Tuesday, October 30, 2007

ஜகதி'யின் நவரசம்



உதயனானுதாரம் - படத்துல இருந்து ஒரு காட்சி. சமீபத்தில சிவா இந்த படத்தை பத்தி எழுதியிருந்தாரு.

படத்துல சூப்பர்ஸ்டார் ஆகிற ராஜப்பன் (எ) சரோஜ்குமார்'க்கு அவரோடடான்ஸ் மாஸ்டர் கம் மேனேஜர் 'பஷி'யா வர்ற ஜகதி நடிப்பு பத்தி சொல்லிகுடுக்கற மாதிரியான ஒரு காட்சி.. ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஒன்னும் சரியா வரலை.. இன்னைக்கு ஒரு ஃபார்வார்டா இந்த காடசி யூட்யூப்ல கிடைச்சுது. போட்டாச்சி.. :)

நவரசம் கேள்வி பட்டிருப்பீங்க.. இது ஜகதி கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா ரசம்' காட்டியிருப்பாரு.

பி.கு : ஜகதி - கவுண்டமனி'க்கு அப்புறம் நான் அதிகம் விரும்பற காமெடியன்.

Tuesday, October 23, 2007

யாரும் இதை படிக்காதீங்க..!!


இங்க உருப்படியான விஷயம் எதுவும் இல்லீங்க.. அதுனால மேற்கொண்டு இந்த பதிவை படிக்காதீங்க..


அட.. அதுதான் சொல்றனிலலைங்க.. இது ஒன்னும் பெரிய சுவாரசியமான எழுத்தில்லீங்க..யாரும் இதை படிக்கறதுமில்லை, இதை படிக்கனும்னு நினைக்கறதுமில்லீங்க. இதை படிக்கறதுக்காக உங்க பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க..அய்யோ நான் சொல்றத ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கரீங்க, படிக்கதீங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க இன்னும் படிச்சுட்டே இருக்கறீங்க.. எனுங்க, உங்க நேரத்தை இப்படி ஒரு உதவாக்கரை விஷயத்தை படிக்க செலவு செய்யரீங்க?. எப்படி இந்த மாதிரி ஒரு வெட்டியான விஷயத்தை உங்க மனசு ஏத்துக்குது? உங்களுக்கே தெரியலையா, இது வெறும் குழப்பமான, ஆகாவலி விஷயம்ன்னு?..அட போங்க நீங்க ஒன்னும் கேக்குற மாதிரி இல்லை, நான் உங்களுக்காகத்தான் இவ்ளோ சொல்றேன், உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், இதையெல்லாம் படிக்கதீங்க. தயவு செஞ்சு வேண்டாங்க. இது சுத்தமா ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத, ஒரு அர்த்தமும் இல்லாத குப்பை, இதைப்போய் எதுக்கு இப்படி நான் சொல்ல சொல்ல படிக்கறீங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது போங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு விடாம இன்னும் இதை படிச்சுட்டே இருக்கறீங்க.


ஓ!! நீங்க யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ரொம்ப அடம்புடிக்கிர ஆளு போல, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேங்கரீங்க, நான் சொல்றத காதுலயே போட்டுக்க மாட்டீங்க போல??.. இது உன்மையிலயே படு முட்டாள்தனமுங்க, வடிகட்டுன கிறுக்குதனமுங்க..... சரி!!. எப்படியோ போங்க!!.. நான் எதுக்கு என்னோட உருப்படியான நேரத்தை இந்த மாதிரி ஒரு அளுகிட்ட வெட்டியா புத்திசொல்லிட்டு இருக்கனும், அதுவும் நான் சொல்றத கேக்கவே மாட்டேன்னு அடம் புடிக்கற ஆளுகிட்ட நான் எதுக்காக கெஞ்சிட்டு இருக்கனும், அதுனால, இத்தோட சரி, இனி நான் உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்லப்போறதில்ல்.. படிக்கறதுன்னா படிங்க.. உங்க இஷ்டம் அது... ஆனா எனக்காக ஒரே ஒரு சகாயம் மட்டும் செய்யுங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இதை படிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..

