Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia 

Wednesday, August 13, 2008

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவிஸ்ட்டுகள்

கொஞ்ச நாளா திடீர்ன்னு முளைச்சிருக்கிற இந்த க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டுக [க்ரீன்பீஸ்ன்னா பச்சை பட்டானி தான்னு எல்லாம் கேக்ககூடாது. நான் சொல்றது Green peace Activist' ஓகே.] ரவுசு தாங்க முடியறதில்லைங்க. அவுங்க கொள்கைக எல்லாம் சரிதான், பெரிய விசயம் பேசுறாங்க.. உலகத்தை காப்பாத்தனும்னு சொல்றாங்க.. ரைட்டு, ஒரு பெரிய சலாம் போட்டுறலாம் அதுக்கு. ஆனா இதை சாக்காட்டி வச்சுக்கிட்டு அந்த வேசத்துல இந்த வியபாரிகளுக்கு ப்ரோக்கல் வேல பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க பாருங்க, அது தான் மனுசனுக்கு எரிச்சல குடுக்குது.

லேட்டஸ்ட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிட்டவன் எல்லாம் ஆக்டிவிஸ்ட் ஆயிடரானுக, வேலையிடத்துல தனிசுற்றுக்கு வர்ற வாராந்திரில ஆரம்பிச்சு டெஸ்க்குல போஸ்ட்டர் ஒட்டுற வரைக்கும் இவனுக அலம்பல் ரொம்ப ஓவரா போச்சு. எனக்கு சில சந்தேகம்.. நிசமாவே எலக்ட்ரிக் வண்டிகளால சுகாதரகேடு எதுவும் வராதா என்ன?

1) இதுக ஓடுறதுக்கு கரண்ட் வேணும், அந்த கரண்ட்டும் நிலக்கரியவோ இல்ல இயற்க்கைவாயுவையோ எரிச்சு தான் உருவாக்கறாங்க.. அப்போ அது சுற்றுசூழல பாதிக்காதா. அதுவும் இல்லாட்டி அணுசக்தி, இத பத்தி தான் ஆறு மாசமா ஊரே சிரிசிரியா சிரிக்குதே, அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான்.. நம்மூர்ல பெரும்பகுதி மின்சாரம் தண்ணியில எடுக்கறாங்க, தண்ணின்னா சும்மா வயர்ர தண்ணியில போட்டான்னு எல்லாம் கேக்ககூடாது, அது தாங்க ஹைடல் பவர் ப்ளான்ட். அப்படி கட்டியிருக்கிற உற்பத்தி நிலையம் எல்லாம் சுற்று சூழல அழிக்காம 'தரிசு' நிலத்துல கட்டுனதா என்ன.. அந்த உற்பத்தி நிலயத்த கட்ட இடத்தை குடுத்துட்டு ரெண்டு தலைமுறையா அதுக்கான இழப்பீடும் சரியா கிடைக்காம, அவன் குழந்தைக எல்லாம் ட்ராபிக் சிக்னல்ல நம்ம ஏசி வண்டிய அழுக்காக்கிட்டு சுதந்திர கொடி வித்துட்டு கிடக்கு.. சரி அது வேற கதை.. நம்ம சுற்று சூழம் பாதுகாப்பு பத்தி மட்டும் பேசுவோம்.

2)மின்சாரத்த சேமிக்க அந்த வண்டிகல்ல இருக்கிற பேட்டரி நாளைக்கு அதோட ஆயுசு முடிஞ்சுபோச்சுன்னா என்ன ஆகும், வெளிய தூக்கி போட்டா அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான? எங்க ஆத்தா குடிதண்ணி தொட்டிமேல போயி பேட்டரிகட்டைய வைக்காத உள்ளார விழுந்தா விசம்னு சொல்லும், அந்த பேட்டரிகட்டைகள விட இந்த பேட்டரிக வீரியம் வாய்ஞ்சது.. சக்தியிலயும் சுற்று சூழல மாசு படுத்தறதிலயும்..

3) சரி அந்த கிரகத்தையெல்லாம் விடுங்க.. வீட்டு உபயோகத்துக்குன்னு மானிய விலையில குடுக்கற LPGய உங்க வாகனத்துக்கு போட்டாக்க, அது தப்பு, ஜெயில்ல போட்டுறவோம்னு ஒரு கேவலமான டப்பிங்கோட டீவியில கவர்மென்ட்ல விளம்பரம் குடுக்கறாங்க பார்த்திருப்பீங்க.. அப்படி இருக்கப்போ, வீட்டுக்கு மாணியத்துக அரசாங்கம் தர்ற மின்சாரத்துல வண்டிக்கு சக்தியேத்தி ஓட்டுறது மட்டும் தப்பில்லையா என்ன?

