05:30 - பஃகிள்ராக் பார்க் உலா
[இவ்ளோ மெதுவா நடக்க காலங்காத்தால அலாரம் வச்சு எந்திருச்சு வரனுமா?
நான் நடக்க வந்தேன்னு யாரு சொன்னா?? ]
06.30 - டைம்ஸ் - கொத்துமல்லி டீ
[இந்த பார்டிக்கு போறவங்க எல்லாம் எப்பவும் ஏன் கன்னத்துலகன்னம் வச்ச்சேங்கிற மாதிரியே போஸ் குடுக்கறாங்க..]
07.30 - கடலோரக்கவிதைகள்
[திருட்டு டிவிடி வாழ்க, இளவரசு'க்கு அதே இயல்பான நடிப்பு அப்பவும்..
படத்துக்காக வெள்ளையடிச்ச வீடு, க்ரேன் ஷாட்ல பல்லிளிக்குது.. ஹிஹி.. ]
09.00 - தோசை வெங்காயசட்னி
[போதுமா?..
போதும்ன்னா சொல்லுவேன்.. நீ ஊத்திகிட்டே இரு..]
10.15 - சவுண்ட் ஆஃப் ம்யூசிக்
[பெண்ணுரிமை #%!@, ஐயம் சிக்ஸ்ட்டீன் கோயிங் செவன்ட்டீன்' என்னம*# இருக்கு இதுல]
12.00 - மை ஃபேர் லேடி
[ஆ...வ்]
14.00 - பருப்புஞ்சாதம், கத்திரிக்கா பொறியல், தயிர், பூண்டு ஊறுகாய்
[அடுத்த தடவை ருச்சி தான் எடுக்கனும் ப்ரியா அவ்ளோ சரியில்ல.. ஊறுகாய சொன்னேன்]
14.30 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள்
15.15 - உண்ட மயக்கம்
15.45 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள் - தொடர்ச்சி
16.30 - இஞ்சிடீ, நேந்திரசிப்ஸ், க்ளாசிக் ரெகுலர்
17.00 - கே.ஆர் பார்க், சிறு உலா, வேடிக்கை.. வேடிக்கை..
[வூட்டுக்காரிய பக்கத்துல வச்சுகிட்டு சைட்டடித்தல்ன்னு சொன்னா பொலிட்டிக்கல்லி கரெக்ட்டா இருக்காது)
19.30 - கடைவீதி, பூக்கடை உலா..
20.30 - ஆந்திராஸ்பைஸ் - சப்பாத்தி - தால் - டபுள்ஆம்லெட்
21.15 - ஃக்ளோரி
[டென்ஷல் வாஷிங்க்டன்'க்காக மீண்டும் மீண்டும்.. He a weak white boy, and beatin' on a nigger make him feel strong]
23.00 - சபாபதி
[இணையம் வாழ்க..
எனக்கு ரோஷம் வந்தால் ஒரு போக்கிலே, அவரை டோன்ட் டாக் சார் என்பேன்..
ஒட்டு ப்ளாஸ்த்திரி கோட்டு போடும் வாத்தி.. ஓயாமல் வாங்கி ஓசி பொடி போடுவதும் ஜாஸ்த்தி]
00.30 - ஏலக்காய் வாழைப்பழம் - சோயாபால் - க்ளாசிக் ரெகுலர்
01.30 - சபாபதி - மீள்பார்வை -ரீவைண்ட் ஃபார்வர்ட் ரீவைண்ட்
xx.xx - (தன்னை மறந்த) உறக்கம்
06.30 - கொத்துமல்லி டீ ராகவேந்தரமட புறாக்கள்
07.30 - ஆரவாரமில்லாத சாலை - நடை
08.15 - காராபாத் - வடா - ப்ராமின்ஸ் காஃபி ஃபார்
[நட்பு கூட்டு சேர்ந்துட்டா மட்டும் பாப்பான் ம்$@#ங்கறீங்க.. ஆனா டிபன் சாப்பிட மட்டும் இங்க கூட்டிட்டு வர்றீங்க.. ]
09.00 - டைம்ஸ் - படுக்கை - எஸ்.பி.பி ஜானகி காதல் பாடல்கள் MP3
[கலாசிபாளயா தெருவோரத்தில் முத்துக்கள்]
12.00 - புத்தகம் - சீ.டிக்கள்- ஒழுங்குபடுத்தல்
[ஒரு பாசாங்கு தான்.. நாங்களும் வீட்டு வேலை செய்வோமில்ல]
13.00 - காமத் பஃகிள்ராக் - ஜோவார்பக்ரெ மீல்ஸ்
[இவ்ளோ வெண்ணைய தேய்ச்சு சோளரொட்டி சாப்பிட்டா எப்படி டயட்டாகும்.. ]
14.30 - ஃபோர்த் எஸ்ட்டேட்
[எத்தனையாவது முறைன்னு மறந்துபோச்சு?]
