Saturday, April 9, 2005

மழையும் யானையும் பின்னே 'நேத்ரா'வும்..

ஊருபக்கம் நல்ல மழைங்க.. ஒரு மாசத்துக்கு தண்ணி வாங்கி ஊத்த வேண்டாம்ங்கிற அளவுக்கு தட்டிஎடுத்துட்டு போயிருக்குதுங்க, அதுக்குள்ள இந்த வேசை முடிஞ்சிரும்னு ஒரு நம்பிக்கை, இல்லாட்டி பழையபடி தண்ணி லோடு அடிக்கவேண்டியதுதான்...

பொதுவாவே, மழைபேய்ஞ்சுதுன்னா எங்காவது மலங்காட்டு பக்கமா போறது நம்ம வழக்கம்ங்க, சரி.. ஒரு வாரமா மழை கொட்டிட்டு இருக்குதுன்னு, நம்ம சகா மூணு பேர் சேர்ந்து ஒரு நாள் பரம்பிக்குளம் வரைக்கும் போயிருநதம்ங்க், அதுல ஒருத்தன் அவனோட ரெண்டரை வயசு 'நேத்ரா'வயும் எடுத்துட்டு வந்துட்டான் ('நேத்ரா'வோட அம்மா அவுங்கப்பாவ கண்காணிக்கா செஞ்ச ஏற்ப்பாடு அது! :-)). டாப்ஸ்லிப்ல இருந்து பரம்பிக்குளம் போற வழியில கொஞ்சம் ரோட்ட விட்டு ஒதுங்கி ஒரு கி.மி. நடந்தா ஒரு ஓடை வரும்ங்க, அங்க போயி ஓடுற தண்ணியில, 'தண்ணி'யோட கொஞ்ச நேரம் ஆடிட்டு, அப்படியே கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுட்டு படுத்துகிடந்துட்டு வந்தோம். சரி, இவ்வளவு தூரம் சின்ன குழந்தைய எடுத்துட்டு வந்துட்டோம் யானை சவாரி செய்ய வைப்போம்னு ஆசைப்பட்டு, டாப்ஸ்லிப்ல இருக்குற 'கூப்'புக்கு போனோம்ங்க. (சூரியன் படத்துல மொட்டை சரத் வேலை செய்யிற 'கூப்', ஆனா அது கூப்'புகார கவுண்டருது கிடையாதுங்க, கவருமெண்ட் 'கூப்').

யானை மேல ஏத்தி விடுற வரைக்கும், குஷியா இருந்த 'நேத்ரா', யானை நகர ஆரம்பிச்சதும் ஒரே ஆழுகை ஆர்ப்பாட்டம்ங்க, என்னடா இவ்வளவு நேரம் 'யானை, யானை, யானை மேல போறேன்'னு குஷியா இருந்த குழந்தை இப்படி அழுகுதேன்னு நமக்கும் கஷ்டமா போச்சுங்க. அப்புறம் என்ன செய்யறது, சீக்கிரமா எறக்கிவிட்டு, (இருந்தாலும் நம்ம் வீம்புக்காக, ஒரு சுத்து சுத்த விட்டுடனுங்க) அவளுக்கு புடிச்ச alpenlebe லாலிப்பாப் குடுத்து சமாதனபடுத்துனோம்.
அழுகை எல்லாம் சமாதனமானதுக்கப்புறம், 'ஷேம், ஷேம், என்ன இப்படி பயப்படுற நீ'ன்னு சும்மா வம்பிழுத்தனுங்க, அதுக்கு அவ ஒரு பதில் சொன்னா பாருங்க 'நான் ஒன்னும் பயந்துட்டு அழுல, என்னை இறக்கி விடாதீங்கன்னு தான் அழுதேன், நீங்க தான் என்னை சீக்கிரம் எறக்கி விட்டுடீங்க'ன்னு.. நான் அப்படியே ஆடிப்போயிட்டனுங்க. ம்.ம். இந்த புள்ளைக எல்லாம் வயசு வந்தா.. சாமி கஷ்டம் தான்.. கம்முன்னு சொல்றத கேட்டுகிட்ட போயிடனும். எல்லாம் நேரம்.. பொதுவா என் சகா கொஞ்சம் அமைதியான ஆளு அவன்புள்ளயே இவ்வளவு பேசுதுன்னா, நமக்கு நாளைக்கு ஒரு காரியம் ஆகி, நமக்கு ஒன்னு வந்து பொறந்து.. அய்யா..!! இவ்வளவு காலம் தான் இப்படி பெத்தவங்க பேச்ச கேட்டே போச்சுன்னா, இனி வர்ற காலமும் இப்படி பெத்ததுக பேச்ச கேட்டே போயிரும் போல இருக்குதுங்க..
வரும் போது கார்ல சகாகிட்ட "நங்கை உன்னை பார்த்துக்க ரெண்டரை வயசு புள்ளைய அனுப்புதேன்னு நினைச்சேன், ஆனா அதுல ஒன்னும் தப்பபில்ல பங்காளி, அடுத்த தடவை இந்த தப்ப செஞ்சிராத'ன்னு ஒரு எச்சரிக்கை குடுத்தேன், சரிதானுங்க!?

