Sunday, March 2, 2014

ஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்

ஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்: பதிவர் : Paval MV ( @paval ) பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தி...




Thursday, February 27, 2014

Monday, February 3, 2014

கனவின் கனவே - லூசியா


லூசியா.. வெகுநாட்களாக கிடப்பில் போட்டுவைத்து, நான் சமீபத்தில் பார்த்த, முதன்முதலாக இணையத்தில் தரவிறக்கி பார்த்த, இரண்டாம் முறையும் பார்த்த - ஒரே கன்னடத்திரைப்படம். LUCIA.

கன்னடத்திரைப்படங்களில் தற்போதைய நிலை.. தரம், அவர்கள் எப்படி உன்னதமான சினிமாக்களை அந்தக்காலத்தில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. இன்னும் எவ்வளவு அருமையான படைப்பாளிகள் அங்கே யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள், இந்த படத்தின் கதை எப்படி சென்ற இடத்தில் எல்லாம் நிராகரிக்கப்பட்டது, பின்னர் crowd financing மூலம் எப்படி இந்த லூசியா எடுக்கப்பட்டது.. அதன் மூலம் மற்றவர்கள் (முக்கியமாக தமிழ் சினிமா வெற்றியாளர்கள்) கற்றுக்கொள்ள வேண்டியது என்ன.. இன்னபிற, சமூக -பண்பாட்டு-கலை-அற-ஈனவெங்காயங்கள் எல்லாம் கொண்ட விமர்சனங்கள் நிறைய வந்திருக்கவேண்டும், ஒன்லைனர்கள் தவிர நான் எந்த தமிழிணைய லூசியா விமர்சனங்கள் எதுவும் (இன்னும்) படிக்காததால் சுட்டி கொடுக்க முடியவில்லை..

லூசியா என்ற பெயரே, கொஞ்சம் ஆர்வமாக‘எட்டிப்பார்க்க’ வைத்த பெயர் தான்.. அதற்கு, இலவசமாக இணையத்தில் கிடைத்ததையெல்லாம் இறக்கும்/இரக்கும் வியாதி உச்சத்தில் இருந்த காலத்தில் சப்டைட்டிலும் இல்லாமல் முழுப்படத்தையும் ம்யூடிலேயே பார்த்த ஸ்பானிய ’செக்ஸ் & லூசியா’ திரைப்படத்தில் அந்த ’லூசியா’ எனும் சொல் ஞாபகம் இருந்தது தான் காரணமாக இருக்கவேண்டும்.அதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என்று இந்த படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. நிம்மதி.

கனவுகள்,கனவுகளுக்குள் கனவுகள், நிகழ்வுகளோட சங்கமிக்கும் கனவுகள் என்று நோலனார் நமக்கு திகட்ட திகட்ட காட்டிய களம் தான்.அத்தகைய பிரம்மாண்டங்கள் எல்லாம் இல்லாமல், அந்தரத்தில் பல்டி எல்லாம் அடிக்காமல், கிடைத்ததில்  கனகச்சிதமாக அடித்து விளையாடியிருக்கிறார்கள். உறக்கமின்றி தவிக்கும் ஒருவன் உறக்கத்துக்காக ‘லூசியா’ என்ற ஒரு தெருவோர வஸ்த்துவை எடுத்துக்கொள்கிறான். ‘Lucid Dream'நிலைக்கு கொண்டு செல்கிறது.அந்த கனவையும் நிகழ்வையும் கனவின் கனவையும் மாற்றி மாற்றி திரையில் நமக்கு எந்த குழப்பமும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் இரண்டு நிமிட நூடில் கருமாந்திரம் போல ஆரம்பமும் முடிவுமற்று அலங்கோலமாய் போய்விட சாத்தியமுள்ளதை அழகாக ஒரு தேர்ந்த பரோட்ட மாஸ்டர் போட்ட முட்டைகொத்து சாப்பிட்டால் எப்படி கொஞ்சம் கூட பரோட்டாவின் மைதா அரூபருசி தெரியாமல், முட்டையும் தக்காளியும், சால்னாவும், குருமிளகும், வெங்காயமும் கண்ணுக்கு தனித்தனியாக தெரிந்தாலும், நாவுக்கு ஒரு சேர சேர்ந்து ருசிக்குமோ அது போல.

கதை? அதெல்லாம் வழக்கம் தான்.

(1)
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டு பெரும்பணத்துடன் அனாதையாக வாழ்ந்து, சினிமா நடிகனான புகழ்பெற்ற பின்னும் உள்ளூர ‘ஆள்கூட்டத்தில் தனியே’ ரேஞ்சில் நிஜ அன்புக்காக ஏங்கும் ஒரு ‘நிக்கி’. அவனுக்கு கிடைக்கும் ஒரு காதல், இழப்பு, விரக்தி.கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்ட ஆந்திரா தயாரிப்பாளர், தமிழ் இயக்குனர், வழியும் சக நாயகி, நிழல் உலக வசூல்கள்.

(2)
சிறு கிராமத்தில் இருந்து வந்து ஒரு மாநகரத்தின் ஓரத்தில் வாழ்ந்துகெட்ட திரையரங்கில் உதிர்ந்துகொண்டிருக்கும் கூரைக்கு கீழ் பார்வையாளர்களுக்கு இருட்டில் உட்கார இடம்காட்டும் ‘டார்ச் போடும்’ வேலையை விசுவாசமாக பார்த்துக் கொண்டு, முதலில் உதாசீனப்படுத்திய சூப்பர்-பேமிலி பிகரை செண்டியாக நடந்து மயக்கி, அவளும் வந்து இவனை கொஞ்சமாவது செல்லுபடியாக்க இங்கிலீசு எல்லாம் கத்துகொடுக்க முயற்சிக்கும் செல்வராகத்தனம் பூசிய விக்கிரமன் பட நாயகன் போல் ஒரு ‘நிக்கி’.

ரெண்டு லைனுமே, தாழ்வுமனப்பான்மையில் காலங்காலமாக தவித்துக்கொண்டிருக்கும் ஒரு சாமன்ய ரசிகனுக்கு அப்படியே லட்டு மாதிரி.. கூட்டமா போயி, இருட்டில விசிலடிச்சு, காகிதத்த பறக்கவிடு மனசுகுள்ளார பீலிங்க்சோட, மகிழ்ச்சியா படம் பார்த்துட்டு வெளிய வர வைக்க முழு காரண்டியான களம், இதை வச்சுகிட்டு எப்படிய்யா.. பெஸ்டிவல், விருது எல்லாம், அது தான் டெக்னிக்கி :) விஞ்ஞானம்.!!

இதில் ஒருவனின் கனவில் இன்னொருவன், அவன் கனவில் இவனா, இவன் கனவில் அவனா என்று பார்வையாளனை அப்படியே மிதக்கவிட்டு, சுவாரஸ்யமா முடிச்சை இருக்கி.. அழகா கொஞ்சம் சுமாராவே அவிழ்க்கிறார்கள். இந்த இரண்டு கனவுக்கு நடுவில் ஒரு குற்றம், போலீஸ், தனியார் டிடெக்டிவ், புலனாய்வு, ஆஸ்பத்திரி .. இன்னும் சில.

இப்படி ஒரு படத்துக்கு முதுகெலும்பு.. எது படத்தொகுப்பாளர் தான். கச்சிதமா வெட்டி ஒட்டியிருக்கார். நாயகன் சதீஷ் - அட்டகத்தி படத்தில் தினேஷை பிடித்த அளவுக்கு இவரையும் பிடித்தது... வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.. இரண்டு கலரில், கனவிலும் நினைவிலும் வருபவர் வேறு வேறோ என்று சில நிமிடங்கள் நினைக்குமளவுக்கு அற்புதமாக நடை
பாவனை பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். எதாவது நல்ல தியேட்டர், ஆர்ட் ஹவுஸ் என்று சிக்கி பிழைத்துகொள்ள வேண்டும்.. வேறு என்னத்த சொல்ல. நாயகி ஸ்ருதி - அழகு, பிடிஎம் காபிடே’யில் கூட இதே போல்.. சரி வேண்டாம், அது நம் பர்ஸனல் :)  கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம். அல்லது பின்னர் வசனங்களில் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக செய்தார்களோ என்னவோ, சில இடங்களில் உதட்டுக்கு ஒட்டாமல் ஓடியது. சப்டைட்டில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஓவர் தான் என்றாலும்.. சொல்ல வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறதே.

நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்காம், வாங்க இருக்காம்.. ம்ம் தியேட்டரில் பார்த்திருக்கலாம். விட்டாச்சு. அதுக்கு பரிகாரமா இந்த இயக்குனரின் அடுத்த படத்தை அரங்கத்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தாயிற்று.. பார்க்காதவர்கள் இறக்கி பார்க்கவும். அல்லது 5$ கொடுத்து பார்க்கவும் நல்ல ப்ரிண்ட், சப்டைட்டிலோடு கிடைக்கும். எறக்கசெலவழித்த அலைத்தொகுப்புக்கும் பார்க்க செலவழித்த நேரத்துக்கும்.. இதை எழுதத்திருடிக்கொண்ட நேரத்துக்கும் சேர்த்தே..
**பைசா வசூல் - மீட்டர் வட்டியுடன்**




Friday, January 17, 2014

படிமம்

‘(சம்வித்யாகம் போறா) இயக்கம் பத்தாது, இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கவேண்டும், நாயகனுக்கு கொஞ்சம் கூடுதல் க்ளோசப் வைத்திருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் பரபரப்பு சென்று சேரும்’ என்று தொடங்கும் உரையாடல் தான் கதை நாயகன் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் முதல் வசனம்.

‘த்ரிஷ்யம்’ - திரைப்படத்தின் நாயகன் அதன் இயக்குனர் ஜீத்துஜோசப் தான். இயக்கம் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை எழுதியவரும் அவரே. அந்த முதல் வசனத்தில் சொலவது போல் எந்த ’கைநாற்காலி’ விமர்சகரும் சொல்வதற்க்கு வழியில்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்.

மலையாளம் கண்ட மாபெரும் வெற்றிப்படமான ‘யவனிகா’வுடன் இந்தப்படத்தையும் அதே தளத்தில் வைத்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. யவனிகா’வும் ‘த்ரில்லர் வகைதான், ஆனால் அது வேறு தளம் இது வேறு தளம். யவனிகா’வின் பரப்பு இன்னும் கொஞ்சம் விஸ்தீரமானது. ‘த்ரிஷ்யம்’ வேறு வகை. தெளிவாக பார்வையாளர்களை கவரவேண்டும் என்ற மசாலாபடங்களின் ஒரே குறியை வைத்து திட்டமிட்டு பின்னப்பட்ட கதை தான்.

ஒரு கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அவன் குடும்பத்தை பற்றிசொல்லி, அவன் பூர்வீகத்தை அலசி, அவனைப்பற்றி மானே தேனே போட்டு நல்லவிதமாக பார்ப்பவர்கள் மனதில் ‘ச்சே எம்புட்டு நல்லவன்’ என்று முழுவதுமாக ஒத்துக்கொள்ளுமாறு காட்சியமைப்புகளை நகர்த்தி, பார்வையாளர்கள் அந்த குடும்பத்தை முழுவதுமாக நேசிக்கும் பொழுது திடும் என்று ஒரு சிக்கல் வந்து நிற்கிறது - டொட்டடய்ங் என்ற இசையில்லாமல். அதுவும் இரண்டு சின்ன பெண்கள் இருக்கும் அழகிய குடும்பத்தில், (கொஞ்சம் நிறையவே பூசினாற்போல் இருந்தாலும் பெண்களின் தாயாக வரும் மீனா இன்னும் அழகு தான்) வயசுவந்த பெரிய பெண் தான் சிக்கலின் மையப்புள்ளி. வயசுபுள்ளைக்கு சிக்கல் எனும்போதே அரங்கில் அமர்ந்திருக்கும் 90சதம் பேருக்கும் அடிவயிறு கலங்கித்தான் போகிறது. குறி தவறவே இல்லை.