17.00 - லெமன் டீ - மணல் போட்டு வறுத்த நிலக்கடலை
[நம்ம வீட்டுல இதையே வேற.. சரி.. சரி.. இதுவே நல்லாத்தான் இருக்கு]
17.30 - ராகவேந்தரமட புறாக்கள் - க்ளாசிக் ரெகுலர்
18.00 - தி பைரேட்'ஸ் டைலமா
[நானெல்லாம் இந்த காலத்து இளைஞன் இல்லையா??.. பயங்கிர டைலமாவா இருக்கே..]
20.00 - ராகிதோசை - நிலக்கடலை சட்னி
[அம்மா சுடுறது கொஞ்ச வேற மாதி.. இல்ல இதும் நல்லாத்தான் இருக்கு.. ஹி.. ஹி ]
20.30 - கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை
[எஸ்.பி.ரோடு தெருவோர பைரசிக்காரர்கள் வாழ்க]
21.50 - வாழைப்பழம் - க்ளாசிக் ரெகுலர்
22.10 - சாயாவனம்
[தீ மூங்கிலை பொசுக்கிட்டு இருந்துச்சு.. இனி என்னன்னு தெரியல]
23.xx -
Showing posts with label வார இறுதி. Show all posts
Showing posts with label வார இறுதி. Show all posts
Monday, June 23, 2008
Friday, April 25, 2008
ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.

"எல்லா ரிலிஜியனும் பழசாயிடுச்சு, எல்லாமே ஒரு மாதிரி பழைய சம்பிரதாயத்த வச்சுகிட்டு.. ஒரு கூட்டத்தோட கையில.. மோனோபாலியா போச்சு.. பேசாம நம்ம.. புதுசா ஒரு ரிலீஜியன் ப்ரபோஸ் செஞ்சிருவோம்.. ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.. புடிச்சவங்க யாரு வேணும்னானுல் சேரலாம்.. எல்லாரும் சேர்ந்து சரியான நெறிமுறைகளை சொல்லுவோம்.. ஒரு ப்ரெயின்ஸ்ட்ராமர் மாதிரி ரெகுலரா வச்சு ரீஃபைன் பண்ணிட்டே போவோம் எப்படி.. !"
காலங்காத்தால ஆறரை மணிக்கு ஒருத்தன் கைபேசியில கூப்பிட்டு இப்படி சொன்னா, நீங்க என்ன செய்வீங்க?..
நான் என்ன செஞ்சனா..?
"இதுக்கு தான் நைட்டே சோடா நிறையா ஊத்திக்கோ ஊதிக்கோன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. தங்கச்சி எந்திருச்சிருந்தா சுடுதண்ணி விளாவிவச்சுட்டு சூடா ஒரு லெமன்கட்டன் சாயவோட ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பச்சொல்லிட்டு மறுபடி இறுக்கமா போத்தி தூங்கு மாப்ள"ன்னு சொல்லிட்டு நம்ம அம்மணி குடுத்த லெமன் கட்டன் சாயாவோட பால்கனியில போயி கொஞ்ச நேரம் காத்தார நின்னேன்..
'சாப்டும்' போது கண்டதையும் படிச்சுட்டு பேசாதீங்கடான்னா எவன் கேக்குறான்.. இப்படி நமக்கு காலங்காத்தால வெறி ஏத்தறானுக..
