Tuesday, February 28, 2006

20,000








இப்படிஏத்தி விட்டு, எத்தி விட்டுதாங்க.. இப்படி ரணகளமா இருக்கு..

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது..!! அய்யோ.. அய்யோ..!!




---
#148

இப்படி செஞ்சுட்டாங்களே!



ஐஸ்க்ரீம், கலர்சோடா, டால்டா, செருப்பு, காயிதம், காஸ்ஸ்டவ், பீவிசி பைப், கேன்சர் மருந்து.. இத்தனை சாமானத்துக்கு வரியெல்லாம் குறைச்சு, விலைய குறைச்சுட்டு..


கடைசியில சிகரெட் விலைய ஏத்திபுட்டாங்களாமே!!

----
#147

Friday, February 24, 2006

உறங்கு..!


















நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசனை வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா.. உறங்கு..!



----
#146

Tuesday, February 21, 2006

நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு

நம்மள புடிச்சு ஒரு சங்கிலிதொடர் பதிவுல இழுத்து விட்டுட்டாங்க நினைவுகள் அருணான்னு ஒரு அம்மணி, நான் இதுவரைக்கும் இவுங்க பதிவு பக்கமே போனதில்லைங்க, இப்படி ஒருத்தர் நம்ம பதிவை படிக்கறாங்கன்னும் தெரியாது.. நம்மூருக்காராங்க போல, அதுனால ஒரு பாசத்துல நம்ம்ள இதுல இழுத்து விட்டிருக்காங்க.. நானும் சரி பதிவு போட ஒரு சாமாச்சாரம் கிடைச்சுதுன்னு, அவிய குடுத்த சங்கிலியா கெட்டியா புடிச்சுகிட்டு நம்ம பங்குக்கு எழுதிட்டேன்

tag-க்கு சங்கிலிதொடர் பதிவு'ன்னா சரிதானுங்களே.. தப்புன்னா சொல்லுங்க திருத்திடுவோம்.


Four jobs I have had:
தண்ணி கட்டுறது (தோப்பில்)
மேற்ப்பார்வை (அடுத்தவங்க வேலைய)
ஓட்டுனர் (எங்கய்யனுக்கு மட்டும்)
ஆலோசகர் (நிறைய வெட்டி பசங்களுக்கு)


Four movies I would watch over and over again:
ஆயிரத்தில் ஒருவன்
இன்று போய் நாளை வா
நாயகன்
சதிலீலாவதி
(என்னவொரு டேஸ்ட்(!) ராசா உனக்கு)

Four places I have lived (for years):
பொள்ளாச்சி
தோக்கவாடி
சென்னை
(நாலாவதா.. அட்டகட்டி மலையில போய் கொஞ்ச நாள் உக்காரலாமான்னு ஒரு யோசனை இருக்குதுங்க)

Four TV shows I love to watch:

அனைத்து டீ.வி. விளம்பரங்கள்
விஜய் டீ.வி. - லொள்ளு சபா..
ஜெயா டீ.வி காமெடி பஜார்
போகோ.. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்


Four places I have been on vacation:
வேம்பநாடு
அவலான்ஞ்
கபினி
முட்டம்

Four of my favourite foods:
நோ.. இதுக்கு மட்டும் நான் பாகுபாடு காட்டி வெறும் நாலு சமாச்சாரத்தை சொல்லமாட்டேன்.. நாங்கெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் ரெண்டு சாப்புடற ஆளுக. எது கிடைச்சாலும் ஒரு புடிபுடிப்போம்.


Four places I'd rather be now:
இன்சூரன்ஸ் கட்ட போயிருக்கலாம்
டீக்கடைக்கு போயிருக்கலாம்
கேரம் ஆட போயிருக்கலாம்
இல்ல்.. கிணத்துக்கு போய் குளிச்சிருக்கலாம்


Four sites I visit daily
சைட்-- நானா.. ச்சே..சே. ..ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..
தமிழ்மணம்
ஜிமெயில்
கூகிள்
யாஹூ


