Showing posts with label பொறி. Show all posts
Showing posts with label பொறி. Show all posts

Friday, April 13, 2007

'பொறி'யில் சிக்கியது

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பயணத்தில் வருகின்ற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கின்ற முதல் கூச்சம்

பரிட்ச்சைக்கு படிக்கின்ற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீ தானே!

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீ தானே!

தினமும் காலையில் எனது வாசலில்
எடுக்கும் நாளிதழ் நீ தானே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

தாய்மடி தருகின்ற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

தேய்பிறை போல் படும் நகக்கணங்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீ தானே!

பிடித்தவர் தருகின்ற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீ தானே!

எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக் கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்



தீனா இசையில் பாடுனது பாலகிருஸ்ணா & மதுஸ்ரீ (கொஞ்சம் கொஞ்சமா அம்மிணி குரல் புடிக்க ஆரம்பிக்குது.. ம்ம் இப்படித்தான் ஹரினி ஹரினி'ன்னு ஒரு காலத்துல கிடந்தோம்.. )

பாட்டு கேட்க..

சஹானா' பக்கம் போக விடமாட்டேங்கிறாங்க..

--
#220