வந்த சிக்கலுக்கும் கொஞ்சம் பலம் வேண்டுமே, எம்ஜிஆருக்கு ஏற்ற நம்பியார் போல், வில்லனுக்கு கெத்து இருந்தாத்தான ஹீரோவுக்கு மரியாதை, இங்கே நாயக்ன் சாமான்யன். நம்மூரில் பெரும்பான்மையோர் மிரள்வது அதிகாரவர்கத்தின் கோரமுகத்துக்கு தான், அதைவிடவா சிக்கலுக்கு வெயிட் வேண்டும், பெரும் அதிகாரத்தில் இருப்பவரின் வாரிசு தான் உள்ளே நுழைந்த சிக்கல். சிக்கலை துரத்திவிட்டு சட்டத்தில் இருந்து தப்பிக்க போராடுவது தான் மிச்சம். சாமன்ய நாயகன் மற்றவரைப்போல் ஆகாயசூரனாக இருக்கமுடியாது ஆனால் புத்திசாலி, புத்தியை உபயோகித்து தப்பிக்க திட்டமிடுகிறான், அதிகாரவர்கத்தையே ஏமாற்ற வேண்டுமே, கொஞ்சம் பலமான திட்டமிடல் தான். படிப்பதற்க்கு ஒன்றுமே விசேஷமாக தெரியவில்லை அல்லவா, ஆமாம் அதே தான். ஆனால் இதை 2.45 மணிநேரம் பார்ப்பவர்களை திரையை விட்டு அகலாமல் கட்டிப்போட்டு பார்க்க வைத்ததில் தான் வெற்றி இருக்கிறது.

இரண்டரை மணிநேர திரைப்படத்தில் சவுத் இண்டியன் புல்மீல்ஸ் போல வகைக்கொன்றாய் பாடல்கள், நடனங்கள், தனிக்குலுக்கல்கள், கூட்டுகுலுக்கல்கள், நமது ட்வீட்டரில் சுட்டு பாலீஷ் போடப்பட்ட நகைச்சுவைத்தோரணங்கள், அதிரடி சண்டைகள், பறக்கும் கார்கள், அயல்தேச அழகிய லொக்கேஷன்கள், தங்கத்தில் சுவரெழுப்பும் நவீன ஆசாரிகளின் வேலைப்பாடுகள் என்றெல்லாம் நிறைத்தும் படம் பார்ப்பவன் என்னவோ பொது கக்கூசில் சங்கடத்துடன் உக்கார்ந்திருப்பவன் மனநிலையில், ‘எப்படா முடிப்பீங்க’ என்று கதறும்படியான சமகால திராபைப்படங்களுக்கு நடுவில் ‘த்ரிஷ்யம்’ கொண்டாடப்படவேண்டியது தான்.

நமது புரட்சிகலைஞரின் பாணியை பின்பற்றி நாயகனே கடைசியில் ஒரு நீண்ட வசனத்தில் ‘ஒரு பெரும் சிக்கல் எங்கள் குடும்பத்திற்க்கு வந்தது, அந்த சிக்கல் எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துபோடப்பார்த்தது, நாங்கள் கெஞ்சி கதறினோம் போராடினோம் அதற்கிடையில் எதிர்பாராமல் அந்த சிக்கல் என்றென்னைக்குமாய் எங்கள் குடும்பத்தை மீண்டும் தொந்தரவு செய்யாதபடி செய்ய நேர்ந்துவிட்டது, எங்களுக்கு வேறு வழி இல்லை, இனி அந்த சிக்கல் எங்களை நெருங்காது என்ற நிம்மதி இருந்தபோதும், தெரிந்தோ தெரியாமலோ சிலரின் கனவுகளை சிதைத்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள்’ என்று ‘கதையின் சாரம்சம்சத்தை சொல்லி விமர்சகர்களின் வேலையை சுலபமாக்கிவிடுகிறார். அந்த இடத்தில் படம் முடிந்துவிட்டது தான், இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு முந்தய சீனிலே கூட படம் முடிந்துவிட்டது தான்.. ஆனால் அதற்க்கு அப்புறமும் ஒரு சீன் வைக்கிறார் பாருங்கள்.. அங்கே தான் சாமான்யன் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு போகிறார்.. அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.. அங்கே நிற்கிறார் இயக்குனர்..  ஜீதுஜோசப் - இனி நமது ‘should not miss list'ல் இவர் கண்டிப்பாக இருப்பார்.

கேரளா லொக்கேஷன் நல்லாஇருந்தது, மோகன்லால் நல்லா நடித்தார், துணை கதாப்பாத்திரங்கள் கூட அருமையான நடிப்பு என்ற விஷயங்களை எல்லாம் இந்த படத்தின் விமர்சனங்களில் சொல்லியிருப்பார்கள், படித்துக்கொள்ளவும்.

படம் முடிந்து வெளிவரும்பொழுது உடன் வந்த நண்பர் ”இதை தமிழில் எடுப்பதாக சொன்னார்களே, அதுவும் சமீபமாக ராடான்’ நிறுவனம் தான் மலையாளத்தை தமிழ் ‘படுத்தி’ வருகிறது.. ஒருவேளை சரத் அல்லது சேரனை வைத்து இந்தப்படம் தமிழில் வந்துவிடுமோ” என்ற சந்தேகத்தை  கேட்டு என் ஒட்டுமொத்த திரையனுபவத்தையும் கெடுத்துவிட்டார் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன். 

Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia 

Monday, July 29, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 2

ஒரு நல்ல இதமான வெயில்காலத்து மதியத்தில் லால்பாக்’ல ‘இயற்கை’ அழகை திகட்ட திகட்ட காலாற நடந்து ரசிச்சு முடிச்சட்டு மேற்க்கு வாசல் வழியா வெளியேறி எதும் கொறிக்கலாமா’ன்னு யோசிக்கும்போது தான் கூட வந்த ஒரு சகா கேட்டான்.

 ‘திண்டி பீதி போகலாமா?’

லேசான பீதியோட என்னடா அது’ன்னு கேட்டா..  கன்னடத்துல Foot Streetன்னு சொல்றது, chat Streetன்னும் சொல்லுவாங்கன்னான்.

ஒரு வீதியவே நேர்ந்துவிட்டிருக்காங்களா.. அதை கேள்விபட்டதுக்கப்புறம் வேண்டாம்னு நான் யோசிச்சிருக்காமாட்டேன்னு உங்களுக்கே தெரியும்..  

<கட் பண்ணா திண்டிபீதி aka Food Street, VV Puram>

உணவு வீதி’ன்னு சொன்னாலும், அது நிஜத்துல ‘வீதி உணவு’. ஒரு மொத்த வீதியும் இந்த கடைசியில சஜ்ஜன்ராவ் சர்க்கிள்ல இருந்து அடுத்த கடேசி முக்கு வரைக்கும் பூராவும் பலவகையான கையேந்திபவன்கள். இதுதான்னு இல்லாம வடக்கு தெற்க்கு இந்தோசைனீஸ்’ன்னு எல்லாம் வகை உணவுகளுக்கனுமான ஒரு வீதி இது.

வீதிகிட்ட போகும் போது வரும் ஒரு நறுமணம் இருக்கே.. அதுக்காகவே போக வேண்டிய இடம் இது.

வீதியோட ஆரம்பத்துல இருக்கிற VB Bakeryல இருந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும். வழமையான கேக்கு பன்னுன்னு பல ஐட்டங்க நல்லா இருந்தாலும் இவுங்களோட விசேஷ வெரைட்டி தம்ரூட், காரா பன்பட்டர் காங்கிரஸ் KBC.
இந்த KBC ஒரு சுவாரசியமான சாதாரண ஐட்டம், கார/மசால பன்னுல நடுவால வெண்ணையும் வறுத்தகடலையும் கொஞ்சம் மிளகாய்சாஸும் தடவி.. ஒரு மாதிரி குழப்பமா காங்கிரஸ் மாதிரியே இருக்கும்.. ஆனா நல்லா இருக்கும் :) 
இங்க ஆரம்பிச்சு அப்படியே வீதிக்குள்ளார நுழைஞ்சீங்கன்னா.. போண்டா வடை ரவாவடை, மதூர்வடா, பஜ்ஜில ஆரம்பிச்சு, இட்லி, பலவகை தோசை, நம்மூர் தோசை, இந்த ஊர் தோசா, அக்கிரொட்டி, ராகிரொட்டி, சோளரொட்டி,பெர்சரெட்டு எல்லாமே எல்லா வகை சட்னிகளுடன்.
 சில்லி கோபி/மஞ்சூரியன் ஐட்டங்கள், அதுல ரோல்கள்
 இந்த ஐயங்கார் புளியோகரே, நிலக்கடலை போட்ட லெமன் சாதம், பல வகை ‘பாத்’கள், சாட் வகைகள், பாவ்பாஜி மாதிரி அமித்து ஐட்டங்கள்.
 ப்ரூட்சாலட் வித்  குல்கந்த் வித் ஐஸ்க்ரீம், சூடா காரெட்/பாதாம் அல்வா, ஜாமூன், ஜிலேபி மசாலா பால்  குல்ஃபி, மசாலா சோடா / மசாலா கோக் அப்படின்னு அங்க அங்க ஊர்பூராவும் விக்கிற எல்லாமே ஒரே வீதியில பல கடையில எல்லாம் ஃப்ரெஷ்சா இருக்கும்.. the choice is yours and they will make sure to spoil you with the available choices :)
பாத்-தோசா’ன்னு ஒண்ணு உண்டு, அதுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை, ரெகுலர் தோசையில மடிச்சு குடுக்கும்போது நடுவே எலுமிச்சசாதம் வச்சு குடுப்பான், அஷ்ட்டே, விவரம் தெரியாம பந்தாவா அர்டர் பண்ணிட்டு ‘பல்ப்’ வாங்கினேன் முதல்தடவை.

ஆத்தெண்ட்டிக் இந்தோ-ச்சைனீஸு வெரைட்டிகள் இப்ப சமீபத்துல நிறையா சேர்த்திருக்காங்க, 4-5 வருசம் முன்ன அவ்வளவு இல்லை.

அப்படியே இந்த கடேசில KBCயோட ஆரம்பிச்சு நடக்க ஆரம்பிச்சா அந்த கடேசியில மசாலா கோக் குடிக்கும் போது ரெண்டுமணி நேரம் ஆயிருக்கும். 

இந்த உடனடி சாப்பாடு ஐட்டங்கள் மட்டும் இல்லாம, நடுவுல இந்த ‘நிப்பட்டு’ , முறுக்கு, ஹோளிகே மாதிரி வூட்டுக்கு வாங்கிட்டு வந்து அமுக்கற ஐட்டங்களுக்கான கடைகளும் உண்டு.