Four bloggers I am tagging*:
ஞான்ஸ்
இளா
அனுசுயா
டி.ராஜ்




---
#145

Thursday, February 16, 2006

# 70


என்னைக்கும் இல்லாத திருவிழாவா அய்யனும் புள்ளையும் ஒட்டுக்கா கோயலுக்கு வந்திருக்குறீங்க?'ன்னு எங்களை மாசானியம்மன் கோயில்ல பார்த்துட்டு ஆச்சிரியமா கேட்டாரு உடையகுளத்து பெரியப்பா, எங்கய்யனுக்கு காலேஜ்மேட், 70கள்ல வக்கீலுக்கு படிச்சுபுட்டு முழுநேர விவசாயி ஆனவரு, படிச்சது வீனா போககூடாதுன்னு அப்பப்போ கொஞ்சம் உள்ளூர் அரசியல்ல வேற கலந்துக்குவாரு. பையன் புள்ளை ரெண்டும் அமேரிக்காவுல, புள்ளைய கட்டிகுடுத்த ரெண்டா மாசமே மாப்பிளைக்கு அமேரிக்காவுல வேலை அமைஞ்சிருச்சு, எல்லாம் நம்ம புள்ளை போன ராசின்னு பயங்கிற பெருமைவேற.
நம்மள பார்க்கும் போதெல்லாம், லேட்டஸ்ட் சினிமா பத்தி பேசுவாரு, நானும் ஆர்வக்கோளாறா அங்க இங்க படிச்சத எடுத்துவிடுவேன், அவரென்னமோ ரொம்ப விவரமான பையன்னு தான் நினைக்கிறாரு, ஆனா எங்கய்யன் தான் சினிமா, பாட்டு பத்தி பேசினா பேசிட்டே இருப்பான்'னு ஒரு கடுப்பு பார்வை பார்ப்பாரு. ... ஸ்டாப்.. இப்ப நான் எழுத வந்தது அவரை பத்தியோ இல்லை என்னோட சினிமா அறிவை(!) பத்தியோ இல்லீங்க.. இது வேற சமாச்சாரம். ஒரு வேலையா வேட்டைகாரன்புதூர் வரைக்கும் போகவேண்டியிருந்துங்க. நான், எங்கய்யன், எங்கம்மா'ன்னு குடும்பமே கிளம்பிபோயிட்டு வந்துட்டிருந்தோம், வர்ற வழியில புது வண்டி எடுத்ததுல இருந்த இன்னும் கோயிலுக்கே போகலைன்னு எங்கம்மாவோட ஆசைக்காக அப்படியே ஆனமலை மாசானியம்மன் கோயிலுக்குள்ளார விட்டோம், இல்லாட்டி நம்ம என்னைக்கு கோயலுக்கு போனோம், அதுவும் அய்யன் அம்மா கூட, எதாவது விசேஷ நாளன்னைக்கு மட்டும் நம்ம சகா'க்க கூட கோயலுக்கு போயி வேடிக்கை பார்க்கிறதோட சரி. வேடிக்கை பார்க்கிறதுன்னு தப்பான அர்த்தம் அடுத்துக்காதீங்க.. நான் ஒழுங்கான அர்தத்துல தான் சொன்னேன்.. ;-).

(pic:http://www.quin-art.co.za)

அப்படி கோயலுக்கு போனப்ப தான், எங்களை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டாரு உடையகுளத்து பெரியப்பா, அவர் ஊர் பெரிய மனுஷனாச்சுங்க்ளா, அடிக்கடி கோயில், தாலுக்காபீஸ்ன்னு எங்காவது சுத்திகிட்டே இருப்பாரு. நான் அப்படியே சிரிச்சுகிட்டே 'சும்மா அப்படியே'ன்னு ஒரு மாதிரி இழுத்தேன், சடார்ன்னு எங்கய்யன் 'ராசு, புதுசா வண்டி வாங்கியிருக்கானில்ல, அதான் அப்படியே கோயலுக்கு 'ன்னாரு.
நானா புதுசா வண்டியா?.. ஓ.. என் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுத்தத இப்படி சொல்றாறா'ன்னு அப்படியே திரும்பி எங்கய்யன் முகத்த பார்த்தேன்.. எங்கய்யன் முகத்துல அப்படி ஒரு பளீர் வெளிச்சம்.
27 வருஷமா ராஜா மாதிரி என்னை வளத்தி, ஸ்கூலுக்கு போகவே RX100 வாங்கி குடுத்து, கப்பல் மாதிரி வண்டியோட்டிட்டு ஊருகுள்ள போற ஆளு, ஒரு சில்வண்டு வண்டிக்கு, அதுவும் அவரா வாங்க முடிவு செஞ்ச வண்டிக்கு என் அக்கவுண்ட்ல இருந்து செக் குடுதுதுட்டு, எல்லாம் அவரே குடுத்தது.. இப்போ.. "'ராசு, புதுசா வண்டி வாங்கியிருக்கானில்ல"வா. பெரியப்பா தோள்ல கைய போட்டுகிட்டு என்னமோ சொன்னாரு, எனக்கென்னவோ உச்சி பூசை சத்ததுல ஒன்னுமே காதுல விழுகலைங்க.

