Tuesday, June 27, 2006

டைமிங்

தலைவர் வாழ்க..!


**********************

ஏங்க பாட்டிமா, இவ்ளோ வயசாகி, இன்னுமா நீங்க பேச கத்துகல..

அதுக்கு பேச வராதுங்க..

அப்ப, பாடுமா?

அட அது ஊமைங்க..


**********************

இதுக்கு பேரு தான் டைமிங் ..

'சும்மா, கோமுட்டி தலையா..ன்னு கத்திட்டு காலை தூக்கிட்டு உதைச்சா அது காமெடியா'ன்னு கேக்கும் 'அறிவாளிகளுக்காக..

:)


படம் : ப்ரம்மா

--
#188

Monday, June 26, 2006

தலைப்புசெய்திகள் ஆறு


முன்ன ஒரு நா இப்படித்தான் நான் நாலு நாலு'ன்னு நாலு பேர இழுத்துவிட்டேன்.. அது அப்படியே ஒரு சுத்து சுத்தி ஓஞ்சு.. இப்ப அடுத்து இது.. ஆரு ஆரம்பிச்சு வச்சதுன்னு தெரியலைங்க, ஊருகுள்ளார எல்லாரு 'ஆறு, ஆறா' போட்டு தள்ளுறாங்க, நம்மளையும் புடிச்சு, சிறியபார்வை 'நரியா' தள்ளிவிட்டுட்டாருங்க..
நம்மளது பேரு ராசபார்வை, அவரோட பதிவு பேரு சிறியபார்வை.. ரெண்டுலயும் பார்வை இருக்குதேன்னு பாசமா நம்மளையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்க சொல்லிட்டாரு போல இருக்குதுங்க..
அப்புறம் நம்ம்ளும் என்னத்தை எழுதறதுன்னு மண்டைய ஒடச்சுகிட்டு இருக்கும் போது, யாராவது ஒரு தலைப்ப குடுத்தா வுட்ருவமா என்ன :)


ஆளாளுக்கு விதவிதமா ஆறு போட்டிருக்காங்க.. நம்ம பங்குக்கு நம்மளும் எதாச்சும் வித்தியாசமா போடனுமே.. அதுனால 1.1.2010'ல வரப்போற 'தினப்பார்வை'யில இருந்து ஒரு 'ஆறு' முக்கியமான தலைப்பு செய்திகள் மட்டும், உங்களுக்காக ஸ்பெஷலா இங்க--

******************************************
தலைப்புசெய்திகள்
தினப்பார்வை
1.1.2010

1. ஆறு நாள் சுற்றுபயணமாக டெல்லி வந்தார் 'இத்தாலி' பிரதமர் - ஜனாதிபதி 'சோனியாகாந்தி', பிரதமர் 'ராகுல்காந்தி' ஆகியோர் வரவேற்ப்பு.

2. முதலமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் - க.தி.மு.க. தலைவர் திரு. ஸ்டாலின் கோரிக்கை.

3. இதுவே எனது கடைசி திரைப்படம் - புதுப்பட பாடல் வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூசகம்.

4. தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு நிச்சயம் ஒரு நாள் மருதநாயகம் வரும் - இணையதள பேட்டியில் கலைஞானி கமல்ஹாசன் உறுதி.

5. எனக்கான இடம் இன்னும் அணியில் காலியாகத்தான் உள்ளது, விரைவில் நான் அணியில் இடம் பிடிப்பேன் - முன்னால் இந்தியா கேப்டன் தாதா கங்குலி நம்பிக்கை.

6. வரும் மே 1 'தல'யின் பிறந்தநாள் அன்று 'காட்ஃபாதர்' திரைக்கு வரும் - ரசிகர்கள் மகிழ்ச்சி.


