Wednesday, May 18, 2005

கனா கண்டேன்.. :-(






ஏற்க்கனவே இந்த வாரக்கடைசிக்காக ரெண்டு நாள் ஆழப்புழாவுல படகுவீட்டுல மிதந்துட்டே அவுங்க ஊரு கலயங்கள்ல சுத்தி வந்ததுலயே கொஞ்சம் மனசு ஒரு மாதிரித்தான் இருந்துச்சுங்க, அதே பாதிப்புல, ஊருக்குள்ள கனாகணடேன் பட போஸ்ட்ர்ல நம்ம கோபிகாவோட தாவாக்கொட்டை கடிய பார்த்ததும் டக்குன்னு நேத்து ராத்திரியாட்டம் போயிடரதுன்னு முடிவு செஞ்சு போயிட்டு வந்தாச்சுங்க






?????????? சரி காமிராக்காரர் KV ஆனந்த் டைரக்டரா அவதாரம் எடுத்திருக்கிற படம், அதுவும் அந்த 'சின்னசின்ன சிகரம் காட்டி'ங்கிற பாட்டு எடுத்தத பத்தி அவர் குடுத்த பேட்டி, அந்த போட்டோக்கள், எல்லாமே சேர்ந்து கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு கூடவே இருந்துச்சு. படன் அந்த அளவுக்கு இருந்துச்சா, இல்லையாங்கிற சமாச்சாரத்துக்கு நான் வரலைங்க.. விமர்சனம் செய்யிற அளவுக்கு நான் இன்னும் வரலை, அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம், அந்த் பாட்டை பத்தி மட்டும் பேசுவோம்.






புருஷங்காரன் போலீஸுக்கு போன் போட்டு இங்க ஒரு பொண்ண ரேப் பண்ணிட்டாங்க, அதுக்கு இவ்ளோ எடத்துல கீரல், இவ்ளோ எடத்துல பல்லு பதிஞ்சிருக்கு, அப்படின்னு சம்சாரத்த கலாய்ச்சுட்டு அப்படியே இந்த பாட்டுக்கு போகுது சீன். சூப்பரான லொகேஷன், கல்குவாரியில தண்ணி நிக்கும்போது எடுத்திருக்காங்க, காஸ்ட்யூம் கூட ரொம்ப ஆடம்பரமா இல்லாம அப்படியே கொஞ்சம் இதமான எலுமிச்சை/ஆலிவ் கலர்ல.. திப்பு'வும் சுனிதாவும் வைரமுத்துவோட, அதென்ன சொல்றது..??..ம்ம்.. காதல் ரசம் வழியும் வரிகளுக்கும், வித்யாசாகரோட மென்மையான இசைக்கும் உயிர் குடுத்து பாடியிருக்காங்க. பாட்டு எடுத்த விதத்துல தான் விஷயம். அப்படியே கொஞ்சம் வேகமா, கொஞ்சம் மெதுவா'ன்னு எல்லா காதல் பாட்டுகள் மாதிரி தான் எடுத்திருக்காங்க, ஆனா நடுவால இந்த குரூப்டான்ஸ் விஷயத்துல தான் நமக்கு 'போங்கடா'ன்னு ஆயிடுச்சு.. அப்படி என்னங்கரீங்களா??.. இவுங்க ரெண்டு பேரும் ஆடும் போது பின்னாடி 15 பேரை ஆட விட்டிருக்கலாம் அது தப்பில்லை, அது எல்லா படத்துலயும் நடக்கிறது தான், ஆனா இதுல தமாசு செய்ய்றேன்னு, பொம்பிளைகள போலீஸ் டிரஸ்ல ஆடவிட்டிருக்காங்க, அதுகூட விட்டராலாம், அதுக்கு தலைவியா ஒரு அம்மா, நல்லா தடியா, இவுங்கள புடிக்கிற மாதிரி கிட்ட வரதும், வந்து நல்லா வாய் நிறையா எதாவது அமுக்கிட்டி சாப்பிடறதும், அப்புறம் இவுங்கள புடிக்காம வயத்து புடிச்சுட்டு மறைவுக்கு போறதும் அப்புறம் மறுபடியும் வந்து, மறுபடியும் அதே.., சாப்பிடுறது, கலக்குறது, ஓடுறது.. இதுக்கு நடுவால இவுங்களோட காதல் பாட்டு.. யேய்!!!... சூப்பரான பாட்டு, சூப்பரான ஜோடி ஒரு 'வசீகரா' மாதிரி வர வேண்டிய பாட்ட இப்படி கக்கூஸ் ரேஞ்சுக்கு எடுக்க எப்படித்தான் இவுங்களுக்கு தோனுச்சோ.. அடப்போங்கப்பா. எனக்கு, எங்கூட ஹைஸ்கூல்ல படிச்ச 'தாந்தின்னி'ரங்கநாதன் தான் ஞாபகத்துக்கு வந்தான், அவன் தான் ஸ்கூல் இண்ட்ரவல்ல சாப்பிட கொண்டு வந்தத, யாருக்கும் தெரியாம வாஷ்ரூம்ல போயி சாப்பிட்டுட்டு வருவான், எப்படிரா அங்க போயி சாப்பிடரான்னு அப்ப ரொம்ப ஆச்சிரியபட்டேன்..!! இப்பவும்.. :-)