இப்படி மூணு கேள்விய இந்த வாரத்துக்கான் உள்வட்டார வாரந்திரி;ல கேட்டிருக்கேன். பார்ப்போம் இந்த ஆக்டிவிஸ்ட்டுக என்ன சொல்றாங்கன்னு..

பி.கு. : அப்புறம் நீ என்ன மசுருக்கு பேட்டரி ஸ்கூட்டர் வாங்கி வச்சிருக்கேன்னு கேட்டீங்கன்னா? நாலு காசு குறையும்ன்னு ஒரே காரணத்துக்காக தான்.. நான் பெரிய க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டும் இல்ல ப்ளாக் க்ராம் ஆக்டிவிஸ்ட்டோ இல்ல.. சத்தியமா :)

Friday, April 25, 2008

ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.


"எல்லா ரிலிஜியனும் பழசாயிடுச்சு, எல்லாமே ஒரு மாதிரி பழைய சம்பிரதாயத்த வச்சுகிட்டு.. ஒரு கூட்டத்தோட கையில.. மோனோபாலியா போச்சு.. பேசாம நம்ம.. புதுசா ஒரு ரிலீஜியன் ப்ரபோஸ் செஞ்சிருவோம்.. ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.. புடிச்சவங்க யாரு வேணும்னானுல் சேரலாம்.. எல்லாரும் சேர்ந்து சரியான நெறிமுறைகளை சொல்லுவோம்.. ஒரு ப்ரெயின்ஸ்ட்ராமர் மாதிரி ரெகுலரா வச்சு ரீஃபைன் பண்ணிட்டே போவோம் எப்படி.. !"


காலங்காத்தால ஆறரை மணிக்கு ஒருத்தன் கைபேசியில கூப்பிட்டு இப்படி சொன்னா, நீங்க என்ன செய்வீங்க?..

நான் என்ன செஞ்சனா..?

"இதுக்கு தான் நைட்டே சோடா நிறையா ஊத்திக்கோ ஊதிக்கோன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. தங்கச்சி எந்திருச்சிருந்தா சுடுதண்ணி விளாவிவச்சுட்டு சூடா ஒரு லெமன்கட்டன் சாயவோட ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பச்சொல்லிட்டு மறுபடி இறுக்கமா போத்தி தூங்கு மாப்ள"ன்னு சொல்லிட்டு நம்ம அம்மணி குடுத்த லெமன் கட்டன் சாயாவோட பால்கனியில போயி கொஞ்ச நேரம் காத்தார நின்னேன்..

'சாப்டும்' போது கண்டதையும் படிச்சுட்டு பேசாதீங்கடான்னா எவன் கேக்குறான்.. இப்படி நமக்கு காலங்காத்தால வெறி ஏத்தறானுக..

--
#266

Wednesday, December 19, 2007

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!


இன்றும் உன்னை மனதார விரும்புகிறேன்..
சிலநேரங்களில்...
உன்னுடன் சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பது எப்படி இருந்திருக்குமென்று எண்ணி வியக்கிறேன்.

ஒரு முறை ஒரே முறை 'நீ'யும் 'நானு'ம் என்பதை விட்டு மனம்திறந்து பேசியிருக்கலாம்.
ஆனால்,
நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த வெறுப்பு அதை செய்ய விடவில்லை.
இளரத்தம்.. கொஞ்சம் முரடனாய்தான் இருந்தேன்.
இன்னும் அந்த மிச்சம் இருக்கிறது.

என்னை முழுவதுமாக உன்னிடம் கொடுத்தேன், உன் அன்பினால் என்னை பாதுகாப்பாய் என்று,
உன்னை நம்பியதற்க்காக வருத்தபட வைத்தாய்,
கண நேரத்தில்
நம் வாழ்க்கையை சிக்கலாக்கினாய்.

நீயும் உன் அம்மாவும் நலம் என்று அறிந்தேன்.. யாரோ சொன்னார்கள்,
நீ மிகவும் சந்தோசமாக நல்ல வேலையில நல்ல முறையில் இருப்பதாக.
எனக்கு இன்னும் சந்தேகமுண்டு,
நானில்லாமல் நீ சந்தோசமாக இருப்பாயா என்ன?
தினம் தினம் உன் வாழ்க்கையில் நான் இல்லாமல், தனிமையில்..?