******************************************

நாமளும் ஒரு 'ஆறு' பேரை இழுத்து விடனுமாம்.. இல்லாங்காட்டி சாதரண குத்தமில்லைங்க.. ஸ்பெஷல் தெய்வகுத்தமாயிடுமாம், பயங்காட்டுறாங்க.. நாங்கெல்லாம் 'மாரியாத்தா கண்ணை குத்திரும், ஒழுங்கா ஹார்லிக்ஸ் குடி'ன்னு மிரட்டுன காலத்துலயே, அப்படியே கொஞ்சமா வாயுல அடக்கி வச்சிருந்துட்டு, டக்குன்னு சின்ன கேப்புல சோபா கிழிச்சல விலக்கி துப்பி, அரைடவுசர அரணாகயித்துல கட்டிட்டு சுத்துற காலத்துலயே மாரியாத்தாவ ஏமாத்துன ஆளுக, இதுக்கெல்லாம் பயந்துருவமா என்ன?
இருந்தாலும் ஆசைபட்டு கேட்டிருக்காங்க.. அதுக்கா கூப்பிடலாம்னு பார்த்தா, யாரும் மிச்சமிருக்கிற மாதிரியே தெரியலைங்க, நமக்கு தெரிஞ்ச வரைக்கும் மிச்சம் இருக்கிற ஆளுகல கூப்பிட்டிருவோம்னு.. ஒரு லிஸ்ட்

1.உதை
2.இளா
3.வித்யா
4.விட்ச்சி
5.கண்ணன்
6.ச்சிப்பர்

யப்பா.. பேரை காப்பாத்துங்கப்பா ;)

--
#187

நன்றி x 24


1. நன்றி
2. நன்றி
3. நன்றி
4. நன்றி
5. நன்றி
6. நன்றி
7. நன்றி
8. நன்றி
9. நன்றி
10. நன்றி
11. நன்றி
12. நன்றி
13. நன்றி
14. நன்றி
15. நன்றி
16. நன்றி
17. நன்றி
18. நன்றி
19. நன்றி
20. நன்றி
21. நன்றி
22. நன்றி
23. நன்றி
24. நன்றி

விவரமா தெரியனும்னா -- > [இங்கே]


June 06 Thenkoodu TamilOviam Contest Fourth Prize Winner


--
#186

Friday, June 16, 2006

சிலகேள்விகள்.

கேள்வி கேட்டா அறிவு விருத்தியாகும்னு சொல்லி வளத்திட்டாங்க போல, நம்மாளுக கேள்வி கேட்டா, அவங்களுக்கு அறிவு விருத்தியாகுதோ இல்லையோ, அதை காது குடுத்து கேக்கிறவங்க அறிவு ஒரு வழியாரும் போல இருக்குங்க..
என்னன்ன கேள்வி கேக்குறாங்க.. ஸ்ஸ்ஸ் அப்பாஆஅ...

இதோ, இங்க உங்க பார்வைக்கு சில சுவாரசியமான கேள்விகள்.


  • கோழி போட்ட முட்டையிலைருந்து கோழி வரும், வாத்து போட்ட முட்டையில இருந்து வாத்து வரும், ஆனா, வாத்தியார் போட்ட முட்டையில இருந்து வாத்தியார் வருவாரா?

  • தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டுனா வலிக்குமா?

  • நாய்க்கு நாலு கால் இருக்கலாம், அதுக்காக அது லோக்கல் கால், எஸ்.டி.டி. கால் என்ன ஒரு மிஸ்டு காலாவது நமக்கு குடுக்க முடியுமா?

  • மீன் புடிக்கறவன மீனவன் சொல்லலாம், அதுக்காக நாய் புடிக்கறவன நாய்-அவன்னு சொல்ல முடியுமா?

  • என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், ஒரு அவசரத்துக்கு அவன துப்பாக்கியில போட்டு சுட முடியுமா?

  • திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம், அதுக்காக அவரால அத்தனை குரல்ல பேச முடியுமா?

(அய்யா.. பொதுஜனங்களே.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் என்னைக்கும் ஆளாகவே மாட்டேன்.. ஏதும் திட்டுறதா இருந்தா, சந்தோஷமா திட்டுங்க, அது அத்தனையும், இதை ஒரு சமாச்சாரம்னு, 'முக்கியமான கேள்விகள்'ன்னு தலைப்பு போட்டு அனுப்புன என் சகா 'பாஸு'க்கு அனுப்பி வச்சிடுறேன்..)


img : http://www.puzzlepress.co.uk/

--
#185

Monday, June 12, 2006

மாறித்தான் ஆகனுமா?