prithviraj ஆனா ப்ரித்விராஜ் தெரியும்ங்களா..?? மலையாள நடிகர், அவரோட 'வெள்ளித்திர' படம் ஏற்கனவே பார்த்திருக்கேன், அதுல ரஜினி ரசிகரா 'ஸ்டைல்ராஜ்'ன்னு பேருவச்சுகிட்டு வந்து கலக்குவாரு, அவர் தான் படத்துல வில்லன்.. சூப்பரா செஞ்சிருக்கார், அந்த ஒரு கேரக்டர உருவாக்கினதுக்காக 'ஆனந்த்'க்கு ஒரு 'ஜே' போடலாம்.. சும்மா இழைச்சு எடுத்திருக்காரு.. மூன்று முடிச்சு 'ரஜினி' மாதிரி ஒரு கேரக்டர்.. சரணோட 'இதயத்திருடன்' படத்துலயும் இதே மாதிரி நெகட்டிவ் ரோல் செய்ய்றாராம், பார்ப்போம், சமீபமா, இவரோட மழையாள படமெல்லால் ஊத்திகிச்சுனாங்க, தமிழ் ஒரு வேளை கைகுடுக்கலாம், சாத்தியம் நிறையாவே இருக்கு..


அந்த ஒரு பாட்டு எடுத்த விஷயத்துல நமக்கு ஏனோ படத்துல பெரிய ஈடுபாடு இல்லாம போச்சு..




கடல் தண்ணிய குடிதண்ணியா மாத்தறது, சின்ன வயசுல சொல்லாத காதல், கல்யாணத்த நிறுத்தறதுக்காக பொண்ணொட அம்மாவே பொண்ணை அவ நண்பன் கூட அனுப்பிச்சு வைக்கிறதுன்னு, இன்னும் படத்துல நிறையா இருக்குதுங்க.. ஆனாலும் அந்த பாட்டு மேட்டர் நமக்கு ஜீரணமே ஆகலைங்க... படத்துல ப்ரித்வியோட 'மதன்' கேரக்டர் அடிக்கடி சொல்ற மாதிரி..


"c'mon man.. !.. Gimme a break ..!! it hurts..!!"