வீதியில நின்னு சாப்பிட, அந்த வகை உணவுகள் புடிக்கும்ன்னா இந்த வீதிய விட்டுறாதீங்க.. சாயங்காலம் 5:30 / 6  மணிவாக்குல போயிட்டீங்கன்னா நல்லது.. மத்த ஊர் மாதிரி இல்லாம வீதி கடைய 8:30 /9 மணிக்கு அடைச்சிடுற ஊர் இது :)

குடும்பம் குழந்தைகளோட போறதுக்கும் - recommended.
வேடிக்கைபார்க்க போக நினைப்பவர்களுக்கும் ;)  -recommended

எது நல்லாயிருக்கும், அது நல்லாயிருக்காதுன்னு நான் சொல்லவே இல்லை.. நல்லாயில்லை’ன்னு இங்க ஒண்ணு இல்லைன்னு நினைக்கிறேன்.. உங்க சுவை ரசனைக்கு ஒத்துவர்றது வராதது மட்டுமே.. So please explore. :)



வீதியில எங்கயும் மாமிசமோ முட்டையோ கூட கிடைக்காது என்பது ஒரு சின்ன வருத்தம் தான், ஆனா அந்த கவலைய போக வேற வீதிகள் இருக்கு.. அது பின்னாடி.



Thursday, July 25, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 1

”நம்மூர் ஹோட்டல்ல தோசைன்னு சொன்னா ரோஸ்ட் தான இதென்ன இப்படி ஊத்தாப்பமும் இல்லாம கல்தோசையும் இல்லாம ஒரு கிரகத்தை குடுக்கறான்”

”அது தோசை, இது தோசா” - என்று ஒரு மாபெரும் ரகசியத்தை சகநட்பு விளக்கி சொல்லி் முதன்முதலில் ஒரு அதிகாலையில் பெங்களுர் உணவகங்களிடன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான், தோசா’வை தொடர்ந்து இந்த ஊரில் புளிச்சட்னி/வெங்காயசட்னி என்பதோ யாரும் கேள்வியேபட்டிராத ஒரு வஸ்து என்பதை தெரிந்தகொண்டபோது ‘ஐயகோ’ என்று இருந்தது.

ஐயகோ’க்கள் அத்துடன் நிற்கவில்லை, ஏறக்குறைய கஞ்சி பக்குவத்தில் தயிர்பச்சிடியுடன்  பரிமாறப்படும் வெண் பொங்கலும், எதாவது ஒரு ‘நீர்க்காய்’ போட்டு வெல்லத்தில்‘அசட்டு தித்திப்பு’டன் வழிந்து ஓடும் சாம்பாருமாக, ‘தப்பு பண்ணிட்டயே ராசா’ என்று உள்ளூர ஒரு உதறுல் ஏற்படுத்திவிட்டன.

பின் மெதுவாக காலையில் உடுப்பிசாம்பாரும் அதில் மிதக்கவிட்ட உளுந்துவடையும் இட்லியும் - மதிய நேரத்து ரைஸ்பாத் / மொசுரு அன்னா - இரவுக்கு ரொட்டி-கறி அல்லது செட்தோசை (பல்யா பேடா, சட்னி எக்ஸ்ட்ரா கப் கொடி) என்று ஒரு டிசிப்ளின் உருவாகி அந்த உதறலை மட்டுபடுத்தின.
பின்னர் 6 மாசம் கழித்து யாராவது புதிதாக வந்து ’ஐயோ பெங்களூர்ல சாப்பாடு ஒத்துவராதே எப்படி சமாளிக்கற’ன்னு கேட்டா ஒரு மணி நேரம் உக்கார வச்சு காதுல ரத்தம் வர்ற அளவுக்கு கதற கதற பெங்களூர் சாப்பாட்டு புராணங்களை பொழிந்துதள்ளும் அளவுக்கு முன்னேறியாச்சு. :) அந்த புராணங்களை எல்லாம் ஆவனப்படுத்தி கல்வெட்டுல வெட்டிவச்சுட்டா நமக்கு பின்னாடி வர்ற சந்ததியினர் அதை பார்த்து படிச்சு தெரிஞ்சு தெளிவா நடந்துக்கவாங்கன்னு.. இதோ...

(புதிய நாகரிக, கார்ப்பரேட் கார்டுகளை தேய்க்க மட்டுமே என பல இடங்கள் உண்டு, அதெல்லாம் வெள்ளிக்கிழமை TOIல வரும் பார்த்துகிடுங்க, இந்த தொகுப்பு பழைய / சின்ன / உள்ளூர் / சுவையான, இடங்கள் மட்டும்)
@venkiraja கேட்டமாதிரி 

காலை :

நகரெங்கும் வியாபித்திருக்கும் SLV, சாகர், காமத், அ.ஆ.ப, உடுப்பி மாதிரியான வழமையான இடங்களை தாண்டி விசேஷமான (நான் போன) சிலது மட்டும்

# ப்ராமின்ஸ் காஃபி பார்
கொஞ்சம் பழைய பெங்களூர் வாசத்தோட, பசவனகுடி’க்கும் சாம்ராஜ்பேட்’க்கும் நடுவால சங்கரமடத்துக்கு பக்கத்துல இருக்கும் ஒரு பழைய கடை. 50வருசமா இருக்காம், பெஸ்ட் இட்லி அவார்ட் எல்லாம் வாங்கியிருக்காங்களாம். அருமையான இட்லி, பொதுவா இந்த ஊர் சாகர்’களில் கிடைக்கும் அரிசி ஜாஸ்த்தி போட்ட உதிரிப்போகும் இட்லியா இல்லாம, நல்ல மல்லிப்பூ மாதிரியான இட்லி, நிறையா நெய்யும் முந்திரியும் மிதக்கும் கேசரி, காரபாத் (வெள்ளைரவை தான் கொஞ்சம் கேரட்டும் பட்டானியும் போட்டு டகால்டி வேல காட்டுனது) , அவ்ளோ தான் மொத்த கடையோட மெனுவுமே, வேற ஒண்ணும் கிடைக்காது, சாம்பாரும் கிடையாது, சட்னி மட்டுமே (அன்லிமிட்டட்). இங்க வழக்கமா வர்ற ஆசாமிகள் மேல காசுகுடுத்து ஒரு துண்டு வெண்ணைய வாங்கி இட்லிமேல தடவிக்கறாங்க, நமக்கு அதுல உவப்பில்லை, நல்ல மொறுமொறுப்பான வடையும் அந்த அளவுகாரம் போட்ட சட்னியும், சுவையில ஆகாஓகோ தான், பில்டர் காப்பி குறை சொல்ல முடியாது, டீ’யும் உண்டு.
கையிலேந்தி தெருவில் நிற்க்கும் வசதி மட்டுமே உண்டு, உக்காரவெல்லாம் முடியாத்

#NMH (ந்யூ மார்டன் ஹோட்டல்) http://www.newmodernhotel.com/
இதுவும் ஒரு பழைய இடம், பழைய காங்கிரஸ் தலைவர்கள் படம் எல்லாம் வச்சிருப்பாங்க (அது ஜனதா கட்சிக்காரங்கன்னு ஒருத்தன் சொல்றான், நம்ம வேலைய நம்ம பார்ப்போம்),
அதே இட்லி வடை காரபாத் ஐட்டங்கள். கூடவே தோசையும் உண்டு. ’பட்டர் காலி’, தட்டே இட்லி, மசாலா தோசா எல்லாம் ரொம்ப விசேஷம். அதிலும் முக்கியனாம விசேசம் ‘இருளி சாம்பார்’ - சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் பக்கெட்ட கொண்டாந்து உங்க டேபிள்ல வச்சதும் நாக்கு கொஞ்சம் கங்கம்டான்ஸ் ஆடிரும். இங்க காப்பி குடிச்சுட்டே தான் பல பழைய கன்னட படங்களுக்கான திரைக்கதை உருவாச்சாம்,
பாதாம் அல்வா / பெனி / சிரொட்டி - சிறப்பு. MTR மாதிரி காலைடிபனுக்கு காத்துநிக்க வேண்டியிருக்காது
மதியம் மீல்ஸும் உண்டு, அதுல இஞ்சி கொத்துமல்லி போட்ட மோர் தான் ஹைலைட்டு.
விவி.புரம் - மினர்வா சர்கிள் பக்கம் - MTRல இருந்து 1 - 1.5 கிமி, அந்த தோசையை பிச்சு வாயுல போட்டுகிட்டு ஸ்பூன்ல சாம்பாரை டேஸ்ட்டும்‘இதர் ஆவோ’அமித்துகள் கூட்டம் இல்லாமல் சாப்டலாம் ;)

#வித்யார்ததிபவன்
90களில் ஷகீலா படத்துக்கு தியேட்டர்வாசல்ல நின்னா மாதிரி ஒரே பெருசுக கூட்டமா இருக்கும், மணியடிச்சா தான் கடைதிறப்பாங்க, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு இவுங்க :) 7 -11, 2-8 மட்டுமே
காந்திபஜார், பூஜைசாமான் கடைகளுக்கும் பூக்கடைகளுக்கு மத்தியில ஒரு சின்ன இடம். ரொம்ப ‘பாடல் பெற்ற’ இடம்.
மசால்தோசா = வி.பவன். அஷ்ட்டே.. நோ சாம்பார், ஒன்லி சட்னி, மத்த இடம் மாதிரி இல்லாம கொஞ்சம் பொட்டுகடலை அதிகம் போட்ட தேங்காச்சட்னி. ஒரு டஜன் தோசை தட்டை சர்க்கஸ்க்காரன் மாதிரி எடுத்துட்டு வர்ற சர்வர போட்டோ எடுத்துதள்ளும் ஆப்பிளர்களும், கிட்ட வந்ததும் மேல வச்சிருந்த தட்டு தன்னோட தோசையில பட்டு சுகாதரக்கேடு விளைவிக்குமோன்னு யோசிச்சுட்டே சாப்பிடும் ஆட்களும் சூழ்ந்த இடம். NHM பழைய சினிமாக்காரங்கன்னா, இது அந்தக்கால பெரியாப்பீசர்களும் ப்ரொபசர்களும் வரும் இடம்.
இட்லி கிடையாது, ரவா வடா உண்டு. காப்பி - இந்த கள்ளிச்சொட்டு வகையறா.

#த்வாரகாபவன்
என்.ஆர்.காலனி.
பெங்களூரின் பெஸ்ட் ‘பட்டர் காலி’ கிடைக்கிறது இங்க தான்.

#உடுப்பி க்ருஷ்ணபவன்
பாலபெட்/சிக்பெட் - 1926ல இருந்து இந்த கட்டடம் 1902ல இருந்து வியாபரம் இருக்காம்.
ரவா இட்லி, சாகுமசால்தோசை - விசேஷம். காப்பி - உன்னதம்.. ஒரிஜினல் உடுப்பிசாம்பாரில் மிதக்கும் வடை. வாழையிலையில் சுத்தின இட்லி.
காலையில என்னடா க்யூ நிக்கிறாங்கன்னு யோசிக்காம வாங்கி அடிச்சிருங்க - சூப்பர் ஷேவிகேகீர் (பாதாம் சேமியா பாயாசம்)

#CTR (செண்ட்ரல் டிபன் ரூம்) - மல்லேஸ்வரம்.
இதுதான் MTR விட பெஸ்ட்டுன்னு துண்டைபோட்டு தாண்டுற மண்ணின் மைந்தர்கள் உண்டு. வெங்காயம்/பூண்டு சேர்க்காத சமைக்கிற இடம்.

