயல்ல இருக்கிறதுனால, இவரை தப்பா கைது செஞ்சிடுறாங்க. போலீஸ்ஸ்டேஷன்ல இவரொரு பாரஸ்ட் ஆபீஸர்ன்னு சொல்றதை யாரும் நம்பாம இவரை அவமானப்படுத்த, ஒரு கட்டத்துல கோபமாகி அங்கிருந்து தப்பிக்க முயற்ச்சி செய்யறாரு. அந்த முயற்ச்சி ஒரு போலிஸ்காரரை இவர் அடிச்சு கொல்றதுல முடிஞ்சிருது. தப்பு செய்யாம போலீஸ்கிட்ட மாட்டி, அப்புறம் ஒரு கொலைகாரனா ஜெயிலிக்கு போறாரு. அஙகேயும் அவமானங்கள், சக ஜெயில்வாசியியோட சோகம், தப்பிக்க நினைச்சு அப்புறம் மாட்டிகிட்டு அடிவாங்கிறது,துளசி இவர பார்க்க ஜேயிலுக்கு வர்றதுன்னு போகுது. (ஒரு தடவை துளசியோட குடிகார அப்பா வந்து இருமலுக்கு நடுவால எதோ நிறையா பேசிட்டு போனாரு, ஆனா நம்ம தெலுங்கு புலமைக்கு அது என்னன்னு புரியலை..ஹி..ஹி..!)
தனக்காக துளசி காத்திட்டிருக்க வேண்டாம்னு, ரிலீஸ் ஆகி வெளிய போற ஒருத்தர் கிட்ட, தான் வெளிய இருந்து எழுதின மாதிரி ஒரு லெட்டர் எழுதிகுடுத்து வெளிய போய் போஸ்ட் பண்ண சொல்லி குடுத்து விடுறாரு (அப்படித்தன்னு நினைக்கிறேன், நிறையா அழுதுட்டே பானுசந்தர் பேசுன தெலுங்கில எனக்கு அப்படித்தான் புரிஞ்சுது!). அப்புறம் கொஞ்ச நாள்ல எதோ காரணத்துனால திடீர்னு இவரை விடுதலை செஞ்சிடுறாங்க (காரணம் சொல்லுவாங்க, ஆனா நம்ம மொழிப்பிரச்சினைதான்...!!)
ரிலீசானதும், வழக்கமா மத்த படங்கள்ல வர்ற மாதிரி, தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின அந்த ஒரிஜினல குற்றவாளியை தேடி குதிரை எல்லாம் ஏறாம, அமைதியா, அந்த காட்டு கிராமத்துக்கு துளசிய பார்க்க போறாரு,
அங்க, துளசி மழையில நிறையா விளக்கெல்லாம் பத்த வெச்சுகிட்டு (கலை!) இவருக்காக காத்திட்டிருக்காங்க.. இவரும் போய் கட்டி புடிச்சு.... அதோட.. 'a film by balumahendra' போட்டுடறாங்க..

இதுல மொளனிகா எங்க வாந்தாங்கன்னு கேக்கரீங்களா?.. காட்டுக்கு திரும்பி வர்ற ஹீரோ ஒரு ஸ்கூல் பஸ்சுல லிப்ட கேட்டு வர்றாரு, அந்த பஸ்சுல வர்ற கூட்டத்துல பாட்டு பாட ஒரு ஆளு வேனுமே, அதுதான் மொளனிகா, அந்த பஸ்சுல வரும் போது ஹீரோ தன் கதைய பிளாஷ்பேக்குல சொல்லுறாரு..

படத்துல நிறையா டைட் க்ளோசப், அப்புறம் அடிக்கடி கொஞ்சி பேசுற அர்ச்சனா, ரொம்ப தெளிவா நடிக்கிற துனை நடிகர்கள், காட்டுல திரியற பூனைக்குட்டிக, சும்மா வெட்கமெல்லாம் படமா இயல்பா தொட்டு பேசுற ஹீரொயின், போலீஸ்ஸ்டேஷன் மற்றும் ஜெயில் காட்சிகள்ல வர்ற எதார்த்தம்னு நிறையா பாலுமஹேந்திரா 'டச்'ன்னு இருந்தாலும்.. இருந்தாலும், எனக்கென்னவோ பாலுமஹேந்திரா திரைக்கதை லாஜிக்ல ரொம்ப சொதப்பின மாதிரி இருந்துச்சு.. (ரொம்ப பேசுறனோ?)

