Showing posts with label படங்காட்டுதல். Show all posts
Showing posts with label படங்காட்டுதல். Show all posts

Monday, February 3, 2014

கனவின் கனவே - லூசியா


லூசியா.. வெகுநாட்களாக கிடப்பில் போட்டுவைத்து, நான் சமீபத்தில் பார்த்த, முதன்முதலாக இணையத்தில் தரவிறக்கி பார்த்த, இரண்டாம் முறையும் பார்த்த - ஒரே கன்னடத்திரைப்படம். LUCIA.

கன்னடத்திரைப்படங்களில் தற்போதைய நிலை.. தரம், அவர்கள் எப்படி உன்னதமான சினிமாக்களை அந்தக்காலத்தில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. இன்னும் எவ்வளவு அருமையான படைப்பாளிகள் அங்கே யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள், இந்த படத்தின் கதை எப்படி சென்ற இடத்தில் எல்லாம் நிராகரிக்கப்பட்டது, பின்னர் crowd financing மூலம் எப்படி இந்த லூசியா எடுக்கப்பட்டது.. அதன் மூலம் மற்றவர்கள் (முக்கியமாக தமிழ் சினிமா வெற்றியாளர்கள்) கற்றுக்கொள்ள வேண்டியது என்ன.. இன்னபிற, சமூக -பண்பாட்டு-கலை-அற-ஈனவெங்காயங்கள் எல்லாம் கொண்ட விமர்சனங்கள் நிறைய வந்திருக்கவேண்டும், ஒன்லைனர்கள் தவிர நான் எந்த தமிழிணைய லூசியா விமர்சனங்கள் எதுவும் (இன்னும்) படிக்காததால் சுட்டி கொடுக்க முடியவில்லை..

லூசியா என்ற பெயரே, கொஞ்சம் ஆர்வமாக‘எட்டிப்பார்க்க’ வைத்த பெயர் தான்.. அதற்கு, இலவசமாக இணையத்தில் கிடைத்ததையெல்லாம் இறக்கும்/இரக்கும் வியாதி உச்சத்தில் இருந்த காலத்தில் சப்டைட்டிலும் இல்லாமல் முழுப்படத்தையும் ம்யூடிலேயே பார்த்த ஸ்பானிய ’செக்ஸ் & லூசியா’ திரைப்படத்தில் அந்த ’லூசியா’ எனும் சொல் ஞாபகம் இருந்தது தான் காரணமாக இருக்கவேண்டும்.அதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என்று இந்த படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தெரிந்துவிட்டது. நிம்மதி.

கனவுகள்,கனவுகளுக்குள் கனவுகள், நிகழ்வுகளோட சங்கமிக்கும் கனவுகள் என்று நோலனார் நமக்கு திகட்ட திகட்ட காட்டிய களம் தான்.அத்தகைய பிரம்மாண்டங்கள் எல்லாம் இல்லாமல், அந்தரத்தில் பல்டி எல்லாம் அடிக்காமல், கிடைத்ததில்  கனகச்சிதமாக அடித்து விளையாடியிருக்கிறார்கள். உறக்கமின்றி தவிக்கும் ஒருவன் உறக்கத்துக்காக ‘லூசியா’ என்ற ஒரு தெருவோர வஸ்த்துவை எடுத்துக்கொள்கிறான். ‘Lucid Dream'நிலைக்கு கொண்டு செல்கிறது.அந்த கனவையும் நிகழ்வையும் கனவின் கனவையும் மாற்றி மாற்றி திரையில் நமக்கு எந்த குழப்பமும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் இரண்டு நிமிட நூடில் கருமாந்திரம் போல ஆரம்பமும் முடிவுமற்று அலங்கோலமாய் போய்விட சாத்தியமுள்ளதை அழகாக ஒரு தேர்ந்த பரோட்ட மாஸ்டர் போட்ட முட்டைகொத்து சாப்பிட்டால் எப்படி கொஞ்சம் கூட பரோட்டாவின் மைதா அரூபருசி தெரியாமல், முட்டையும் தக்காளியும், சால்னாவும், குருமிளகும், வெங்காயமும் கண்ணுக்கு தனித்தனியாக தெரிந்தாலும், நாவுக்கு ஒரு சேர சேர்ந்து ருசிக்குமோ அது போல.