#வீணாஸ்டோர்ஸ் - மல்லேஸ்வரம்
பாத்திரகடைன்னு நினைச்சுறாதீங்க. கையேந்தி நிக்கும் இட்லிவடை காப்பி கடைதான். கூட்டம் மட்டும் எதோ ஆடிதள்ளுபடி சென்னைசில்க்ஸ் அளவுக்கு இருக்கும்

என்னடா ஒரே மாதிரி போகுதே, ஒரு மசாலா வாசமே வரலைன்னு நினைக்கறீங்களா.. ஹிஹி.. இத்தோட இத முடிச்சு அங்க போயிடுவோம்.

#SG ராவ் மிலிட்டரி ஹோட்டல்.
நூறு வயசு தாண்டியாச்சுன்னு சொல்றாங்க, இந்த ஸ்டீம் குக்கிங்/ கேஸ் குக்கிங் எல்லாம் கிடையாது, விறகு அடுப்பு தான். பழையகாலத்து வீடு மாதிரியான இடம்.
சிக்கன்புலாவ், மட்டன்புலாவ் (பிரியானி தான்). கொஞ்சம் குழைஞ்சாப்புல இருக்கும். சாப்ஸ், கீமா
முதல்தடவை காலையில 6 மணிக்கு கூட்டமா வரிசையில நின்னு பிரியாணி வாங்கிறத பார்த்தேன், பெரும்பாலும் பார்சல், 8 மணிக்கு போன, மதியானம் வா’ன்னு சொல்லிடுவாங்க :( மதியம் ராகிகளிஉருண்டை கிடைக்குமாம்.
முன்னொருகாலத்தில் நைட் அவுட் அடிக்கும் பல சனியிரவுகளின் நீண்ட பயணம் ஞாயிறு காலையில் இங்க முடிவதுண்டு

#தனபால் மிலிட்டரி
சின்னயன்பாளையா, அடுகோடி
இட்லி-பாயா / போட்டி - யோசிக்காம நேரா போயிடுங்க. கார் எல்லாம் வேண்டாம், ரெண்டுசக்கரம் தான் ஆகும்.

#சிவாஜிமிலிட்டரி ஹோட்டல் - பனஷங்க்கரி
காலையில தோசை, ஆட்டுக்கால் சூப், கீமா, பிரியாணி (ஆனா மதியம் கிடைக்கிறது இதைவிட பெட்டர் வெர்ஷன்)
#ரங்கன்னா மிலிட்டரி - கே.ஆர்.ரோடு
இட்லி, தோசை, ராகிமுத்தே, சாப்ஸ் -

மேல சொன்ன ரெண்டும் அகில உலக பேமஸ் ‘தொன்ன’ பிரியாணி கிடைக்குமிடங்கள் :)

இதை அப்படியே ஒரு தொடரா கொண்டுபோக ஆசை, அதை நம்பி தான் தலைப்புல -1-ன்னு போட்டிருக்கேன்..
பயங்கிற பிசி, நேரமில்லைன்னு ஸ்டைலா பேசலாம், ஆனா உண்மை என்னான்னா.. “பேசிக்கல்லி ஐயம் ஏ சோம்பேறி - லெட்ஸ் சீ”..

அப்புறம் முக்கியமா.. நீண்டு நெளிந்து மணிக்கணக்கில் சென்ற கஸ்டமர் காலுக்கு இந்த பதிவு சமர்பணம் ;)






Thursday, November 5, 2009

சும்மா குறிச்சு வச்சுக்க

நட்பு வட்டத்துல ஒவ்வொருத்தனா கல்யாணம் செஞ்சுக்கா ஆரம்பிச்சப்போ போட்ட பதிவு இது... காலச்சக்கரம் சுத்திட்டே இருக்குங்களே நம்ம மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன, அதுவும் கடந்து போச்சு. அடுத்த கட்டத்துக்கு போகனுமில்லைங்களா. சும்மா ரகளையா "உங்க தங்கச்சி புள்ளை வளைகாப்புக்கெல்லாம் நான் லீவு போட முடியாது, மார்க்கெட் இருக்கிற நிலவரத்துல"ன்னு சலிப்பா விட்டுக்கு போன் பேசிட்டு சுத்திட்டு இருந்த பயலுக எல்லாம், "வீட்டுல அவுங்க அப்பாவுக்கு கேட்ராக்ட் மாதிரி இருக்கும் போல, அரவிந்த் கூட்டிட்டு போகனும், அதுனால அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு"ன்னு 'ஷை'யே படாம பேச ஆரம்பிச்ச காலமும் வந்து தானுங்களே ஆகனும்.. அதுக்கப்புறம் ராத்திரி வெள்ளிக்கிழம ராத்திரி ஒரு பத்து பதினோரு மணி வாக்குல அடுத்தநாள் ஷெட்யூல் கன்பர்ம்ங்க செய்யலாம்னு போன போட்டா.. பாசமா 'மாமா..'ன்னு ஆரம்பிச்சு "அப்புறம் கூப்பிடறன்.. ஜூனியர் அழுவாச்சி ஆரம்பிச்சுருச்சு"ன்னு சொல்லி வைச்சுட்டு, மறுபடி திங்கட்கிழமை காலையில மெசஞ்சர்ல வந்து.. "அப்புறம்.. அன்னைக்கு கூப்பிட்ட, அப்புறம் கூப்பிடலாம்னு அப்படியே மறந்துட்டேன்"னு ஆரம்பிப்பானுக... ம்ம்.. நாமளும் இதுக்கெல்லாம் தப்பிக்க முடியாது பாருங்க.. நமக்கு அதுக்கான் நேரம் வந்துது..

லக்கி எழுதின மாதிரித்தான்னாலும் அந்தளவுக்கு அதிகமா அலைக்கழிக்க படாம, ஒரு சின்ன சுத்துக்கப்புறம் சட்டுன்னு ரெண்டு நாள் வெயிட் பண்ணி கன்பர்ம் ஆனதுல பெரும்பான்மை மாதிரி ஹோம் டெஸ்ட் - ஆஸ்பத்திரி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாம டக்குன்னு 'Dad in waiting' ஸ்டேட்டஸ் வந்திருச்சு..

அப்ப இருந்தே குடும்ப சகா'க்க கூட்டம் சேரும் போதெல்லாம், இதே பேச்சு தான்.. பையனா? பொண்ணா? இது வரைக்கும் பையன் பொறந்த கூட்டாளிக எல்லாத்தையும் "அப்புறம் செஞ்ச அட்டகாசத்துக்கெல்லாம், ஒரு பையன் பொறந்து அதே ஆட்டம் ஆடித்தான தண்டனை குடுக்கனும்".. "எல்லா தல்லவாரிகளுக்கும் பையன் தான்.. அனுபவிக்கனும் இல்ல"ன்னு வம்பாவே பேசிட்டு இருந்தாச்சு. எல்லா கூட்டத்துலயும் எல்லாருமே முடிவாத்தான் இருந்தாங்க.. பையன் தான்.. வயிரு பெருசே ஆகலை பையன் தான்.. அப்படி இருக்கு, இப்படி இருக்கு அதுனால பையன் தான்'னு ஆளாளுக்கு தீர்ப்பு சொல்லிட்டே இருந்தாங்க.. நம்ம வுட்டம்மிணி உட்பட.. உள்ளார இருக்கிறவன் கிட்டத்தான் கம்ப்ளெயின்ட் செய்யிறத எல்லாம்.. உம் கடைசியில நம்மள பத்தி சொல்லிகுடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சு அவுங்களுக்கும்..
இப்படியே பேசிட்டு இருந்த ஒரு நாள் தான், வீட்டுக்கு வந்த ஒரு தோழி, எல்லாரும் பேசு கத்தி கலாய்ச்சு அமைதியான பிறவு சொன்னா.. 'உனக்கு பொண்ணுதான்டா... பொறுப்பான பசங்களுக்கு பொண்ணுதான்.. வேணா பாரு'ன்னா.. அவளுக்கு பையன்.. பாவம் அவ வீட்டுக்காரன் மேல அவளுக்கு என்ன கோவமா.. என்ன இருந்தாலும் இந்த தோழிக தோழிக தான்.. நம்மள சரியா புரிஞ்சுக்கறவங்க அவுங்க தான் :)

நமக்கும் மனசுல.. 'பொண்ணாயிருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு.. மூணு தலைமுறையா எங்க வூட்ல பொண்ணுகளே பிறக்கல.. (அதுக்கு முன்னத்துன வரலாறு எல்லாம் தெரியற அளவுக்கு பாரம்பரிய பலம் இல்லைங்க நமக்கு) நான் பொறந்ததுக்கே எங்காத்தா ஒரு நா கழிச்சு தான் வந்து பாத்துதாம்.. வந்ததும் எங்கம்மா கிட்ட.. 'வாசக்கூட்டி கோலம் போட ஒரு புள்ளை வேணும்னு இருக்கேன்.. நீ பையன பெத்து வச்சிருக்கே'ன்னு புலம்பியிருக்காங்க. அவுங்க விதி அதுக்கப்புறம் வந்த ரெண்டு மருமகளும் கூட அவுங்க ஆசைய நிறைவேத்த முடியல... அந்த ஆசை தான் வேதாளம் மாதிரி எங்காத்தாவோட பெரிய பேரன்'ங்கிற முறையில என் தோள்ல தொங்கிட்டு இருந்துச்சோ என்னவோ.. ஆனா வூட்டம்மிணியும் எங்கய்யனும் கூட்டணி போட்டு ஸ்ட்ராங்கா 'பையன் தான்'ன்னு சொல்லும் போது.. சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டு இருந்தேன்..

நம்ம வாரிசு நம்மள மாதிரி தான் இருக்கும்.. அவசரக்குடுக்கையா.. சொன்ன தேதிக்கு 17 நாள் முன்னாடியே உள்ளார எதோ ரகளைய செஞ்சு, சரி இன்னைக்கே எடுக்கனும்னு உள்ள தள்ளிட்டு போயிட்டாங்க... எல்லாரும் கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தாங்க.. நானும் எங்கய்யனும் வழக்கம் போல.. இப்படி மார்பிள்ஸ் போட்டதுக்கு பதிலா டைல்ஸ் போட்டிருக்கனும் ஆஸ்பத்திரியில எல்லாம் வழுக்கிட்டா கஷ்டமில்லன்னு எங்க சமூக அக்கரைய வெளிக்காட்டிட்டு உக்காந்திருந்தோம்.. அம்மா முறைச்சு பார்க்க.. சரி நாமளும் கொஞ்சம் பொறுப்பா இருப்பம்னு அதுக்கும் முயற்ச்சி செஞ்சேன்.. அதுக்கு புவியியல் சதி செஞ்சு ஒர்க் அவுட் ஆகாம போயிருச்சு..

