Tuesday, May 10, 2005

Camera -Phone

ஊரு உலகமே கேமிராஃபோன்'னு பரபரப்பா இருக்குதே, நாம இன்னும் அந்த காலத்து nokia 3310 மாடலயே வெச்சிகிட்டிருக்கமேன்னு, மனசுகுள்ள ஒரு சின்ன அங்கலாப்பு இருந்துட்டே இருக்குதுங்க. நாமளும் ஒரு கேமிரா மாட்டுன செல்லு வாங்கலாம்னு எங்கய்யன் கிட்ட சொன்னா,
'ஏன், அதுல பேசுனா மட்டும் காய்காசு நாலு தடவை கேக்காம, வியாபாரியே வந்து குடுத்திருவானா?'ன்னு எடக்கா பேசறாரு.
சரி அவுரு அந்த காலத்து ஆளு, நம்மளா முடிவு எடுக்கலாம்னா, அதுலயும் சிக்கல்.. வேறென்ன சில்லரை தட்டுபாடு தான். சரி எப்படியும் அய்யன சரிகட்டிரலாம், அதுக்குள்ள எந்த மாடல், என்ன விஷயம்னு முடிவு செஞ்சிரலாம்னு நம்ம சகா கிட்ட கேட்டா.. அவன் ஒரு மாடல் காமிச்சான் பாருங்க.. போடாங்க...
எல்லாருக்கும் என்னை பார்த்தா எளக்காராமாவே இருக்குதுங்க..
அப்படி என்ன மாடல்ங்கரீங்களா.. நீங்களே பாருங்க..

 

 

 



 

 

எல்லாருக்கும் நம்மள பார்த்தா எளக்காராமாவே இருக்கும் போல இருக்குதுங்க..!! :-(

--
# 86

Saturday, May 7, 2005

ஆல்பம்

ஒரு பழைய குரூப் போட்டோ, அடையாளம் தெரியுதான்னு பாருங்க



Click on photo to en-large




"நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே..!
"
-ன்னு பாடிருப்பாங்களா?? :-)


நன்றி :'வால்ரஸ்'

--
#85

Friday, May 6, 2005

பார்வைகள்



இந்த படத்துக்கு என்ன பாட்டு போடலாம்.. ம்ம்..

"உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்.."

இல்லை

"உன் பார்வை போலே என் பார்வை இல்லை.."

அடப்போங்கய்யா.. எதோ ஒரு பாட்டு, உங்களுக்கு புடிச்சத போட்டுக்கோங்க..
பாட்டுல என்னங்க இருக்கு, அந்த படம் சொல்ற விஷயத்துல தான் இருக்கு வித்தையே.. இப்படித்தான் ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் அவனவன் பார்வையில படுறத வச்சுகிட்டு ஒவ்வொன்னும் பேசிகிட்டு திரியறானுக.

--
என்னோட போன கல்யாணபத்திரிக்கை பதிவு பத்தி கருத்து சொன்னவங்க நிறையா பேரு, நான் சொந்தமா பதிவு எழுதறத விட எதாவது சுட்ட சமாச்சாரத்த பதிவு செய்யிறது தான் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. :-(
சரி, அவுங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்னு இந்த பதிவுலயும் 'சுட்ட' மேட்டரையே போட்டிருக்கேன்.

நன்றி : 'ஸ்ரீ'

#84

Tuesday, May 3, 2005

கல்யாணபத்திரிக்கை

எதாவது வித்தியாசமா செய்யனும்னு ஆசைப்பட்டு, நம்மாளுக செய்யிற லோலாயிக்கு அளவே இல்லாம போயிருச்சுங்க.. அப்படி ஒரு லொல்லு புடிச்ச ஆளோட வேலை தான் இந்த பத்திரிக்கை.. பாருங்க.. என்னத்த சொல்றதுன்னே தெரியலைங்க :-)




தெளிவா பார்க்க படத்தை ஒரு அமுக்கு அமுக்குங்க...

அங்க தெரியலைன்னா இங்க அமுக்கி பாருங்க..

நன்றி: இதை எனக்கு மெயில்ல அனுப்பின 'சாக்கா'னுக்கு

--
#83

Thursday, April 28, 2005

ஓர் இரவு!

வழக்கமா ராத்திரி ஒரு 8- 9 மணிக்கெல்லாம் (வீட்டுக்கு போயிட்டா) ஒரு கையில ரிமோட்டும், ஒரு கையில செல்போனுமா டி.வி முன்னாடி செட்டிலாயிருப்பனுங்க.. நேத்தும் அப்படித்தான் வழக்கம் போல சாப்பிட்டு வந்து ரிமோட்ட எடுத்தேன், கரண்ட் கட்.. சரி என்ன செய்யறதுன்னு, ஒரு பாயும், எங்கய்யன் 75 ரூபா குடுத்து புதுசா வாங்கி வச்சிருக்கிற FM ரேடியோவயும் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போயிட்டனுங்க..

மொட்ட மாடியில மல்லாக்க படுத்துகிட்டு, ரெண்டு நாளா அடிச்ச கோடை மழையோட சிலுசிலுப்ப ரசிச்சுகிட்டே, தென்னங்கீத்துக்கு நடுவால மின்னுர நட்சத்திரங்களயும், பொளர்னமிய நெருங்கிட்டு இருக்கிற நிலாவயும் பார்த்துகிட்டு.. அப்படியே ரேடியோவ போட்டா, அதுல 'ராஜபார்வை'யில இருந்து 'அழகே அழகு' பாட்டு.. அடபோங்கப்பா 'சிப்லா' இன்னைக்கு 10 ரூபா ஏறியிருந்தா என்ன, இறங்கியிருந்தா என்ன.... என்ன பாட்டு.. என்ன இசை..என்ன காத்து.. சொர்கம் சொர்கம்ங்கிறாங்களே.. அது இப்படிதானுங்க இருக்கும்.




------
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே
அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

-----------

கரண்ட் போனாக்கூட, எத்தனை இருக்குது ரசிச்சு சந்தோஷப்பட. அதை விட்டுட்டு எதுக்கெடுத்தாலும் ஆயிரம் நொட்டை சொல்லிட்டு.

#82