ஆளாளுக்கு மீள்பதிவு போடறாங்க.. அதுனால நாமளும் அப்பப்போ ஒன்னு போட்டு வைப்போம்னு இந்த பதிவு.
ஏற்க்கனவே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் பதிச்ச மேட்டர் தாங்க இது.. நானா சொந்தமா எழுதல, எங்கயோ புடிச்சுபோட்ட சமாச்சாரம் தான். உங்க பார்வைக்காம மறுபடியும் இங்க.
என்னதான் பழைய பாடம்னாலும், பரிட்சை வரும் போது பழைய சிலபஸ் எல்லாம் ஒரு தடவை தூசி தட்டி பார்த்துட்டு போவமே அந்த மாதிரின்னு வைங்களேன். :)
_____________________________
ஒரு கணவன் மனைவியின் டைரி குறிப்பு..!!!
ஏன்தான் இந்த பொண்ணுக வாழ்க்கை மட்டும், பசங்க வாழ்க்கை மாதிரி இல்லாம, அதிகம் குழப்பமும், புலம்பலுமாவே இருக்குன்னு ரொம்ப நாளா யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் .. அதுக்கு ஒரு விடையே கிடைக்கல.., நானும் எருமைத்தயிர கரைச்சு ஒரு புடிபுடிச்சுட்டு, வேப்ப மர நிழல்ல கயித்து கட்டில்ல போட்டு, மல்லாக்க படுத்துட்டு பல காலமா யோசிக்கிறேன்..ம்ஹூம்..நம்ம புத்திக்கு ஒரு இழவும் விளங்கலை.. எங்க ஊரு மணியகாரர்'ல இருந்து எங்க தோட்டத்துல சாணி அள்ளுற சின்னான் வரைக்கு எல்லார்கிட்டயும் பேசி பார்த்துட்டேன்.. ஒன்னும் புரியல,, யாருக்கும் இதுக்கு காரணம் தெரியல...
ரொம்ப நாளா இருந்த இந்த பிரச்சனைக்கு இப்போ ஒரு தீர்வு கிடைச்சுருச்சு..
நேத்து எத்தேசையா ஒரு புருஷன்-பொஞ்சாதியோட டயிரியை படிச்சு பார்த்தேன்.(சரி.சரி...திருட்டுதனமாத்தான்!!.. தேவைப்பட்டா பொய் சொல்லலாம்னு வள்ளுவரே சொல்லியிருக்கரு, நான் சொன்னா மட்டும் என்ன நக்கலா ஒரு சிரிப்பு!!)
இதோ அந்த டையிரிலிருந்து .....
மனைவியின் டயிரி:
3/8/04
என்ன ஆச்சு இவருக்கு இன்னைக்கு, ஒரே மூட் அவுட்டா இருக்காரு, கேட்டா ஒன்னுமில்லைங்கிறாரு,
நான் எதாவது தப்பு பண்ணியிருப்பனோ??, அதை கேட்டாலும் அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ ஒன்னும் கவலைப்படாதேங்கிறாரு,
வீட்டுக்கு திரும்பி வரும்போது எவ்ளோ ஆசையா பேசினேன், அதுக்கு அவர் எதாவது பேசியிருக்கலாம், சும்மா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அவர் பாட்டுக்கு வண்டி ஓட்டிட்டு இருக்காரு,
ஏந்தான் இப்படி இருக்காரோ, எனக்கு புரியவேயில்லை.. ஆனா ஒன்னு அவருக்கு எம்மேல பிரியம் இல்லைன்னு மட்டும் தெரியுது..
வீட்டுக்கு வந்ததும் அதே கதை தான், அவர் பாட்டுக்கு டி.வியை போட்டு உக்காந்த்துட்டாரு, நானும் எவ்ளோ நேரம் பக்கத்துல உக்காந்த்திருந்தேன், ஆன அவர் என்னை கண்டுக்கவே இல்லைஎனக்கு என்னமோ அவர் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்ட மாதிரி இருக்கு. ஒரு 15 நிமிஷம் டி.வி பார்த்துட்டு அப்புறம் நான் வந்து படுத்திட்டேன். அவரும் ஒரு 10 நிமிஷத்தில வந்து படுத்துட்டாரு, என்னால தாங்க முடியல, அப்படி என்னதான் பிரச்சனைன்னு கேக்கலாம்னு முடிவு எடுத்து அவர் பக்கம் திரும்பினா, அவர் சுகமா தூங்கிறாரு....
எனக்கு ஒரே அழுகையா வந்துது, ராத்திரி பூராவும் அமைதியா அழுதிட்டு இருந்தேன்..அப்புறம் எப்போ தூங்கினேன்னு தெரியல...
எனக்கு ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது, அவர் நெனைப்பு வெற எங்கயோ இருக்கு, அவருக்கு எம்மேல அக்கறையே இல்லை..