'நீதான்டா எப்படியாவது சொல்லனும், மத்தவங்களை எல்லாம் கேக்க முடியாது'ன்னு கெஞ்சலா கேட்ட பாபுக்காக, 'நான் முடிச்சு குடுக்கறேன்'னு பந்தாவா சொல்லிட்டு, பஸ்ல கோயமுத்தூர்ல இருந்து பொள்ளாச்சி வர்ற வரைக்கும், 'இரு சிட்கோ கேட் தாண்டட்டும், கிணத்துகிடவு வரட்டும், முள்ளுபாடி கேட் தாண்டட்டும்னு' உள்ளார நடுங்கிட்டு வெளிய மிதப்பா உக்காந்திருந்ததா நினைச்சுட்டு இருந்த என்னை பொள்ளாச்சி பஸ்ஸ்டான்ட்ல எறங்கினதும் 'என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே, பாபு எதாவது கேக்க சொன்னானா?'ன்னு நிதானமா சுகன்யா கேட்ட அன்னைக்குத்தான் இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரத்தை நிஜத்துல கிட்டக்க பார்த்ததுங்க.

எப்பவுமே சாயம் போன கலர்ல சட்டையும், ப்ரவுன் கலர் முழுக்கால் டரவுசருமே போட்டுகிட்டு திரிஞ்சவன், திடீர்ன்னு க்ராஸ்கட் ரோடெல்லாம் சுத்தி டீ-ஷர்ட்'ம் ஜீன்ஸ் பேண்ட், ஆக்க்ஷன் ஷு'னு வாங்கினப்ப கூட பெருசா உறைக்கலைங்க, ஆனா, காலங்காத்தால அஞ்சரை மணிக்கு சைக்கிள் மிதிச்சுட்டு வந்து மூச்சு வாங்க எங்க வீட்டு காலிங்பெல் அடிச்சு 'ராசு, எல்லாம் வாங்கினோம், ஆனா சாக்ஸ் வாங்காம வந்துட்டோம், உன் சாக்ஸ் ஒன்னு குடு'ன்னு கேட்டு வாங்கிட்டு போறவனுக்கு ரகசியமா கட்டைவிரல் காட்டி அனுப்புனேன் பாருங்க அன்னைக்குத்தான், இந்த 'காதல்'ங்கிற சமாச்சாரம் நம்மள ரொம்ப நெருங்கி வந்து போனது.

இந்த பொதுசேவை'களுக்கு அப்புறம், பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்ங்கிற மாதிரி நானும் 'தொடதொட மலர்ந்ததென்ன' கேட்டு கண்மூடி உக்காந்த நேரம், 'நாம பெரிய ஆளாயிட்டோம்னு' தோணுச்சுங்க..

அப்புறம் சட்டுன்னு ஒரு நாள் 'நீ கண்டிப்பா இஞ்சினியர் ஆகி, இந்த உலகத்துக்கு சேவை செய்யனும்னு' ஊரை விட்டு தள்ளி கொண்டுபோயி உக்காரவச்சிருச்சுங்க விதி. அங்க போன பின்னாடி 'கண்மூடி' உக்கார வழக்கம் எல்லாம் 'சின்னபுள்ளதனமா' போயி, கழட்டி விட்ட மேல் பட்டனும், துவைக்காத ஜீன்ஸும் சாக்ஸ் போடாத பவர்ஷூவுமா, நடேசு கடை பெஞ்சுல உக்காந்து ஒரு கையில டீயும் மறுகையில ராஜா'வுமா உக்காந்து பண்னாட்டு பண்ணிட்டு இருந்தகாலம் அது. கண்மூடி ஆகாசத்துல பறக்கிறவன லைட்டா உசுப்பேத்தி, அவன் காசுலயே சிந்தாமனி, ராஜம்னு நோம்பி கொண்டாடிட்டு, அப்புறம் சாவுகாசமா ஹாஸ்டலுக்கு வந்து 'இந்த மாதிரி எத்தனைய பார்த்திருக்கேன் போய் பொழப்பா பாருங்கடா டேய்'ன்னு உதாரா சொல்லிகிட்டு இருந்தேன்.

