Tuesday, November 28, 2006

என் வீட்டு தோட்டத்தில



சும்மா, பிரபலமான பாட்டுங்கிறதால 'என் வீட்டு தோட்டத்தில்'ன்னு தலைப்பு வச்சுட்டேன்.. நிஜத்துல இது 'என் தோட்டத்து வீட்டில்' எடுத்த படம்.. எத்தனை விதமான வண்ணங்கள்ல பூத்தாலும் செம்பருத்தி அழகு.. அதுவும் காலைப்பனித்துளியை தாங்கி நிக்கிற செம்பருத்தி.. அழகோ அழகு..

ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)

oOo

செம்பருத்தியோட சம்பந்தப்பட்ட செல்வரா'ஜோட ஒரு பழைய பதிவு.
நம்ம தோட்டத்துல செவ்வந்தியும் உண்டு.. :)


--
#214

Monday, November 27, 2006

இதுவும் கடந்து போகும்

வழக்கம் போல பின்னிரவு சாப்பாடா இல்லாம, இன்னைக்கு கொஞ்சம் நேரமே எழரை மணிக்கெல்லாம் உக்காந்தாச்சுங்க. வழக்கமெல்லாம் மாறுது :)
சப்பாத்தி குருமா. சப்பாத்தியுல கொஞ்சம் உப்புதூக்கல், மெதுமெதுன்னு இருக்க சேர்த்துன தயிர் வாசம் கொஞ்சம், முதநாள் ஆச்சே, ஆர்வத்துல தாளிக்கும்போது அள்ளிபோட்ட கடுகு குருமாவுல பட்டானிக்கு சமமா மிதக்குது. சாப்பிட்டுமுடிச்சுட்டு மெல்ல கண்ணை உயர்த்தி சிரிச்சுகிட்டே 'ம்'ன்னு தலையாட்டுறவன, பழிப்பு காட்டி 'அதை வாய திறந்துதான் சொல்லேன், தட்டை வை, நான் எடுத்துக்கிறேன்.. போய் கைய கழுவு'ன்னு சொல்லிட்டு சமையல் ரூம்பக்கம் போறவள பார்த்து சிரிச்சுகிட்டே எழுந்திருக்கும் போது, மேசை மேல இருந்த கைப்பேசியில 'ஆசை நூறு வகை'. நம்ம சகா வட்டத்து ரிங்டோன்..
நம்ம பய தான்..

'சொல்லு மாப்ள'

'டேய், சாப்பிட வரமாட்டேன், கால் இருக்கு.. எனக்கு சேர்த்து செய்யாத.. ' வழக்கம் போல அவசரக்குரல்.

'.... '

'ஹலோ.. ?'

'நான் இப்பத்தான் சாப்பிட்டேன்'

'அதுக்குள்ளயே...... ச்சே.. மறந்துட்டேன் பார்த்தியா.. நீ எங்க கூட இருக்கிற நினப்புலயே கூப்பிட்டுட்டேன்.'

'வேலையா?'

'ஆமான்டா, நை நைங்கிறானுக, அப்புறம் பேசறேன் உங்கிட்ட.. குட் நைட்!'

'டேய், நாளைக்கு இங்க வந்திரு சாப்பிட.'

'சொல்லாட்டியும் அங்கதான்.. அம்மணி மதியமே கூப்பிட்டு பேசிருச்சு.. நான்தான் இப்ப வேலை அவசரத்துல மறந்து, தங்கான கூப்பிடறதுக்கு பதிலா உன்னைய கூப்பிட்டுட்டேன்'

'.. சரி.. காலையில கூப்பிடுறேன்'

'ம்ம்.. .. டேய்'

'என்ன?'

'கதவுல ஒட்டி வச்சிருந்தியே..'

'என்னது..?'

' "இதுவும் கடந்து போகும்"ன்னு.. போகுமா.'

'போடாங்க... வாயுல நல்லா வருது.. போ, போய் வேலைய பாரு.. காலையில பேசலாம்... '




அழைப்பை துண்டிச்ச பிறகும்.. கைய கூட கழுவாம அப்படியே விட்டத்தை பார்த்து உக்காந்திருக்கறவன, தட்டு கழுவிவச்சுட்டு வந்து, சுவத்துல சாஞ்சுகிட்டு புருவத்தை தூக்கி, கண்ணாலயே 'என்ன?'ன்னு ஒரு கேள்வி..
என்னன்னுங்க சொல்றது..




'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?


pic : http://redshift.shutterchance.com/


--
#213

Friday, November 24, 2006

அறியாத வயசு.. புரியாத மனசு..











அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்க பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஓஹோ..
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
உறவுக்கு இது தான் கலவை
இதை உசுரா நினைக்கும் இளமை
காதலில் கடவுளும் நாண
அவன் பூமிக்கு தொட்டுவச்சான் தேன
.....
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது, தோளில சாயுது
ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமே சேர்ந்து
அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
---









---


படம் : பருத்திவீரன்
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
இயக்கம் : அமீர்
பாடல் கேட்க : ம்யூசிக்-இண்டியா
----


யுவன்?? அடப்போடா, கடைசி பத்தியில வர்ற 'அடி ஆத்தி இந்த வயசுல' முதல் சரணத்துல வர்ற 'காட்டுல மேட்டுல கலந்து', இதை கேட்டதுக்கப்புறமும் இது 'யுவன்' பாட்டுன்னுட்டு.. இது அக்மார்க் 'மொட்டை' பாட்டு பங்காளி..

அமீர் படத்துல மெளனம்பேசியதே, ராம் ரெண்டுலயும் பாட்டெல்லாம் சூப்பரா எடுத்திருப்பாங்க.. இந்த பாட்டு.. ம்ம் யாரோ எழுதியிருந்தாங்க.. பாலுமகேந்திர பட காதல்பாட்டு மாதிரி இருக்கப்போகுதுன்னு.. இருக்கலாம்.. கொஞ்சம் 'வேகமான' பாலுமகேந்திராவா இருக்கும்.. இருக்கனும்..


--
#212



Monday, November 13, 2006

முகூர்த்த போட்டோ


கல்யாணத்துக்கு நாம காசு குடுத்து ஒருத்தர போட்டோ புடிக்க வரச்சொன்னா, அவரே நாலு ஸ்டில்கேமிரா, மூனு மூவிகேமிரா'ன்னு வந்து சுத்தி நின்னு ஒரு வழி பண்ணிட்டாருங்க, இது பத்தாதுன்னு, நம்ம சகாகூட்டம் வேற 'வந்திறங்கும்' போது கொண்டு வந்த சைபர்ஷாட்'ட்டும், கேஸியோ'வயும் தூக்குட்டு சுத்தி நின்னு பாரா காத்துட்டாங்க.. பாவம்.. கிட்ட வர முடியாத ஒரு 'ஜார்கண்ஃட்' மாநிலத்து சகா எடுத்த படம் இது.. எடுத்ததோட மட்டுமில்லா, நம்ம வேலையிடத்துல பெருசா அச்செடுத்து ஒட்டி வேற வச்சுட்டாரு.. எல்லாம் ஆர்வக்கோளாருல நடக்கிறது.. :)

-00--

உடுமலைப்பேட்டை கொல்லம்பட்டரை ரோட்டுல மூணு அடிக்கு தண்ணி ஓடி இந்த 72 வருசத்துல நான் பார்த்ததேயில்லைன்னு நம்ம அம்மிணியோட சின்ன அப்பாரு ஒரு வாரமா, ஓயாமா சொல்லிகிட்டே இருந்தாருன்னா பாருங்க..
அந்தளவுக்கு வரலாறு காணாத மழைக்கு நடுவால, வெள்ளமா ஓடுற தண்ணியில சிக்கிகிட்ட மூணு வண்டிய, பட்டு வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு வெளிய எடுத்து, 'மாப்ள அந்த தண்ணியிலயும் நறுவுசா காரோட்றார், அவருதான் பெரிய வண்டி மூணையும் அலுங்காம தண்ணியில ஓட்டிட்டு வந்தாருன்னு'னு ஒரு பெருசு புகழுரைக்க பக்கத்துல நின்னுட்டிருந்த சகா 'ஏம்மாப்பு, அவரு சொல்றது எந்த தண்ணி?'ன்னு காதோரமா கேட்டத கண்டுக்காம ஓடிப்போயி துணிமாத்திட்டு, வெளியில மழையடிக்கறதால உள்பக்கமாவே குவிஞ்சுட்ட கூட்டத்துல மண்டபமே நிறைஞ்சு கிடக்க, 'மாப்ளைக்கு வழிஉடுங்கப்பா, அவர் வராட்டி அப்புறம் கல்யாணம் எப்படி நடக்கும்னு' கவுண்டமனி ரேஞ்சுக்கு கூட்டத்தை விலக்கி, சாயங்காலம் அஞ்சுல இருந்து அஞ்சரைக்குள்ளார மண்டபத்துக்குள்ள வர வேண்டியவன, ஒரு வழியா ஏழரை மணிக்கு மண்டபத்துல கொண்டு போயி சேர்த்தாங்க... அப்புறம் உருமால் கட்டுசீருக்கு உக்காந்தப்போத்தான் மழைவிட்டுது..

அப்புறம் எல்லாம் வழக்கப்படிதான்.. அணைத்தும் நலமாகவே நடந்தது.. நேரில் வந்தும், தொலைப்பேசியில் அழைத்தும், தந்தி அடித்தும், ஈ-வாழ்த்து அனுப்பியும், மனதார வாழ்த்திய அனைவருக்கு.. நன்றிகள் பல..

--
#211