என்னை தவிக்கவிட்டிருக்கிறாய்..
ஓடவிட்டு
அலையவிட்டு,
மனம்குறுகச்செய்து..
நீ எக்காளமிட்டு கொண்டிருப்பாய்..
உள்ளே 'ஆண்பிள்ளை' கொதித்தெழுவான்..வெளியே புன்னகைப்பேன்..
நீ செய்த அத்தனையும் வெறுத்தேன்..
ஆனால்
உன்னை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்று மனதார நினைத்தேன்.

உன் அம்மாவும் நலமாக சந்தோசமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்..
ம்ம்... கண்டிப்பாக இருப்பார்கள்,
நான் உன்னைவிட்டு வெகுதூரம் தள்ளிவந்துவிட்டேனே, அதை தான் அவரும் விரும்பினார்.
உன் அம்மாவுக்காக தான் அத்தனையும் செய்தாய், என்னை நீ என்னை விட அதிகம் விரும்பியபோதும்.
சில நேரம் உனக்காக பரிதாபப்படுகிறேன்.. பாவப்பட்ட ஜென்மம் நீ!
உன்னால் உனக்கு கூட உதவிசெய்ய முடிவதில்லை, அவர்கள் மேல் நீ வைத்திருக்கிற அன்பினால்.

ஒரு நாள் நீ உணர்வாய் என்று நம்புகிறேன்..
நீ என்னை தவிக்கவிட்டதை,
என் வலியை..

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..
மனம்திறந்து நீ மன்னிப்பு கேட்பாய் என்று எண்ணி..
நடக்காத ஒன்று தான்..
இருந்தாலும் காத்திருக்கிறேன்..

அப்புறம் கடைசியாக..

நானும் நலமாக இருக்கிறேனென்று கேள்விபட்டிருப்பாய்..
அது நிஜம் தான்!!

--
வேறொரு 'நட்பு 'ஆங்கிலத்தில் எழுதியதை தழுவி எழுதியது.. !!

Tuesday, October 23, 2007

யாரும் இதை படிக்காதீங்க..!!


இங்க உருப்படியான விஷயம் எதுவும் இல்லீங்க.. அதுனால மேற்கொண்டு இந்த பதிவை படிக்காதீங்க..


அட.. அதுதான் சொல்றனிலலைங்க.. இது ஒன்னும் பெரிய சுவாரசியமான எழுத்தில்லீங்க..யாரும் இதை படிக்கறதுமில்லை, இதை படிக்கனும்னு நினைக்கறதுமில்லீங்க. இதை படிக்கறதுக்காக உங்க பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க..அய்யோ நான் சொல்றத ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கரீங்க, படிக்கதீங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க இன்னும் படிச்சுட்டே இருக்கறீங்க.. எனுங்க, உங்க நேரத்தை இப்படி ஒரு உதவாக்கரை விஷயத்தை படிக்க செலவு செய்யரீங்க?. எப்படி இந்த மாதிரி ஒரு வெட்டியான விஷயத்தை உங்க மனசு ஏத்துக்குது? உங்களுக்கே தெரியலையா, இது வெறும் குழப்பமான, ஆகாவலி விஷயம்ன்னு?..அட போங்க நீங்க ஒன்னும் கேக்குற மாதிரி இல்லை, நான் உங்களுக்காகத்தான் இவ்ளோ சொல்றேன், உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், இதையெல்லாம் படிக்கதீங்க. தயவு செஞ்சு வேண்டாங்க. இது சுத்தமா ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத, ஒரு அர்த்தமும் இல்லாத குப்பை, இதைப்போய் எதுக்கு இப்படி நான் சொல்ல சொல்ல படிக்கறீங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது போங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு விடாம இன்னும் இதை படிச்சுட்டே இருக்கறீங்க.


ஓ!! நீங்க யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ரொம்ப அடம்புடிக்கிர ஆளு போல, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேங்கரீங்க, நான் சொல்றத காதுலயே போட்டுக்க மாட்டீங்க போல??.. இது உன்மையிலயே படு முட்டாள்தனமுங்க, வடிகட்டுன கிறுக்குதனமுங்க..... சரி!!. எப்படியோ போங்க!!.. நான் எதுக்கு என்னோட உருப்படியான நேரத்தை இந்த மாதிரி ஒரு அளுகிட்ட வெட்டியா புத்திசொல்லிட்டு இருக்கனும், அதுவும் நான் சொல்றத கேக்கவே மாட்டேன்னு அடம் புடிக்கற ஆளுகிட்ட நான் எதுக்காக கெஞ்சிட்டு இருக்கனும், அதுனால, இத்தோட சரி, இனி நான் உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்லப்போறதில்ல்.. படிக்கறதுன்னா படிங்க.. உங்க இஷ்டம் அது... ஆனா எனக்காக ஒரே ஒரு சகாயம் மட்டும் செய்யுங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இதை படிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..