கதை? அதெல்லாம் வழக்கம் தான்.

(1)
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டு பெரும்பணத்துடன் அனாதையாக வாழ்ந்து, சினிமா நடிகனான புகழ்பெற்ற பின்னும் உள்ளூர ‘ஆள்கூட்டத்தில் தனியே’ ரேஞ்சில் நிஜ அன்புக்காக ஏங்கும் ஒரு ‘நிக்கி’. அவனுக்கு கிடைக்கும் ஒரு காதல், இழப்பு, விரக்தி.கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்ட ஆந்திரா தயாரிப்பாளர், தமிழ் இயக்குனர், வழியும் சக நாயகி, நிழல் உலக வசூல்கள்.

(2)
சிறு கிராமத்தில் இருந்து வந்து ஒரு மாநகரத்தின் ஓரத்தில் வாழ்ந்துகெட்ட திரையரங்கில் உதிர்ந்துகொண்டிருக்கும் கூரைக்கு கீழ் பார்வையாளர்களுக்கு இருட்டில் உட்கார இடம்காட்டும் ‘டார்ச் போடும்’ வேலையை விசுவாசமாக பார்த்துக் கொண்டு, முதலில் உதாசீனப்படுத்திய சூப்பர்-பேமிலி பிகரை செண்டியாக நடந்து மயக்கி, அவளும் வந்து இவனை கொஞ்சமாவது செல்லுபடியாக்க இங்கிலீசு எல்லாம் கத்துகொடுக்க முயற்சிக்கும் செல்வராகத்தனம் பூசிய விக்கிரமன் பட நாயகன் போல் ஒரு ‘நிக்கி’.

ரெண்டு லைனுமே, தாழ்வுமனப்பான்மையில் காலங்காலமாக தவித்துக்கொண்டிருக்கும் ஒரு சாமன்ய ரசிகனுக்கு அப்படியே லட்டு மாதிரி.. கூட்டமா போயி, இருட்டில விசிலடிச்சு, காகிதத்த பறக்கவிடு மனசுகுள்ளார பீலிங்க்சோட, மகிழ்ச்சியா படம் பார்த்துட்டு வெளிய வர வைக்க முழு காரண்டியான களம், இதை வச்சுகிட்டு எப்படிய்யா.. பெஸ்டிவல், விருது எல்லாம், அது தான் டெக்னிக்கி :) விஞ்ஞானம்.!!

இதில் ஒருவனின் கனவில் இன்னொருவன், அவன் கனவில் இவனா, இவன் கனவில் அவனா என்று பார்வையாளனை அப்படியே மிதக்கவிட்டு, சுவாரஸ்யமா முடிச்சை இருக்கி.. அழகா கொஞ்சம் சுமாராவே அவிழ்க்கிறார்கள். இந்த இரண்டு கனவுக்கு நடுவில் ஒரு குற்றம், போலீஸ், தனியார் டிடெக்டிவ், புலனாய்வு, ஆஸ்பத்திரி .. இன்னும் சில.