அப்புறம் 'யாவரும் நலம்'ன்னு கூப்பிட்டு கையில குடுத்துட்டு உடனே வாங்கிட்டாங்க.. நம்ம அம்மணி அரைமயக்கத்துல சிரிக்க முடியாம ஒரு புன்னகையோட படுத்திருக்கு.. என்ன செய்யன்னு தெரியாம.. கங்கிராட்ஸ்'ன்னு மட்டும் கைய அழுத்திட்டு சொல்லிட்டு வந்துட்டேன்.. வெளிய எல்லாருக்கும் ஒரே குஷி.. பெருசு பெருசா ஸ்வீட் பாக்ஸ் வாங்கி எல்லாருக்கும் குடுத்துட்டு, ஒவ்வொரு வட்டத்துலயும் ஒவ்வொரு சகா'க்கு போன போட்டு சொல்லி, எல்லாருக்கும் சொல்லிடு, நான் அப்புறம் பேசுறன்னு வந்துட்டேன்.. பொறுப்பான புருஷனா இருக்கனுமில்ல..

அப்புறம் ஒரு நாலு மணி நேரம் கழிச்சு இணையபக்கம் வந்தா.. ஒரு சகா எல்லாருக்கும் மெயில் போட்டிருக்கான் குரூப்ஸ்ல, "ஒரு சந்தோஷமான வருத்த செய்தி.. ராசு தல்லவாரி இல்ல.. பொறுப்பான ஆள்ன்னு சொல்றம் மாதிரி ஆயிருச்சு"ன்னு ... வயத்தெரிச்ச புடிச்ச பயலுக.. "ஒருத்தன், லைஃப் லாங்கா தல்லவாரியாவேவா இருப்பான்"... திருந்தவே கூடாதா, ப்ளடி ஃபெல்லோஸ்.. அப்புறம் நானே எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன், "நாங்களும் பொறுப்பு தான்.. பொறுப்பு தான்.. எல்லாரும் பார்த்திகிடுங்க.." ரேஞ்சுல..

பிகு:
தகப்பனான சந்தோசத்துல.. சின்னம்மை வந்து பொண்டாட்டி புள்ளைய கண் கொண்டு பார்க்க முடியாம ஒதுக்கி வச்சிருக்காங்க.. வாரிசு நலமா இருக்கிறதா போன்ல தான் க்ஷ்சொல்றாங்க.. 'அப்படியே பெங்களூர் போயிரு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வா'ன்னு உத்தரவு வேற.. ம்ம்.. எங்க போயிரப்போகுது வந்து பார்த்துக்குவோம்..

Wednesday, May 20, 2009

♬ இதெல்லாம் டூப்பு ♬ - கந்தசாமி

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுன்டகஞ்சி, சுட்டவடை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரிதண்ணி, இளநி, இராதொக்கு, உப்புகண்டம், பழையசோறு, டிகிரிகாப்பி, இஞ்சிமொறப்பா, கடலமுட்டாய், கம்மர்கட்டு, வெள்ளரிக்கா, இழந்தபழம், குச்சிஐசு, கோலிசோடா, முறுக்கு, பஞ்சுமுட்டாய், கரும்புசாறு, மொளகாபஜ்ஜி, எள்ளுவடை, பொரிஉருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத்தண்ணி, ஜவ்வுமுட்டாய், கீரவடை, கிர்னிபழம், அவுச்சமுட்டை, ஆஃப்பாயில், பல்லிமுட்டை, பப்பாளி, புகையிலை, போதைபாக்கு, புண்ணாக்க்கு..

இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனார், மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுபேத்தி, பேரன், கொள்ளுபேரன், பொண்டாட்டி, வப்பாட்டி, நல்லபுருஷன், கள்ளபுருஷன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி, அக்காப்பொண்ணு, அத்தைபொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகலை, சம்பந்தி, முறைமாமன், முறைபொண்ணு, தலைச்சன்புள்ள, இளையபுள்ள, இளையதாரம், தொடுப்பு, ஒண்ணுவிட்டது, ரெண்டுவிட்டது, ரத்தசொந்தம், மத்தசொந்தம், ஜாதிக்காரன், பொண்ணெடுத்தவன், பொண்ணுதந்தவன்..

இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல, காதல்தோல்வி, கடுப்பு, எக்ஸாம்பெயிலு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம், போட்டுகுடுத்தல், பொறாமை, கிண்டல், இளப்பம், எச்சபுத்தி, இறுமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோழ்மூட்டல், குறுக்குபுத்தி, ஒட்டுகேட்டல், ஓரவஞ்சனை, பொய், புழுகுமூட்டை, டகுல்வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து, கொள்ளிகண்ணு, குசும்பு, சின்னத்தனம், சின்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேறுமாறு, டிமிக்கி, ஊழ உதாரு, ஒப்பாரி, ஜால்ரா, ஜெர்க்கடித்தல், திருட்டுவேலை, தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு

குப்புசாமி, கோயிஞ்சாமி, முனுசாமி, முத்துசாமி, க்ருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராச்சாமி, கன்னுச்சாமி, கருப்புசாமி, வெள்ளச்சாமி, பழனிச்சாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கிடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவச்சாமி, சீறுச்சாமி, சடையச்சாமி, சந்தரசாமி, வெள்ளச்சாமி, குயில்சாமி, குமாரசாமி, கொதண்டசாமி, அங்குசாமி, துரைச்சாமி, பொன்னுச்சாமி, அய்யாச்சாமி, அண்ணாச்சமி, நல்லசாமி...

இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு

:: கந்தசாமி :: விகரம் :: விவேகா :: தேவிஸ்ரீப்ரசாத் :: சுசிகணேசன் ::

# கேட்க #

Tuesday, February 17, 2009

ஒரு கணம்

விழிப்பு தட்டிவிட்ட வாரயிறுதி அதிகாலையில்
பிடித்த கட்டங்காபியும் மெல்லிசையுமாய் சிலநேரம்

நேரம் பார்க்காமல் காட்டோடையில் மூழ்கி திளைத்து 
ஈரம் சொட்ட சொட்ட கரையில் அமர்ந்து சிலநேரம்

மின்சாரமில்லா மழைநேரத்து மாலையில்
வாசலில் தெறிக்கும் சாரலோடு தனிமையில் சிலநேரம்

உறக்கமில்லா நெடுந்தூர இரவு பயணத்தில்
ஆளில்லா அத்துவான சாலையோரங்களில் சிலநேரம்

கலோரி கணக்கு பார்க்காமல் மனசு நிறைய உண்டுவிட்டு 
கொழுந்து வெற்றிலையோடு தென்னந்தோப்பில் சிலநேரம்

வெட்டிப்பேச்சும் போதையுமாய் போகும் நட்புகூட்டம்
சட்டென்று அமைதியாகி மெளனம் நிறைக்கும் சிலநேரம்

காமம் கொண்டாடி கரைந்து களைத்துவிட்ட பிறகு
சாளரம் வழியே நட்சத்திரங்களை பார்த்தபடி சிலநேரம்

இப்படி ரசித்து புகைத்த நேரங்கள் பல உண்டு

இத்தனையையும் விஞ்சி விட்டது 

நேற்று

அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்.

Monday, October 13, 2008

,

,

ஊர் நிலவரம்

ஊர்ல யாருகிட்ட பேச்சுகுடுத்தாலும் பவர்கட் சமாச்சாரம் தான் டாபிக்.. யூ.பி.எஸ் போட்டாச்சா? எதோ பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிச்சாச்சாங்கிற மாதிரி கேக்கறாங்க.. ரெண்டு வருசம் முன்னாடி 8500ரூபா கேக்கராங்கன்னு அதெதுக்கு வெட்டியா, சிஸ்டத்துக்கு மட்டும் இருந்தா போதும்னு விட்டாச்சு.. இப்போ 20ஆயிரம் கேக்கிறாங்க.. ஓகே ரைட்டு, வந்து மாட்டிருங்க'ன்னா.. பதினஞ்சு நாள் ஆவும்ங்க.. ஒரே டிமான்டு'ன்னு பதில்வருது.. சரி சீக்கிரம் எப்படியாவது செய்யுங்கன்னு சொல்லியிருக்கு. அது வரைக்கும் தாங்கனும் எப்படியாவது..

ஷெட்யூல் போட்டு தாக்குறாங்க.. போன வாரம் வரைக்கும் ராத்திரி 12-1.30 வரைக்கும் இல்ல.. இந்த வாரம் காலையில 4.30-60 வரைக்கும், பாவம் படிக்கற புள்ளைக, ஒழுங்க தூங்கனும்.. அப்புறம் தான எந்திருச்சு படிக்கறது எல்லாம். ம்ம் எல்லாம் நம்மள மாதிரி அலாரம் வச்சு எந்திருச்சு மொட்ட மாடி லைட்ட போட்டுவிட்டு தூங்கியே படிச்சதா பேரு பண்ணிக்க முடியுமா, இன்னைக்கு அம்மாக்க எல்லாம் உஷாரா இருக்காங்க.. கூடவே வந்து உக்காந்துக்கறாங்களாம்.

"பகல் கூட பரவாயில்லை, ராத்திரியில ரெண்டு மணி நேரம் எல்லாம் ரொம்ப ஓவர்"ப்பான்னு எதார்த்தமா சொன்னேன், "உனக்கென்ன, மாசம் ரெண்டு தடவை வந்துட்டு ஓடிருவ, இங்க தொழில் செய்யரவனுக்கு தான் தெரியும் கதை"ன்னு ஆரம்பிச்சு கொட்டி தீர்த்துட்டான் கூட வந்த ஒரு தொழிலதிபர் சகா. "ஒரு நாள் ஆள் கூலி குடுத்தா வேலை செய்ய மூணு மணி நேரம் தான் கரண்ட் இருக்கு.. 300 பீசு ரெடியாகனும் பாம்பே ஆர்டர், இவனுக எல்லாம் என்ன கவர்மென்ட் நடத்துறானுகளோ, சரி மெஷ்ன் ஓடாத நேரம் கவர்மென்ட் வேலைய முடிக்கலாம்னு டாக்ஸ் ஆபீஸ் பக்கம் போனா,  எல்லாம் கம்ப்யூட்டர் மயம் செஞ்சாச்சு, அதுனால கரண்ட் இருக்கும் போது வாங்கன்னு வாசலோட அனுப்பிடுறாங்க.."ன்னு ஒரு மணி நேரம் திட்டி தீர்த்தாரு.. "கேரளாவுல பாருங்க இந்த பவர்ஷெட்டிங்'கெல்லாம் ஒண்ணுமே கிடையாது" - தோழர் ஒருத்தர் பெருமையா சொன்னாரு.. நம்ம உள்ளூர் தொழிலதிபர் கடுப்பாகி.. "ஆமா, அங்க என்ன தொழில் செய்ய விடறீங்க.. பூராப்பயலையும் கொடியபுடிச்சு தொரத்திருங்க.. எல்லாரும் இங்க பார்டர் தாண்டி வந்து தொழில்செய்யறான்.. அதான் இங்க பத்தாகுறையா இருக்கு"  பத்து நிமிசம் முன்னாடி இதே தொழிலதிபர் பேசுன பேச்ச நினைச்சா.. ம்ம்.. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு.

"ஆயிரம் சொன்னாலும் கேரளாக்காரம் வேக்யானமானவன் தான்.. இத்தனை வருசமா பொள்ளாச்சி ரயில்வே மதுரைக்கு கீழ தான் இருந்துச்சு, என்னத்த கழட்டுனாங்க.. இப்போ பாருங்க கேரளாவூக்கு தள்ளி விட்டதும் அவுங்க வந்து ப்ராட்கேஜ் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. ஒட்டஞ்சத்திரம், பொள்ளாச்சி சந்தைகளும் பழனிக்கு வர்ற பாலக்காட்டு கூட்டமும் அவங்களுக்கு சவுரியமா தெரியுது -   அங்க எதாவது ஒன்னு இலவசமா தர்றானா.. இங்க 1300கோடி சம்ஸ்டேஷன் வேல மூணு வருசமா பெண்டிங், ஆனா 6500கோடி செல்வௌ செஞ்சு டி.வி பொட்டி குடுக்கறாங்க.."தோழர் அடுக்கிட்டே போனாரு, சரி வெளியூர் கதைய விடுங்கப்பா, நம்மூர் கதையே ஆயிரமிருக்குன்னு ஒரு வழியா முடிச்சு வைச்சேன்.