யாராவது இந்த படத்தை பார்த்திருக்கரீங்களா? அப்படி பார்த்திருந்தா, படதோட பேரு என்னன்னு சொல்லுங்க (விளம்ப்ர இடைவேளையில 'ஈ சித்திர'ன்னு எதோ சொன்னாங்க, அதுதான் படத்து பேரோன்னு நினைச்சு பக்கத்துல உக்காந்திருந்த எங்கய்யன் கிட்ட சொன்னேன்.. அதுக்கு அவர் பார்த்த பார்வை.. சரி விடுங்க, நான் எங்கய்யன்கிட்ட எதாவது சொல்றதும் அப்புறம் அசிங்கப்படுறதும், அது வழக்கம் தான் ..) . கூடவே நான் புரிஞ்சுகிட்ட கதையும் சரிதானான்னு யாரவது சொல்லுங்கய்யா..

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன், பாலுமஹேந்திரா காமிரா வழியா அர்ச்சனாவை, அதுவும் ரவிக்கை இல்லாம பார்க்கும் போது.. கொஞ்சம் கிளுகிளுப்பாத்தாங்க இருந்தது..
இன்னொரு விஷயம், தன்னோட படத்துல எங்கயாவது ஒரு சீன்லயாவது கதாநாயகன சட்டயில்லாம காட்டிருவாரு பாலுமஹேந்திரா'ன்னு என் சகா ஒருத்தன் சொல்லுவான், அந்த வார்த்தைய இந்த படத்துலயும் காப்பாத்திருக்காரு..

Wednesday, October 20, 2004

ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!

(வர வர, இந்த தலைப்பு வைக்கிற சமாச்சாரத்துல ஏகப்பட்ட குழப்பம் வருதுங்க, ஆனாலும் இந்த மாதிரி யாருக்கும் புரியாம, எதோ பெரிய சமச்சாரம் இருக்கிற மாதிரி தலைப்பு வைக்கிறதுங்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது)

சினிமா:

வழக்கமா எதாவது நல்ல படம் வந்தா (ஒரு எதிர்ப்பார்ப்பு தான்), டக்குன்னு எந்த விமர்சனத்தையும் படிக்காம படத்தை பார்த்துட்டு, அப்புறம், படத்தை பத்தி நம்ம பெரியவங்க எல்லாரும் விமர்சனம் எழுதினதை படிச்சுட்டு, மறுபடியும் ஒருதடவை போய் அந்த படத்தை பார்க்கிறது நம்ம பழக்கம்ங்க. இந்த தடவை ஒரு பட விமர்சனத்தையும் காணோம், இந்த வீரப்பன் சமாச்சாரம் சூடா இருக்கிறதுனால இதை எல்லாரும் கிடப்புல போட்டுட்டாங்க போலிருக்குதுங்க.
7gr


செல்வராகவனின்' 7 G ரெயின்போ காலனி படத்துக்கு போயிருந்தனுங்க, ஏற்க்கனவே அவரோட 'துள்ளுவதோ இளமை' படம் புடிச்சுப்போய், அப்புறம் 'காதல்கொண்டேன்' பார்த்து ரொம்ப புடிச்சு போய் (இந்த படத்தை பார்க்க எங்க அப்பா, அம்மாவோட போனேன், அது ஒரு தனி சோகக்கதை!) 7gr பாட்டெல்லாம் கேட்டு, அதுனால கொஞ்சம் ஜாஸ்த்தி எதிர்ப்பார்ப்போட தியேட்டருல போய் உக்காந்தேன். சத்தியமா, தியேட்டருலதாங்க பார்த்தேன்! எங்க ஊருல எல்லாப்படமும் ரிலீஸ் தேதியன்னைக்கே சீ.டி. கிடைக்கும், ஆனாலும் சீ.டி'யில புது படம் பார்க்கிறதில்லைங்கிறது நம்ம கொள்கை. (சந்தடி சாக்குல நம்ம நேர்மையா கொஞ்சம் தம்பட்டமடிச்சாச்சு!!).. சரி படத்துக்கு வருவோம்.

