Thursday, February 28, 2008

குன்னக்குடி மச்சான்

வா..
வா..
வா.. வா.. வா.. வாவாவாவா வா..
வா.. வா.. வா.. வாவாவாவா வா..

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி-

--போதையென்பது ஒரு பாம்புவிஷம் தான்...
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம் தான் --

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

வா..
வா..

பொண்டாட்டி .. புள்ளைக.. தொல்லைக இல்லா இடம்
இந்த இடம் தானே..

இந்த இடம் இல்லேன்னா சாமிமடம் தானே

மேஸ்த்த்ரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே

இயக்குனர் யாரு.. அங்க பாரு.. புலம்புராரு
நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே
ஊர தாண்டுனா நடக்க பாதையில்லையே

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

வா..
வா..

அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்கே வந்தா
டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுதுன்னா வெட்டுகுத்து தானே

எங்களுக்கு தண்ணியிலே கண்டமில்ல
எங்களுக்கு ஜாதிமதம் ரெண்டுமில்ல
கட்ச்சிக்கார மச்சி.. என்ன அச்சி.. வேட்டி அவுந்து போச்சி

-- ரோட்டு கடையில மனுசன் ஜாலியப்பாரு
சேட்டுகடையில மனைவி தாலியப்பாரு.. --

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி

--போதையென்பது ஒரு பாம்புவிஷம் தான்...
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம் தான் --

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி
குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..

---
திரைப்படம் : அஞ்சாதே
இசை : சுந்தர்.சி.பாபு

------

இந்த பதிவுக்கும் ரெண்டுநாள் முன்னாடி போட்ட இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.. இல்லவே இல்லை


--
#264


வாழ்க்கை - Progressive compromises



ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால்) ஆனது.

Tuesday, February 26, 2008

பொழப்பத்த @#$^#&

"கொஞ்சம் சீக்கிரமாவே வேலையிடத்தை விட்டு வந்தாச்சு..என்ன செய்ய.. தனியா 'சாப்ட்டு' நாளாச்சு போலாம.." யோசித்து கொண்டிருந்த நொடியில் எதிரில் அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சி அமைதியானது.. பிடி ரோட் தாண்டிபோய்கொண்டிருந்தேன் (வீட்டை பூட்டினது, சாலைய கடக்கும் போது என்னை தாண்டிப்போன நீலதுப்பட்டாவ பத்தியெல்லாம் விலாவரியா சொல்லிட்டு இருக்க முடியாது.. இது ஆன்டனி' டைப் எடிட்டிங் காலகட்டம்).

பஃகிள்ராக் ரோட்டில் விரைந்து எதிரே வரும் வாகணங்கள் இரைச்சலிலையும் மீறிக்கொண்டு கேட்கும் கூட்டுக்குவிரைந்துவிட்ட பறவைகள் கூப்பாட்டுக்கும் முகத்தை மோதும் மெலிதான குளிர்காற்றுக்கும் புன்னகைத்து கொள்கிறேன். லேசாக மணிக்கட்டை சாய்த்ததும் பச்சை விளக்கெரிந்து மணிகாட்டும் என் 'கேசியோ'வில் ஏழை தாண்டிவிட்ட சின்னமுள்ளை பெரிய முள் நெருங்கிகொண்டிருந்தது. "எங்க போயி சாப்டலாம்" யோசிக்க தேவையே இல்லாமல் நியான் விளக்கொளி வரவேற்றது.

'குடீவ்னிங்' சொன்னவன விறைப்பா பார்த்து சல்யூட் அடிச்ச செக்யூரிட்டிய தாண்டி முதல்மாடி கதவை திறந்தால்.. தாம்தூம் சத்தத்துடன் கசகசவென்று கூட்டம். மீண்டும் ஒரே நொடி, சட்டென்று ஒரு வெள்ளுடை சேவகன், இரண்டாம் தளத்துக்கு வழி சொன்னார்.. அவ்ளோ தெளிவா பிரதிபலிக்குதா என் முகம்.. ஊரே 'அமுக்கன்'னு கூப்பிடுற எனக்கு?? இரண்டாம் தளத்தின் வளைவுக்கு முன் நின்று திரும்பி பார்த்தேன்.. வெள்ளுடை சேவகன் எவரையும் காணவில்லை.. "மேஜிக்கல் ரியலிசமா.. ?? இன்னும் சாப்டவே இல்ல, அதுக்குள்ளாரயா"ன்னு எனக்குள் அலுத்து கொண்டேன்.