------
# 87

Tuesday, May 10, 2005

Camera -Phone

ஊரு உலகமே கேமிராஃபோன்'னு பரபரப்பா இருக்குதே, நாம இன்னும் அந்த காலத்து nokia 3310 மாடலயே வெச்சிகிட்டிருக்கமேன்னு, மனசுகுள்ள ஒரு சின்ன அங்கலாப்பு இருந்துட்டே இருக்குதுங்க. நாமளும் ஒரு கேமிரா மாட்டுன செல்லு வாங்கலாம்னு எங்கய்யன் கிட்ட சொன்னா,
'ஏன், அதுல பேசுனா மட்டும் காய்காசு நாலு தடவை கேக்காம, வியாபாரியே வந்து குடுத்திருவானா?'ன்னு எடக்கா பேசறாரு.
சரி அவுரு அந்த காலத்து ஆளு, நம்மளா முடிவு எடுக்கலாம்னா, அதுலயும் சிக்கல்.. வேறென்ன சில்லரை தட்டுபாடு தான். சரி எப்படியும் அய்யன சரிகட்டிரலாம், அதுக்குள்ள எந்த மாடல், என்ன விஷயம்னு முடிவு செஞ்சிரலாம்னு நம்ம சகா கிட்ட கேட்டா.. அவன் ஒரு மாடல் காமிச்சான் பாருங்க.. போடாங்க...
எல்லாருக்கும் என்னை பார்த்தா எளக்காராமாவே இருக்குதுங்க..
அப்படி என்ன மாடல்ங்கரீங்களா.. நீங்களே பாருங்க..

 

 

 



 

 

எல்லாருக்கும் நம்மள பார்த்தா எளக்காராமாவே இருக்கும் போல இருக்குதுங்க..!! :-(

--
# 86

Saturday, May 7, 2005

ஆல்பம்

ஒரு பழைய குரூப் போட்டோ, அடையாளம் தெரியுதான்னு பாருங்க



Click on photo to en-large




"நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே..!
"
-ன்னு பாடிருப்பாங்களா?? :-)


நன்றி :'வால்ரஸ்'

--
#85

Friday, May 6, 2005

பார்வைகள்



இந்த படத்துக்கு என்ன பாட்டு போடலாம்.. ம்ம்..

"உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்.."

இல்லை

"உன் பார்வை போலே என் பார்வை இல்லை.."

அடப்போங்கய்யா.. எதோ ஒரு பாட்டு, உங்களுக்கு புடிச்சத போட்டுக்கோங்க..
பாட்டுல என்னங்க இருக்கு, அந்த படம் சொல்ற விஷயத்துல தான் இருக்கு வித்தையே.. இப்படித்தான் ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் அவனவன் பார்வையில படுறத வச்சுகிட்டு ஒவ்வொன்னும் பேசிகிட்டு திரியறானுக.

--
என்னோட போன கல்யாணபத்திரிக்கை பதிவு பத்தி கருத்து சொன்னவங்க நிறையா பேரு, நான் சொந்தமா பதிவு எழுதறத விட எதாவது சுட்ட சமாச்சாரத்த பதிவு செய்யிறது தான் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. :-(
சரி, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்னு இந்த பதிவுலயும் 'சுட்ட' மேட்டரையே போட்டிருக்கேன்.

நன்றி : 'ஸ்ரீ'

#84

Tuesday, May 3, 2005

கல்யாணபத்திரிக்கை

எதாவது வித்தியாசமா செய்யனும்னு ஆசைப்பட்டு, நம்மாளுக செய்யிற லோலாயிக்கு அளவே இல்லாம போயிருச்சுங்க.. அப்படி ஒரு லொல்லு புடிச்ச ஆளோட வேலை தான் இந்த பத்திரிக்கை.. பாருங்க.. என்னத்த சொல்றதுன்னே தெரியலைங்க :-)




தெளிவா பார்க்க படத்தை ஒரு அமுக்கு அமுக்குங்க...

அங்க தெரியலைன்னா இங்க அமுக்கி பாருங்க..

நன்றி: இதை எனக்கு மெயில்ல அனுப்பின 'சாக்கா'னுக்கு

--
#83