என் வாழ்க்கையே சூனியமாகி போச்சு....
கணவனின் டயிரி:
3/8/04
இன்னைக்கு மேட்ச்சுல இண்டியா தோத்திருச்சு...ச்சே.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. இப்படி அநியாயமா சொதப்பி தோத்துடானுகளே....!!
---------------------------
இதை படிச்சதும்.. நான் ஒரு தெளிவுக்கு வந்துட்டேன்.. நீங்க..????
--
#182
Friday, June 9, 2006
Tuesday, June 6, 2006
ஒரு தென்றல் புயலாகி வருதே..!

ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே..'ன்னு ஒரு பாட்டு இருக்கு கேட்டிருக்கீங்களா.. ஏவஎம் தயாரிப்புல நம்ம பாரதிராஜா எடுத்த புதுமைபெண் படத்து பாட்டுங்க. மொட்டை இசையில மலேசியா வாசுதேவனோட குரல்ல சும்மா ஜிவ்வுன்னு ஹைபிட்ச்சுல போற பாட்டுங்க.. என்ன நம்ம பாரதிராஜா தான் வழக்கம் போல உணர்ச்சிய தொடுற மாதிரி எடிட் பண்ணி, என்னமோ ரீவைன்ட் செஞ்சு, ரீவைன்ட் செஞ்சு பார்க்கிற எபக்ட்டுல எடுத்திருப்பாரு. ஒரு வேளை படம் வந்தப்போ அதெல்லாம் நல்லா இருந்ததோ என்னமோ.. யாராவது பெருசுக தான் சொல்லனும்.
நமக்கெல்லாம் அந்த படம் தியேட்டர்ல பார்த்த ஞாபகமே இல்லைங்க.. பின்னாடி பொட்டியில பார்த்தது தான். ஏவிஎம்'க்காக தன்னோட சிஷ்யன் குடுத்தத விட தான் ஒரு வெற்றி குடுக்கனும்னு, நம்ம பாக்கியராஜோட முந்தானை முடிச்சு'க்கு அப்புறம் பாரதிராஜா செஞ்ச படம்னு கேள்வி பட்டிருக்கேன். அந்தளவுக்கு வெற்றி குடுத்துச்சான்னு தெரியலை..
சரி.. இப்ப எதுக்கு இந்த கதைன்னு கேக்கரீங்களா.. அந்த பாட்டு ஞாபகம் வந்துச்சு அப்படியே தொடர்ச்சியா அந்த படமும்.. அவ்ளோதான்..
சரி.. பாட்டு எதுக்கு ஞாபகம் வந்துச்சுங்கரீங்களா.. விட மாட்டீங்களே..
வாரக்கடைசியில வேலையிடத்துல கொஞ்சம் அழுத்தம் ஜாஸ்த்தி ஆகி.. அப்படியே அதை தொடர்ந்து நட்பு வட்டத்தோட ஒரு கையெழுத்து சுற்றுலான்னு போயிட்டு, மறுநாள் மதியானாம எந்திருச்சு வெட்டிவேலைகள்ல சுத்தி, சாயங்காலம் ரவுடிகாவியம் படம் பார்க்கும் போது, அடுத்தவங்கள தொந்தரவு செய்யகூடாதுங்கிற ஒரு 'உயரிய' எண்ணத்துல ஆஃப் பண்ண செல்.. வேண்டாம் தமிழ்ல சொல்ல்வோம், தூங்கப்படுத்துன கைப்பேசிய மறந்து போயி ஒரு நாள் பூராவும் மறுபடியும் உயிர்பிக்காம வச்சிருந்து, பொறுமையா மூணு நாளுக்கப்புறம் கூப்பிட்டு ரொம்ப தமாசா 'ஹாய்'ன்னு சொன்னா..
அப்புறம் அந்த பக்கம் இருந்து வந்த பதிலுக்கு 'ஒரு தென்றல் புயலாகி வருதே' ஞாபகம் வராம, 'தென்றல் வந்து என்னை தொடும்'ன்னா ஞாபகம் வரும்..
அடபோங்க நீங்க வேற.. :(
pic : http://www.bradknapp.com/
---
#181
Monday, June 5, 2006
வாழ்க்கை
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கே பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண் மூடிக்கொண்டால்..
போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினில் வாழ்கின்றோம்
முற்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையில்
உன் நிழலும் உன்னை விலகிவிடும்
நீ மட்டும் தான்
இந்த உலகத்திலே
உனக்கு துனை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில்..
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்தொடுப்போம்
அந்த தெய்வரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிழலாய் கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...

அது எனக்கு எது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உலகம் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவர் யார் அட கெட்டவர் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தில் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
கதை முடியும் போக்கில்
அதை முடித்துகொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேடி தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கே பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண் மூடிக்கொண்டால்..