--
#266
Tuesday, February 26, 2008
பொழப்பத்த @#$^#&
"கொஞ்சம் சீக்கிரமாவே வேலையிடத்தை விட்டு வந்தாச்சு..என்ன செய்ய.. தனியா 'சாப்ட்டு' நாளாச்சு போலாம.." யோசித்து கொண்டிருந்த நொடியில் எதிரில் அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சி அமைதியானது.. பிடி ரோட் தாண்டிபோய்கொண்டிருந்தேன் (வீட்டை பூட்டினது, சாலைய கடக்கும் போது என்னை தாண்டிப்போன நீலதுப்பட்டாவ பத்தியெல்லாம் விலாவரியா சொல்லிட்டு இருக்க முடியாது.. இது ஆன்டனி' டைப் எடிட்டிங் காலகட்டம்).
பஃகிள்ராக் ரோட்டில் விரைந்து எதிரே வரும் வாகணங்கள் இரைச்சலிலையும் மீறிக்கொண்டு கேட்கும் கூட்டுக்குவிரைந்துவிட்ட பறவைகள் கூப்பாட்டுக்கும் முகத்தை மோதும் மெலிதான குளிர்காற்றுக்கும் புன்னகைத்து கொள்கிறேன். லேசாக மணிக்கட்டை சாய்த்ததும் பச்சை விளக்கெரிந்து மணிகாட்டும் என் 'கேசியோ'வில் ஏழை தாண்டிவிட்ட சின்னமுள்ளை பெரிய முள் நெருங்கிகொண்டிருந்தது. "எங்க போயி சாப்டலாம்" யோசிக்க தேவையே இல்லாமல் நியான் விளக்கொளி வரவேற்றது.
'குடீவ்னிங்' சொன்னவன விறைப்பா பார்த்து சல்யூட் அடிச்ச செக்யூரிட்டிய தாண்டி முதல்மாடி கதவை திறந்தால்.. தாம்தூம் சத்தத்துடன் கசகசவென்று கூட்டம். மீண்டும் ஒரே நொடி, சட்டென்று ஒரு வெள்ளுடை சேவகன், இரண்டாம் தளத்துக்கு வழி சொன்னார்.. அவ்ளோ தெளிவா பிரதிபலிக்குதா என் முகம்.. ஊரே 'அமுக்கன்'னு கூப்பிடுற எனக்கு?? இரண்டாம் தளத்தின் வளைவுக்கு முன் நின்று திரும்பி பார்த்தேன்.. வெள்ளுடை சேவகன் எவரையும் காணவில்லை.. "மேஜிக்கல் ரியலிசமா.. ?? இன்னும் சாப்டவே இல்ல, அதுக்குள்ளாரயா"ன்னு எனக்குள் அலுத்து கொண்டேன்.
இரண்டாம் தளம் கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே அமைதியாக இருந்தது. தள்ளி தனிதனித்தீவாக கிடக்கும் மேஜைகள். ஒரு ஓரத்தில் உயரமான மேடையில் 'உதயா'வின் புண்ணியத்தில க்ரேஸிஸ்டார் ரவிச்சந்திரன் யாரோ ஒரு 'மைதாமாவை' கட்டிபுரண்டு கொண்டிருந்தது கண்ணில் பட்டது. நேர்கீழே இரண்டு பொடியன்கள் நின்று பார்த்துகொண்டிருந்தனர். அந்த இடத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளுடை இல்லை, அழுக்குநீளம்.
ஓரமாக ஒரு மேஜையில் என் முதல் சுற்றில் கவனமாக இருந்தேன். நான்கடி தள்ளி ஒரு மேஜையில் இரண்டு பேர், நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் 'சாப்ட்டு' கொண்டிருந்தனர்.. அரை மணி நேரமாக பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, ஆர்டர் தரும் போது கலந்துபேசிக் கொண்டது தவிர. கடமையாக ஒவ்வொரு தம்ளரையும் ஒரே வேகத்தில் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.. ம்ம் குடும்பஸ்த்தர்கள் போல.. வீட்டுக்கு வீடு வாசப்படி..