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துக்கு, அடிப்பம்புல தண்ணியடிக்கிற (குடிக்கிறதண்ணிங்க!) பையன், அங்க வந்து குனிஞ்சு குடத்தை எடுக்கிற ஆன்ட்டிகளை பார்க்கிறது, கூட்டமான பஸ்ஸுல அடிச்சு புடிச்சு ஏறிட்டு பஸ் எடுக்கிரறதுக்கு முன்னாடி கீழ எறங்கிவந்து மத்த பசங்களை பெருமையா(!) பார்க்கிறதுன்னு.. போக, நமக்கு "ஆஹா! ஏற்க்கனவே ஷங்கரும், சுஜாதா'சாரும் பட்டது போதாதா, இவுங்களுமா?"ன்னு ஒரு பயம் வந்திருச்சு. ஆனா நேரம் போக போக படம் கொஞ்சம் அப்படியே வேற பாதையில போனதும் தான் நமக்கு கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் நம்ம விஜய் டி.வி. சலனம் 'ஷாலினி'யை சும்மா ரெண்டே ரெண்டு பிரேம்ல காமிச்சுட்டு அப்புரம் காமிக்கவே இல்லைங்கிறது கொஞ்சம் மன்சுக்கு கஷ்டமாத்தாங்க இருந்துச்சு.. சரி.. என்ன செய்ய்றது.. சென்ஸார்போர்ட்டோட சதி போல!

எல்லாம் வழக்கம் போல கொஞ்சம் பெரிய எடத்து பொண்ணை டாவடிக்கிற வயசு பையன் கதை தான்.. என்ன கொஞ்சம் நிஜமா! (நிஜத்துக்கு ரொம்ப பக்கமா?) நம்மளை சுத்தி நடக்கிற மாதிரி காமிச்சதுலதான் சாமர்த்தியம்.

எல்லாரும், ஏற்க்கனவே சோகமா இருக்கிற ஹீரோவை பாட்டு பாடுன்னு கிண்டல் செய்யும் போது, பையன் அப்படியே ரொம்ப பீலாகி கொஞ்ச நேரம் நின்னுட்டு டக்குன்னு 'கண் பேசும் பாஷைகள் புரிவதில்லை'ன்னு பாடுற சீனுல, தியேட்டருல, பாட்ஷா படத்துல ரஜினி 'உள்ளே போ'ன்னு சொல்லுவாரே, (ரஜினி படம் வேண்டாம்னு நினைச்சா, 'ரன்' படத்துல மாதவன் சுரங்க பாதையில ஓடிப்போய் ஷட்டரை மூடுவாரே அதை வச்சுக்கோங்க), அப்ப வர்ற மாதிரி விசிலும், கைதட்டலும் சும்மா கிளப்புது பாருங்க.., "நீங்க என்னதான் கதை கதைன்னு படம் எடுத்தாலும் நாங்க அதுலயும் ஹீரோயிஸம் கண்டுபுடிப்பமில்லை"னு நம்ம ஆளுக சொல்லாம சொல்றாங்கன்னு எனக்கு தோனுச்சுங்க.

அப்புறம், வழக்கமா, எப்பப்பாரு ராத்திரி பூரா கண்னு முழிச்சு படிச்சுட்டு, பயத்தோட காலேஜ் வர்ற படிப்பாளி பொண்ணு மாதிரியே முகத்தை வச்சுகிட்டு, எல்லா சீனுலயும் (டூயட் சீன்லயும்! - மதுர!) வர்ற சோனியா அகர்வால், இந்த படத்துல சும்மா சூப்பரா நடிச்சிருக்குது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துறதுல செம கலக்கல், இது கொஞ்சம் (எனக்கு) ஆச்சிரியமான விஷயம் தான்.

