Showing posts with label யுவன். Show all posts
Showing posts with label யுவன். Show all posts

Monday, October 15, 2007

முதன்முறை வாழப்பிடிக்குதே..


பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..
அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..

பார்க்கும் திசைகளெல்லாம்..
பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

உன்னோடு நானும்.. போகின்ற பாதை
இது நீளாதோ, தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்
இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே..
இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..



பாடல் : நா.முத்துகுமார்
இசை : யுவன்சங்கர் ராஜா
குரல் : இளையராஜா
படம் : கற்றது தமிழ் (தமிழ் M.A.)
[பாடல்கேட்க]


pics : http://www.copperpress.com

--
#250