ஆற்க்காடு வீராஸ்வாமிய தான் இன்னைய தேதிக்கு தமிழகத்தின் கெட்ட வார்த்தைன்னு நினைக்கிறேன், அந்தளவுக்கு மரியாதை அய்யா பேர சொன்னாலே :) தயாநிதிய தூக்கினப்போ சில சில்பான்ஸுக "அய்யகோ எல்லாம் போச்சே"ன்னு அலறுனதும், அறச்சீற்றம் கொண்டு எழுந்து "மந்திரி என்னையா மந்திரி, எல்லாம் சீஃப் செக்ரட்டரி தான்"னு சொன்னவங்க கூட இன்னைக்கு அதிகாரிகளவிட்டுட்டு ஆற்க்காட்டார தான் காரணம் காட்டிட்டு இருக்காங்க.. பாவம்.

பேசிகிட்டே "கத்திகப்பல்" ஓடுற தியேட்டர் பக்கம் வந்துட்டோம்.. அந்த தியேட்டர்ல நம்ம எப்பவும் டிக்கெட் வாங்கறதில்லை, அய்யன் சிநேகிதம், "மணிரத்னம் அசிச்டெண்ட்டாம், போலாமா?"ன்னு தொழிலதிபர் கேட்டதும், சரின்னு உள்ள போனோம், உள்ள நுளையும் போதே எதோ தப்பா தெரிஞ்சுது, ஒரு பரபரப்பே இல்ல, ஒரு நா முன்னாடி தான் படம் ரிலீஸுன்னாங்க.. தியேட்டர் மேனேஜர் வெளிய நின்னிகிட்டிருந்தாரு,  "எப்படின்னே? பார்க்கலாமா?" .. சிரிச்சாரு.. "மார்னிங்ஷோ ஒரு ஆள் கூட வரலை.. இப்போ ரெண்டு டிக்கெட் குடுத்திருக்கோம், மூணாவதா நீ வந்திருக்கே".. 40 வருட தியெட்டர் வரலாற்றில் முதல்முறையாக ஒரு புது ரிலீஸ் படத்துக்கு, ரெண்டாவது நாளே இந்த கதியாம்..  ஆஹா சாமி ஆள விடுங்க, அந்த பாவத்தை வேற நான் சுமக்கனுமான்னு ஒடியாந்துட்டோம்.

பொட்டி தட்ட திரும்ப கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன்'ல நின்னோம், வழக்கம் போல ஐலேண்ட் லேட்டு தான், ஆனா இன்னைக்கு அரைமணி நேரம் தான் டிலே.. ப்ளாட்பாரத்துல ஐபாடும், செல்ஃபோனுமா சிணுங்கிட்டு இருந்தவங்கள வேடிக்க பார்த்துகிட்டே சுத்தறப்போ, 10.30 மணிக்கு சரியா பவர்கட், ஒரு நிமிசம் இருட்டாகி, பேட்டரி லைட்டுக மறுபடியும் வெளிச்சம் கொண்டுவந்துச்சு.. கூட வந்த சகா சொன்னான் "இப்படி பவர் கட் ஆச்சுன்னா அப்புறம் ரயில் எல்லாம் எப்படி நேரத்துக்கு வரும்?" .. "உனக்கெல்லாம் எவன்டா அத்தாப்பெரிய கம்பெனியில மேனேஜர் போஸ்ட் குடுத்தானுக"ன்னு கேட்டேன், விடலையே அவன்,  மறுபடியும் கேட்டான் "கரெண்ட் போனா உடனே டீசலுக்கு மாத்திக்குவாங்களோ"..  ஸ்ஸப்ப்பா.. ராமா, என்னை ஏன்தான் இப்படிபட்ட ஆளுக கூடவே கூட்டு சேர்த்தரயோ..

Tuesday, October 7, 2008

♫ ஆண்பாவம் - கொல்லங்குடி கருப்பாயி ♫


கூத்து பார்க்க அவரு போன.. தன்னானேனானே..
கோடி சனம் கூட வரும் தில்லேல்லேலேலே

ஆத்து பக்கம் அவரு போனா தன்னானேனானே..
ஆதவன் கொடப்புடிக்கும் தில்லேல்லேலேலே

திருப்பதில நிப்பாரு பாரு தன்னானேனானே..
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவரு பேரு தானே ..

பாட்டு கேக்க

Friday, October 3, 2008

கருத்து

வழக்கமா மாசம் ரெண்டு தடவை வந்து போகும் அதே ஏசி செமிஸ்லீப்பர் பஸ்.. 10.00 மணி'க்கு கிளம்பறதா டிக்கெட்டுல போட்டிருப்பாங்க, வழக்கமா 10.30க்கு தான் வண்டி கிளம்பும், அன்னைக்கு அதிசியமா 10.05'க்கு எல்லாம் கிளம்பிருச்சு. பெங்களூர் ட்ராஃபிக் தெரியும் தான, பொம்மனஹள்ளி போயி சேரவே 40 நிமிசம்.. அங்க தான் பெரும்பாலும் நம்ம பொட்டி தட்டுற மக்கள் எல்லாம் ஏறுவாங்க.. பொம்மனஹள்ளி'யில பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது பார்த்து, பழகி.. இப்போ ஐப்பசி'ல கல்யாணம்.. ஒரு சகா'க்கு.. ஆனா இந்த பதிவு அதை பத்தி இல்லை. :)

பொட்டிதட்டுற மக்கள் எல்லாம் ஏறி, கூகிள் உதவியில்லாம டிக்கெட்ல இருக்கிற சீட்டு நம்பர ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு குழப்பி குழம்பி, ஒரு வழியா உக்காந்து.. வண்டி  எடுச்சாச்சு..

ஒசூர் தாண்டி ராயக்கோட்டை வழியா விட்டுட்டானுக அன்னைக்கு.. ஹைவேஸ்ல ரோட்டு வேலை நடக்கறதால, பெரும்பாலும் அந்த வழி தான் இப்போ எல்லாம்.. முன்னாடி சீட்டுல உக்காந்திருந்த தலைவர் நல்லா தலை வரைக்கும் கம்பிளிய போர்த்திகிட்டு தூங்கியாச்சு..  ஆனாலும் அவர் மொபைல் ஹெட்போன்ல இருந்து பாட்டு எனக்கு நல்லாவே கேக்குது..

திடீர்னு தூக்கம் கலைஞ்சிருச்சு..  எனக்கு ஒரு பழக்கம், வண்டி நிக்கும் போது தூங்க முடியாது.. மூவிங்ல இருந்துட்டா ஓகே.. ஆனா நின்னுட்டா தூக்கம் கலைஞ்சிரும்..  ஏசி பஸ் வேறைங்களா.. ஜன்னல திறக்கவும் வழி இல்ல.. வெளிய இருட்டுல நிறைய வண்டி நின்ன மாதிரி இருந்துச்சு.. சரி  எதோ ட்ராஃபிக் போல'ன்னு மறுபடி தூங்க முயற்ச்சி செஞ்சேன். ஒரு அரை மணி நேரம், தூங்கவும் முடியல.. வண்டியும் நகரலை.. மெதுவா எந்திருச்சு யார் தூக்கத்தையும் கலைக்க கூடாது இல்ல.. முன்சீட்டு தலைவர் வேற லைட்டா குறட்டையோட சுகமா தூங்கறாரு..

வண்டிய விட்டு இறங்குனா. எதோ மெப்கோ'க்கு போறா சரக்கு லாரிபோல.. நடு ரோட்டுல தலைகீழா பார்க் ஆயிருந்துது.. நம்ம மக்கள் வழக்கம் போல. ரிக்கவரி வேன் கூட ஸ்பாட்டுக்கு வர முடியாத மாதிரி ரெண்டு பக்கமும் வண்டிய போட்டுவச்சுட்டு நின்னிருந்தாங்க..  இவனுகள திருத்தவே முடியாது.. சரியா நாலுமணிநேரம்.. ஒரு வழியா மேட்டுர்ல இருந்து  க்ரேன் வந்து, இழுத்து போட்டு, தாறுமாரா நின்னிருந்த வண்டிகள  எல்லாம் ஒழுங்கு பண்ணி.. வண்டி கிழம்புறதுக்குள்ள நமக்கு போதும் போதும்னு ஆயிருச்சு.. சும்மா நின்னு டிரைவர் கிட்ட வாங்கின 'ஸ்மால்'ஊதிட்டு வேடிக்கை பார்க்கவே..

வண்டி எடுத்ததும் சீட்டுக்கு வந்தா.. முன்சீட்டு தலைவர் ஆனந்த சயனம்.. ஹெட்ஃபோன் காதுல இருந்து நழுவி வெளிய தொங்குது.. கொடுத்து வச்சன்னு நினைச்சுகிட்டேன்..

வழக்கமா 7 மணி வாக்குல பொள்ளாச்சி கொண்டு போயி சேர்த்துவாங்க.. இன்னைக்கு இங்கயே நாலு மணிநேரம் லேட்டு..  எப்படியும் மதிய சோத்துக்கு தான் நினைச்சுகிட்டே தூங்கி போயிட்டேன்..

காலையில ஒரு 6.30 மணிக்கு தூக்கம் கலைஞ்சு பார்க்கும் போது திருப்பூர நெருங்கிட்டு இருந்துச்சு வண்டி.. பரவாயில்ல அடிச்சு ஓட்டிட்டு வந்துட்டார் போலன்னு.. சந்தோசப்பட்டுகிட்டேன்..

மணி 7.20. திருப்பூர்ல எறங்கவேண்டிய ஆளுக எல்லாம் இறங்கியாச்சு.. டிரைவர் எதோ இன்வாய்ஸ் பேப்பரோட கீழ இறங்கி நின்னுட்டிருக்காரு.. மொத்தமா திருப்பூர்ல வண்டி நின்னே ஒரு 3 நிமிசம் தான் இருக்கும்..  அப்பத்தான் முன்சீட்டுக்காரர் செல்ஃபோன் அலறுச்சு..  எதோ ஒரு mp3 ரிங்டோன்.. தடாபுடான்னு தூக்கம் கலைஞ்சு  எந்திருச்சு கம்பிளிய விலக்கி.. ஹெட்ஃபோன கழட்டி, தடவி, ஒரு வழியா பட்டன அமுக்கி பேசுனாரு.. பாவம் நல்ல தூக்கத்துல இருந்தாரு போல..