ஹீரொயின் பத்தி சொல்லிட்டு ஹீரொ பத்தி சொல்லாட்டி அப்புறம் என்னை தப்பா நினைச்சுகவீங்க, அதுனால.. ஹீரோ 'ரவிகிருஷ்னா'வும் நல்ல செஞ்சிருக்காரு, ஆனா வேற வேஷமெல்லாம் இவருக்கு பொருந்துமான்னு தெரியலை.. ஒரே ஒரு குறை.. கொஞ்சம் கண்ண மூஉடிட்டு இவர் பேசுறதை கேட்ட தனுஷ் பேசின மாத்ரியே இருக்குது (ஒரு வேளை செல்வராகவன் அப்படி பேச சொல்லியிருப்பாரோ?)
ஏன் இந்த மாதிரி நல்ல டைரக்டர்கள் எல்லாருமே (உ.ம். பாலா.) டிராஜெடியை மையமா வெச்சே படம் எடுக்கிறாங்க, ஒரு வேளை டிராஜெடியா படம் எடுத்தாத்தான், இந்த இலக்கியவாதிகளை சந்தோஷப்படுவாங்கன்னா?
அதுக்காக படத்துல ஒரேயடியா டிராஜடியும் கிடையாது.. காலையில 5 மணிக்கு ஆலாரம் வச்சுட்டு ஹீரோ அவரோட நண்பனை படாதபாடு படுத்தற சீனெல்லாம் காமெடிதான், ஆனா, கொஞ்சம் பழைய வாசனை வருது. (எத்தனை டிராஜெடியா படமெடுத்தாலும், பாலுமகேந்திரா படத்துல நடு நடுவால மெல்லிசா ஒரு காமெடி வருமே, அது மாதிரி கொஞ்சம் இருந்திருக்கலாம், அந்த வகையில பாலா கலக்கறாரு)

அப்பாயின்மென்ட் ஆர்டரை அப்பா(விஜயன்)கிட்ட போய் குடுத்ததும் நல்லதா நாலு வார்த்தை எதும் சொல்லாம, அப்புறம் தனியா போய் விஜயன் பையனை பத்தி பெருமையா பேசுறது, கொஞ்சம் 'உன்னால் முடியும் தம்பி' பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளைய ஞாபகப்படுத்தினாலும், அடுத்த நாள் காலைலயில அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவால நடக்கிற அந்த காட்சிகள்,ம்.. அதுவும் எந்த வசனமும் இல்லாம வெறும் விஷுவலாவே, ஒரு இயல்பான, சந்தோஷமான தடுமாற்றத்தை காட்டியிருக்கிறது கலக்கல்.

படத்தோட கதைய ஒரே வரியில சொல்லனும்னா, படத்துல வர்ற பாட்டு இருக்குதே "முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே"ன்னு, அதுதான்..

யாராவது சீக்கிரமா ஒரு விமர்சனம் எழுதுங்கய்யா. படத்தை மறுபடியும் பார்க்கனும் போல இருக்குது..

-----------------------
சந்திப்பு:

நம்ம துகள்கள் சத்தியராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தாருங்க. என்னை மறக்காம எனக்கு ஒரு மடல போட்டு, எனக்கு முகவரி எல்லாம் குடுத்தாரு (நம்ம வீட்டுக்கு 1 கிமி. தூரத்துல தான் இருந்திருக்காரு!), அவரை போய் பார்த்து நிறையா பேசனும்னு நினைச்சேன் (அப்படி ஒன்னும் உருப்படியா நாம பேசிறப்போறதில்லை, இருந்தாலும் அவர் எதாவது சொன்னா கேட்டுகிலாம்னு தான்!!), ஆனா நம்ம வேலைக்கு நடுவால எங்க முடியுது, அவரு கிளம்புற அவசரத்துல, கொட்டுற மழைக்கு நடுவால, ஒரு நடை போய் பார்த்து, ஒரு வணக்கம் போட்டுட்டு வந்தேன். (சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் குடுத்தாரு). அவரும் என்னைய பார்கனும்னு ஆசையா இருந்திருப்பாருப்பாரு(!) போல, ஆனா, என்னையா பார்த்ததும் பாவம், இவன் கிட்ட என்னத்த பேசறதுன்னு, ரொம்ப குழம்பி போயி.. (அப்புறம், நமக்கும் இலக்கியத்துக்கும் தான் பயங்கிர நெருக்கமாச்சே).. சிரிச்சுகிட்டே இருந்தாரு.
என்ன செய்யரீங்க, எங்க இருக்கரீங்க, குடும்பத்தை பத்தின்னு கொஞசம் பேசிட்டு வந்துட்டேன். அடுத்த தடவை வந்தா கண்டிப்பா பார்க்கலாம்னு சொல்லியிருக்காருங்க.. பார்ப்போம்..நல்லா எழுதரீங்கன்னு வேற சொன்னாரு.. :-)
(அடப்பாவி.. எதோ பேசனுமேன்னு சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னேன் அதை போய் இவன் சீரியசா எடுத்துகிட்டானே -சத்யராஜ்குமார்)

Friday, October 15, 2004

எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்..

என்னடா இது, மீனாக்ஸ் தான் ஏற்கனவே இந்த வேலைய உருப்படியா செஞ்சுகிட்டிருக்காரே, இவன் எதுக்குடா இதுல மூக்கை, (மவுஸை!?) நுழைக்கிறான்னு" யாரும் டென்ஷன் ஆகாதீங்க,.. அப்படி ஒரு புண்ணிய காரியமெல்லாம் என்னைக்கும் இந்த ராசா செய்ய மாட்டான்..
இது சும்மா ஒரு கலாய்ச்சல் மார்க்கெட்டிங்..

----
ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Direct Marketing

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க கூட இருக்கிற ஒரு நண்பன் அந்த பொண்ணுகிட்ட போய், உங்களை கை காட்டி "அவரு ஒரு பெரிய பணக்காரர், அவரை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கிறாரு - அதுக்கு பேருதான் Advertising.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் அவளோட டெலிபோன் நம்பரை கேட்டு வாங்கிக்கரீங்க, அடுத்த நாள் அவளுக்கு போன் செஞ்சு "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Telemarketing.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உங்க சட்டையெல்லாம் சரி செஞ்சுகிட்டு அந்த பொண்ணு பக்கத்துல போய் நின்னுக்கரீங்க, அவ சாப்பிடும்போது கூடவே பரிமாறி உதவி செய்யரீங்க, போகும் போது கீழ தவறவிட்ட அவளோட கைப்பயைய எடுத்து குடுக்கரீங்க, அவ எங்க போகணும்னு கேட்டு உங்க காருலயே கூட்டீட்டு போரீங்க, கடைசியா "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க - அதுக்கு பேருதான் Public Relations Management.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. அந்த பொண்ணும் உங்களை பார்க்குது, உடனே உங்க கிட்ட வந்து " நீங்க பணக்காரரா?"ன்னு கேக்குது - அதுக்கு பேருதான் Brand Recognition.

ஒரு பார்ட்டியில ஒரு அழகான பொண்ணை பார்க்கரீங்க. உடனே அந்த பொண்ணுகிட்ட போய் "நான் ஒரு பெரிய பணக்காரன், என்னை கல்யாணம் செஞ்சுக்கோ"ன்னு கேக்கரீங்க, உடனே அந்த பொண்ணு உங்களை..

..பளார்ன்னு ஒரு அறை அறையுது... - அதுக்கு பேருதான் Customer Feedback.

---

இதெப்படி இருக்குது..!!

Thursday, October 14, 2004

அய்யோ கல்யாணமா..