இது ஒரு ரிப்பீட்டு மொக்கை :)

Thursday, October 18, 2007

கற்றது தமிழ்

சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி ஐஸ்கட்டிகளுக்கு நடுவால முன்னாடி போட்டத விட சின்ன டவுசர் போடவிட்டு இடுப்புல் இடுப்புல சேர்த்திவச்சு ஒரு குத்தப்போடுறத விட்டுட்டு, இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..

நாலு வயசுல இருந்து தொடைய தட்டி 'சரிகமபத்நி' கத்துகிட்ட தினவுல ராஜா என்னைக்குத்தான் சுதி விலகாம பாடுவாரோன்னு பேசுன நம்ம சகா மூஞ்சிய பார்த்து "நல்ல" வார்த்தையா நறுக்குன்னு சொல்லிட்டு 'பறவையே எங்கு இருக்கிறாய்'ன்னு நாமளும் கண்ண திறந்துட்டே எங்கயோ பறக்கும் போதும் நல்லாத்தான் இருக்கு..

ஆனா, படம் எப்படின்னு கேட்டீங்கன்னு.. 'போடா லூசு'ன்னு தான் சொல்லனும்.

"அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்
பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து :-) ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று."
அப்படின்னு நம்ம ப்ரகாஷ் சொல்றாரு..

எனக்கு தெரிஞ்சு பராசக்தி காலத்துல இருந்து divided society ப்ரச்சனைய பத்தி எடுத்துட்டு தான் இருக்காங்க... இப்போ என்ன புதுசா.??? எதோ ஐடி'னால மட்டும் தான் இப்படிங்கற மாதிரி நிறையா பேரு எழுதறாங்க, பேசறாங்க.. என்னங்க இது அநியாயம்.. மொத்தமா இந்தியாவ எடுத்துகிட்டா.. சரி வேண்டாம், அது பெரிய ஏரியா.. தமிழ்நாட்டை எடுத்திகிட்ட.. சென்னை'ங்கிற ஒரு பெரு நகரத்துல தான் ஐடி மக்கள் இருக்காங்க.. கோவையில இருக்காங்க. அது ரொம்ப கொஞ்சம்.. மதுரையுல அதைவிட கொஞ்சம்.. இந்த மூணு ஊரையும் விட்டிருவோம்.. இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு தெக்கத்திகுக்கிராமத்த எடுத்துக்குவோம், (அது தான் இப்ப ஃபேஷன், சவுத்துல ஒரு வில்லேஜ்'ன்னு ஆரம்பிச்சா உடனே கோடம்பாக்கத்துல கதை சொல்ல வர சொல்றாங்களாம்.. ) அங்க இந்த மாதிரி சமுதாய பிரிவினை இருக்ககூடாதில்ல.. தினம் தினம் கோழியடிச்சு விருந்து வச்சு கொண்டாடுற விவசாயியும் உண்டு, வருசத்துல அறுபது எழுபது நாள் மட்டும் அரிசி கஞ்சி சாப்புடுற விவசாயியும் உண்டு, அவுங்க economicial status differece'க்கும் ஐடி தான் காரணமா?? என்ன சாமி இது அநியாயம், மாசம் பூராவும் நைட்ஷிப்ட் பார்த்து மாசக்டைசியில 20-25ரூவா சம்பளம் வாங்கி அதுல 10ரூ வாடகைய குடுத்துட்டு பாதிபணத்த ஊருல கூலி வேலைக்கு கூட போக முடியாம கிடக்குற குடும்பத்துக்கு அனுப்பற பலபேரை எனக்கு தெரியும். நானே கிட்டத்தட்ட ஒரு 15-20 பேரை "வெறும் டிகிரி வச்சுகிட்டு என்னங்க செய்யிறது"ன்னு லாரியில க்ளீன்ராவும், சந்தையில லாரிக்கு டோக்கன் போட்டுட்டும் இருந்த ஆளுகள கூட்டுட்டு வந்து BPO'ல தள்ளி விட்டிருக்கேன். அவுங்க வூட்ல எல்லாம் மூணு நேரம் இப்ப அரிசிச்சோறு சாப்பிடுறாங்க.. ஒரு நோம்பிநொடின்னா குடும்பமே சென்னைசில்க்ஸ் போயி நல்ல துணி எடுத்து போடுது. அவன் இங்க ஐடி'யில வேலை பார்க்கிறது தான் குத்தமா படுது உங்களுக்கு.. என்ன சிந்தனை கர்ம்மம்ங்க இது.