எல்லாம் வூட்ல இருந்துதான் போல..   7 மணிக்கெல்லாம் வந்திரவேண்டிய வண்டி இன்னும் வரலைன்னு கூப்பிட்டுருப்பாங்க, தலைவர் ஸ்க்ரீன விலக்கி வெளிய எட்டி பார்த்தாரு, சுத்தி முத்தி பதட்டமா பார்த்தாரு.. அப்புறம் போன்ல ஒரு கருத்து சொன்னாரு பாருங்க.. " இந்த கருமம் புடிச்ச வண்டில வந்தாலே இப்படித்தான், அங்க அங்க நிறுத்தி வச்சுக்குவான்..  இப்போ திருப்பூர்ல நிறுத்தி வச்சிருக்கான்.. டிரைவர வேற காணோம், அதுக்கு தான் நான் இந்த வண்டில வர்றதே இல்ல.."ன்னு ஆரம்பிச்சு..அப்புறம் அதுக்குமேல எனக்கு ஒன்னுமே கேக்கல..

பயபுள்ளைக எப்படியெல்லாம் 'கருத்து சொல்றானுக..

நாலுமணி நேரம் ஒரே இடத்துல நின்னும்.. சமாளிச்சு ஓட்டி ரெண்டுமணி நேர டிலே'ல கொண்டுவந்துட்டிருக்காங்க.. இவரு சூப்பரா தூங்கிட்டு, சட்டுன்னு எந்திருச்சு ஒரே நிமிசம் வெளியபார்த்துட்டு போட்டு தாக்குறாரு..

Wednesday, September 24, 2008

செம்மானம் இடறுது



"எங்கயோ செம்மானம் இடறுதுன்னு நான் நினைச்சேன்.. 
இங்க தான் எம்மானம் இடறுதுன்னு அறியலையே.."


"நீங்க செத்துபோயிட்டா நான் என்னன்னு பாடி அழுகறது"ன்னு சாவோட வலி தெரியாம  கேட்ட 9 வயசு பேரனுக்கு அவுங்க அப்பாரு சொல்லி குடுத்த ஒப்பாரி பாட்டு இது..   அன்னைக்கு அந்த பேரனுக்கு பொறந்த நாள் வேற..  அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பொறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையவே கிடையாது அவருக்கு.

இன்னைக்கு அந்த பேரனுக்கு 61வது பிறந்த நாள்.. இந்த நாள் ஞாபகம் இருக்கறதே, அவரோட தம்பி பையன் பொறந்தநாளுங்கிறதால தான். இன்னைக்கும் வழக்கம் போலவே எதும் விசேஷம் இல்ல.. . அப்பாரு சொல்லிகுடுத்த பாட்டை முதன்முதலா ரெண்டாம்மனுசங்க - மகனும் மருமகளும் - கிட்ட சொன்னது தவிர..

இன்னும் எதேதோ நினைவுகள்.. சப்-ஜெயில் வார்டனா இருந்த அவுஙக் அப்பாரு மீசை, வெள்ளை டவுசர், காக்கி பட்டை'ன்னுபெருமைய எல்லாம் சொல்லிகிட்டிருக்காரு.. மகனுக்கு புடுங்க வேண்டிய ஆணிகளோட ஞாபகம்.. 11.30 மணிக்காவது வேலையிடத்துக்கு போகனுமே.. சாயங்காலம் பேசுவோம்ன்னு ஒடியாந்துட்டான்..

வந்து ஆணி புடுங்கறதுக்கு நடுவால.. இந்த பதிவு.!!

இந்த 29 வயசுல ரெண்டாவது தடவையா எங்கய்யன் கண்ணுல கண்ணீர் எட்டிபார்க்கிறத பார்த்திருக்கேன்.. சாயங்காலம் நேரத்தோட வூட்டுக்கு போகனும்.. யாரவது வந்து 'ஆணிய புடுங்க வேண்டாம்னு' சொல்லுங்களேன்..


* செம்மானம் - செவ்வானம்
* இடறுது - இடி இடிக்கிறது
- கொங்கு பேச்சு வழக்கு


Friday, September 19, 2008

அப்பா

"ஒன்னு கேக்கனும் தம்பி", 'இன்னைக்கு ராத்திரிக்கு தாங்காதுங்கிறத டாக்டர் பதமான இங்கிலீசுல சொல்லிட்டு போனது ஆஸ்பத்திரி கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து சன்னமா கேட்டதுக்கப்புறம் உள்ளார வந்து பக்கத்துல நிக்கிற எம்மவன் கிட்ட கேட்டேன்.

"சொல்லுங்க" கொஞ்சம் குழப்பமா பதட்டமா பார்த்தான்.

" நீ இப்போ இங்க எதுக்கு வந்த?" வத்திபோயிட்டு இருக்கிற சக்தியெல்லாம் சேர்த்து வச்சு, தேவையில்லாத கேள்வி தான் கேட்டேன், ஆனாலும் எனக்கு தெரிஞ்சுக்க ஆசை.

"என்ன கேக்கரீங்க?" கண்ணுல குழப்பம் அதிகமானாலும், உதட்டோரம் சின்ன சிரிப்பு எட்டிப்பாக்குது

"இல்ல.. பதில் சொல்லு" தொண்டை அடைக்கிற மாதிரி இருக்கு, ட்ரிப்ஸ் போட்ட இடத்த லேசா வருடிக்குடுத்துக்கறேன்.

" நீங்க என் அப்பா, நான் இந்த நேரத்துல இங்க இருக்கனும்" கொஞ்சம் அழுத்தமாவே சொன்னான்.

"அதில்ல.. " தலைய ஆட்ட பார்த்தேன், முடியல.

ஒரு பெருமூச்சு அவன்கிட்ட இருந்து, அப்போ நான் இருந்த மாதிரியே நல்லா உடம்ப வச்சிருக்கான், மூச்சுவிடும் போது டீ சர்ட்ட துறுத்திட்டு ஏறி இறங்குது.. என் கிட்ட வந்து "என்ன சொல்ல வர்றீங்க?" என் மணிகட்டை புடிச்சிகிட்டே கேக்கிறான்.

"ஒண்ணுமில்ல விடு" பார்வைய ஜன்னல் பக்கம் திருப்பிகிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா போச்சு, மருமவபுள்ள துணி மாத்த வீட்டுக்கு போயிருக்கலாம். குழந்தைக எல்லாம் பள்ளிக்கூடத்துல இருந்து களைச்சி போயி வந்திருக்கும்.. அவன் பக்கம் பார்க்காம ஜன்னலுக்கு விட்டத்துக்கும் நடுவால பார்வைய அலையவிட்டேன்.

மனசுக்குள்ளார என்ன என்னமோ ஓடுது. அவன் வழியில நான் எப்பவுமே குறுக்க போனதில்ல, அவன் வாழ்க்கைய அவனே வாழ்ந்துக்க விட்டேன், அவன் முடிவுகள அவனே எடுக்கனும்னு நினைச்சேன். பல பேர் மாதிரி என் வாழ்க்கைய அவன வாழவச்சு பார்க்கனும்னு நினைக்கவே இல்ல நான். என்ன படிக்கிறதுன்னு அவனே தான் முடிவு செஞ்சான், நான் கையெழுத்து மட்டும் தான் போட்டேன், அவனே வேலை தேடிகிட்டான், தப்பான ஒரு ஜோடி கூட தேடிக்கிட்டான். சின்ன புள்ளையா இருக்கும் போது கூட அவன எதிலயுமே தடுத்தது இல்ல, அவன் சேக்காளிகள்ல எவனயாவது புடிக்கலைன்னாகூட, எனக்குள்ளய வச்சுக்குவேன், அவன் கிட்ட சொன்னதே இல்ல. அவன் தப்புகள அவனே தான் தெரிஞ்சு திருத்திகனும்.

"உனக்கு ஞாபகம் இருக்கா.. " பேசனும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு மெதுவா " அப்போ, உனக்கு நான் சைக்கிள் ஓட்ட சொல்லி குடுத்தப்போ.. "

குனிஞ்சு தரைய பார்த்து உக்காந்திருந்தவன், தலை நிமிந்து.. "ம்ம்.. ஞாபகம் இருக்கு, ஒரு நா நீங்க வந்தீங்க.. அப்புறம், நானே தனியா க்ரவுண்ட்டுக்கு எடுத்துட்டு போயி ஓட்ட கத்துகிட்டேனே.." குரல்ல கொஞ்சம் நிறையவே அழுத்தம் இருந்த மாதிரி பட்டுது.

நான் மறுபடி ஜன்னல் பக்கம் பார்வைய திருப்பி, அமைதியாயிட்டேன்.




[pic : http://www.burnside.sa.gov.au]




Friday, September 12, 2008

ஓர் இரவு / ஒரு கேள்வி

"உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்ங்க", ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் மேசையில இருந்து வூட்டம்மிணி தட்டெடுத்துட்டு நகர்ந்ததும் அய்யன் கிட்ட கேட்டேன். ராகி குழாபுட்டும் சுண்டகடல குருமாவும், அவ சமைச்சது, முததடவையா, எங்கய்யனுக்கும் ரொம்ப புடிச்ச ஐட்டம்.., எனக்கும்.

"கேளு" கையத்தொடச்சிகிட்டே கேட்டாரு.

மிச்ச பாத்திரங்கள எடுக்க மறுபடி மேசைக்கு வந்த வூட்டம்மிணிய விலக்க வேண்டி அவசரமா குருமா பாத்திரத்தையும் காலி டம்ளரையும் நகர்த்தி குடுத்தேன். மெலிசா சிரிச்சுகிட்டே வாங்கிட்டு போனா. "கேக்கிறதுக்கு முன்னாடியே சொல்லீறனுங்க, கண்டிசனா சரியான பதில சொல்லோனும்"

" அப்படி என்னத்த கேக்க போற?"

வேகமா தலையாட்டுறேன் "கண்டிசனா சொல்றேன்னு சொல்லுங்க, கேக்குறன்"

கைய தொடச்ச துண்டை மடியில போட்டுகிட்டு நல்லா சாய்ஞ்சு உக்காந்துகிட்டு சரிங்கற மாதிரி தலையாட்டினாரு.

"ரொம்ப நாளாவே கேக்கனும்ன்னு தானுங்க நினைச்சிட்டிருந்தன்.. " கொஞ்சம் தண்ணி குடிச்சிகிட்டேன், "என்னைய பத்தி நிசமாலுமே பெருமையா நினைச்சுக்கறீங்களா...?

....

# 70 [பழைய நினப்பு]



Wednesday, August 13, 2008

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவிஸ்ட்டுகள்

கொஞ்ச நாளா திடீர்ன்னு முளைச்சிருக்கிற இந்த க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டுக [க்ரீன்பீஸ்ன்னா பச்சை பட்டானி தான்னு எல்லாம் கேக்ககூடாது. நான் சொல்றது Green peace Activist' ஓகே.] ரவுசு தாங்க முடியறதில்லைங்க. அவுங்க கொள்கைக எல்லாம் சரிதான், பெரிய விசயம் பேசுறாங்க.. உலகத்தை காப்பாத்தனும்னு சொல்றாங்க.. ரைட்டு, ஒரு பெரிய சலாம் போட்டுறலாம் அதுக்கு. ஆனா இதை சாக்காட்டி வச்சுக்கிட்டு அந்த வேசத்துல இந்த வியபாரிகளுக்கு ப்ரோக்கல் வேல பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க பாருங்க, அது தான் மனுசனுக்கு எரிச்சல குடுக்குது.

லேட்டஸ்ட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிட்டவன் எல்லாம் ஆக்டிவிஸ்ட் ஆயிடரானுக, வேலையிடத்துல தனிசுற்றுக்கு வர்ற வாராந்திரில ஆரம்பிச்சு டெஸ்க்குல போஸ்ட்டர் ஒட்டுற வரைக்கும் இவனுக அலம்பல் ரொம்ப ஓவரா போச்சு. எனக்கு சில சந்தேகம்.. நிசமாவே எலக்ட்ரிக் வண்டிகளால சுகாதரகேடு எதுவும் வராதா என்ன?