மேல்கண்ட்'ல நம்ம மீனாக்ஸ் கல்யாணம் என்பது எதுவரை..? ன்னு ஒரு படம் போட்டிருக்காருங்க, அந்த படத்தை பார்த்ததும் எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு யாரோ அனுப்பிவச்ச இந்த படம் ஞாபகம் வந்துடுச்சு..
மனுஷங்க மட்டுமில்லை, காட்டு ராஜாவும் கூட இப்படித்தான் போல...
lions

வீட்டுல இப்பத்தான் பொண்ணு பார்க்கலாமான்னு கேட்டிருக்காங்க.. இந்த நேரத்துல இப்படி ஆளாளுக்கு இப்படி பயமுறுத்தராங்களே!!

Monday, October 11, 2004

தலைப்பு??

(எழுதியாச்சு, என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தெரியலைங்க.. அதுனாலதான் இப்படி ஒரு தலைப்பு, இது தான் இப்போதைய பேஷன்!! )

ஒரு ரெண்டு மூணு வாரமா, கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியா போயி, நம்ம பொழப்பு கொஞ்சம் நாய்பொழப்பாகிபோச்சுங்களா, வலைக்கரையோரம் நிம்மதியா ஒதுங்க முடியாமா போச்சுங்க. அப்பப்போ இடையில கொஞ்ச நேரம் வந்து எட்டிப்பார்த்தேன், அவ்ளோதான்.
நம்ம வேலைக்கு நடுவால, கொச்சின்ல ஒரு பிரவுசிங் சென்டர் பக்கம் தலைய காட்டினேன், அங்க ஒரு இன்ப அதிர்ச்சி (கேரளாவுல, எந்த பக்கம் திரும்பினாலும் நமக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தொடர்ந்துட்டே தான் இருக்கும், அது வேற கதை), அந்த பிரவுசிங்க சென்டர்ல நம்ம ஈ-கலப்பை இன்ஸ்ட்டால் செஞ்சிருக்காங்க.., கலப்பை'ய பார்த்ததும் கொஞ்சம் சந்தோஷமாகி 'கல்யாணம்தான் கட்டிகிட்டு'ன்னு ஒரு சமாச்சரம் பதிவு செஞ்சேன் (விதி!).
எனக்கென்னா ஆச்சரியம்னா, இங்க தமிழ்நாட்டுக்குள்ளாரா எந்த ஒரு பொது பிரவுசிங்சென்டர் பக்கம் போனாலும் கலப்பையோ இல்லை முரசு சாமச்சாரமோ காண கிடைக்கிறதில்லை, ஆனா கொச்சின்ல, ஒரு பொது பிரவுசிங்சென்டர்ல (இதை தமிழ்ல எப்படிங்க சொல்றது, 'பொது இணைய உலவகம்'ன்னு சொன்னா சரியா இருக்கும்ங்களா?) கலப்பை, முரசு எல்லாமே வச்சிருக்காங்க. நம்ம ஊருகள்லயும் இதை பத்தி ஒரு நாலு பேருக்கு தெரியர மாதிரி எதாவது செஞ்சோம்னா, இந்த 'இன்னும் நிறையா பேரு எழுதனும், சமூகத்தோடா எல்லா பிரிவுல இருக்கிறவங்களும் எழுதனும்'னெல்லால் ஆதங்கப்படுறங்களுக்கு எல்லாம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு நினைக்கிறனுங்க. (ஆனா அதுல இன்னொரு ஆபத்தும் இருக்குதுங்க, என்னைய மாதிரி ஆளுகெல்லாம் நிறையா பேரு எழுத ஆரம்பிச்சுடுவாங்க, அப்புறம் பாவம் நீங்க!)
நம்ம லைட்டா அசந்த நேரம், இங்க டக் டக்குன்னு புதுசு புதுசா சுவரசியமான வலைப்பதிவுகள ஆரம்பிச்சு கலக்கிட்டிருக்காங்க நம்மாளுக. எல்லாத்தையும் ஒரு சுத்து படிச்சு முடிக்கனும். குறிப்பிட்டு சொல்லனும்னா சசியின் டைரி , மேல்kind, இந்த ரெண்டையும் ஒரு வரி விடாம படிக்கனும். (ரெண்டும் நம்ம சம்பந்தப்பட்ட விஷயம்ங்கிறதுனால), எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு, கொஞ்சம் பாதியில விட்டுட்டு போன வேலையெல்லாம் முடிச்சிட்டு..., அப்புறம் ஆரம்பிக்குது பாருங்க உங்களுக்கெல்லாம் ஒரு சோதனை காலம்..