இது ஒரு ரிப்பீட்டு மொக்கை :)

Thursday, October 18, 2007

கற்றது தமிழ்

சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி ஐஸ்கட்டிகளுக்கு நடுவால முன்னாடி போட்டத விட சின்ன டவுசர் போடவிட்டு இடுப்புல் இடுப்புல சேர்த்திவச்சு ஒரு குத்தப்போடுறத விட்டுட்டு, இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..

நாலு வயசுல இருந்து தொடைய தட்டி 'சரிகமபத்நி' கத்துகிட்ட தினவுல ராஜா என்னைக்குத்தான் சுதி விலகாம பாடுவாரோன்னு பேசுன நம்ம சகா மூஞ்சிய பார்த்து "நல்ல" வார்த்தையா நறுக்குன்னு சொல்லிட்டு 'பறவையே எங்கு இருக்கிறாய்'ன்னு நாமளும் கண்ண திறந்துட்டே எங்கயோ பறக்கும் போதும் நல்லாத்தான் இருக்கு..

ஆனா, படம் எப்படின்னு கேட்டீங்கன்னு.. 'போடா லூசு'ன்னு தான் சொல்லனும்.

"அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்
பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து :-) ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று."
அப்படின்னு நம்ம ப்ரகாஷ் சொல்றாரு..

எனக்கு தெரிஞ்சு பராசக்தி காலத்துல இருந்து divided society ப்ரச்சனைய பத்தி எடுத்துட்டு தான் இருக்காங்க... இப்போ என்ன புதுசா.??? எதோ ஐடி'னால மட்டும் தான் இப்படிங்கற மாதிரி நிறையா பேரு எழுதறாங்க, பேசறாங்க.. என்னங்க இது அநியாயம்.. மொத்தமா இந்தியாவ எடுத்துகிட்டா.. சரி வேண்டாம், அது பெரிய ஏரியா.. தமிழ்நாட்டை எடுத்திகிட்ட.. சென்னை'ங்கிற ஒரு பெரு நகரத்துல தான் ஐடி மக்கள் இருக்காங்க.. கோவையில இருக்காங்க. அது ரொம்ப கொஞ்சம்.. மதுரையுல அதைவிட கொஞ்சம்.. இந்த மூணு ஊரையும் விட்டிருவோம்.. இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு தெக்கத்திகுக்கிராமத்த எடுத்துக்குவோம், (அது தான் இப்ப ஃபேஷன், சவுத்துல ஒரு வில்லேஜ்'ன்னு ஆரம்பிச்சா உடனே கோடம்பாக்கத்துல கதை சொல்ல வர சொல்றாங்களாம்.. ) அங்க இந்த மாதிரி சமுதாய பிரிவினை இருக்ககூடாதில்ல.. தினம் தினம் கோழியடிச்சு விருந்து வச்சு கொண்டாடுற விவசாயியும் உண்டு, வருசத்துல அறுபது எழுபது நாள் மட்டும் அரிசி கஞ்சி சாப்புடுற விவசாயியும் உண்டு, அவுங்க economicial status differece'க்கும் ஐடி தான் காரணமா?? என்ன சாமி இது அநியாயம், மாசம் பூராவும் நைட்ஷிப்ட் பார்த்து மாசக்டைசியில 20-25ரூவா சம்பளம் வாங்கி அதுல 10ரூ வாடகைய குடுத்துட்டு பாதிபணத்த ஊருல கூலி வேலைக்கு கூட போக முடியாம கிடக்குற குடும்பத்துக்கு அனுப்பற பலபேரை எனக்கு தெரியும். நானே கிட்டத்தட்ட ஒரு 15-20 பேரை "வெறும் டிகிரி வச்சுகிட்டு என்னங்க செய்யிறது"ன்னு லாரியில க்ளீன்ராவும், சந்தையில லாரிக்கு டோக்கன் போட்டுட்டும் இருந்த ஆளுகள கூட்டுட்டு வந்து BPO'ல தள்ளி விட்டிருக்கேன். அவுங்க வூட்ல எல்லாம் மூணு நேரம் இப்ப அரிசிச்சோறு சாப்பிடுறாங்க.. ஒரு நோம்பிநொடின்னா குடும்பமே சென்னைசில்க்ஸ் போயி நல்ல துணி எடுத்து போடுது. அவன் இங்க ஐடி'யில வேலை பார்க்கிறது தான் குத்தமா படுது உங்களுக்கு.. என்ன சிந்தனை கர்ம்மம்ங்க இது.