போர்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினில் வாழ்கின்றோம்
முற்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையில்
உன் நிழலும் உன்னை விலகிவிடும்
நீ மட்டும் தான்
இந்த உலகத்திலே
உனக்கு துனை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில்..
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர்தொடுப்போம்
அந்த தெய்வரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிழலாய் கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளை கண்டால்...

அது எனக்கு எது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உலகம் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவர் யார் அட கெட்டவர் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தில் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
கதை முடியும் போக்கில்
அதை முடித்துகொள்வோம்
மறு பிறவி வேண்டுமா...
Wednesday, May 31, 2006
ச்சின்ன சந்தேகம்
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சகலகலா வல்லவ வலைப்பதிவு சமூகத்துக்கு என் பணிவான வணக்கங்கள்..!
என்னடா இது என்னைக்கும் இல்லாத திருவிழாவா இவன் இன்னைக்கு ரொம்ப மரியாதையா ஆரம்பிக்குறானேன்னு பார்க்கரீங்களா.. உண்மையத்தான சொல்றேன். இருந்தாலும் நீங்க இப்படி விஷயமில்லாம இவன் இப்படி எல்லாம் பேசமாட்டானேன்னு தப்பாவே எடுத்துக்ககூடாது.
ஒரு சின்ன சந்தேகம், நிசமாலுமே 'ச்சின்ன' தான்.. சம்பந்தபட்டவங்க சொல்ல மாட்டேன்னுட்டாங்க.. நீங்க யாராவது தீர்த்து வைப்பீங்கங்கிற நம்பிக்கையில இங்க பொதுவுல கேக்குறேன். நீங்களும் மதிச்சு பதில் சொல்லனுமே அதுக்கு தான் அந்த முதல் வரி.. :)
இப்ப சந்தேகத்துக்கு வருவோம்.. பெருசா ரொம்ப குழப்பமான சந்தேகம் எல்லாம் இல்லீங்க.. ரொம்ப சிம்பிள் தான்.. (ஆனா எனக்கு தெரியலை!)
இந்த லாவன்யா ஐஸ்க்ரீம், 'லாவன்யா' ஐஸ்க்ரீம்'ங்கிறாங்களே அப்படின்னா என்னங்க?
இது தெரியாதான்னுட்டாங்க.. நமக்கு இந்த சமாச்சாரம் எல்லாம் அவ்ளவா பரிச்சயம் இல்லையா.. யூ ஆல் நோ, மீ குட் பாய், சரி.. சரி.. கோவிச்சுகாதீங்க..
ம்ம்.. தெரியலைன்னு சொல்லுறது ஒரு வகைக்கு வசதிதான்னாலும்.. சொல்லி தெரியறதுக்கு முன்னாடி நாமளா தெரிஞ்சுவச்சுகிட்டா நல்லதுன்னு தான் கேக்குறேன்.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லி கொஞ்சம் உதவி பண்ணங்கப்பு, புண்ணியமா போகும். :)
---
#179
என்னடா இது என்னைக்கும் இல்லாத திருவிழாவா இவன் இன்னைக்கு ரொம்ப மரியாதையா ஆரம்பிக்குறானேன்னு பார்க்கரீங்களா.. உண்மையத்தான சொல்றேன். இருந்தாலும் நீங்க இப்படி விஷயமில்லாம இவன் இப்படி எல்லாம் பேசமாட்டானேன்னு தப்பாவே எடுத்துக்ககூடாது.
ஒரு சின்ன சந்தேகம், நிசமாலுமே 'ச்சின்ன' தான்.. சம்பந்தபட்டவங்க சொல்ல மாட்டேன்னுட்டாங்க.. நீங்க யாராவது தீர்த்து வைப்பீங்கங்கிற நம்பிக்கையில இங்க பொதுவுல கேக்குறேன். நீங்களும் மதிச்சு பதில் சொல்லனுமே அதுக்கு தான் அந்த முதல் வரி.. :)
இப்ப சந்தேகத்துக்கு வருவோம்.. பெருசா ரொம்ப குழப்பமான சந்தேகம் எல்லாம் இல்லீங்க.. ரொம்ப சிம்பிள் தான்.. (ஆனா எனக்கு தெரியலை!)
இந்த லாவன்யா ஐஸ்க்ரீம், 'லாவன்யா' ஐஸ்க்ரீம்'ங்கிறாங்களே அப்படின்னா என்னங்க?
இது தெரியாதான்னுட்டாங்க.. நமக்கு இந்த சமாச்சாரம் எல்லாம் அவ்ளவா பரிச்சயம் இல்லையா.. யூ ஆல் நோ, மீ குட் பாய், சரி.. சரி.. கோவிச்சுகாதீங்க..