இரண்டாம் தளம் கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே அமைதியாக இருந்தது. தள்ளி தனிதனித்தீவாக கிடக்கும் மேஜைகள். ஒரு ஓரத்தில் உயரமான மேடையில் 'உதயா'வின் புண்ணியத்தில க்ரேஸிஸ்டார் ரவிச்சந்திரன் யாரோ ஒரு 'மைதாமாவை' கட்டிபுரண்டு கொண்டிருந்தது கண்ணில் பட்டது. நேர்கீழே இரண்டு பொடியன்கள் நின்று பார்த்துகொண்டிருந்தனர். அந்த இடத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளுடை இல்லை, அழுக்குநீளம்.

ஓரமாக ஒரு மேஜையில் என் முதல் சுற்றில் கவனமாக இருந்தேன். நான்கடி தள்ளி ஒரு மேஜையில் இரண்டு பேர், நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் 'சாப்ட்டு' கொண்டிருந்தனர்.. அரை மணி நேரமாக பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, ஆர்டர் தரும் போது கலந்துபேசிக் கொண்டது தவிர. கடமையாக ஒவ்வொரு தம்ளரையும் ஒரே வேகத்தில் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.. ம்ம் குடும்பஸ்த்தர்கள் போல.. வீட்டுக்கு வீடு வாசப்படி..

'எக் புதினா'வை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திரும்பினேன், இடப்புற மேஜையில் ஒரு சற்றே பருத்தவர், முழுக்கையும், தளர்த்திவிடப்பட்ட டையும், லெதர் பேக்கும் முகத்தில் நிறைந்து கிடக்கும் சோர்வையும் பார்த்தால் நாள் முழுதும் சுற்றி அலையும் வேலை போல.. ஒவ்வொரு மிடிருக்கும் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தார், சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மேசை விரிப்ப்பின் அழுக்கை நிமிண்டிக்கொண்டிருந்தார். மதியம் சந்தித்த வியாபாரியையோ, நாளைய டார்க்கெட்டையோ அல்லது ஊரில் இருக்கும் உறவுகளை பற்றிய நினைப்போ என்னவோ.

வகை வகையாக எத்தனை பதார்த்தம் வாங்கினாலும், லெமன் பிக்கிள் சுவை தனிதான். எதிர்மூலையில் விடாமல் பேசிக்கொண்டே இருந்த இருவரும் எழுந்து விட்டனர். அதில் ஒருவர் போகும்முன் மேஜைக்கு மேலும் கீழுமாக தேடியதை பார்த்து நான் மட்டுமல்ல, அவர் கூட வந்தவரும் புன்னகைத்து கொண்டார். 'எதிலையும் ஜாக்கிரதையா இருக்கனும்' என்று படியிறங்கும் போது கூட வந்தவரிடம் கண்டிப்பாக சொல்லுவார் என்று பட்டது. இப்படி மேஜையை புரட்டி பார்துவிட்டு போகிறவர்கள் பெரும்பாலும் அடுத்த தெருத்திருப்பத்தில் லத்தியும் குறிப்பு நோட்டுமாக காத்திருக்கும் காவலரிடம் கண்டிப்பாக கப்பம் கட்டுவார்கள்.

பச்சை வெள்ளிரியும் தக்காளியும் கொஞ்சம் போல குருமிளகும் உப்பும் தூவப்பட்டு, இதற்க்கு காசு இல்லை, இலவசம்.. இருந்தபோதும் நன்றாகவே இருந்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், 'உதயா'வையாவது பார்ப்போம் என்று பார்வையை திருப்பினேன், ஒரு தாடிக்கார கணவான் கோட்சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வெகுவாக 'கேப்'விட்டு சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் மூக்கை தேய்த்து கொண்டிருந்தார் அந்த பெண்ணும் வெட்கபடாவிட்டால் பண்பாட்டு காவலர்கள் வந்துவிடுவார்களோ என்று வராத வெட்கத்தை கைவைத்து மறைத்து கொண்டிருந்தது. பாவம் இயக்குனர் என்று தோன்றியது.