இதுல ":சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல்"
ன்னு வேற ப்ரகாஷ் சொல்றாரு.. கண்டிப்பா ஷங்கர் படத்துல சொல்ற தீர்வு எல்லாம் அபத்தம் தான், ஆனா அதே நேரத்துல

"B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு கேக்கிறதும் நீ மட்டும் உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிருக்கே, நான் பிஞ்ச செருப்பு போட்டிருக்கேன்னு, போயி சண்டை புடிக்கிறதும்" எந்த வகையில அபத்தம் இல்லைன்னு என்ககு புரியவே மாட்டேங்குதுங்க.

[ஷங்கர் படத்துல அவர் சொல்ற அபத்த தீர்வுகளாது ஒத்த மனுசன் மொத்த லஞ்சத்தையும் அழிக்கறதுங்கிற மாதிரி மேட்டர், நம்ம பய கவுந்தடிச்சு படுத்துட்டு கனவுல அதை செஞ்சு பார்த்துட்டு, காலையில எழுந்திருச்சு வழக்கம் போல வேலைய பார்க்க போயிடுவான்]

இந்த ஐடி'ங்கிற ஒரு வார்த்தை எனக்கெல்லாம் தெரியவர்றதுக்கு முன்னாடியே வெறும் pucயோ இல்ல +2வோ diplamoவாதான் படிச்சதுனால கடைவீதியில செட்டியார் கடையில கணக்குபுள்ளையாவோ, இல்ல லாட்டிரி கடையில போர்டு எழுதவோ இல்ல சிப்காட்'ல லேத்' ஓட்டவோ போன ஆளுகளுக்கும் டிகிரி முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி கவர்மென்டுலயோ, இல்ல பேங்க்லயோ, எல்.ஐ.சி'யிலயோ வேலைபார்த்தவங்களுக்கும் இடையே economical inequality இருந்துட்டு தான் இருந்துச்சு, 800ரூ/1000ரூ சம்பளம் வாங்கிற ஆளுக 7/8ஆயிரம் சம்பளம் வாங்கிறவங்களால ஏறிப்போன வீட்டு வாடகையும் காய்கறி விலையாலயும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தாங்க.. ஒவ்வொரு தடவை சம்பளகமிஷன் இப்பவும் அதே நிலமைதான்.. எதோ புதுசா ஐடி'ன்னு ஒன்னு வந்திட்டதால தான் இந்த நிலமைன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டிட்டு இருக்கம்னு தான் தோணுது.

Social inequalityங்கிறது தவறான அரசு கொள்கைகளும்ம், தனிமனித சுயநலமும் தான் காரணமா இருந்திருக்கு, இருந்திட்டிருக்கு.. ITன்னால மட்டும் புதுசா எதுவும் ஆயிடல.. 'எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்'னு டீசன்ட்டா சொல்லுவாங்க நம்ம சுத்துவட்டாரத்துல அந்த கதையா சும்மா சும்மா ஐடி'ய மட்டம் தட்டாம.. உருப்படியா எதாவது யாராவது செய்யுங்க.. மொத்த ஐடி சனமும் உங்களுக்கு உறுதுணையாத்தான் இருக்கும் :)

மொத்தத்துல முத்து சொல்ற மாதிரி
"இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்க"

இந்த பந்தா பகட்டெல்லாம் வேண்டாம்னா, தமிழ் படிச்சுட்டு, வாழ்க்கைக்கு (bread winning) எதாவது ஒரு கடையில பொட்டலம் கட்டிட்டு, தனக்கு புடிச்ச தமிழ் மேல நேசத்தோட நாலு பேருக்கு தமிழ் கத்து குடுத்துட்டு இருக்கனும். ஒரு வேளை தமிழே கூட க்ளிக் ஆயிட்டா அப்புறம் கவியரசு மாதிரி அதையும் வித்து பொழைக்கலாம்.. [BPO'ல சேர்ந்து பொட்டிதட்டிட்டு உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிகிட்டு இணையத்துல தமிழ் வளர்க்க கூட வந்திருக்கலாம்] அதை விட்டுட்டு இந்த படத்துல கூட நம்ம ஹீரோ சும்மா சுத்திட்டு ஊருக்கெல்லாம் கிடைச்சது நமக்கு ஏன் கிடைக்கலைன்னு ஒரு போறாமையால, சுயநலத்தால தான் இப்படி லூசுத்தனமெல்லாம் செய்யறது எல்லாம் நல்ல சிந்தனையுமில்ல வெங்காயமும் இல்ல.