எவனோ திமிருக்கு செஞ்ச ப்ரச்சனைக்காக, வெறுங்கையில கர்சீப்பை கட்டிகிட்டு எதிர்பார்ட்டி பைக் கண்ணாடிய உடைச்சு, அந்த கண்ணாடி சில்லு பட்டு ரத்ததோட நின்னப்போ, 'பங்கு, ப்ரின்சி பேசிக்கலாம்னு கூப்புடறாரு, நீயும், செல்லானும் போங்க, அது தான் சரிவரும்'ன்னு சொல்லி மொத்த கூட்டத்தையும் விலக்கிட்டு 'ஹோ'ன்னு இரைச்சலுக்கு நடுவால படியேத்தி விட்டப்போ, கண்மூடி ஆகசத்தை பார்க்கிறவங்கள பார்த்து 'நாம அதெல்லாம் தாண்டி வந்துட்டோம்னு' தோனுச்சுங்க.

'டேய், வாழ்க்கை போயிரும்டா, பர்ஸ்ட் க்ளாஸ் கூட வாங்கலைன்னா எப்படி?'ன்னு HOD கூப்பிட்டு, டீ வாங்கி குடுத்து, உக்காரவச்சு பேசினதுல, ஒரு பதினைஞ்சு நாள் முன்னாடியே புஸ்தகத்தை எல்லாம் தேடி எடுத்து, மிச்சமிருந்த மூனு பேப்பரையும் முடிச்சு, எப்பவும் முதல் மார்க் வாங்கற 'காக்ஸ' கடுப்படிச்சு, பர்ஸ்ட்கிளாஸ தொட்டு பார்த்ததுட்டு. ரத்தகட்டும் சஸ்பென்ஷனுமா போயி நின்னப்போ நடந்தத நினைச்சுகிட்டே எங்கய்யன் கிட்ட கொண்டு போயி ஆர்டரை காட்டிட்டு , விழுந்து விழுந்து படிச்சவெனெல்லாம் அப்ரன்டீசா இருக்க, நாம டயர் கம்பெனியில ப்ரடொக்க்ஷன்ல பெருமையா சேர்ந்து, ராத்திரி ஷிப்டுல மலையாள சேட்டங்கிட்ட கத்திரியோட உலகநிகழ்வுகள், நவீனம், சிவப்புகொடின்னு பேசும் போது 'இப்பத்தான் நிசமாவே தாண்டியிருக்கோம்'னு தோனுச்சுங்க..

அப்புறம் சென்னைப்பட்டணதுக்கு வாழ்க்கை பட்டு போயி, சால்ட் பிஸ்கட்டும் டீயும் அடிச்சுட்டு, தினம் தினம் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வீதியெல்லாம் சுத்தி, எப்படியோ 'சாஃப்டா'ன ஆளா மாறி, அதுவரைக்கும் போடாத ப்ளைன் சர்ட்டெல்லாம் போட்டு டக் பண்ணி, ஆகசத்துல பார்த்த ப்ளைட்டெல்லாம் உள்ள போயி பார்த்து, கன்ஸ் அன் பேரல்ஸ்'ல பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துட்டு, சத்யம்ல ஜோடியா போயி இங்லீஸ் படம் பார்த்து, வலிய வந்த தேவதைக்கு 'நிஜத்தை' சொல்லி புரியவச்சு, சந்தோஷமா அவ ரிசப்சனுக்கு போயி போட்டாவுக்கு நின்னு, ஈசிஆர்'ல 100 -110 எல்லாம் சாதரணா தொட்டு, நீலாங்கரை தாண்டி கடல் மணல்ல படுத்துகிட்டு 'மண்டை' எபக்ட்டுல, 'வாழ்க்கை எப்படி மாறுது பார்த்தியா?'ன்னு ஆரம்பிச்சு நான் கோர்வையா பேசுறத வாயத்திறந்து பார்த்துகிட்டு இருந்த சகா'க்க மத்தியில 'நாம ரொம்ப தூரம் தாண்டி வந்துட்டோம்'னு தோனுச்சுங்க.