இப்படி ஒரு படத்துக்கு முதுகெலும்பு.. எது படத்தொகுப்பாளர் தான். கச்சிதமா வெட்டி ஒட்டியிருக்கார். நாயகன் சதீஷ் - அட்டகத்தி படத்தில் தினேஷை பிடித்த அளவுக்கு இவரையும் பிடித்தது... வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.. இரண்டு கலரில், கனவிலும் நினைவிலும் வருபவர் வேறு வேறோ என்று சில நிமிடங்கள் நினைக்குமளவுக்கு அற்புதமாக நடை
பாவனை பேச்சு என்று அனைத்திலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். எதாவது நல்ல தியேட்டர், ஆர்ட் ஹவுஸ் என்று சிக்கி பிழைத்துகொள்ள வேண்டும்.. வேறு என்னத்த சொல்ல. நாயகி ஸ்ருதி - அழகு, பிடிஎம் காபிடே’யில் கூட இதே போல்.. சரி வேண்டாம், அது நம் பர்ஸனல் :)  கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம். அல்லது பின்னர் வசனங்களில் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக செய்தார்களோ என்னவோ, சில இடங்களில் உதட்டுக்கு ஒட்டாமல் ஓடியது. சப்டைட்டில் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஓவர் தான் என்றாலும்.. சொல்ல வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறதே.

நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்காம், வாங்க இருக்காம்.. ம்ம் தியேட்டரில் பார்த்திருக்கலாம். விட்டாச்சு. அதுக்கு பரிகாரமா இந்த இயக்குனரின் அடுத்த படத்தை அரங்கத்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்தாயிற்று.. பார்க்காதவர்கள் இறக்கி பார்க்கவும். அல்லது 5$ கொடுத்து பார்க்கவும் நல்ல ப்ரிண்ட், சப்டைட்டிலோடு கிடைக்கும். எறக்கசெலவழித்த அலைத்தொகுப்புக்கும் பார்க்க செலவழித்த நேரத்துக்கும்.. இதை எழுதத்திருடிக்கொண்ட நேரத்துக்கும் சேர்த்தே..
**பைசா வசூல் - மீட்டர் வட்டியுடன்**




Tuesday, February 17, 2009

ஒரு கணம்

விழிப்பு தட்டிவிட்ட வாரயிறுதி அதிகாலையில்
பிடித்த கட்டங்காபியும் மெல்லிசையுமாய் சிலநேரம்

நேரம் பார்க்காமல் காட்டோடையில் மூழ்கி திளைத்து 
ஈரம் சொட்ட சொட்ட கரையில் அமர்ந்து சிலநேரம்

மின்சாரமில்லா மழைநேரத்து மாலையில்
வாசலில் தெறிக்கும் சாரலோடு தனிமையில் சிலநேரம்

உறக்கமில்லா நெடுந்தூர இரவு பயணத்தில்
ஆளில்லா அத்துவான சாலையோரங்களில் சிலநேரம்

கலோரி கணக்கு பார்க்காமல் மனசு நிறைய உண்டுவிட்டு 
கொழுந்து வெற்றிலையோடு தென்னந்தோப்பில் சிலநேரம்

வெட்டிப்பேச்சும் போதையுமாய் போகும் நட்புகூட்டம்
சட்டென்று அமைதியாகி மெளனம் நிறைக்கும் சிலநேரம்

காமம் கொண்டாடி கரைந்து களைத்துவிட்ட பிறகு
சாளரம் வழியே நட்சத்திரங்களை பார்த்தபடி சிலநேரம்

இப்படி ரசித்து புகைத்த நேரங்கள் பல உண்டு

இத்தனையையும் விஞ்சி விட்டது 

நேற்று

அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்.

Tuesday, October 30, 2007

ஜகதி'யின் நவரசம்



உதயனானுதாரம் - படத்துல இருந்து ஒரு காட்சி. சமீபத்தில சிவா இந்த படத்தை பத்தி எழுதியிருந்தாரு.

படத்துல சூப்பர்ஸ்டார் ஆகிற ராஜப்பன் (எ) சரோஜ்குமார்'க்கு அவரோடடான்ஸ் மாஸ்டர் கம் மேனேஜர் 'பஷி'யா வர்ற ஜகதி நடிப்பு பத்தி சொல்லிகுடுக்கற மாதிரியான ஒரு காட்சி.. ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஒன்னும் சரியா வரலை.. இன்னைக்கு ஒரு ஃபார்வார்டா இந்த காடசி யூட்யூப்ல கிடைச்சுது. போட்டாச்சி.. :)

நவரசம் கேள்வி பட்டிருப்பீங்க.. இது ஜகதி கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா ரசம்' காட்டியிருப்பாரு.