ம்ம்.. தெரியலைன்னு சொல்லுறது ஒரு வகைக்கு வசதிதான்னாலும்.. சொல்லி தெரியறதுக்கு முன்னாடி நாமளா தெரிஞ்சுவச்சுகிட்டா நல்லதுன்னு தான் கேக்குறேன்.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லி கொஞ்சம் உதவி பண்ணங்கப்பு, புண்ணியமா போகும். :)
---
#179
Tuesday, May 30, 2006
சிணுங்கல் - நினைவுகள்
அது ஒரு அஞ்சு வருஷம் ஆச்சுங்க. அப்ப நான் சென்னைபட்டணத்துல கையில மூணு அட்டைய வச்சுகிட்டு, எப்பவேணா எப்படிவேணான்னு ரவுண்ட் கட்டி ஆடிட்டு இருந்த காலம். (படிச்ச பையன், புதுசா சம்பாரிக்கிறான் இருக்கட்டும்னு அப்போ விட்டு வச்சிருந்திருக்காங்க.. இப்பத்தான் தெரியுது அது) பட்டணத்துல அவன் அவன் கலர் கலரா, பல சைஸ்ல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்திய கையில புடிச்சுகிட்டு அவ சிணுங்கலுக்கு பதில் சொல்லிட்டே கெத்தா நடந்துட்டிருந்தாங்க. நமக்கும் ஆசை.. தேவையான்னு கூட கேட்டாங்க, கூட இருந்த சகா'எல்லாம். 'ஆசை தான் துன்பத்துக்கு வாசப்படி'ன்னு புத்த தத்துவம் எல்லாம் கூட சொல்லிபாத்தானுக, நாம யாரு, என்னைக்கு அதெல்லாம் காதுல போட்டிருக்கோம், அடப்போங்கடா, நடு ராத்திரியில கட்டுன பொஞ்சாதி, குழந்தை, நம்பி இருக்கிற நாடு, மக்கள், அத்தனையும் விட்டுட்டு போனத விட ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லைன்னு மப்பா சொல்லிட்டு, என் ஆசைய நிறைவேத்திக்க போயிட்டேன்.
அப்போ அஞ்சு வருஷம் முன்னாடி, இப்ப மாதிரி இல்லீங்க.. இப்பவெல்லாம் சும்மா ஸ்கூல் போற பையன் கூட தனக்கு புடிச்ச மாதிரி ஒண்னை செலக்ட் பண்ணி கூச்சப்படாம இடுப்புல கோர்த்துகிட்டு போறாங்க.. அப்போ எல்லாம் நல்ல 'ஐட்டமா' வேனும்னா நாலு இடம் சுத்தனும், நாப்பது ஐட்டத்தை பார்க்கனும், நம்ம பர்ஸ் தாங்குமான்னு வேற யோசிக்கனும். அப்படி அத்தனையும் முறையா செஞ்சு, ஸ்பென்ஸர்ஸ்ல ஒரு மூலையில, தலைக்கு கலர் அடிச்ச ஒரு வடநாட்டுகாரன் கிட்ட ஒரு மணி நேரம் ரேட் பேசி, எனக்கு புடிச்ச மாதிரி ஒரு ஐட்டத்தை கூட கூட்டிட்டு வந்தேன். அப்போ நாம வாங்கின சம்பளத்துக்கு அது கிட்டத்தட்ட ஒரு மாச சம்பளம். ஆனாலும் என்ன செய்ய வயசு அப்படி, மனசு ஆசைபட்டுட்டா எப்படியும் செஞ்சுடனும்னு ஒரு வெறி.
நேரா நம்ம சேவல்பண்னைக்கு போனா, அவ்ளோ நேரம் எனக்கு தேவையா ஆசையான்னு வகுப்பு எடுத்தவனுக, என்னைய ஒரு மூலையில அம்போன்னு விட்டுட்டு ஆளாளுக்கு ஷிப்ட் போட்டு வெளையாடிட்டானுக.. பாவம் அவனுக என்ன செய்வாங்க.. சும்மாவாச்சுக்கும் தேவையான்னு தத்துவம் பேசுனாலும், ஆசை எல்லாருக்கு இருக்கிறது தான. அதுவும் புதுசா ஃப்ரஷ்சா கண்ணு முன்னாடி பார்த்தா?? எல்லாப்பயலும் பார்த்து ஓய்ஞ்ச பின்னாடி, அப்புறம் தான் நான் தொட்டேன். ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை. ஒவ்வொரு பாகமுமா ஒவ்வொரு வளைவா தொட்டு தடவி ஒரு பூவை ரசிக்கிற மாதிரி ரசிச்சேன். அந்த சினுங்கல கேக்க கேக்க மனசுல என்னமோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.