Wednesday, October 6, 2004

கல்யாணம்தான் கட்டிகிட்டு...

இங்க கல்யாணமாகாத பேச்சிலர் பசங்க நம்ம மீனாக்ஸ் தலைமையில 'மேல்கைன்ட்'ன்னு பதிவு ஆரம்பிச்சு கலக்கிட்டிருக்காங்க. அதே நேரம் மலேஷியா'வுல ஒருத்தர் தன்னோட 53வது கல்யாணத்தை வெற்றிகரமா நடத்தியிருக்காரு.
(ஒரே ஒரு கல்யாணம் செஞ்சுகிட்டு நம்ம சகாக்கலெல்லாம் நம்மளை பயமுறுத்திட்டு இருக்கானுக, இந்தாளு எப்படி 53 கல்யாணம் செஞ்சுக்கிட்டரு, ஒரே குழப்பமா இருக்குதுப்பா??)

polygamy

மலேஷியாவுல 'கம்ருதீன்'ன்னு ஒரு 72 வயசு ஆளு 53வது தடவையா கல்யாணம் செஞ்சிக்கிட்டுருக்காருங்க, அதுவும் யாரை? அவரோட கல்யாண வேட்டைய அவர் ஆரம்பிச்ச முதல் மனைவியை.!!..
1957ல அவரு முதன்முதல்லா ஒரு பொண்னை கல்யாணம் செஞ்சிருக்காருங்க, அப்புறம் ஒரே வருஷத்துல அவுங்களை விவாகரத்தும் செஞ்சிட்டாரு. அதுக்கப்புறம் சும்மா சலைக்காம அவரும் அடுத்தடுத்து 51 கல்யாணம் செஞ்சிகிட்டிருக்காரு (அதுல ஒரு இங்கிலீஸ்காரம்மாவும் ரெண்டு தாய்லாந்துக்காரங்களையும் சேர்த்தி, மத்ததெல்லாம் மலேஷியாக்காரங்க).
ஒரு பெரீரிய சுத்து முடிஞ்சு, இப்போ மறுபடியும், விட்ட இடத்துக்கே வர்ற மாதிரி, தன்னோட 'முதல் முன்னால் மனைவியை' மறுபடியும் இந்த 72வது வயசுல கல்யாயணம் கட்டியிருக்காராம், இவுங்களுக்கு முதல்தடவை கல்யாணம் ஆனப்பவே ஒரு குழந்தையும் உண்டு (அந்த 'குழந்தை'க்கு இப்போ 47 வயசு).
இத்தனை தடவை கல்யாணம் செஞ்சிகிட்டாலும் ஒரு நேரத்துல ஒரு கல்யாணத்துக்கு மேல செஞ்சுக்கிட்டதில்லைன்னு தலைவருக்கு ஒரு பெருமை வேற!!.
கல்யாணம் மட்டுமில்லைங்க இவர் வேலைபார்த்ததும் கூட அப்படித்தான், ஒரு வேலையில கூட அவரு நிரந்திரமா இருந்ததில்லையாம். ஒரு போலீஸ்க்காரரா தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சு, அப்புறம் அதுல தொடர முடியாம, அங்க இங்கன்னு 1992ல ரிட்டயர் ஆகுற வரைக்கும் வேலை மாறிக்கிட்டே இருந்திருக்காருங்க.