அப்புறம் கோவில்ல இருந்து திரும்பும் போது டர்னிங்க்ல வேகமா திருப்பினேன்னு ஒரு சண்டை.. நமக்கு தினம் ஒரு தடவையாவது அவருகிட்ட வாயை குடுத்து மல்லுக்கு நிக்காட்டி தூக்கம் வர மாட்டேங்குதுங்க.


(தலைப்பு எதுக்குடா 70'ன்னு போட்டிருக்கேன்னு கேக்கரீங்களா.. அடபோங்க.. நம்மளே சொன்னா, நல்லாவா இருக்கும்)

---
#144

Friday, February 10, 2006

நான் ரெடி.. நீங்க ரெடியா??


என் இனிய தமிழ் வலைப்பூ மக்களே..
இதோ உங்கள் பாசத்துக்குறிய கொங்குராசா, இந்த வாரம் அவள்விகடனி'ல் வந்திருக்கிறேன்..

அலோ.. யாருங்க அது.. டபாருன்னு ப்ரொளஸர மூட போறது..

சும்மா ஒரு பில்ட அப்புக்காக, இப்படி பாரதிராஜா எபக்ட்டுல சொன்னேன்.. அதுக்குள்ளார பயந்துட்டீங்களே..ம்..ம்.. சரி விஷயத்துக்கு வருவோம்..

ஒரு தமாசான சமாச்சாரம்ங்க.. நம்ம முன்னாடி போட்ட காதல் கடிதம் & பதில் கடிதம் பதிவை 'அவள் விகடன்'ல நம்ம பதிவு முகவரியோட போட்டிருக்காங்கலாம்.. எல்லாரும் இங்க போயி பார்த்துட்டு ராசாவுக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வீங்களாம்..
(ஞான்ஸ்... காது கேக்குதுங்களா..?)

என்னதான் நான் சும்மா மொழிபெயர்த்து போட்டேன்னாலும்.. அது ஒன்னும் பெரிய தப்பில்லீங்களே.. நம்மூருல கதை கட்டுரை சினிமா இதெல்லாம் சுட்டு போட்டுட்டு.. நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதும்.. இதெல்லாம் 'நான் கடந்து வந்த வலிகள்'அப்படின்னு ஆரம்பிச்சு அப்படியே.. ஒரு ரேஞ்சுக்கு எடுத்து விடுறதில்லையா..

அதுனால.. சும்மா ஆளாளுக்கு பின்னூட்டத்துல வாழ்த்து சொல்ல்றத விட்டுபுட்டு.. ஒரு பாராட்டு கூட்டம் நடட்த்திடுங்க.. உலகத்துல எந்த மூலையில நடத்துலாஉம், உங்க அன்புக்கு கட்டுபட்டு நான் வந்து கலந்துக்குவேன்..
(ஃப்ளைட் டிக்கெட் நீங்க குடுத்துருவீங்கள்ள??)

--
#143

Thursday, February 9, 2006

உனக்குள் ஒருவன்.







மேலே உள்ள படங்கள் வெறும் கற்பனையே, நிஜ மனிதர்களையோ அல்லது நிகழ்வுகளையோ குறிப்பதாக இருந்தால், அது முழுவதும் தற்செயலானது..


;-)

---
#142

Saturday, February 4, 2006

ரயில் பயணங்களில்..