இதுல ":சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல்"
ன்னு வேற ப்ரகாஷ் சொல்றாரு.. கண்டிப்பா ஷங்கர் படத்துல சொல்ற தீர்வு எல்லாம் அபத்தம் தான், ஆனா அதே நேரத்துல

"B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு கேக்கிறதும் நீ மட்டும் உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிருக்கே, நான் பிஞ்ச செருப்பு போட்டிருக்கேன்னு, போயி சண்டை புடிக்கிறதும்" எந்த வகையில அபத்தம் இல்லைன்னு என்ககு புரியவே மாட்டேங்குதுங்க.

[ஷங்கர் படத்துல அவர் சொல்ற அபத்த தீர்வுகளாது ஒத்த மனுசன் மொத்த லஞ்சத்தையும் அழிக்கறதுங்கிற மாதிரி மேட்டர், நம்ம பய கவுந்தடிச்சு படுத்துட்டு கனவுல அதை செஞ்சு பார்த்துட்டு, காலையில எழுந்திருச்சு வழக்கம் போல வேலைய பார்க்க போயிடுவான்]

இந்த ஐடி'ங்கிற ஒரு வார்த்தை எனக்கெல்லாம் தெரியவர்றதுக்கு முன்னாடியே வெறும் pucயோ இல்ல +2வோ diplamoவாதான் படிச்சதுனால கடைவீதியில செட்டியார் கடையில கணக்குபுள்ளையாவோ, இல்ல லாட்டிரி கடையில போர்டு எழுதவோ இல்ல சிப்காட்'ல லேத்' ஓட்டவோ போன ஆளுகளுக்கும் டிகிரி முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி கவர்மென்டுலயோ, இல்ல பேங்க்லயோ, எல்.ஐ.சி'யிலயோ வேலைபார்த்தவங்களுக்கும் இடையே economical inequality இருந்துட்டு தான் இருந்துச்சு, 800ரூ/1000ரூ சம்பளம் வாங்கிற ஆளுக 7/8ஆயிரம் சம்பளம் வாங்கிறவங்களால ஏறிப்போன வீட்டு வாடகையும் காய்கறி விலையாலயும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தாங்க.. ஒவ்வொரு தடவை சம்பளகமிஷன் இப்பவும் அதே நிலமைதான்.. எதோ புதுசா ஐடி'ன்னு ஒன்னு வந்திட்டதால தான் இந்த நிலமைன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டிட்டு இருக்கம்னு தான் தோணுது.

Social inequalityங்கிறது தவறான அரசு கொள்கைகளும்ம், தனிமனித சுயநலமும் தான் காரணமா இருந்திருக்கு, இருந்திட்டிருக்கு.. ITன்னால மட்டும் புதுசா எதுவும் ஆயிடல.. 'எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்'னு டீசன்ட்டா சொல்லுவாங்க நம்ம சுத்துவட்டாரத்துல அந்த கதையா சும்மா சும்மா ஐடி'ய மட்டம் தட்டாம.. உருப்படியா எதாவது யாராவது செய்யுங்க.. மொத்த ஐடி சனமும் உங்களுக்கு உறுதுணையாத்தான் இருக்கும் :)

மொத்தத்துல முத்து சொல்ற மாதிரி
"இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்க"

இந்த பந்தா பகட்டெல்லாம் வேண்டாம்னா, தமிழ் படிச்சுட்டு, வாழ்க்கைக்கு (bread winning) எதாவது ஒரு கடையில பொட்டலம் கட்டிட்டு, தனக்கு புடிச்ச தமிழ் மேல நேசத்தோட நாலு பேருக்கு தமிழ் கத்து குடுத்துட்டு இருக்கனும். ஒரு வேளை தமிழே கூட க்ளிக் ஆயிட்டா அப்புறம் கவியரசு மாதிரி அதையும் வித்து பொழைக்கலாம்.. [BPO'ல சேர்ந்து பொட்டிதட்டிட்டு உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிகிட்டு இணையத்துல தமிழ் வளர்க்க கூட வந்திருக்கலாம்] அதை விட்டுட்டு இந்த படத்துல கூட நம்ம ஹீரோ சும்மா சுத்திட்டு ஊருக்கெல்லாம் கிடைச்சது நமக்கு ஏன் கிடைக்கலைன்னு ஒரு போறாமையால, சுயநலத்தால தான் இப்படி லூசுத்தனமெல்லாம் செய்யறது எல்லாம் நல்ல சிந்தனையுமில்ல வெங்காயமும் இல்ல.