அப்புறம் இடுப்போட சேர்த்து கோர்த்துகிட்டு ஊரெல்லாம் சுத்தினது ஒரு பெரிய கதை. ம்ம்.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, நமக்கு ஆசை/தேவைன்னு பாடம் எடுத்தவனுக எல்லாம் நம்மள விட கொஞ்சம் பெரிய ரேஞ்சு பார்டிகள கூட்டிகிட்டு திரிய ஆரம்பிச்சானுக. போக போக அது ஒரு ஸ்டேடஸ் சிம்பளாகிபோச்சு இங்க. அவனவன் கையில காசு வாயுல தோசைன்னு தினம் தினம் ஒரு தினுசு, ஒரு கலருன்னு சுத்திட்டு இருந்தானுக. ஆனா பாருங்க எனக்கு என்னமோ முதல் தடவையா நாம தொட்டது, அதை விட கூடாதுன்னு ஒரு பெரிய கொள்கை ஆயிபோச்சுங்க.. எனக்கு மட்டுமில்லைங்க, அவளுக்கும் நான் தான் முதல் கஸ்டமர். (இந்த வார்த்தையே புடிக்கலை தான்.. இருந்தாலும் சொல்றேன்) அன்னையில இருந்து அவள பிரியாத நேரமே கிடையாதுன்னு ஆகிபோச்சு. எங்க போனாலும் சரி, எப்ப போனாலும் சரி, ராத்திரி பகல்ன்னு இல்லாம எல்லா நேரமும் என் கூடவே இருக்க வச்சு அழகு பார்த்துட்டிருந்தங்க. குளிக்க போனாக்கூட கூடவே வெக்கமில்லாம கூட்டிகிட்டு போய் உக்காரவச்சுகிட்டு தான் குளிப்பேன்.
'ஊர் உலகத்தை பாருடா, இன்னும் இதையே ஏன்டா கட்டிகிட்டு அழுவற'ன்னு எத்தனயோ பேர் சொன்னப்ப கூட, எனக்கு அவளை விட மனசே இல்லீங்க.. எத்தனையே விதவிதமா பல தினுசுல பல கலர்ல பல பேரு நமக்கு ஆசைகாட்டுனப்பவும், நமக்கும் கட்டுபடி ஆகும்ங்கிற நிலமை இருந்த போதும், எனக்கென்னமோ மனசே இல்லீங்க.. 'டேய் பொண்டாட்டிய தான்டா மாத்த கூடாது, இதெல்லாம் மாத்தலாம்'ன்னு நம்ம செந்தான் கூட திட்டுனான். எங்க போனாலும் இதையே கட்டிகிட்டு சுத்துற உனக்கு நல்லாவா இருக்குன்னாங்க.. ம்ஹும்.. நான் எதுக்கு மசியலையே.. யாரு என்ன சொன்னாலும் சரி, எனக்கு இவதான்னு பிடிவாதமா இருந்தேன். இத்தனை நாள் கூட வச்சுகிட்டு இன்னைக்கு வேற ஒன்னு அழகா இருக்குதுங்கிறதுக்காக, வேற ஒருத்தன் கிட்ட குடுக்க மனசுவரலை..
ஆனா பாருங்க.. காலம்னு ஒண்ணு இருக்கு, அது எல்லாத்தையும் மாத்திடுது. நாம விரும்புனாலும் சரி விரும்பாட்டியும் சரி, சில விஷயங்கள் தவிர்க்கவே முடியறதில்லை.. போன வாரம் ஒரு நாள் வழக்கம் போல நம்ம Rxல இன்னர் ரிங்ரோட்டுல விரட்டிகிட்டு இருந்தேன், திடீர்ர்னு இடுப்புல கிச்சுகிச்சு மூட்டின மாதிரி இருந்துச்சு, கவனிச்சா, நம்ம ஆளு தான், எதோ சினுங்கறா.. சரின்னு வண்டிய ஒரு கையால ஓட்டிகிட்டே பேசி சமாதனபடுத்தினேன். அதுவரைக்கு எல்லாம் நல்லாத்தாங்க நடந்ததுது.. அதுக்கப்புறம் தான் விதி விளயாடிருச்சு, நான் பேசி சமாதனபடுத்தின கையோட கொஞ்சம் சரியா கவனிக்காம விட்டுட்டேன், வண்டி ஒரு குழியில இறங்கிருச்சு, உங்களுக்கு தான் தெரியுமே இங்க இருக்கிற ரோட்டை பத்தி, குழியும் குண்டுமா.. குழியில விட்டாலும் நான் சுதாரிச்சிகிட்டேன், ஆனா என்னைய நம்பி வேற எந்த பிடிமானமும் இல்லாம என் இடுப்பை தொட்டுகிட்ட இருந்த அவ அப்படியே ரோட்டுல விழுந்துட்டா.. நான் போன வேகமும், குழியில விட்ட அதிர்ச்சியும், கிழ விழுந்த உடனே அப்படியே அவளோட அழகான உடம்பு அப்படியே துடிச்சு போயிருக்கும். நான் சட்டுன்னு வண்டிய ஓரங்கட்டிட்டு திரும்பறதுகுள்ள, பின்னாடி வேகமா வந்த ஒரு ஆந்திரா லாரிக்காரன், இத்தனை வருஷமா என்னைய சந்தோஷப்படுத்திட்டு இருந்த என் செல்லத்து மேல வண்டிய ஏத்தி.. ம்ம்... நடு ரோட்டுல இப்படி லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போறதுக்கா இத்தனை நாளா உன்னை இப்படி பொத்தி பொத்தி வச்சிருந்தேன்.. என்னோட ஒரு நிமிஷ கவனக்குறைவுனால இப்படி ஆயிருச்சு. அவ்ளோதான் இனி கண்டிப்பா அவ உயிரோட இருக்க மாட்டான்னு தோனுச்சு.. லாரிக்கடியில சிக்கி... அவளை அப்படி பார்க்க கூட எனக்கு மனசு வரலைங்க.. சட்டுன்னு திரும்பி கூட பார்க்காம வண்டிய எடுத்துட்டு வந்துட்டங்க..
வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டு மணி நேரம் மனசே சரியில்லைங்க.. அப்படி நடு ரோட்டுல லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போனவள திரும்பி கூட பார்க்காம வந்துட்டமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி .. பார்த்திருந்தா நான் தாங்கியிருக்க மாட்டேன்னு எனக்கு நானே சொல்லி சமாதானப்படுத்திகிட்டேன்.. இனி மேல் இப்படி ஒரு உறவே வச்சுக்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன்..
எங்க..?? இங்கயும் காலம் தான் முடிவு செய்யுது. நம்ம கையில என்ன இருக்கு.. :(
ஒரு வாரம் பொறுத்து பார்த்தேன்.. முடியலைங்க.. நிஜம்மா முடியலை.. தினம் தினம் அவ ஸ்பரிசமும் சினுங்கலும் கேட்டே பழகியாச்சு.. காலையில அஞ்சரை மணிக்கு கண்முழிக்கறதே அவ குரல் கேட்டுதான். இப்போ திடீர்ன்னு அவ கூட இல்லைன்னா எப்படிங்க.. ரொம்ப கஷ்டம்.. சரி போனது போயிருச்சு.. அதை நினைச்சு என்ன செய்யன்னு நானே மனசை தேத்திகிட்டு இன்னைக்கு மறுபடியும் ஒரு புது துணை தேடிக்கிட்டேன்..
நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு கட்டுபடியாகுற ரேட்டுல (இன்ஸ்டால்மென்ட் கூட இருக்காம்) எடுத்துக்க இங்க பெங்களூர்ல இப்போ இதுக்கெல்லாம் நிறையா இடம் இருக்குங்க.. ஆனா இந்த தடவை முதல் தடவை மாதிரி ஒரு பரவசமும் இல்லை..எதோ கடமை மாதிரிதான் செஞ்சேன். போனேன், கையகாட்டுனேன், காசைகுடுத்தேன்.. கூட்டிட்டுவந்துட்டேன்..
என்னமோ பாலிபோனிக், mp3tunes'ங்கிறாங்க.. ஆயிரம் இருந்தாலும் அவ சிணுங்கல் மாதிரி வராதுங்க.. கீழ உள்ள படத்துல வட்டம் போட்டு காட்டியிருக்கேன் பாருங்க அது தான் அவ.. stable 3310 model :(

---
#178
அப்போ அஞ்சு வருஷம் முன்னாடி, இப்ப மாதிரி இல்லீங்க.. இப்பவெல்லாம் சும்மா ஸ்கூல் போற பையன் கூட தனக்கு புடிச்ச மாதிரி ஒண்னை செலக்ட் பண்ணி கூச்சப்படாம இடுப்புல கோர்த்துகிட்டு போறாங்க.. அப்போ எல்லாம் நல்ல 'ஐட்டமா' வேனும்னா நாலு இடம் சுத்தனும், நாப்பது ஐட்டத்தை பார்க்கனும், நம்ம பர்ஸ் தாங்குமான்னு வேற யோசிக்கனும். அப்படி அத்தனையும் முறையா செஞ்சு, ஸ்பென்ஸர்ஸ்ல ஒரு மூலையில, தலைக்கு கலர் அடிச்ச ஒரு வடநாட்டுகாரன் கிட்ட ஒரு மணி நேரம் ரேட் பேசி, எனக்கு புடிச்ச மாதிரி ஒரு ஐட்டத்தை கூட கூட்டிட்டு வந்தேன். அப்போ நாம வாங்கின சம்பளத்துக்கு அது கிட்டத்தட்ட ஒரு மாச சம்பளம். ஆனாலும் என்ன செய்ய வயசு அப்படி, மனசு ஆசைபட்டுட்டா எப்படியும் செஞ்சுடனும்னு ஒரு வெறி.