போன வாரம் பாருங்க, பெங்களூர் வரைக்கும் போக ராத்திரி ட்ரெயின்'ல டிக்கெட் கிடைக்காம, பகல்ல நிஜாமுதீன்'ல போக வேண்டியதாபோச்சுங்க. நைட் ட்ரெயின்ல போயிருந்தாலாவது இந்த மாதிரி எதாவது சுவாரசியமா எதாவது நடக்கும் ;-), பகல் வண்டியா போச்சுங்களா, எல்லாரும், வீட்டுல இருந்து கட்டிட்டு வந்த முறுக்கு, ஸ்வீட்டெல்லாம் ப்ரிச்சு வச்சு சாப்பிட்டுட்டு இருப்பாங்க, நம்ம ஆளுகளுக்கு வண்டி ஏறினதும் உடனே சாப்பிட எதாவது வேணும், இல்லாட்டி கஷ்டம். நான் தனியா வேற போயிட்டெஇருந்தேன், அதுனால ஜங்க்ஷன் போறதுக்கு முன்னாடியே எதாவது புஸ்த்தகம் வாங்கிட்டு போகனும்னு முடிசு செஞ்சுட்டு தான் போனேன்.

நான் பொதுவா இங்க்லீஸ் புஸ்தகம் பக்கமெல்லாம் போறதில்லீங்க, சில நேரத்துல யாரவது வீட்டு பக்கம் போகும் போது சும்மா ஒரு பந்தாவுக்கு அவுங்க வச்சிருக்கிற புஸ்தகத்தை வாங்கிட்டு வந்து படிப்பேன் அப்படியே படிச்சாலும், சிட்னி ஷெல்டன் இல்ல கொஞ்சம் ஜெப்ரி, அவ்ளோதாங்க, அதை தாண்டி வேற எதையும் படிக்கிற அளவுக்கு நமக்கு பத்தாது.ஆனா ரொம்ப நாளா நம்ம சகி (சகா'வுக்கு எதிர்பதம்!) ஒருத்தி 'லவ் ஸ்டோரி'ன்னு ஒரு புஸ்தகத்தை பத்தி சொல்லிகிட்டே இருப்பா.. நமக்கு படிக்கலாம்னு ஆசை தான் ஆனா இங்க்லீசுல ரொமான்ஸ் எல்லாம் படிச்சா நமக்கு புரியுமா, எதுக்கு வம்பு, வாங்கி படிச்சா அப்புறம், அதை பத்தி அவ கிட்ட எதும் பேசனும், வீணா வலிய போயி கேவலப்படனுமான்னு அந்த பக்கமே ஒதுங்காம இருந்தேன்.

கோயமுத்தூர் ஜங்ஷன்'ல பின்னாடி கேட்'டுல எங்கய்யன் என்னை எறக்கி விட்டதும், அங்க பக்கத்துல ப்ளாட்பாரத்துல இருந்த புஸ்தக கடை பக்கம் போனேன். போனதும் கண்ணுல பட்டது 'லவ் ஸ்டோரி' புக்குதான். சரி ஏற்கனவே எரிக்ஸ'லோட 'டாக்டர்ஸ்' படிச்சு, அது வேற ரொம்ப புடிச்சு இருந்துச்சுங்க... ஆனா அந்த புஸ்தகம் வாங்கினது ஒரு வேர கதைங்க.. சரி.. அது வேண்டாம் இப்போ.. இதயும் தான் படிச்சு பார்ப்பமேன்னு டக்குன்னு வாங்கிட்டேன். பின்னாடியே வந்த எங்கய்யன், புஸ்தகத்தை கையில வாங்கி பார்த்துட்டு, 'பழைய புக்'ன்னு சொல்லிட்டு அப்படியே என்னை சந்தேகமா ஒரு பார்வை பார்த்தாரு, அதென்னமோ தெரியலைங்க, நான் எதார்த்தமா எதாவது செஞ்சாலும், எங்கய்யன் நம்மள சந்தேகமாவே தான் பார்க்கிறாரு. சரி, அது வேற கதை, இப்போ நான் அந்த புக்க பத்திதான சொல்ல வந்தேன், அதை சொல்லிடறேன்.