Growing economical imbalance is not good.. ஆனா IT is not the (sole) reason for that..
நல்லா கவனிங்க 'Growing'.. இப்ப ஐடி வந்து தான் இதைய புதுசா உருவாக்கிடல.. நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நம்ம ஊருல இருந்திருக்காங்க..

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு 'அபத்தம்' தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

[ பொதுவா திருட்டு சிடி'யில படம் பார்க்கிறது இல்லைன்னாலும், ஒரு வாரம் முன்னாடி எத்தேசையா ஒரு சகா வீட்டு இந்த படம் பார்க்க கிடைச்சது.. பார்த்ததுமே எழுதனும்னு தோனுச்சு.. ஆனா எப்படியோ தள்ளிப்போயிருச்சு. நேத்து வேலையிடத்துல ஆணி கம்மியானதுல சட்டுன்னு எதோ தோணி, கூட இருந்து ரெண்டு தடியனுகள கூட்டிட்டு பார்டர் தாண்டி ஒசூர்ல படத்த போயி பார்த்துட்டு வந்தாச்சு, அதுனால சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்.. மன்னிக்கறவன் மனுசன்.. மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுசன்னு விருமாண்டி கூட சொல்லியிருக்காரு.. மனுசனா நடந்துக்கங்க, ஆமா :) ]

--
#251

Monday, October 15, 2007

முதன்முறை வாழப்பிடிக்குதே..


பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..
அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..

பார்க்கும் திசைகளெல்லாம்..
பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

உன்னோடு நானும்.. போகின்ற பாதை
இது நீளாதோ, தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்
இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே..
இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..



பாடல் : நா.முத்துகுமார்
இசை : யுவன்சங்கர் ராஜா
குரல் : இளையராஜா
படம் : கற்றது தமிழ் (தமிழ் M.A.)
[பாடல்கேட்க]


pics : http://www.copperpress.com

--
#250

Wednesday, October 10, 2007

ஹாசினி - திரைப்பார்வை

தியோடர்'சார் அவரோட கட்டுரைகள்ல ரெண்டுமூணு இடத்துல சொல்லியிருப்பாருங்க. "தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லைன்னா அதுக்கு முக்கிய காரணம் சரியான விமர்சகர்கள் இல்லாதது தான்.. இன்னும் நம்ம, படத்தின் ஹீரோ விஜய் அவரோட காதலி அசினின் அப்பாவாகிய குமாரிடம் சென்று.. அப்படின்னு நடிகநடிகையர முன்னிலைப்படுத்திதான் இருக்குது" அப்படிங்கற மாதிரி.. அது எவ்ளோ தூரத்துக்கு சரியோ தெரியலைங்க.. நமக்கு சினிமா விமர்சனம்ங்கிறது எந்த வகையில பார்த்தாலும் சினிமா பார்க்கிற மாதிரியே புடிச்ச சமாச்சாரமாத்தான் இருக்குது.. சும்மாவா, பள்ளிக்கூடத்துல விளாட்ட்டு பீரியட்ல எவனாவது ஒருத்தன் முதநாள் சாய்ங்காலம் கொட்டாயில பார்த்த ரஜினி படத்துல அவர் எத்தனை குட்டிகரணம் போட்டு வில்லன, சில நேரத்துல சைட்-வில்லன, எப்படி உதைச்சாருன்னு விவரமா சொல்லுவான், அதை வாயப்பொழந்து கேட்டுட்டு விளையாட கூட போகாம இருந்த கூட்டத்த சேர்ந்தவஙக் தான நம்ம எல்லாம்.