பி.கு : ஜகதி - கவுண்டமனி'க்கு அப்புறம் நான் அதிகம் விரும்பற காமெடியன்.

Tuesday, September 25, 2007

ஆக்கிரமிப்பு

நம்மூர்ல தான் ஏரி குளம் எதுவும் விட்டுவைக்காம ஆக்கிரமிக்கறாங்கன்னா.. பாங்காக்'ல இன்னும் ஒரு படி மேல போயிட்டாங்க..

நம்மாளுக ரயில்வேடேசன், ப்ளாட்பாரம்னு தண்டவாள ஓரம்னு எவ்ளோ தூரம் ஆக்கிரமிச்சாலும்.. இதுக்கு ஈடு ஆகாது..




நிசமா பொய்யான்னு தெரியல.. ம்ம்.. கில்லாடிகளா இருக்காங்க..

--
#246

Thursday, September 6, 2007

நிலவு


பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

பூவிலே ஒரு பாய் போட்டு
பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல்
பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத சாபம்
தனிமையே போ
இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு


காவலில் நிலை கொள்ளாமல்
தாவுதே மனது
காரணம் துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப் போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

--

மேல போட்டிருக்கிற 'நிலா' படம் நம்ம வூட்டம்மிணி போன வாரம் எடுத்தது.. கீழ போட்டிருக்கிற பாட்டு 1986'ல மெளனராகம் படத்துக்கு கவிஞர் வாலி எழுதினது :)


நீ என்ன செஞ்சேன்னு கேக்கிறவங்களுக்கு.. 'கேமிரா வாங்கி குடுத்திருக்கேன்.. இப்போ பதிவு போட்டிருக்கேன்' பத்தாதா?

--
#244

Tuesday, August 28, 2007

Stressbuster

பெட்ரமாக்ஸ்சே தான் வேணுமா? இந்த பந்தமெல்லாம் புடிச்சுக்க குடாதா?



------------------------

கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு, அவனுகளுக்கு பொறாமைடா..

அக்காங்ண்ணே..!!






--
#243

Monday, July 23, 2007

கிரீடம்!



விளையாடு விளையாடு..

ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு..



(உங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்யா இருக்கு.. ஆனா ப்பினிஷிங் சரியில்லையே!)

--
#239

Thursday, July 19, 2007

நான்.. நான் நானும்

எல்லாரும் பொகைப்படபோட்டியில கலந்துக்கறாங்க.. நாம மட்டும் ச்சும்மா இருந்தா என்னத்துக்கு ஆகறது..

நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன் :)

இதோ என் பங்குக்கு..






ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. இது என்னமோ 'நடுவர்'க தேர்ந்தெடுக்கிறதாம்.. இதுல நம்ம ரெட்ஃபயர் வேற என்னமோ சலுகை எல்லாம் குடுத்திருக்காரு.. ம்ம் அதுக்காக..
போட்டின்னு வந்துட்டா, நாங்க டவுசர் கழன்டாலும் பரவாயில்லைன்னு ஓடி காட்டிருவமில்ல :)


மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்.

---
#237

Friday, July 13, 2007

மன்சூர்..!!

இப்படி ஒரு போஸ்ட்டர் அடிக்கிற லொல்லு எவனுக்கும் வராது.. :)

அய்யா சாமீ முடியல..