1) இதுக ஓடுறதுக்கு கரண்ட் வேணும், அந்த கரண்ட்டும் நிலக்கரியவோ இல்ல இயற்க்கைவாயுவையோ எரிச்சு தான் உருவாக்கறாங்க.. அப்போ அது சுற்றுசூழல பாதிக்காதா. அதுவும் இல்லாட்டி அணுசக்தி, இத பத்தி தான் ஆறு மாசமா ஊரே சிரிசிரியா சிரிக்குதே, அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான்.. நம்மூர்ல பெரும்பகுதி மின்சாரம் தண்ணியில எடுக்கறாங்க, தண்ணின்னா சும்மா வயர்ர தண்ணியில போட்டான்னு எல்லாம் கேக்ககூடாது, அது தாங்க ஹைடல் பவர் ப்ளான்ட். அப்படி கட்டியிருக்கிற உற்பத்தி நிலையம் எல்லாம் சுற்று சூழல அழிக்காம 'தரிசு' நிலத்துல கட்டுனதா என்ன.. அந்த உற்பத்தி நிலயத்த கட்ட இடத்தை குடுத்துட்டு ரெண்டு தலைமுறையா அதுக்கான இழப்பீடும் சரியா கிடைக்காம, அவன் குழந்தைக எல்லாம் ட்ராபிக் சிக்னல்ல நம்ம ஏசி வண்டிய அழுக்காக்கிட்டு சுதந்திர கொடி வித்துட்டு கிடக்கு.. சரி அது வேற கதை.. நம்ம சுற்று சூழம் பாதுகாப்பு பத்தி மட்டும் பேசுவோம்.

2)மின்சாரத்த சேமிக்க அந்த வண்டிகல்ல இருக்கிற பேட்டரி நாளைக்கு அதோட ஆயுசு முடிஞ்சுபோச்சுன்னா என்ன ஆகும், வெளிய தூக்கி போட்டா அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான? எங்க ஆத்தா குடிதண்ணி தொட்டிமேல போயி பேட்டரிகட்டைய வைக்காத உள்ளார விழுந்தா விசம்னு சொல்லும், அந்த பேட்டரிகட்டைகள விட இந்த பேட்டரிக வீரியம் வாய்ஞ்சது.. சக்தியிலயும் சுற்று சூழல மாசு படுத்தறதிலயும்..

3) சரி அந்த கிரகத்தையெல்லாம் விடுங்க.. வீட்டு உபயோகத்துக்குன்னு மானிய விலையில குடுக்கற LPGய உங்க வாகனத்துக்கு போட்டாக்க, அது தப்பு, ஜெயில்ல போட்டுறவோம்னு ஒரு கேவலமான டப்பிங்கோட டீவியில கவர்மென்ட்ல விளம்பரம் குடுக்கறாங்க பார்த்திருப்பீங்க.. அப்படி இருக்கப்போ, வீட்டுக்கு மாணியத்துக அரசாங்கம் தர்ற மின்சாரத்துல வண்டிக்கு சக்தியேத்தி ஓட்டுறது மட்டும் தப்பில்லையா என்ன?

இப்படி மூணு கேள்விய இந்த வாரத்துக்கான் உள்வட்டார வாரந்திரி;ல கேட்டிருக்கேன். பார்ப்போம் இந்த ஆக்டிவிஸ்ட்டுக என்ன சொல்றாங்கன்னு..

பி.கு. : அப்புறம் நீ என்ன மசுருக்கு பேட்டரி ஸ்கூட்டர் வாங்கி வச்சிருக்கேன்னு கேட்டீங்கன்னா? நாலு காசு குறையும்ன்னு ஒரே காரணத்துக்காக தான்.. நான் பெரிய க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டும் இல்ல ப்ளாக் க்ராம் ஆக்டிவிஸ்ட்டோ இல்ல.. சத்தியமா :)

Thursday, June 26, 2008

நாக்கமுக்க

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
தொல வச்சி மேளம் கட்டி,
அடரா அடரா நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

ஒய்யாரம ஊட்டுல கோழிகுழம்பு கொதிக்குது
எலிபெண்ட்டு கேட்டுல கிக்கு மேட்டர் விக்குது
கெல்லீஸு ரோட்டுல புள்ளிமானு நிக்குது
வேட்டையாடி புடிங்கடா..
வேகவச்சி தின்னுங்கடா
எங்கடா இங்கடா.. ஆள விடுங்க தேவுடா

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

யேய்..
குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது
அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி..

எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

கிறுகிறு ராட்டிணம் தலைய சுத்தி ஓடுது
பரபரபர பட்டணம் ஆந்தை போல விழிக்குது
வெள்ளிக்காசு வேணுன்டா கண்ண காட்டு தேவுடா

அடிங்கடா அடிங்கடா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

விறுவிறு மீட்டரு..
இங்கலீசு மேட்டரு
ராத்திரிக்கு குவாட்டரு
விடிஞ்சிருச்சு எந்திரு

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

- Version 2 sung by சின்னபொண்ணு..



மேலும் :
http://24-7frames.blogspot.com/2008/05/4.html
http://naanavanillai.blogspot.com/2008/04/blog-post_20.html

Monday, June 23, 2008

வார இறுதி குறிப்புகள்

05:30 - பஃகிள்ராக் பார்க் உலா
[இவ்ளோ மெதுவா நடக்க காலங்காத்தால அலாரம் வச்சு எந்திருச்சு வரனுமா?
நான் நடக்க வந்தேன்னு யாரு சொன்னா?? ]
06.30 - டைம்ஸ் - கொத்துமல்லி டீ
[இந்த பார்டிக்கு போறவங்க எல்லாம் எப்பவும் ஏன் கன்னத்துலகன்னம் வச்ச்சேங்கிற மாதிரியே போஸ் குடுக்கறாங்க..]
07.30 - கடலோரக்கவிதைகள்
[திருட்டு டிவிடி வாழ்க, இளவரசு'க்கு அதே இயல்பான நடிப்பு அப்பவும்..
படத்துக்காக வெள்ளையடிச்ச வீடு, க்ரேன் ஷாட்ல பல்லிளிக்குது.. ஹிஹி.. ]
09.00 - தோசை வெங்காயசட்னி
[போதுமா?..
போதும்ன்னா சொல்லுவேன்.. நீ ஊத்திகிட்டே இரு..]
10.15 - சவுண்ட் ஆஃப் ம்யூசிக்
[பெண்ணுரிமை #%!@, ஐயம் சிக்ஸ்ட்டீன் கோயிங் செவன்ட்டீன்' என்னம*# இருக்கு இதுல]
12.00 - மை ஃபேர் லேடி
[ஆ...வ்]
14.00 - பருப்புஞ்சாதம், கத்திரிக்கா பொறியல், தயிர், பூண்டு ஊறுகாய்
[அடுத்த தடவை ருச்சி தான் எடுக்கனும் ப்ரியா அவ்ளோ சரியில்ல.. ஊறுகாய சொன்னேன்]
14.30 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள்
15.15 - உண்ட மயக்கம்
15.45 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள் - தொடர்ச்சி
16.30 - இஞ்சிடீ, நேந்திரசிப்ஸ், க்ளாசிக் ரெகுலர்
17.00 - கே.ஆர் பார்க், சிறு உலா, வேடிக்கை.. வேடிக்கை..
[வூட்டுக்காரிய பக்கத்துல வச்சுகிட்டு சைட்டடித்தல்ன்னு சொன்னா பொலிட்டிக்கல்லி கரெக்ட்டா இருக்காது)
19.30 - கடைவீதி, பூக்கடை உலா..
20.30 - ஆந்திராஸ்பைஸ் - சப்பாத்தி - தால் - டபுள்ஆம்லெட்
21.15 - ஃக்ளோரி
[டென்ஷல் வாஷிங்க்டன்'க்காக மீண்டும் மீண்டும்.. He a weak white boy, and beatin' on a nigger make him feel strong]
23.00 - சபாபதி
[இணையம் வாழ்க..
எனக்கு ரோஷம் வந்தால் ஒரு போக்கிலே, அவரை டோன்ட் டாக் சார் என்பேன்..
ஒட்டு ப்ளாஸ்த்திரி கோட்டு போடும் வாத்தி.. ஓயாமல் வாங்கி ஓசி பொடி போடுவதும் ஜாஸ்த்தி]
00.30 - ஏலக்காய் வாழைப்பழம் - சோயாபால் - க்ளாசிக் ரெகுலர்
01.30 - சபாபதி - மீள்பார்வை -ரீவைண்ட் ஃபார்வர்ட் ரீவைண்ட்
xx.xx - (தன்னை மறந்த) உறக்கம்
06.30 - கொத்துமல்லி டீ ராகவேந்தரமட புறாக்கள்
07.30 - ஆரவாரமில்லாத சாலை - நடை
08.15 - காராபாத் - வடா - ப்ராமின்ஸ் காஃபி ஃபார்
[நட்பு கூட்டு சேர்ந்துட்டா மட்டும் பாப்பான் ம்$@#ங்கறீங்க.. ஆனா டிபன் சாப்பிட மட்டும் இங்க கூட்டிட்டு வர்றீங்க.. ]
09.00 - டைம்ஸ் - படுக்கை - எஸ்.பி.பி ஜானகி காதல் பாடல்கள் MP3
[கலாசிபாளயா தெருவோரத்தில் முத்துக்கள்]
12.00 - புத்தகம் - சீ.டிக்கள்- ஒழுங்குபடுத்தல்
[ஒரு பாசாங்கு தான்.. நாங்களும் வீட்டு வேலை செய்வோமில்ல]
13.00 - காமத் பஃகிள்ராக் - ஜோவார்பக்ரெ மீல்ஸ்
[இவ்ளோ வெண்ணைய தேய்ச்சு சோளரொட்டி சாப்பிட்டா எப்படி டயட்டாகும்.. ]
14.30 - ஃபோர்த் எஸ்ட்டேட்
[எத்தனையாவது முறைன்னு மறந்துபோச்சு?]
17.00 - லெமன் டீ - மணல் போட்டு வறுத்த நிலக்கடலை
[நம்ம வீட்டுல இதையே வேற.. சரி.. சரி.. இதுவே நல்லாத்தான் இருக்கு]
17.30 - ராகவேந்தரமட புறாக்கள் - க்ளாசிக் ரெகுலர்
18.00 - தி பைரேட்'ஸ் டைலமா
[நானெல்லாம் இந்த காலத்து இளைஞன் இல்லையா??.. பயங்கிர டைலமாவா இருக்கே..]
20.00 - ராகிதோசை - நிலக்கடலை சட்னி
[அம்மா சுடுறது கொஞ்ச வேற மாதி.. இல்ல இதும் நல்லாத்தான் இருக்கு.. ஹி.. ஹி ]
20.30 - கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை
[எஸ்.பி.ரோடு தெருவோர பைரசிக்காரர்கள் வாழ்க]
21.50 - வாழைப்பழம் - க்ளாசிக் ரெகுலர்
22.10 - சாயாவனம்
[தீ மூங்கிலை பொசுக்கிட்டு இருந்துச்சு.. இனி என்னன்னு தெரியல]
23.xx -