'எக் புதினா'வை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திரும்பினேன், இடப்புற மேஜையில் ஒரு சற்றே பருத்தவர், முழுக்கையும், தளர்த்திவிடப்பட்ட டையும், லெதர் பேக்கும் முகத்தில் நிறைந்து கிடக்கும் சோர்வையும் பார்த்தால் நாள் முழுதும் சுற்றி அலையும் வேலை போல.. ஒவ்வொரு மிடிருக்கும் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தார், சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மேசை விரிப்ப்பின் அழுக்கை நிமிண்டிக்கொண்டிருந்தார். மதியம் சந்தித்த வியாபாரியையோ, நாளைய டார்க்கெட்டையோ அல்லது ஊரில் இருக்கும் உறவுகளை பற்றிய நினைப்போ என்னவோ.
வகை வகையாக எத்தனை பதார்த்தம் வாங்கினாலும், லெமன் பிக்கிள் சுவை தனிதான். எதிர்மூலையில் விடாமல் பேசிக்கொண்டே இருந்த இருவரும் எழுந்து விட்டனர். அதில் ஒருவர் போகும்முன் மேஜைக்கு மேலும் கீழுமாக தேடியதை பார்த்து நான் மட்டுமல்ல, அவர் கூட வந்தவரும் புன்னகைத்து கொண்டார். 'எதிலையும் ஜாக்கிரதையா இருக்கனும்' என்று படியிறங்கும் போது கூட வந்தவரிடம் கண்டிப்பாக சொல்லுவார் என்று பட்டது. இப்படி மேஜையை புரட்டி பார்துவிட்டு போகிறவர்கள் பெரும்பாலும் அடுத்த தெருத்திருப்பத்தில் லத்தியும் குறிப்பு நோட்டுமாக காத்திருக்கும் காவலரிடம் கண்டிப்பாக கப்பம் கட்டுவார்கள்.
பச்சை வெள்ளிரியும் தக்காளியும் கொஞ்சம் போல குருமிளகும் உப்பும் தூவப்பட்டு, இதற்க்கு காசு இல்லை, இலவசம்.. இருந்தபோதும் நன்றாகவே இருந்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், 'உதயா'வையாவது பார்ப்போம் என்று பார்வையை திருப்பினேன், ஒரு தாடிக்கார கணவான் கோட்சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வெகுவாக 'கேப்'விட்டு சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் மூக்கை தேய்த்து கொண்டிருந்தார் அந்த பெண்ணும் வெட்கபடாவிட்டால் பண்பாட்டு காவலர்கள் வந்துவிடுவார்களோ என்று வராத வெட்கத்தை கைவைத்து மறைத்து கொண்டிருந்தது. பாவம் இயக்குனர் என்று தோன்றியது.
சலித்து போய், உடைத்து வைத்த சோடா பாட்டிலில் பொங்கிக்கொண்டிருக்கும் குமிழ்களில் பார்வையை செலுத்தினேன். லெஹர் சோடாவில் மேலெழும்பும் காற்று குமிழ்கள் எப்பொழுதுமே அழகு தான். ஏனோ எனக்கு பிடிரோட்டில் என்னை தாண்டி போன நீளத்துப்பட்டா ஞாபகம் வந்தது, அவசரத்தில் முகத்தை பார்க்கவில்லை என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மடக்கென்று அடுத்த சுற்றை முடித்தேன். 'பாட்டம்ஸ் அப்'. முடித்ததாக கைகாட்டிவிட்டு தீப்பெட்டு கேட்டு வாங்கிகொண்டேன்.
வாகண இரைச்சல் அடங்கிவிட்ட இரவில் லேசான குளிரில் மெதுவாக சீட்டியடித்தபடி நடந்து வந்த போது என்னவென்று தெரியாமல் 'கோடைகால காற்றே' ஞாபகம் வந்தது.. கூடவே சாந்திகிருஷ்ணா'வின் முகமும். எதற்க்கோ கீழே கிடந்த ஒரு கல்லை வேகமாக உதைததேன், தரையோடு தரையாக தேய்த்து கொண்டு சென்று குவிந்து கிடந்த சருகுகளோடு சத்தத்தோடு ஐக்கியமானது.
துணி மாற்றக்கூட தோன்றவில்லை, சன்ம்யூசிக்கில் வீஜே தொல்லை இல்லாமல் பாட்டு போட்டுகொண்டிருந்தார்கள். மேஜை மீது இன்னும் உயிருடன் என் மடிக்கணினி.. எதுவுமே யோசிக்காமல் திட்டமிடாமல் மடியில் எடுத்து வைத்துகொண்டு உள்ளிட ஆரம்பித்தேன்..