Tuesday, April 5, 2005

நெஞ்சமெல்லாம் காதல்

Song: Nenjamellam kaadhal
Movie: Ayutha Ezhuthu
Singers: Adnan Sami, Sujatha
Lyrics: Vairamuthu
MD: AR Rahman
============================

ஓர் உண்மை சொன்னால்
நேசிப்பாயா

நெஞ்சமெல்லாம் காதல்
தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞசம் கம்மி
காமம் கொஞசம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(உண்மை)

நேசிப்பாயா.. நேசிப்பாயா.. நேசிப்பாயா.. நேசிப்பாயா

பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதர்க்கு

(உண்மை சொன்னால்)


காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லம் மார்கழி தான்
என் கனவெல்லம் கார்திகை தான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தம் இல்லை

(ஓர் உண்மை சொன்னால்)

============================

inspired from :: http://tamillyrics.blogspot.com/

Friday, April 1, 2005

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது


"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ அதை இழப்பதற்க்கு.."


என்னாடா இப்படி கீதாஉபதேசமெல்லால் சொல்றானேன்னு பார்க்கரீங்களா.. அப்புறம் வேற என்னங்க செய்ய சொல்றீங்க, 4 1/2 இஞ்ச் போர்... 600 அடி போட்டு.. புகையா போனா வேற என்ன செய்ய சொல்றீங்க.
ஏற்க்கனவே மாசம் 50 நடை தண்ணி லாரியில வாங்கி ஊத்திட்டு இருக்கம்ங்க. நடைக்கு 300 ரூவா..!!

ம்..ம், இதே காசு, ஒரு 4 வருஷம் முந்தி சென்னைபட்டனத்துல, ஜெமினி மேம்பாலத்துகிட்ட, பொண்ணுக காலேஜ் எதிர்த்தாப்புல, ஏ.சி.யில உக்காந்து வேலைபாத்துட்டு, ஒரு மாசத்து வருமானமா வாங்கிட்டு இருந்தப்ப பெருசா தெரியலைங்க. இப்ப தெரியுது..

'சரி, மேற்க்கயாவது தண்ணி இருக்கில்ல, இதுக்கு ஏன் சலிச்சுக்கிற'ன்னு சாதரணமா சொல்லிட்டு போறாரு எங்கய்யன், நமக்கு தான்.. வயித்த கலக்குதுங்க.. பத்தாவது படிக்கிறப்போ 'the road not taken'ன்னு ஒரு poem இருந்துச்சுங்க, அதெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க..

என்னவோ போங்க..
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்"

Tuesday, March 22, 2005

மும்பாய் டயரி

அடுத்தவங்க டயரிய படிக்கிறது தப்புன்னு சொல்லுவாங்க.. ஆனா நம்ம கண்ணுல மாடினா படிக்காம விடமுடியலீங்க. ஏற்க்கனவே இப்படித்தான் ஒரு புருஷன்பொஞ்சாதி டயரிய படிச்சு, அதை இங்க போட்டு வாங்கி கட்டிகிட்டேன். ஆனா இந்த தடவை அப்படி பட்ட டயரி இல்லீங்க, மும்பாயில் இருக்கிற (பிறந்து வளர்ந்த) ஒரு தமிழ் பொண்ணோட (கோயமுத்தூர் பூர்வீகங்கோவ்!) weekend diary..
படிச்சு பாருங்க.. ம்ம்..
எல்லாம் குடுத்து வச்சிருக்கனும்.. என்னவோ போங்க, நமக்கு வாய்ச்சது தோப்பும் தேங்காயும் தான்.. :-(