'நம்ம பையன் +2 முடிக்கறான், ஒரே குழப்பமா இருக்கு, அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'னு, ஒல்லியா கொஞ்சம் பயத்தோட, வெட்கசிரிப்போட ஒரு பையனை கூட்டிட்டு சரியா ஞாயித்துகிழமை காலையில யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வரும்போதும், 'ஏந்தம்பி, சிடிசி கிட்ட ஒரு 12 சென்ட் வருது, கந்தசாமி சொன்னாரு, எதுக்கும் நீ ஒரு எட்டு போயி பார்த்துட்டு வா'ன்னு வழக்கம் போல எனக்கு எதிர்பக்கமா உக்காந்துட்டு எங்கய்யன் சொல்லும்போதும், 'வாங்க், சின்னவரு எப்ப வந்தீங்க, அங்க எல்லாம் வெய்யிலுங்களா?'ன்னு தோட்டத்து ஆளுக பணிவு காட்டும் போதும், 'ஏங்கண்ணு சித்தப்பா ஒரு ஜாதகம் சொல்றாரு'ன்னு சாப்பாட்டுக்கு மத்தியில மெதுவா எங்கம்மா ஆரம்பிக்கும் போதும், 'திஸ் ஈஸ் நாட் தி பைனல், யூ ஹாவ் டூ ப்ரூவ் மோர்'னு கோட்டு போட்ட பெருசு கைகுடுத்து பாராட்ட, கூட இருந்தவன் எல்லம் கைதட்டும் போதும், 'துரை, சாப்பாடு வச்சிருட்டுமா, சீக்கிரம் வந்துருவயா? லேட்டான கேப் புடிச்சு வா, டூ வீலர் வேண்டாம்'ன்னு நம்ம சகாவுக்கு போன் போட்டு பொறுப்பா பேசிட்டு, ராத்திரியில குக்கர் வைக்கும் போதும் கூட மறுபடியும் தோணுச்சுங்க.. 'நாம அதெல்லாம் தாண்டிட்டோம்'னு.

வாரக்கடைசியில, நம்ம இடுப்பு அளவு உசரம் இருக்கிற பசங்கள கூட்டிட்டு 'அதெல்லாம் இல்ல சிக்ஸ்தான் அது'ன்னு தெரியாத மொழியில அரைகுறையா பேசி சண்டைபுடிச்சுட்டு இருக்கும் போதும், எல்லாரும் ரொம்ப சுவாரசியமா படம் பார்க்கையில 'ஜீசஸோட பேத்தி நீதான்னு' நம்ம ஹீரோ சொல்லும் போது, 'இன்னுமா இந்த ஊரு உன்னை நம்புது'ன்னு கைபுள்ள கணக்கா சவுண்ட் விட்டு, மொத்த தியேட்டரும் அரை நிமிஷம் சிரிக்கும்போதும், பக்கத்து மாடியில இருக்கிற பொண்ணுக மொட்டைமாடிக்கு போகுற நேரம் பார்த்து நாமளும் மொட்டைமாடிக்கு புஸ்தகமும் ராஜா'வுமா போகலாம்ங்கிற போது தாங்க தோணுது.. 'அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் தாண்ட முடியாதுப்பா... தாண்டவும் கூடாது..!'ன்னு.

ஒரு வேளை இதையும் தாண்டி போவமோ என்னமோ, ஆனா அதுக்கெல்லாம் விருப்பமில்லைங்க..

'அது ஒரு அழகிய நிலாக்காலம்'னு எல்லாம் என்னால வானத்தை பார்த்துட்டு பாட முடியாதுங்க.. கூடவே வச்சுகிட்டு வாழ்ந்திடறதுன்னு பார்க்கிறேன் so, NO bye-bye adolescence.. i dont want to cross it.. :).



சமர்பணம் : வேனிற்காலத்தை இறுக்க போத்தி தூங்கி கோட்டைவிட்டுட்டு, இப்போ இந்த ஜெனரேஷனுக்கெல்லாம் கஷ்டமே தெரியரதில்லைன்னு புலம்பும் 'நல்லவர்களுக்கு'.

(என்ன்டா புலம்பியிருக்கான்னு புரியாதவங்களுக்கு.. இங்க பாருங்க.. சும்மா ஒரு ஆசை.. ஹி.ஹி.. )


---
#184