Growing economical imbalance is not good.. ஆனா IT is not the (sole) reason for that..
நல்லா கவனிங்க 'Growing'.. இப்ப ஐடி வந்து தான் இதைய புதுசா உருவாக்கிடல.. நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நம்ம ஊருல இருந்திருக்காங்க..

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு 'அபத்தம்' தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

[ பொதுவா திருட்டு சிடி'யில படம் பார்க்கிறது இல்லைன்னாலும், ஒரு வாரம் முன்னாடி எத்தேசையா ஒரு சகா வீட்டு இந்த படம் பார்க்க கிடைச்சது.. பார்த்ததுமே எழுதனும்னு தோனுச்சு.. ஆனா எப்படியோ தள்ளிப்போயிருச்சு. நேத்து வேலையிடத்துல ஆணி கம்மியானதுல சட்டுன்னு எதோ தோணி, கூட இருந்து ரெண்டு தடியனுகள கூட்டிட்டு பார்டர் தாண்டி ஒசூர்ல படத்த போயி பார்த்துட்டு வந்தாச்சு, அதுனால சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்.. மன்னிக்கறவன் மனுசன்.. மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுசன்னு விருமாண்டி கூட சொல்லியிருக்காரு.. மனுசனா நடந்துக்கங்க, ஆமா :) ]

--
#251

Friday, September 28, 2007

அன்றும்! இன்றும்.!

அன்று




இன்று:


மக்கள் தீர்ப்பு .. :)
(விளங்கிடும்)

நாளைக்கு.. என்ன செய்வாங்களோ..? Dhoni's boys பத்தி சொல்லைலைங்க.. நம்ம மக்கள பத்தி சொல்றேன்.

--
#247

Thursday, July 5, 2007

அன்னமே, மது கிண்ணமே!











அன்னம் போல ஆடையணிஞ்சு
அழகாக வந்தாயே.. இப்படி
அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

--
#233

Monday, July 2, 2007

பலிகுடுத்தா என்ன??




மிச்ச மீதி இருந்த ஆணியெல்லாம் புடுங்கிதள்ளிட்டு, புடுங்கிட்டதா பேரு பண்ணிட்டு, ராவோட ராவா கிடைச்ச வண்டியில ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா நின்னு நின்னு ஊருக்கு போயி, வழியில வர்ற சொந்தபந்தங்களையெல்லாம் பார்த்து ஒரு டீத்தண்ணி குடிச்சுட்டு, தோட்டத்து பக்கம் ஒரு சுத்து சுத்தி வந்து மழைக்காலத்து மராமத்து வேலைக்கு ஆள் சொல்லிவிட்டு, கிடைச்ச நேரத்துல நம்ம அம்மிணி வூட்டுக்கு வேற போயி நலம் விசாரிச்சு, குதூகலப்படுத்தி, பக்கத்துலயே நடக்கிற இணையநண்பர்கள் சந்திப்புக்கு கூட போகமுடியாம அடிச்சு தாக்குற மழைக்கு நடுவால பொறுப்பா எல்லா வேலையும் முடிச்சு, கடைசி சீட்டு கிடைச்சாலும் பரவாயில்லை நாளைக்கு காலையில கூலிக்கு போயே ஆகனும்னு ராத்திரி சொகுசுபேருந்துல ஏறி, நல்லவேளை இப்ப எல்லாம் இந்த தெருமுக்குல வாங்கின இந்த இழவெடுத்த டிவிடி'ய போட்டு இவனுக தூக்கத்த கெடுக்கறதில்லைன்னு நினைச்சுகிட்டே கொஞ்சம் சந்தோஷமா, தூக்கி தூக்கி போடுற கடைசியில உக்காந்தா, ஆப்பீஸ்ல குடுத்த ஏசர்'ல கசகசன்னு பாதிபடம், அதுவும் ஒரு கோணத்துல கேவலமா தெரியற இணையத்துல திருட்டுதனமா இறக்குன 'போக்கிரி'ய போட்டு உக்காந்து சீன் குடுத்தானே.. முன்சீட்டுல இருந்த ஒரு 'மாப்ள' அப்ப தோணுச்சுங்க.. இவனுகள எல்லாம் பலிகுடுத்தா என்ன??