சலித்து போய், உடைத்து வைத்த சோடா பாட்டிலில் பொங்கிக்கொண்டிருக்கும் குமிழ்களில் பார்வையை செலுத்தினேன். லெஹர் சோடாவில் மேலெழும்பும் காற்று குமிழ்கள் எப்பொழுதுமே அழகு தான். ஏனோ எனக்கு பிடிரோட்டில் என்னை தாண்டி போன நீளத்துப்பட்டா ஞாபகம் வந்தது, அவசரத்தில் முகத்தை பார்க்கவில்லை என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மடக்கென்று அடுத்த சுற்றை முடித்தேன். 'பாட்டம்ஸ் அப்'. முடித்ததாக கைகாட்டிவிட்டு தீப்பெட்டு கேட்டு வாங்கிகொண்டேன்.

வாகண இரைச்சல் அடங்கிவிட்ட இரவில் லேசான குளிரில் மெதுவாக சீட்டியடித்தபடி நடந்து வந்த போது என்னவென்று தெரியாமல் 'கோடைகால காற்றே' ஞாபகம் வந்தது.. கூடவே சாந்திகிருஷ்ணா'வின் முகமும். எதற்க்கோ கீழே கிடந்த ஒரு கல்லை வேகமாக உதைததேன், தரையோடு தரையாக தேய்த்து கொண்டு சென்று குவிந்து கிடந்த சருகுகளோடு சத்தத்தோடு ஐக்கியமானது.

துணி மாற்றக்கூட தோன்றவில்லை, சன்ம்யூசிக்கில் வீஜே தொல்லை இல்லாமல் பாட்டு போட்டுகொண்டிருந்தார்கள். மேஜை மீது இன்னும் உயிருடன் என் மடிக்கணினி.. எதுவுமே யோசிக்காமல் திட்டமிடாமல் மடியில் எடுத்து வைத்துகொண்டு உள்ளிட ஆரம்பித்தேன்..



பி.கு.: அப்படி என்னத்த உள்ளிட்டேன்ன்னு தெரியனும்னா இந்த பதிவை மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் :)

Thursday, February 21, 2008

சைக்கிள் கேப்பில் ஏரோப்பிளேன் ஓட்டுதல்

ஊருபக்கம் புகைச்சலுக்காக ஒதுங்கினப்போ 'ஆல்பம்' பார்க்கிறதுக்காக மட்டுமே விகடன் வாங்கிற ஒரு சகா கேட்டான்..
'ஏம் மாப்பு, அன்னைக்கு வச்சிருந்தியே கருப்பு அட்டை போட்ட வேதாள உலகம்'னு ஒரு புஸ்த்தகம், அந்தாளு தான இது'ன்னு..
'ஆமா.. அது வேதாளஉல்கம் இல்ல. ஏழாவது உலகம்'..
'எத்தனவாது உலகமோ.. அந்த புஸ்த்தகத்துல ஒரு பக்கம் கூட புரியல, அதே ஆளு தானா இந்த ரவுசு உட்டுருக்காரு..'ன்னு ஆச்சிரியப்பட்டு போனான்.

மொத்தத்துல ஜெயமோகன் 'கோயினோஸ்ஃப்ரஷ்கி'ல இருந்து 'கோயிஞ்ச்சாமி' வரைக்கும் 'ரீச்' ஆயிட்டாரு :)


சரி அதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.. இந்த பதிவான்னு கேட்காதீங்க, அந்தளவுக்கு எல்லாம் இதுல விசயம் இல்ல.. இந்த கலவரத்துக்கு நடுவால வந்திருக்கிற சாரு கட்டுரை தான் தலைப்புக்கு விளக்கம்..


http://snapjudge.wordpress.com/2008/02/16/jeyamohan-vs-anandha-vikadan-backgrounder-tamil-blogs-mgr-sivaji-et-al/

http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_16.html

http://chenthil.blogspot.com/2008/02/jeyamohan-charu-nivedita.html

http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_9085.html

ம்ஹ்ம்.. இந்த கலவரத்துலயும் உனக்கு ஒரு கிளிகிளுப்பு கேக்குது..
பீ கேர்ஃபுல் ( நான் எனக்கு சொன்னேன்!)