பி.கு.: அப்படி என்னத்த உள்ளிட்டேன்ன்னு தெரியனும்னா இந்த பதிவை மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் :)
பஃகிள்ராக் ரோட்டில் விரைந்து எதிரே வரும் வாகணங்கள் இரைச்சலிலையும் மீறிக்கொண்டு கேட்கும் கூட்டுக்குவிரைந்துவிட்ட பறவைகள் கூப்பாட்டுக்கும் முகத்தை மோதும் மெலிதான குளிர்காற்றுக்கும் புன்னகைத்து கொள்கிறேன். லேசாக மணிக்கட்டை சாய்த்ததும் பச்சை விளக்கெரிந்து மணிகாட்டும் என் 'கேசியோ'வில் ஏழை தாண்டிவிட்ட சின்னமுள்ளை பெரிய முள் நெருங்கிகொண்டிருந்தது. "எங்க போயி சாப்டலாம்" யோசிக்க தேவையே இல்லாமல் நியான் விளக்கொளி வரவேற்றது.
'குடீவ்னிங்' சொன்னவன விறைப்பா பார்த்து சல்யூட் அடிச்ச செக்யூரிட்டிய தாண்டி முதல்மாடி கதவை திறந்தால்.. தாம்தூம் சத்தத்துடன் கசகசவென்று கூட்டம். மீண்டும் ஒரே நொடி, சட்டென்று ஒரு வெள்ளுடை சேவகன், இரண்டாம் தளத்துக்கு வழி சொன்னார்.. அவ்ளோ தெளிவா பிரதிபலிக்குதா என் முகம்.. ஊரே 'அமுக்கன்'னு கூப்பிடுற எனக்கு?? இரண்டாம் தளத்தின் வளைவுக்கு முன் நின்று திரும்பி பார்த்தேன்.. வெள்ளுடை சேவகன் எவரையும் காணவில்லை.. "மேஜிக்கல் ரியலிசமா.. ?? இன்னும் சாப்டவே இல்ல, அதுக்குள்ளாரயா"ன்னு எனக்குள் அலுத்து கொண்டேன்.
இரண்டாம் தளம் கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே அமைதியாக இருந்தது. தள்ளி தனிதனித்தீவாக கிடக்கும் மேஜைகள். ஒரு ஓரத்தில் உயரமான மேடையில் 'உதயா'வின் புண்ணியத்தில க்ரேஸிஸ்டார் ரவிச்சந்திரன் யாரோ ஒரு 'மைதாமாவை' கட்டிபுரண்டு கொண்டிருந்தது கண்ணில் பட்டது. நேர்கீழே இரண்டு பொடியன்கள் நின்று பார்த்துகொண்டிருந்தனர். அந்த இடத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளுடை இல்லை, அழுக்குநீளம்.
ஓரமாக ஒரு மேஜையில் என் முதல் சுற்றில் கவனமாக இருந்தேன். நான்கடி தள்ளி ஒரு மேஜையில் இரண்டு பேர், நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் 'சாப்ட்டு' கொண்டிருந்தனர்.. அரை மணி நேரமாக பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, ஆர்டர் தரும் போது கலந்துபேசிக் கொண்டது தவிர. கடமையாக ஒவ்வொரு தம்ளரையும் ஒரே வேகத்தில் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.. ம்ம் குடும்பஸ்த்தர்கள் போல.. வீட்டுக்கு வீடு வாசப்படி..
'எக் புதினா'வை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திரும்பினேன், இடப்புற மேஜையில் ஒரு சற்றே பருத்தவர், முழுக்கையும், தளர்த்திவிடப்பட்ட டையும், லெதர் பேக்கும் முகத்தில் நிறைந்து கிடக்கும் சோர்வையும் பார்த்தால் நாள் முழுதும் சுற்றி அலையும் வேலை போல.. ஒவ்வொரு மிடிருக்கும் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தார், சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மேசை விரிப்ப்பின் அழுக்கை நிமிண்டிக்கொண்டிருந்தார். மதியம் சந்தித்த வியாபாரியையோ, நாளைய டார்க்கெட்டையோ அல்லது ஊரில் இருக்கும் உறவுகளை பற்றிய நினைப்போ என்னவோ.