--
#231

Monday, June 18, 2007

ஒரே கேள்வி!

புதுசா ஒன்னுமில்லைங்க..
ரொம்ப நாளாவே மனசுல இருக்கிற கேள்விதான்..
இன்னைக்கு பொதுவில கேக்குறேன் அவ்ளோ தான்..




" இவுங்களுக்கெல்லாம் நிசமாலுமே அறிவு இல்லையா..
இல்ல, அறிவு இல்லாத மாதிரி நடிக்கறாங்களா "



--
#230


Thursday, June 14, 2007

சிக்'ன்குனியா !!

கேரளாவுல சிக்கன்குனியா பரவலா இருக்குதாங்க.. ஆறு மாசம் முன்னாடி நம்மூர் பக்கமெல்லாம் ஒரே ரகளையா இருந்துச்சு, ஆளாளுக்கு முட்டிய புடிச்சுக்குட்டு படுத்திருந்தாங்க.. எல்லா க்ளினிக்'லயும் ஹவுஸ் புல் போர்ட் மாட்டாத குறை..

க்ளினிக் பக்கத்துல இருந்த ஷெட்ட வாடகைக்கு புடிச்சு அங்க பெட் போட்டு க்ளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு ஒரு பெரிய கலெக்ஷ்ன் பார்த்தாங்க. :)

நம்ம சகா ஒருத்தன் மெடிக்கல்ஷாப் வச்சிருக்கறவன்.. 'அது பொற்க்காலம்'ன்னு சொன்னது இன்னும் மனசுல இருக்கு.

இப்ப கேரளாவ ஆட்டிவச்சுட்டு இருக்குதாம், பருவ காத்து வேற அடிக்க ஆரம்பிச்சிருக்கு, மழை கொஞ்சமா வருட்டுமா வேண்டாமான்னு போக்கு காட்டிட்டு இருக்கு.. கொசுவுக்கு அருமையான காலம் தான்.. :( அதுனால நம்மூரு பக்கம் எல்லாம் கொஞ்சம் கிலியாத்தான் இருக்காங்க..

கேரளாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு பரவாம இருக்க தமிழக அரசு முன்னேற்ப்பாடு செஞ்சிருக்குன்னு சொன்னாங்க.. சந்தோசமா இருந்துச்சுங்க .. கொஞ்ச நேரம் வரைக்கும்..

என்ன முன்னேற்ப்பாடுன்னா? பெரிய ஆஸ்பத்திரியில எல்லாம் மருந்துக்கு ஆர்டர் குடுத்திருக்காங்களாம், அதுபோக, கேரளா பார்டர் தாண்டி வர்ற எல்லா வண்டியயும் நிறுத்தி கொசுமருந்து அடிக்கறாங்களாம்.. சித்த முன்னாடி எங்கய்யன் 'பார்டர்' தாண்டி வந்தப்போ அடிச்சிருக்காங்க.. 'சுத்தி சுத்தி அடிக்கறானுக.. டிக்கு ஓப்பன் செய்ய சொல்லி வேற அடிச்சானுக'ங்கிறாரு..

அடப்பாவிகளா.. கொசு பஸ் / வேன் புடிச்சா வருது.. !!

என்ன கொடுமைங்க சரவணன் இது.. :(

நம்ம அரசாங்க இயந்திரத்தோட கடம உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சு.. பார்டர் தாண்டி மேஞ்சுட்டு வர்ற எருமைமாட்டுக்கு மருந்து அடிக்கனும்னு கணக்கு எழுதி அள்ளாத வரைக்குஞ்சரி..

--
#229

நான் தான் பேசுறேன்

ஒருத்தரை தொலைபேசியில கூப்பிட்டு, அவர் அந்த பக்கம் ஹலோ'ன்னு சொன்னதும் 'டேய், நான் தான் பேசுறேன்' / 'நான் தாம்பா பேசுறேன்' / நான் தாங்க பேசறேன்'னோ சொல்றவங்க அத்தனை பேரும் நரகத்துல அரக்கன் கையால எண்ணைச்சட்டியில வறுபடுவாங்கன்னு யாராவது ஒரு ஸ்ரீ ஸ்ரீ டகால்டியானந்தா சுவாமிகள் மாதிரியான ஆளுகலாவது அறிவிச்சிடுங்கப்பா..