இத்தனை கல்யாணம் செஞ்சுகிட்டாலும் "நான் ஒன்னும் 'playboy' கிடையாது (இதுக்கு தமிழ்ல என்னங்க சொல்றது?), எனக்கு அழகான பொண்னுகளை பார்க்க (!) புடிக்கும் அவ்ளோதான்"ன்னு வேற சொல்லியிருக்காரு.
மலேஷியாவுல சும்மா ஒருத்தன் தன்னோட சம்சாரத்தை பார்த்து 'நான் உன்னை விவாரத்து செய்யிறேன்'ன்னு சொன்னாவே போதும், உடனே விவாகரத்து ஆனமாதிரிதான் அதுனால தான் இந்த மாதிரி ஆளுக எல்லாம் இப்படி ஆடுறாங்கன்னு சொல்றாங்க.
(அய்யா சாமிகளா, இப்படி சொல்றாங்கன்னு சொன்னேன், அவ்வளவுதான், உடனே யாராவது நீ எப்படிரா எங்க பழக்க வழக்கத்தை தப்பு சொல்லலாம்னு கிளம்பிராதீங்கய்யா!!)
செய்தி சுட்டி

Tuesday, October 5, 2004

குழப்பமய்யா குழப்பம்

gandhi


அக்டோபர் 2ம் தேதி காலையில எந்திரிச்சு பேப்பர் பார்த்த ஜார்க்கண்ட் மாநிலத்துக்கரங்களுக்கு ஒரே குழப்பம். ஏன்னா காந்தி ஜெயந்திக்காக இன்னைக்கு லீவுன்னு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு, அவுங்க மாநில முதல்வர் ' அர்ஜுன்முண்டே' சார்பாவும், கவர்னர் 'ப்ரகாஷ்மார்வா' சார்பாவும், எல்லாப்பேப்பருலயும் வந்திருந்த வாழ்த்து செய்திதான். எதாவது திருவுழா, விசேஷம்னா இந்த அரசியல் தலைவர்கள் மந்திரிக எல்லாரும் மக்கள் செலவுல மக்களுக்கு வாழ்த்து சொல்றது ஒன்னும் புதுசில்லியேங்கரீங்களா?. வாழ்த்து சொன்னதுல குழப்பம் இல்லைங்க, வாழ்த்துல வந்திருந்த மேட்டருல தான் குழப்பம்.
பேப்பர்ல கவர்னர் சார்பா குடுத்த வாழ்த்து விளம்பரத்துல 'ராஷ்ட்ரபதி'மகாத்மாகாந்தின்னும், முதல்வர் சார்பா வந்த விளம்பரத்துல 'மகாத்மாவின் நினைவுநாளை' முன்னிட்டுன்னு வந்திருந்ததாம்.
பாவம், லீவு நாளும் அதுவுமா கொஞ்சம் லேட்டா எந்திருச்சு தூக்க கலக்கத்துலயே பேப்பர் பார்த்தவங்க்களுக்கு,என்னடா நம்ம அக்டோபர் 1ம் தேதி நைட்தூங்கி ஜனவரி 30ம்தேதி தான் எந்திரிச்சிருக்கமோன்னு கண்டிப்பா ஒரு குழப்பம் வந்திருக்கும்.
விளம்பரம் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் 'நாங்க ராஷ்ட்டிரப்பிதா'ன்னு (தேசதந்தை) தான் குடுத்தோம் அவுங்க ராஷ்ட்ரபதின்னு போட்டிட்டாங்கன்னு எதோ ஒரு சப்பை காரணம் சொல்றாங்க, இருந்தாலும் தப்புக்கு அவுங்க தான பொறுப்பு.
இதுக்கு கண்டிப்பா அந்த முதல்வரோ, இல்லை கவர்னரோ, பொறுப்பாக முடியாதுதான், இருந்தாலும் ஒரு பொறுப்புல இருக்கிறவங்க பேருல வந்த ஒரு விளம்பரம் இவ்வளவு பொறுப்பில்லாம இருந்தா, அந்த பொறுப்பான பதிவியில உக்காந்து அவுங்களோட பொறுப்புகளை எவ்வளவு பொறுப்பா பார்த்துக்குவாங்கன்னு பொறுப்பான மக்களுக்கு கொஞ்சம் கலக்கமாத்தான இருக்கும்.
செய்தி சுட்டி