வகை வகையாக எத்தனை பதார்த்தம் வாங்கினாலும், லெமன் பிக்கிள் சுவை தனிதான். எதிர்மூலையில் விடாமல் பேசிக்கொண்டே இருந்த இருவரும் எழுந்து விட்டனர். அதில் ஒருவர் போகும்முன் மேஜைக்கு மேலும் கீழுமாக தேடியதை பார்த்து நான் மட்டுமல்ல, அவர் கூட வந்தவரும் புன்னகைத்து கொண்டார். 'எதிலையும் ஜாக்கிரதையா இருக்கனும்' என்று படியிறங்கும் போது கூட வந்தவரிடம் கண்டிப்பாக சொல்லுவார் என்று பட்டது. இப்படி மேஜையை புரட்டி பார்துவிட்டு போகிறவர்கள் பெரும்பாலும் அடுத்த தெருத்திருப்பத்தில் லத்தியும் குறிப்பு நோட்டுமாக காத்திருக்கும் காவலரிடம் கண்டிப்பாக கப்பம் கட்டுவார்கள்.
பச்சை வெள்ளிரியும் தக்காளியும் கொஞ்சம் போல குருமிளகும் உப்பும் தூவப்பட்டு, இதற்க்கு காசு இல்லை, இலவசம்.. இருந்தபோதும் நன்றாகவே இருந்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், 'உதயா'வையாவது பார்ப்போம் என்று பார்வையை திருப்பினேன், ஒரு தாடிக்கார கணவான் கோட்சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வெகுவாக 'கேப்'விட்டு சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் மூக்கை தேய்த்து கொண்டிருந்தார் அந்த பெண்ணும் வெட்கபடாவிட்டால் பண்பாட்டு காவலர்கள் வந்துவிடுவார்களோ என்று வராத வெட்கத்தை கைவைத்து மறைத்து கொண்டிருந்தது. பாவம் இயக்குனர் என்று தோன்றியது.
சலித்து போய், உடைத்து வைத்த சோடா பாட்டிலில் பொங்கிக்கொண்டிருக்கும் குமிழ்களில் பார்வையை செலுத்தினேன். லெஹர் சோடாவில் மேலெழும்பும் காற்று குமிழ்கள் எப்பொழுதுமே அழகு தான். ஏனோ எனக்கு பிடிரோட்டில் என்னை தாண்டி போன நீளத்துப்பட்டா ஞாபகம் வந்தது, அவசரத்தில் முகத்தை பார்க்கவில்லை என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மடக்கென்று அடுத்த சுற்றை முடித்தேன். 'பாட்டம்ஸ் அப்'. முடித்ததாக கைகாட்டிவிட்டு தீப்பெட்டு கேட்டு வாங்கிகொண்டேன்.
வாகண இரைச்சல் அடங்கிவிட்ட இரவில் லேசான குளிரில் மெதுவாக சீட்டியடித்தபடி நடந்து வந்த போது என்னவென்று தெரியாமல் 'கோடைகால காற்றே' ஞாபகம் வந்தது.. கூடவே சாந்திகிருஷ்ணா'வின் முகமும். எதற்க்கோ கீழே கிடந்த ஒரு கல்லை வேகமாக உதைததேன், தரையோடு தரையாக தேய்த்து கொண்டு சென்று குவிந்து கிடந்த சருகுகளோடு சத்தத்தோடு ஐக்கியமானது.
துணி மாற்றக்கூட தோன்றவில்லை, சன்ம்யூசிக்கில் வீஜே தொல்லை இல்லாமல் பாட்டு போட்டுகொண்டிருந்தார்கள். மேஜை மீது இன்னும் உயிருடன் என் மடிக்கணினி.. எதுவுமே யோசிக்காமல் திட்டமிடாமல் மடியில் எடுத்து வைத்துகொண்டு உள்ளிட ஆரம்பித்தேன்..
பி.கு.: அப்படி என்னத்த உள்ளிட்டேன்ன்னு தெரியனும்னா இந்த பதிவை மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் :)
Tuesday, July 3, 2007
மழை!