வாரக்கடைசியில சன்ம்யூசிக்'ல மன்சூர் யாராவது பார்த்தீங்களா... ரொம்ப ஓவர் மன்சூர்.. போன் செய்யறவன் கிட்ட.. ஆமா உனக்கெல்லாம் வேலையே இல்லையா சினிமாக்காரன் டீவி'யில வந்தா கூப்பிட்டா நல்லாயிருக்கியான்னு கேக்கற. இல்ல அழகா ஒரு புள்ளை இருந்தா கூப்பிட்டு கல்லை போடுற, எதாவது வேலை வெட்டி இருக்கா இல்லையா'ன்னு இந்தாளு கேக்க கூட நின்ன தொகுப்பாளர்.. பாவம்.. சிரிச்சு சிரிச்சு சமாளிச்சாரு.. :)

Thursday, July 5, 2007

அன்னமே, மது கிண்ணமே!











அன்னம் போல ஆடையணிஞ்சு
அழகாக வந்தாயே.. இப்படி
அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

--
#233

Tuesday, July 3, 2007

மழை!






செய்தி 1: கோவைமாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
(அதான் மழை எல்லாம் நல்லா பேயுதே, ஊருலயே இருந்திடறது'ங்கிற சத்தம் இந்த வருசம் கொஞ்சம் கூடுதல் ஆகலாம்)

செய்தி 2: பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிடும்.
( ஏற்க்கனவே PAP திட்டத்தை ஒத்தக்கால் மண்டபம் வரை இழுத்துட்டீங்க, இதைய சாக்காட்டி இன்னும் இழுத்துறாதீங்கப்பு, அப்புறம் பாசனமண்டலத்துல வர்ற எல்லாருக்கும் உயிர் தண்ணி மட்டும் தான் விடமுடியும்)

செய்தி 3: வழக்கம் போல மழைக்காலத்தில் எங்கய்யன்னோடா பாட்டுக்கு நடுவே சொல்லாம கொள்ளாம 'மழையில் ஒரு மலைசவாரி' இந்த தடவையும் செஞ்சாச்சு
(கூடவே கட்டுனவ பாட்டும் இந்த தடவை கூடுதல் சேர்த்தி)

செய்தி 4: எங்க கிட்டயும் ஒரு டிஜிட்டல் கேமிரா சும்மாவே இருக்குது:)
(ஹி.ஹி)

(படங்களை அமுக்கி பெருசா பார்த்துக்கோங்க)

--
#232

Tuesday, May 15, 2007

சுகமோ சுகம்..

மழையை பார்ப்பதும் சுகம்
மழையில் நனைவதும் சுகம்
மழையை பற்றி எழுதுவதும் சுகம்
மழையை பற்றி பேசுவதும் சுகம்
மழையை படம் புடிப்பதும் சுகம்..



வெளிய வெய்யில் போட்டுதள்ளுற சோம்பலான ஒரு விடுமுறையில மதியத்துக்கு வூட்டம்மிணி வச்ச மோர்க்குழம்பும் வெண்டக்காய் பொரியலும் தக்காளிரசமும் ஒரு கட்டு கட்டிட்டு மூணுபக்கமும் தலைகானி வச்சுகிட்டு அரை மயக்கத்துல எந்த மொழின்னே தெரியாம ஒரு பாடாவதி படத்தை பார்த்துக்கிட்டு இருக்கும் போது லேசா இருட்டி மண்வாசனைய கிளப்பி சட்டுன்னு பெருமழையாகிற இந்த கோடைமழை சுகமோ சுகம்..




அதுக்கு அப்புறம் வந்த வெங்காய பக்கோடா வாசம் இன்னும் சுகம்.. :)

--
#226

Monday, April 23, 2007

ஒரு வார இறுதி

ஆறு பைக், பதினோரு தடியனுக, சூரிய உதயத்துல தொடக்கம், 200 கிமீ, நல்ல வெயில், அளவான அருவி, கொஞ்சமா மரங்கொத்தி, சூடா மசாலாவில வறுத்த மீன், கழுத்து ஆழத்துக்கு ஆத்துல தேங்கி போகும் தண்ணியில ஆட்டம், கஞ்சி வடிச்ச சோறு, குருமிளகும் நல்லெண்ணையும் மிதக்கிற கோழிச்சாறு, காட்டுமரத்தடியில தூக்கம்..