:(



இவுங்க ரவுசு தாங்கமுடியல.

மத்த நேரத்துல கூட சரிங்க, ஆனா, காலங்காத்தால பெங்களூர் ட்ராபிக்க நொந்துகிட்டு சிக்னல்ல கியரும் க்ளட்ச்சுமா நிக்கும் போது சுத்தியும் அத்தனை சத்தத்துக்கு நடுவால காதுல மாட்டியிருக்கிற ஈயர்போன்ல 'நான் தான் பேசுறேன்'னு சொன்னா.. ங்ஙொய்யால.. நல்லா வருது வாயுல..
சில நேரம் நம்ம மாமனார் வீட்டு ஆளுகலும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க.. அதுனால 'நா காக்க' வேண்டியிருக்கு..

மனுசனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாருங்க.. ச்சே :)

img : http://www.jezblog.com/

--
#228

Friday, May 18, 2007

களப்பணியாளர்

Field work செய்யறவங்களை 'களப்பணியாளர்'ன்னு சொல்லலாம்.. (நாங்கெல்லாம் பல தேர்தல்ல பல கட்சிகளுக்கு களப்பணி ஆற்றியிருக்கோம்)சரி.. அதுக்காக க்ரிக்கெட் Fielderகளப்பணியாளர்'ன்னு சொல்லாமா??

இன்னைக்கு காலையில முத பந்துல வாசிம்ஜாபர் 'இன்னாங்கடா நடக்குது இங்க'ன்னு சோகத்தோட வெளியபோன ஆட்டத்த 'ராஜ் டி.வி'யில பார்க்கும் போது காதுல விழுந்த ஒரு வர்ணனை

'அந்த பந்தை களப்பணியாளர் சரியாக கணித்து பிடித்தார்'..

சரிதானா??

--
#227

Friday, May 11, 2007

குதம்பாய்..




தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி!
குதம்பாய்..
காசு முன் செல்லாதடி!
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி!
குதம்பாய்..
குதம்பாய் காசு முன் செல்லாதடடி!
....

முட்டாபயலயெல்லாம் தாண்டவகோனே,ஏ..
சில முட்டாபயலயெல்லாம் தாண்டவகோனே
பணம் முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே!
....

கட்டி அழும்போதும் தாண்டவகோனே!
பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவகோனே,
பணப்பெட்டி மேல கண் வைய்யடா தாண்டவ கோனே!
....


மதியாணம் கே.டி.வி'யில பராசக்தி பார்த்த பாதிப்பு.. வேற ஒன்னுமில்ல.. :)



pictures :
http://library.thinkquest.org
http://images.odeo.com/



--
#225

Friday, April 20, 2007

என்ன பொழப்புடா.. :)

ஏரியா பூராவும் பவர்கட்,
மணி பதினொன்ன நெருங்குது,
சந்தடி எல்லாம் ஓஞ்சாச்சு,
அமாவசை போயி ரெண்டு நாள் தான் ஆவுது,
வெளிய சீரான தாளத்தோட மழை,
திறந்திருக்கிற கதவு வழியா பூத்தூறலா சாரல்,
ப்ளேயர்ல "அந்த அரபிக்கடலோரம்.. " ரஹ்மான்,
தோளைபட்டைய புடிச்சபடி நம்ம சகி...



"என்ன பொழப்புடா பங்கு இது... ".. நகர வாசத்தில வாசன சந்தடியில சலிச்சு போயி சாயங்காலம் சகா சொன்ன வார்த்தை, இப்போ சிரிப்பா இருக்கு எனக்கு.. :)


--
#222

Friday, March 2, 2007

..(நல்ல தலைப்பா சொல்லுங்க.. )


ஈர்ப்புகள் குறைகிறதோ..?
மயக்கம் தெளிகிறதோ..?
கலக்கமாய் இருக்கிறது.

பகிர்ந்து கொள்ள நிறைய உண்டு
அத்தனையும் வேண்டுமா என்ன..??
யோசிக்கிறேன்..
க்ரீடங்களும் தேவைப்படுகிறதே..

முரண்பாடுகளின் கூட்டணியாய் இருப்பது
பிடிக்கத்தான் செய்கிறது
எனக்கு(மட்டும்)..






Pics:
http://www.arta.neonet.md

--
# 218