செய்தி 1: கோவைமாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
(அதான் மழை எல்லாம் நல்லா பேயுதே, ஊருலயே இருந்திடறது'ங்கிற சத்தம் இந்த வருசம் கொஞ்சம் கூடுதல் ஆகலாம்)
செய்தி 2: பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிடும்.
( ஏற்க்கனவே PAP திட்டத்தை ஒத்தக்கால் மண்டபம் வரை இழுத்துட்டீங்க, இதைய சாக்காட்டி இன்னும் இழுத்துறாதீங்கப்பு, அப்புறம் பாசனமண்டலத்துல வர்ற எல்லாருக்கும் உயிர் தண்ணி மட்டும் தான் விடமுடியும்)
செய்தி 3: வழக்கம் போல மழைக்காலத்தில் எங்கய்யன்னோடா பாட்டுக்கு நடுவே சொல்லாம கொள்ளாம 'மழையில் ஒரு மலைசவாரி' இந்த தடவையும் செஞ்சாச்சு
(கூடவே கட்டுனவ பாட்டும் இந்த தடவை கூடுதல் சேர்த்தி)
செய்தி 4: எங்க கிட்டயும் ஒரு டிஜிட்டல் கேமிரா சும்மாவே இருக்குது:)
(ஹி.ஹி)
(படங்களை அமுக்கி பெருசா பார்த்துக்கோங்க)
--
#232
Monday, July 2, 2007
பலிகுடுத்தா என்ன??

மிச்ச மீதி இருந்த ஆணியெல்லாம் புடுங்கிதள்ளிட்டு, புடுங்கிட்டதா பேரு பண்ணிட்டு, ராவோட ராவா கிடைச்ச வண்டியில ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா நின்னு நின்னு ஊருக்கு போயி, வழியில வர்ற சொந்தபந்தங்களையெல்லாம் பார்த்து ஒரு டீத்தண்ணி குடிச்சுட்டு, தோட்டத்து பக்கம் ஒரு சுத்து சுத்தி வந்து மழைக்காலத்து மராமத்து வேலைக்கு ஆள் சொல்லிவிட்டு, கிடைச்ச நேரத்துல நம்ம அம்மிணி வூட்டுக்கு வேற போயி நலம் விசாரிச்சு, குதூகலப்படுத்தி, பக்கத்துலயே நடக்கிற இணையநண்பர்கள் சந்திப்புக்கு கூட போகமுடியாம அடிச்சு தாக்குற மழைக்கு நடுவால பொறுப்பா எல்லா வேலையும் முடிச்சு, கடைசி சீட்டு கிடைச்சாலும் பரவாயில்லை நாளைக்கு காலையில கூலிக்கு போயே ஆகனும்னு ராத்திரி சொகுசுபேருந்துல ஏறி, நல்லவேளை இப்ப எல்லாம் இந்த தெருமுக்குல வாங்கின இந்த இழவெடுத்த டிவிடி'ய போட்டு இவனுக தூக்கத்த கெடுக்கறதில்லைன்னு நினைச்சுகிட்டே கொஞ்சம் சந்தோஷமா, தூக்கி தூக்கி போடுற கடைசியில உக்காந்தா, ஆப்பீஸ்ல குடுத்த ஏசர்'ல கசகசன்னு பாதிபடம், அதுவும் ஒரு கோணத்துல கேவலமா தெரியற இணையத்துல திருட்டுதனமா இறக்குன 'போக்கிரி'ய போட்டு உக்காந்து சீன் குடுத்தானே.. முன்சீட்டுல இருந்த ஒரு 'மாப்ள' அப்ப தோணுச்சுங்க.. இவனுகள எல்லாம் பலிகுடுத்தா என்ன??
--
#231
Tuesday, May 15, 2007
சுகமோ சுகம்..
மழையை பார்ப்பதும் சுகம்
மழையில் நனைவதும் சுகம்
மழையை பற்றி எழுதுவதும் சுகம்
மழையை பற்றி பேசுவதும் சுகம்
மழையை படம் புடிப்பதும் சுகம்..