வெய்யில் இறங்குது, லேசா தூறல், தூறலோட அருவி குளியல், சுள்ளி போட்டு தணல், பாக்கெட் மசாலா போடாத அக்மார்க் கிராமத்து வறுவல், ஐஸ்க்யூப் செவனப் வகையெல்லாம் இல்லாம ஆத்து தண்ணி கலந்த கருப்புவெள்ளை, ப்ளேயர்ல 'ஆத்தாடி பாவாடை..', வெளி ஆள் யாரும் இல்லாத தைரியத்துல வெக்கம் விட்டு கொஞ்சம் ஆட்டம், நாலுகிலோமீட்டர் தள்ளி போயி வாங்கிட்டு வந்த சுத்து பரோட்டா, தேங்காயும் பட்டையும் அரைச்சு ஊத்தின குழம்பு, அஞ்சு பேருக்கு மிச்சம் இருந்த ரெண்டே ரெண்டு 'ராஜா'....

பத்துக்கு பத்துல அளவுல அம்பதுஅடி உயரத்துல கண்காணிப்பு கோபுரத்துல தூக்கம், அஞ்சரை மணிக்கெல்லாம் உறக்கம் கலைச்சு விட்ட பறவைக சத்தம், நடுவால சேர்ந்த ரெண்டு காட்டு ஓடைய கடந்து ரெண்டுமணி நேரம் அத்தங்கரையோரம் நடை, பாறை மேல் சூரியகுளியல் நடத்திட்டு இருந்த முதலை, ஆறு கிமி தள்ளி வந்து இருவத்து ரெண்டு குடும்பம் குடித்தனம் செய்யுற ஒரு கிராமத்துல சூடா இட்லியும் கதம்பசாம்பாரும், வளைஞ்சு வளைஞ்சு ஓடுற மலைப்பாதையில மறுபடி பயணம், நடுவால கறிசோறும் தாளிச்ச மோரும், சூரிய அஸ்மனத்துக்கு முன்னாடி வூடு , சுடு தண்ணி குளியல், கொஞ்சமா உப்புமாவும் பாலும், நீண்ட தூக்கம்..

அதுக்குள்ளாரயா ஒரு வார இறுதி முடிஞ்சிருச்சு???








--
#223

Tuesday, November 28, 2006

என் வீட்டு தோட்டத்தில



சும்மா, பிரபலமான பாட்டுங்கிறதால 'என் வீட்டு தோட்டத்தில்'ன்னு தலைப்பு வச்சுட்டேன்.. நிஜத்துல இது 'என் தோட்டத்து வீட்டில்' எடுத்த படம்.. எத்தனை விதமான வண்ணங்கள்ல பூத்தாலும் செம்பருத்தி அழகு.. அதுவும் காலைப்பனித்துளியை தாங்கி நிக்கிற செம்பருத்தி.. அழகோ அழகு..

ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)

oOo

செம்பருத்தியோட சம்பந்தப்பட்ட செல்வரா'ஜோட ஒரு பழைய பதிவு.
நம்ம தோட்டத்துல செவ்வந்தியும் உண்டு.. :)


--
#214

Monday, November 13, 2006

முகூர்த்த போட்டோ


கல்யாணத்துக்கு நாம காசு குடுத்து ஒருத்தர போட்டோ புடிக்க வரச்சொன்னா, அவரே நாலு ஸ்டில்கேமிரா, மூனு மூவிகேமிரா'ன்னு வந்து சுத்தி நின்னு ஒரு வழி பண்ணிட்டாருங்க, இது பத்தாதுன்னு, நம்ம சகாகூட்டம் வேற 'வந்திறங்கும்' போது கொண்டு வந்த சைபர்ஷாட்'ட்டும், கேஸியோ'வயும் தூக்குட்டு சுத்தி நின்னு பாரா காத்துட்டாங்க.. பாவம்.. கிட்ட வர முடியாத ஒரு 'ஜார்கண்ஃட்' மாநிலத்து சகா எடுத்த படம் இது.. எடுத்ததோட மட்டுமில்லா, நம்ம வேலையிடத்துல பெருசா அச்செடுத்து ஒட்டி வேற வச்சுட்டாரு.. எல்லாம் ஆர்வக்கோளாருல நடக்கிறது.. :)