"What can you say about a twenty five year old girl who died? That she was beautiful, and brilliant, that she loved Mozart and Bach and the Beatles and me." - இது தாம் நாவலோட முதல் வரி. இதை படிச்சதுமே, நமக்கு ஒரு நம்பிக்கை வந்துருச்சுங்க, வண்டி தர்மபுரி போயி சேரும் போது பாதி புஸ்தகத்தை முடிச்சிட்டேன், (இங்க்லீஸுன்னா நான் கொஞ்சம் மெதுவா தான் படிப்பேன்..) சும்மா சொல்ல கூடாதுங்க, சூப்பரான நாவல். புஸ்தகத்தை படிக்க உக்காந்ததுதான், அங்க இங்க என்ன நடக்குதுன்னு கூட கவனிக்லைங்க, அந்தளவுக்கு அதுலயே மூழ்கிட்டேன்.. அப்புறம் தர்மபுரி'யில வண்டி நிக்கும் போதுதான் கவனிச்சேன், பக்கத்துல சைட் அப்பர்ல ஒரு அழகான புள்ளை, அதுவும் எதோ ஒரு புஸ்தகம் படிச்சுகிட்டு படுத்திருந்துச்சு. நான் அதுக்கு எதுத்தாப்புல மிடில் பெர்த்துல இருக்கேன். அதென்னமோ அதுக்கப்புறம் புஸ்தகத்துல கவனமே போகலைங்க.. பின்னாடி நேரம் கிடைக்கும் போது படிச்சுக்கலாம் வச்சுட்டேன்.

ஆனாலும் அந்த சைட் அப்பர் பெர்த்துல டார்க்ப்ளூ டாப்ஸ்ல இருந்துச்சே அந்த புள்ளை.. ரொம்ப அழகுங்க... ம்ம்.. கோயமுத்துர் தான் போல இருக்கு.. ச்சே.. புஸ்தகத்தை பத்தி சொல்ல வந்துட்டு, எதையோ சொல்லிட்டு இருக்கேன்.. புஸ்தகத்தை முழுசா படிச்சுட்டு அப்புறம் அதை பத்தி மறுபடியும் எழுதறேன்.. புஸ்தகத்தை எந்த இடத்துல விட்டேன்னு தான் ஞாபகம் இல்லை.. நேரம் கிடைச்சாலும் அந்த புஸ்தகத்தை எடுத்தா, ஏனோ தெரியலைங்க.. மனசு ஒரு நிலையாவே இருக்க மாட்டேங்குது.. படிக்கவே முடியலை..அடுத்த தடவை போகும் போதும் நிஜமுதீன்'ல போயி தான் பார்க்கனும்.. ச்சே. படிக்கனும் ;-)

--
#141

Wednesday, February 1, 2006

மணி என்னங்க ??

smsல வர்ற பல தமாசுக பெரும்பாலும் மனுசனுக்கு எரிச்சல குடுக்கிற மாதிரிதான் இருக்கும்ன்னாலும், சில நேரத்துல அருமையான துணுக்குகளும் தவறிப்போய் வந்துரும். அப்படி நேத்து எனக்கு வந்த தமாசு தாங்க இது. நேத்து இந்த தமாசு வந்ததுலயிருந்து, இதை நினைச்சு நினைச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன். சிக்னல்ல வண்டிய நிறுத்திட்டு நின்னுட்டு இருக்கும் போது, திடீர்ன்னு நான் பாட்டுக்கு அடக்கமாட்டாம சிரிச்சு வைக்க, பக்கத்துல ஸ்கூட்டியில நின்னுட்டிருந்த புள்ளை, என்னவோ எதோன்னு ஒரு நிமிஷம் பயந்து அப்புறம் என்ன நினைச்சுதோ, அப்படி ஒரு முறைப்பு முறைச்சுது. நமக்கு அப்பவும் சிரிப்பு அடங்கலை.. அப்படி என்னடா தமாசு, அதை சொல்லிதொலக்காம, சும்மா கண்டதையும் சொல்லி இம்சைபடுத்தாதன்னு கதறும் அன்பர்களுக்காக.. இதோ அந்த தமாசு..

ஏற்க்கனவே கேள்விபட்ட ஜோக்குன்னாலும் பரவாயில்லை படிச்சதுக்காக ஒரு தடவை சிரிச்சுட்டு போயிடுங்க..





ஆள் 1: மணி என்னங்க ஆச்சு?

ஆள் 2 : ஆறு இருவது.

ஆள் 1: ச்சே, என்ன ஊருங்க இது, ஒருத்தன் ஊருக்கு புதுசா வந்து மணி கேட்டா கூடவா ஏமாத்துவீங்க..?

ஆள் 2: என்னங்க ஆச்சு?

ஆள் 1: காலையில இருந்து இதே கேள்விய எத்தனை பேருகிட்ட கேட்டுட்டேன், எல்லாரும் ஆளுக்கொரு பதில் சொல்றாங்க.. எதை நம்பறதுன்னே தெரியலை..

ஆள் 2: @#^^#@^#@^#@


--#140