அதிரபள்ளி

நேத்து மறுபடியும் KTVயில 'புன்னகைமன்னன்' போட்டாங்க, அது என்னமோ தெரியலைங்க, அடிக்கடி 'கவிதாலாயா' படமா போட்டு தள்ளுறாங்க.. எப்பவும் போல 'என்ன சத்தம் இந்த நேரம்' பாட்டு பார்த்ததுல இருந்து அதிரபள்ளி போகனும்னு நம்ம மனசு அரிக்க ஆரம்பிச்சிருச்சுங்க. அதென்னமோ தெரியலைங்க எத்தனை தடவை போனாலும் நமக்கு அலுக்காத இடம்ங்க அது, அதுவும் நம்ம ஊர்ல இருந்து வால்பாறை வழியா அப்படியே மலை ரோட்டுல போறதுங்கிறது, அதுவும் எஸ்டீமயோ இல்ல கமாண்டரயோ எடுத்துட்டு போகாம, Rxலயே அழுத்தறது தானுங்க செம கலக்கலான விஷயம்.
எத்தனை படத்துல அந்த அருவிய காட்டிடாங்க, புன்னகை மன்னன்ல இருந்து, லேட்டஸ்ட்டா வந்த 4ஸ்டூடெண்ட்ஸ், வரைக்கும்.. இப்போ நம்ம சித்தப்பா நடிச்சு 'அர்ஜுனா அருஜுனா'ன்னு ஒரு பாட்டு வந்துச்சே, (அது என்ன படம்ங்க்??) அது வரைக்கும் ஒவ்வொரு படத்துலயும் அலுக்காம அதிரபள்ளிய காட்டிட்டே தான் இருக்காங்க. நமக்கும் அலுக்கவே மாட்டேங்குது,
பைக்ல போறதுல ஒரு த்ரில் இருந்தாலும், ஒரு தடவை சிக்கலாகிபோச்சுங்க. வால்பாறையில இருந்து ஒரு 40 கி.மி ரிசர்வ் பாரஸ்டல போகும் போது கூட வந்த சகாவோட பைக் பஞ்சர் ஆகி படாதபாடு பட்டோம்ங்க, யானைகூட்டம் சுத்துற காடு, இந்தபக்கம் அந்தபக்கம் 15கிமி'க்கு ஒரு கடைகன்னி கூட கிடையாதுங்க.. அப்பா..! டயர கழட்டி சோலயார் எடுத்துட்டு போயி ரெண்டு பேரு பஞ்சர் ஒட்டிட்டு வர்றதுக்குள்ள இங்க நடுகாட்டுல உக்காந்த்துட்டு நமக்கு காய்ச்சலே வந்துருச்சுங்க, இருந்தாலும் அதுக்கப்புறமும் ரெண்டுவாட்டி பைக்ல அந்த வழியா போயாச்சு, அந்த அளவுக்கு அதிரபள்ளியும் அந்த ரோடும் நம்மள மயக்கியிருக்க்துங்க..
இப்பகூட நம்ம சென்னைபட்டன, பெண்களுர் பட்டன சகாக்கெல்லாம் இந்த வாரம் சேர்ந்தாப்புல மூணு நாள் லீவு வருதாம், எல்லாப்பயலும் ஊருக்கு வர்றானுக.. 'கிளம்பிருவமா?'ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை..
ஏஞ்சாமிகளா.. என்ன சொல்றீங்க.. அழுத்திருவமா??.. கூட்டா மலையேறி நாளாச்சு...



(வழக்கம் போல 'இந்த வயசுல போகாம எப்பங்கய்யா போறது'ன்னு ஒரு டயலாக்க வீட்டுல அவுத்து விடனும்... ரெண்டு ஏத்து விழுகும்.. சரி அதென்ன நமக்கு புதுசா.. இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போறது தானுங்க)