-00--

உடுமலைப்பேட்டை கொல்லம்பட்டரை ரோட்டுல மூணு அடிக்கு தண்ணி ஓடி இந்த 72 வருசத்துல நான் பார்த்ததேயில்லைன்னு நம்ம அம்மிணியோட சின்ன அப்பாரு ஒரு வாரமா, ஓயாமா சொல்லிகிட்டே இருந்தாருன்னா பாருங்க..
அந்தளவுக்கு வரலாறு காணாத மழைக்கு நடுவால, வெள்ளமா ஓடுற தண்ணியில சிக்கிகிட்ட மூணு வண்டிய, பட்டு வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு வெளிய எடுத்து, 'மாப்ள அந்த தண்ணியிலயும் நறுவுசா காரோட்றார், அவருதான் பெரிய வண்டி மூணையும் அலுங்காம தண்ணியில ஓட்டிட்டு வந்தாருன்னு'னு ஒரு பெருசு புகழுரைக்க பக்கத்துல நின்னுட்டிருந்த சகா 'ஏம்மாப்பு, அவரு சொல்றது எந்த தண்ணி?'ன்னு காதோரமா கேட்டத கண்டுக்காம ஓடிப்போயி துணிமாத்திட்டு, வெளியில மழையடிக்கறதால உள்பக்கமாவே குவிஞ்சுட்ட கூட்டத்துல மண்டபமே நிறைஞ்சு கிடக்க, 'மாப்ளைக்கு வழிஉடுங்கப்பா, அவர் வராட்டி அப்புறம் கல்யாணம் எப்படி நடக்கும்னு' கவுண்டமனி ரேஞ்சுக்கு கூட்டத்தை விலக்கி, சாயங்காலம் அஞ்சுல இருந்து அஞ்சரைக்குள்ளார மண்டபத்துக்குள்ள வர வேண்டியவன, ஒரு வழியா ஏழரை மணிக்கு மண்டபத்துல கொண்டு போயி சேர்த்தாங்க... அப்புறம் உருமால் கட்டுசீருக்கு உக்காந்தப்போத்தான் மழைவிட்டுது..

அப்புறம் எல்லாம் வழக்கப்படிதான்.. அணைத்தும் நலமாகவே நடந்தது.. நேரில் வந்தும், தொலைப்பேசியில் அழைத்தும், தந்தி அடித்தும், ஈ-வாழ்த்து அனுப்பியும், மனதார வாழ்த்திய அனைவருக்கு.. நன்றிகள் பல..

--
#211

Monday, August 7, 2006

படக்குறிப்பு

வீணாப்போன ஒரு ஞாயித்துகிழமை சாயங்காலத்தை பத்தின படக்குறிப்பு..


விஷால்
(தாமிரபரணி நல்ல விலைக்கு போயிருக்குன்னு பேசிக்கறாங்க, அதுவும் பூஜை போட்ட அன்னைக்கே, தமிழ்நாடு பூராவும் வித்துபோச்சாம்.. இப்படி இன்னும் ஒரு படம் செஞ்சீங்க.. அப்புறம் அவ்வளவு தான்.. 'ஆதி'யே 'பேதி'யாக்கிடந்தது தெரியும் தான.. 'நான் சாணக்கியன் இல்லடா சத்ரியன்'ன்னு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச பார்க்கரீங்க.. ம்ம் நடத்துங்க.. வடக்கத்திகாரரா இருந்தாலும், 'நானும் மதுரக்காரண்தாண்டா'ன்னு சவுண்ட் குடுக்கும் போதெல்லாம மண்ணின் மைந்தன் மாதிரித்தான் இருக்கீங்க.. கொஞ்சம் கவனம் சாமி.. )