நேரா நம்ம சேவல்பண்னைக்கு போனா, அவ்ளோ நேரம் எனக்கு தேவையா ஆசையான்னு வகுப்பு எடுத்தவனுக, என்னைய ஒரு மூலையில அம்போன்னு விட்டுட்டு ஆளாளுக்கு ஷிப்ட் போட்டு வெளையாடிட்டானுக.. பாவம் அவனுக என்ன செய்வாங்க.. சும்மாவாச்சுக்கும் தேவையான்னு தத்துவம் பேசுனாலும், ஆசை எல்லாருக்கு இருக்கிறது தான. அதுவும் புதுசா ஃப்ரஷ்சா கண்ணு முன்னாடி பார்த்தா?? எல்லாப்பயலும் பார்த்து ஓய்ஞ்ச பின்னாடி, அப்புறம் தான் நான் தொட்டேன். ராத்திரி பூராவும் தூங்கவே இல்லை. ஒவ்வொரு பாகமுமா ஒவ்வொரு வளைவா தொட்டு தடவி ஒரு பூவை ரசிக்கிற மாதிரி ரசிச்சேன். அந்த சினுங்கல கேக்க கேக்க மனசுல என்னமோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.
அப்புறம் இடுப்போட சேர்த்து கோர்த்துகிட்டு ஊரெல்லாம் சுத்தினது ஒரு பெரிய கதை. ம்ம்.. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, நமக்கு ஆசை/தேவைன்னு பாடம் எடுத்தவனுக எல்லாம் நம்மள விட கொஞ்சம் பெரிய ரேஞ்சு பார்டிகள கூட்டிகிட்டு திரிய ஆரம்பிச்சானுக. போக போக அது ஒரு ஸ்டேடஸ் சிம்பளாகிபோச்சு இங்க. அவனவன் கையில காசு வாயுல தோசைன்னு தினம் தினம் ஒரு தினுசு, ஒரு கலருன்னு சுத்திட்டு இருந்தானுக. ஆனா பாருங்க எனக்கு என்னமோ முதல் தடவையா நாம தொட்டது, அதை விட கூடாதுன்னு ஒரு பெரிய கொள்கை ஆயிபோச்சுங்க.. எனக்கு மட்டுமில்லைங்க, அவளுக்கும் நான் தான் முதல் கஸ்டமர். (இந்த வார்த்தையே புடிக்கலை தான்.. இருந்தாலும் சொல்றேன்) அன்னையில இருந்து அவள பிரியாத நேரமே கிடையாதுன்னு ஆகிபோச்சு. எங்க போனாலும் சரி, எப்ப போனாலும் சரி, ராத்திரி பகல்ன்னு இல்லாம எல்லா நேரமும் என் கூடவே இருக்க வச்சு அழகு பார்த்துட்டிருந்தங்க. குளிக்க போனாக்கூட கூடவே வெக்கமில்லாம கூட்டிகிட்டு போய் உக்காரவச்சுகிட்டு தான் குளிப்பேன்.
'ஊர் உலகத்தை பாருடா, இன்னும் இதையே ஏன்டா கட்டிகிட்டு அழுவற'ன்னு எத்தனயோ பேர் சொன்னப்ப கூட, எனக்கு அவளை விட மனசே இல்லீங்க.. எத்தனையே விதவிதமா பல தினுசுல பல கலர்ல பல பேரு நமக்கு ஆசைகாட்டுனப்பவும், நமக்கும் கட்டுபடி ஆகும்ங்கிற நிலமை இருந்த போதும், எனக்கென்னமோ மனசே இல்லீங்க.. 'டேய் பொண்டாட்டிய தான்டா மாத்த கூடாது, இதெல்லாம் மாத்தலாம்'ன்னு நம்ம செந்தான் கூட திட்டுனான். எங்க போனாலும் இதையே கட்டிகிட்டு சுத்துற உனக்கு நல்லாவா இருக்குன்னாங்க.. ம்ஹும்.. நான் எதுக்கு மசியலையே.. யாரு என்ன சொன்னாலும் சரி, எனக்கு இவதான்னு பிடிவாதமா இருந்தேன். இத்தனை நாள் கூட வச்சுகிட்டு இன்னைக்கு வேற ஒன்னு அழகா இருக்குதுங்கிறதுக்காக, வேற ஒருத்தன் கிட்ட குடுக்க மனசுவரலை..