கொஞ்சம் வயசு வந்த காலத்துல நமக்கு சினிமா விமர்சனம்ன்னா விகடன்ல மதன் எழுதறது தான் வேதவாக்கு.. அதுவும் மகாநதிக்கு 'காட்டாற்று வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்த கமல் மகாநதியாய் உருவெடுத்திருக்கிறார்'ங்கிற மாதிரி ஆரம்பிச்சு 65 மார்க்கோ என்னமோ குடுத்ததுல இருந்து சினிமா விமர்சனம்னா அது மதன் தான்னு ஆயிப்போச்சு.. அவரும் சில நேரத்துல சொதப்பி வைக்கிறது உண்டு.. 'அருணாச்சலம்' படத்துக்கு விமர்சனம் எழுதுனப்ப எல்லாம்.. 'யூ டூ ப்ரூட்டஸ்'ன்னு தான் தோனுச்சு.. ஆனாலும் விகடன்ல 40'க்கு மேல மார்க் இருந்த தகிரியமா போலாம்னு ஒரு பெரிய நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா, அவுங்களும் நடிகன்' டப்பா படம்ன்னாங்க.. மக்கள் அதைய பெரிய ஹிட் ஆக்கிடாங்க.. நமக்கும் புடிச்சு தான் இருந்துச்சு. :)

இப்ப பாருங்க.. சமீப காலத்துல விகடன் எல்லாம் வாங்கறதேயில்லை. ஓசியில இணையத்துல குமுதம் ரிப்போர்டர் படிக்கறதோட சரி..:) "அட்டைய பிரிச்சுட்டு படிச்சு பார்த்தா, எது எந்த புஸ்தகம்னே தெரியலையே நண்பா"ன்னு சொல்லுவான் நம்ம சகா ஒருத்தான்.. இப்பவெல்லாம்.. நம்ம விமர்சனத்தேடல்(!) இணையத்துலயும் டீ.வி. பொட்டியிலயும் தான்..

முகத்துல எந்த உணர்ச்சிமாற்றமும் இல்லாம, நம்ம இளையதளபதி நடிப்பு மாதிரி, ஒரு அக்கா சூரியடீ.வில விமர்சனம் செய்ய்வாங்க.. பல நேரம் பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கும், நடுவால அப்பப்ப அவிங்க காமிக்கற வடிவேலு க்ளிப்பிங்க்ஸ்க்காக அதைய பொறுத்துக்கலாம்ன்னா.. முடிவுல தியேட்டர் வாசல்ல போயி நம்ம மக்கள் கிட்ட மைக்க நீட்டி கருத்து கேப்பாங்க பாருங்க, அது சுவாரசியமா இருக்கும், மைக் கிட்ட எட்டி வந்து 'சூப்பரு'ன்னு ஒரு சில்வண்டு கத்தும், இன்னொருத்தர் அம்பது வயசுல புதுசா வயசுக்கு வந்த புள்ளை மாதிரி வெக்கத்தோட கேமராவ பார்த்து சிரிச்சுகிட்டே நழுவுவாரு, ஒருத்தரு உணர்ச்சிவசப்பட்டு மைக்க புடுங்கி "அற்புதம், அதிசியம்"னு நம்ம 'பொள்ளாச்சி ரயில்வேடேசனை காப்பாத்த வந்த புதுதெய்வம்' வைகோ மாதிரி நரம்பு புடைக்க உணர்ச்சிகரமா பேசுவாரு, பின்னாடி ஒரு புள்ளை துப்பட்டாவுல மூஞ்சிய மூடிட்டு அழுக்கு ஜீன்ஸ் போட்ட பையன் முதுகுபக்கமா ஒதுங்கும்.. நம்ம எஸ்.ஜே.சூரியா படத்த விட அந்த கருத்து கேக்கிற பார்ட்டு தான் படு சுவாரசியமா இருக்கும். அப்புறம் ராஜ்'ல ஜெ'லன்னு வரிசையா ஒரு விமர்சனமும் விளங்கல.. எல்லாம் எழுதி குடுக்கிற ஸ்க்ரிப்ட்டல வர்ற ஒவ்வொரு அரைப்புள்ளி, முழுப்புள்ளிக்கும் ஒரு புன்னகைங்கிற ஒரே ஒரு தியரியோட பார்த்து படிக்கிற விமர்சன்மாத்தான் இருந்துச்சு.. அடப்போங்கய்யான்னு இருந்தா, அப்புறம் விஜய்'ல வந்தாரு மதன்.. ஓகே.. பழைய விகடன் விமர்சனம் படிச்ச திருப்தி, அப்போ நடக்கிற மாதிரியே இப்பவும் அப்பப்போ சில வழிசலான சொதப்பல்களும் உண்டு..(அதுவும் இயக்குனர் - நடிகர் ப்ரவீன்காந்த்'கிட்ட பேசுனது எல்லாம்.. சரி விடுங்க.. இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் தான்). டீ.வி.டி அறிமுகம் எல்லாம் குடுக்கறாரு.. நம்ம அம்மணி தான் ஞாயித்து கிழமையானா காலையில விஜய் டீ.வி பார்த்துட்டு உடனே போயி அந்த டீவிடிய எடுத்துட்டு வந்து நம்ம செய்யுற அழிச்சாட்டியத்துக்கு எப்படி முடிவு கட்டறதுன்னு தீவிரமா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கறா. :)