வடிவேலு
(நல்லாத்தான போயிட்டிருந்ததீங்க.. ஏன் திடீர்ன்னு இப்படி ஆம்பிளை சோடா, பொம்பிளை சோடான்னு, சூப்பர்ஸ்டார் மாதிரி சந்திரமுகி வழியில.... ம்ஹும் ஒன்னுஞ்சரியில்ல, இதுல ஒரு சோலோ குத்தாட்டம் வேற, நல்லதுக்கில்ல கைப்பு.. நல்லதுகில்ல)

மனோஜ்.கே.ஜெயின்
(கம்பீரமான மனோஜை சமீப காலத்துல இந்தளவுக்கு வெட்டியா யாருமே காமிக்கலைங்க. தமிழ் படத்துல கொஞம் துட்டு கூட தர்றாங்கன்னு நம்ம 'மல்லு' ஆளுக இந்த மாதிரி காமெடியெல்லாம் பல்லை கடிச்சுட்டு நடிச்சு குடுக்கறதா கேள்வி..)
'SS ம்யூசிக்' ஷ்ரேயா
(தேவையா அம்மணி உனக்கு, எல்லாம் கலி காலம்.. எவ்வளவு அழகா ஒரு இத்துனூன்டு டவுசரை போட்டுகிட்டு கலக்கிட்டு இருந்தீங்க, இதுல தாவணி எல்லாம் கட்டிகிட்டுடு, கண்ணை எல்லாம் உருட்டி, 'ஏய் இஸ்க்கு,... டேய் மாப்ளை'ன்னு சவுண்ட் எல்லாம் குடுத்து பார்க்கரீங்க, ஆனாலும் ம்ஹும்.. ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலையே..)

IM. விஜயன்
(கேரளா கால்பந்து விளையாட்டு வீரர், பாவம் ஒழுங்கா புட்பால் விளையாடி நல்ல பேரோட இருந்தவர கூட்டிட்டு வந்து நடிக்க வச்சு சொதப்பியிருக்காங்க)

ரீமாசென்
(உன்னைய போயி குத்தம் சொல்லுவனா தாயி.. உங்க வேலைய நீங்க திறம்பட செஞ்சிருக்கீங்க.. ம்ம்.. நமக்குதான் மனசு கெட்டுபோகுது உன்னைய பார்க்கையில )
டைரக்டர் தருண்கோபி
(சண்டைக்கோழி மாதிரி ஒரு படம்ன்னா ரைட்டு, அதுக்காக அச்சு அசலா அதே மாதிரியா இருக்கனும்.. ம்மஹும் இப்படியும் சொல்ல கூடாதுங்க, அப்புறம் அது சண்டைக்கோழி படத்துக்கு அசிங்கம். முதபடத்துலயே இப்படி சொதப்பிட்டயே தலைவா.. )

ம்யூஜிக் யுவன்சங்கராமில்ல.. வெளிய வரும் போது போஸ்டர்ல பார்த்து தான் தெரிஞ்சுது..
பங்கு அந்த போலீஸ்காரரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குதே.. 'அட நம்ம பானுசந்தர்ப்பா'.. மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு இதெல்லாம் நடிச்சாரே அவரு.. என்னாங்கடா இது, அந்தாளுக்கு ஒரு ஓபனிங்க் க்ளோசப் கூடவா வைக்காம விடுறது்.. என்னா படம் எடுத்திருக்கானுக..

அடபோங்கப்பா.. ஞாயித்துகிழமை சாயங்காலம் அப்படியே நாலு பேரு கூடுற எடத்துக்கு ஒரு அழுக்கு ஜீன்ஸை போட்டுகிட்டு போயி நின்னு சாகுபடிக்கு வாய்ப்பு தேடாம நல்ல புள்ளையா இங்கிட்டு வந்தா.. திமிராமுல்ல திமுரு...

--
#196