வெளிய வெய்யில் போட்டுதள்ளுற சோம்பலான ஒரு விடுமுறையில மதியத்துக்கு வூட்டம்மிணி வச்ச மோர்க்குழம்பும் வெண்டக்காய் பொரியலும் தக்காளிரசமும் ஒரு கட்டு கட்டிட்டு மூணுபக்கமும் தலைகானி வச்சுகிட்டு அரை மயக்கத்துல எந்த மொழின்னே தெரியாம ஒரு பாடாவதி படத்தை பார்த்துக்கிட்டு இருக்கும் போது லேசா இருட்டி மண்வாசனைய கிளப்பி சட்டுன்னு பெருமழையாகிற இந்த கோடைமழை சுகமோ சுகம்..

அதுக்கு அப்புறம் வந்த வெங்காய பக்கோடா வாசம் இன்னும் சுகம்.. :)
--
#226
மழையில் நனைவதும் சுகம்
மழையை பற்றி எழுதுவதும் சுகம்
மழையை பற்றி பேசுவதும் சுகம்
மழையை படம் புடிப்பதும் சுகம்..
வெளிய வெய்யில் போட்டுதள்ளுற சோம்பலான ஒரு விடுமுறையில மதியத்துக்கு வூட்டம்மிணி வச்ச மோர்க்குழம்பும் வெண்டக்காய் பொரியலும் தக்காளிரசமும் ஒரு கட்டு கட்டிட்டு மூணுபக்கமும் தலைகானி வச்சுகிட்டு அரை மயக்கத்துல எந்த மொழின்னே தெரியாம ஒரு பாடாவதி படத்தை பார்த்துக்கிட்டு இருக்கும் போது லேசா இருட்டி மண்வாசனைய கிளப்பி சட்டுன்னு பெருமழையாகிற இந்த கோடைமழை சுகமோ சுகம்..
அதுக்கு அப்புறம் வந்த வெங்காய பக்கோடா வாசம் இன்னும் சுகம்.. :)
--
#226
Monday, April 23, 2007
ஒரு வார இறுதி
வெய்யில் இறங்குது, லேசா தூறல், தூறலோட அருவி குளியல், சுள்ளி போட்டு தணல், பாக்கெட் மசாலா போடாத அக்மார்க் கிராமத்து வறுவல், ஐஸ்க்யூப் செவனப் வகையெல்லாம் இல்லாம ஆத்து தண்ணி கலந்த கருப்புவெள்ளை, ப்ளேயர்ல 'ஆத்தாடி பாவாடை..', வெளி ஆள் யாரும் இல்லாத தைரியத்துல வெக்கம் விட்டு கொஞ்சம் ஆட்டம், நாலுகிலோமீட்டர் தள்ளி போயி வாங்கிட்டு வந்த சுத்து பரோட்டா, தேங்காயும் பட்டையும் அரைச்சு ஊத்தின குழம்பு, அஞ்சு பேருக்கு மிச்சம் இருந்த ரெண்டே ரெண்டு 'ராஜா'....
பத்துக்கு பத்துல அளவுல அம்பதுஅடி உயரத்துல கண்காணிப்பு கோபுரத்துல தூக்கம், அஞ்சரை மணிக்கெல்லாம் உறக்கம் கலைச்சு விட்ட பறவைக சத்தம், நடுவால சேர்ந்த ரெண்டு காட்டு ஓடைய கடந்து ரெண்டுமணி நேரம் அத்தங்கரையோரம் நடை, பாறை மேல் சூரியகுளியல் நடத்திட்டு இருந்த முதலை, ஆறு கிமி தள்ளி வந்து இருவத்து ரெண்டு குடும்பம் குடித்தனம் செய்யுற ஒரு கிராமத்துல சூடா இட்லியும் கதம்பசாம்பாரும், வளைஞ்சு வளைஞ்சு ஓடுற மலைப்பாதையில மறுபடி பயணம், நடுவால கறிசோறும் தாளிச்ச மோரும், சூரிய அஸ்மனத்துக்கு முன்னாடி வூடு , சுடு தண்ணி குளியல், கொஞ்சமா உப்புமாவும் பாலும், நீண்ட தூக்கம்..
அதுக்குள்ளாரயா ஒரு வார இறுதி முடிஞ்சிருச்சு???
--
#223
இதுல சம்பந்தப்பட்டது
ஞாயிறு,
படங்காட்டுதல்,
லைஃப்பு,
வார இறுதி
Subscribe to:
Posts (Atom)