வழக்கம் போல சொல்ல வந்த சமாச்சரத்த விட்டுட்டு எங்க எங்கயோ போயிட்டேன்.. இப்ப புதுசா ஜெ'ல நம்ம சுஹாசினி மணிரத்னம் வர்றாங்க.. ஹாசினி திரைப்பார்வை'ன்னு (தான் மீடியாவுக்கு அறிமுகப்படுத்தின தன்னோட தங்கச்சி அனு' டீ.வி'யில கலக்குறாங்களேன்னு இவங்க அவசரமா வந்த மாதிரி இருக்குது). எழுதி குடுத்தத படிக்கிற விமர்சணங்கள விட இவுங்க செய்யுற விமர்சனம் தான் சொதப்பலோ சொதப்பலா இருக்கு.. எதுக்காக இப்படி டிரெஸ்ன்னு தெரியல.. எனக்கு அதைய பார்த்தாலே எரிச்சலா இருக்கு :).
பல நேரத்துல அது சினிமா விமர்சனம் செய்யுற நிகழ்ச்சியா இல்ல, பெரிய டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ தன்னோட புள்ளைக்கு இது தெரியும், அது தெரியும்னு ஒரு விசிட்டிங்கார்ட்டா ஒரு படம் எடுத்து தருவாங்களே, அந்த மாதிரி தனக்கு சினிமாவுல எல்லாம் தெரியும்னு சொல்றதுக்காக நடத்துற நிகழ்ச்சி மாதிரித்தான் இருக்கு..

பள்ளிக்கூடம் படம் விமர்சனம், அதுவும் தவளை தங்கர் கிட்ட நேர்முகம்னு வேற சொன்னாங்க, நமக்கு பழைய தமிழன் கொம்பு எல்லாம் மனசுக்குள்ளார வந்து, அடிச்சு புடிச்சு போயி பார்த்தா, அது பள்ளிகூடம் படத்த விட சப்'புன்னு ஆயிருச்சு.

மொத்தத்துல நிறைய எதிர்ப்பார்ப்பை ஆரம்பத்துல குடுத்துட்டு சப்பை நிகழ்ச்சியா போற லிஸ்ட்ல சேர வேண்டிய நிகழ்ச்சி இது.. ஒரு பெரிய படைப்பாளிக்கு மனைவி, சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம், பெரிய இயக்குனர் அறிமுகப்படுத்தினது.. இதெல்லாம் மட்டுமே விமர்சனம் செய்ய தகுதி குடுத்திருமா என்ன?.. ச்சும்மா ச்சும்மா நேம் ட்ராப்பிங்.. 'சீனி-கம்' படத்துக்காக அமிதாப் கிட்ட பேசும்போதெல்லாம்.. வீடாப்போச்சுங்க, தியேட்டரா இருந்தா நல்லா நாலு வார்த்தை சொல்லி கத்தியிருப்பேன்..

ம்ஹும். நமக்கு மறுபடியும் மதன'யும் இணையத்தையும் விட்டா வேற வழியில்லை.

--
#249

Tuesday, October 9, 2007

எனக்கு 'ஹேப்பி பர்த்டே ' :)

மூணு நாளு மாசம் முன்னாடியிருந்தே எனக்கு 'ஹேப்பி பர்த்டே வருது'ன்னு ஊரெல்லாம் சொல்லி திரிஞ்சுட்டு இருந்தது ஒரு காலம்.. புரட்டாசி கடைசியில வர்ற அந்த கிரகத்துக்கு நம்ம வூட்ல 'ஆடி தள்ளுபடி'யில ஒப்பனக்கார வீதியில அங்கராக்கு வாங்கிட்டு வந்துருவாங்களா, அப்ப இருந்து பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் 'எனக்கு ஹேப்பி பர்த்டே வருது' புராணம் தான்.