ஆனா பாருங்க.. காலம்னு ஒண்ணு இருக்கு, அது எல்லாத்தையும் மாத்திடுது. நாம விரும்புனாலும் சரி விரும்பாட்டியும் சரி, சில விஷயங்கள் தவிர்க்கவே முடியறதில்லை.. போன வாரம் ஒரு நாள் வழக்கம் போல நம்ம Rxல இன்னர் ரிங்ரோட்டுல விரட்டிகிட்டு இருந்தேன், திடீர்ர்னு இடுப்புல கிச்சுகிச்சு மூட்டின மாதிரி இருந்துச்சு, கவனிச்சா, நம்ம ஆளு தான், எதோ சினுங்கறா.. சரின்னு வண்டிய ஒரு கையால ஓட்டிகிட்டே பேசி சமாதனபடுத்தினேன். அதுவரைக்கு எல்லாம் நல்லாத்தாங்க நடந்ததுது.. அதுக்கப்புறம் தான் விதி விளயாடிருச்சு, நான் பேசி சமாதனபடுத்தின கையோட கொஞ்சம் சரியா கவனிக்காம விட்டுட்டேன், வண்டி ஒரு குழியில இறங்கிருச்சு, உங்களுக்கு தான் தெரியுமே இங்க இருக்கிற ரோட்டை பத்தி, குழியும் குண்டுமா.. குழியில விட்டாலும் நான் சுதாரிச்சிகிட்டேன், ஆனா என்னைய நம்பி வேற எந்த பிடிமானமும் இல்லாம என் இடுப்பை தொட்டுகிட்ட இருந்த அவ அப்படியே ரோட்டுல விழுந்துட்டா.. நான் போன வேகமும், குழியில விட்ட அதிர்ச்சியும், கிழ விழுந்த உடனே அப்படியே அவளோட அழகான உடம்பு அப்படியே துடிச்சு போயிருக்கும். நான் சட்டுன்னு வண்டிய ஓரங்கட்டிட்டு திரும்பறதுகுள்ள, பின்னாடி வேகமா வந்த ஒரு ஆந்திரா லாரிக்காரன், இத்தனை வருஷமா என்னைய சந்தோஷப்படுத்திட்டு இருந்த என் செல்லத்து மேல வண்டிய ஏத்தி.. ம்ம்... நடு ரோட்டுல இப்படி லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போறதுக்கா இத்தனை நாளா உன்னை இப்படி பொத்தி பொத்தி வச்சிருந்தேன்.. என்னோட ஒரு நிமிஷ கவனக்குறைவுனால இப்படி ஆயிருச்சு. அவ்ளோதான் இனி கண்டிப்பா அவ உயிரோட இருக்க மாட்டான்னு தோனுச்சு.. லாரிக்கடியில சிக்கி... அவளை அப்படி பார்க்க கூட எனக்கு மனசு வரலைங்க.. சட்டுன்னு திரும்பி கூட பார்க்காம வண்டிய எடுத்துட்டு வந்துட்டங்க..
வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டு மணி நேரம் மனசே சரியில்லைங்க.. அப்படி நடு ரோட்டுல லாரிக்கடியில மாட்டி சிதைஞ்சு போனவள திரும்பி கூட பார்க்காம வந்துட்டமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி .. பார்த்திருந்தா நான் தாங்கியிருக்க மாட்டேன்னு எனக்கு நானே சொல்லி சமாதானப்படுத்திகிட்டேன்.. இனி மேல் இப்படி ஒரு உறவே வச்சுக்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன்..
எங்க..?? இங்கயும் காலம் தான் முடிவு செய்யுது. நம்ம கையில என்ன இருக்கு.. :(
ஒரு வாரம் பொறுத்து பார்த்தேன்.. முடியலைங்க.. நிஜம்மா முடியலை.. தினம் தினம் அவ ஸ்பரிசமும் சினுங்கலும் கேட்டே பழகியாச்சு.. காலையில அஞ்சரை மணிக்கு கண்முழிக்கறதே அவ குரல் கேட்டுதான். இப்போ திடீர்ன்னு அவ கூட இல்லைன்னா எப்படிங்க.. ரொம்ப கஷ்டம்.. சரி போனது போயிருச்சு.. அதை நினைச்சு என்ன செய்யன்னு நானே மனசை தேத்திகிட்டு இன்னைக்கு மறுபடியும் ஒரு புது துணை தேடிக்கிட்டேன்..
நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு கட்டுபடியாகுற ரேட்டுல (இன்ஸ்டால்மென்ட் கூட இருக்காம்) எடுத்துக்க இங்க பெங்களூர்ல இப்போ இதுக்கெல்லாம் நிறையா இடம் இருக்குங்க.. ஆனா இந்த தடவை முதல் தடவை மாதிரி ஒரு பரவசமும் இல்லை..எதோ கடமை மாதிரிதான் செஞ்சேன். போனேன், கையகாட்டுனேன், காசைகுடுத்தேன்.. கூட்டிட்டுவந்துட்டேன்..
என்னமோ பாலிபோனிக், mp3tunes'ங்கிறாங்க.. ஆயிரம் இருந்தாலும் அவ சிணுங்கல் மாதிரி வராதுங்க.. கீழ உள்ள படத்துல வட்டம் போட்டு காட்டியிருக்கேன் பாருங்க அது தான் அவ.. stable 3310 model :(

---
#178
Subscribe to:
Posts (Atom)