'க்வீ'பாலீஷ் பளபளக்க பாட்டா ஷூ போட்டுட்டு, முதுகுல புத்தகபொதியும், ஒரு கையில சாப்பாட்டு பையும், மறுகையில முட்டாய்பொட்டியுமா பள்ளிக்கூடம் போயி பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் எனக்கு ஹேப்பி பர்த்டே'ன்னு சொல்லி முட்டாயி குடுத்து, ரெண்டு மூணு முட்டாய் எடுத்துக்கிற மிஸ்'கள எல்லாம் மனசுகுள்ளாரயே திட்டிகிட்டு, இன்னைக்கு பூராவும் யாரும் நம்மள 'ஷோ யுவர் ஹான்ட்'ன்னு 'ஸ்டிக்' எடுக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல க்ளாஸ் லீடர் பேர் எழுதிவச்சாலும் பரவாயில்லைன்னு பக்கத்துல உக்காந்திருக்கிற சிவா'னையும், சுதா'வையும் வம்பிழுத்து பேசிகிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு போறதுகுள்ளார தீர்ந்துட போகுதுன்னு முட்டய் போட்டியில இருந்து ஒரு கை அள்ளி புத்தக பையில போட்டு வச்ச சரக்க அப்ப அப்ப தொட்டு தொட்டு பார்த்துட்டே சந்தோசமா போயிடும் ஒரு நாள் முழுசும்..

அப்புறம் ஒரு காலத்துல ஆடித்தள்ளுபடியில ஓடிப்போயி வாங்க வேண்டியதெல்லாம் இல்லாம என்னைய கூட்டிட்டு போயி புடிச்ச மாதிரி கோட்டும் டையும் 'பிங்கி ரெடிமேட்ஸ்'ல எடுக்கிற காலத்துல தான் புதுசா சாயங்கால நேரத்துல காலனியில சுத்துற எல்லா குரங்குளையும் கூப்பிட்டு 'ப்ரெட்டிஹவுஸ்'ல ஆர்டர் செஞ்ச கேக்கு மேல மெழுகுவர்த்தி எல்லாம் கொளுத்தி வச்சு அப்புறம் அதை ஊதி அணைச்சுட்டு கேக் வெட்டுற சடங்கெல்லாம்..

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வயசு ஏற ஏற, 'வயசு ஏற ஏற அறிவு ஏறும்னு' நாலு பேரு சொன்னதுல, நம்மளா நமக்கு அறிவு வந்திருச்சுன்னு நினைச்சுகிட்டு, பொறந்தநாளும் அதுவுமா இதென்ன ஊதி அணைக்கிற பழக்கம்னு 'வெவரமா' பேசி புரட்சியா கெளம்பி 'அன்னை இல்லத்து'க்கு போயி டொனேசன் ரசீது வாங்கிட்டு வந்திட்டிருந்தேன்..

இன்னும் கொஞ்சம் வயசு ஏறிப்போயி பொறந்தநாள் அன்னைக்கு வூட்ல இருக்க வேண்டியதில்லைன்னு ஆனதுக்கப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு புரட்சி பீர்பாட்டில்ல பொங்கிவர ஆரம்பிச்சுது..

மெதுமெதுவா.. நம்ம பொறந்த நாள நம்மளே கொண்டாட கூடாது, நம்மள சுத்தி நாலு பேரு அதை ஞாபக வச்சு கொண்டாடனும்னு தத்துவம் பேசிட்டு திரிஞ்சது சமீபகாலம் வரைக்கும்.. இன்னும் அப்படித்தான் நெனச்சாலும்.. 20 வருசம் முன்னாடி இருந்த கதை தான் இன்னைக்கும் ரிப்பீட் ஆகுது.. என்ன முன்ன நானே போயி ஊரெல்லாம் எனக்கு 'ஹேப்பி பர்த் டே'ன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இப்போ அந்த வேலைய எனக்கு பதிலா 'ஆர்க்குட்' செய்யுது :)

'வாழ்த்து சொன்ன சங்கத்து சிங்கங்களுக்கு, நண்பர்களுக்கும் நன்றி..