Monday, October 13, 2008

,

,

ஊர் நிலவரம்

ஊர்ல யாருகிட்ட பேச்சுகுடுத்தாலும் பவர்கட் சமாச்சாரம் தான் டாபிக்.. யூ.பி.எஸ் போட்டாச்சா? எதோ பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடிச்சாச்சாங்கிற மாதிரி கேக்கறாங்க.. ரெண்டு வருசம் முன்னாடி 8500ரூபா கேக்கராங்கன்னு அதெதுக்கு வெட்டியா, சிஸ்டத்துக்கு மட்டும் இருந்தா போதும்னு விட்டாச்சு.. இப்போ 20ஆயிரம் கேக்கிறாங்க.. ஓகே ரைட்டு, வந்து மாட்டிருங்க'ன்னா.. பதினஞ்சு நாள் ஆவும்ங்க.. ஒரே டிமான்டு'ன்னு பதில்வருது.. சரி சீக்கிரம் எப்படியாவது செய்யுங்கன்னு சொல்லியிருக்கு. அது வரைக்கும் தாங்கனும் எப்படியாவது..

ஷெட்யூல் போட்டு தாக்குறாங்க.. போன வாரம் வரைக்கும் ராத்திரி 12-1.30 வரைக்கும் இல்ல.. இந்த வாரம் காலையில 4.30-60 வரைக்கும், பாவம் படிக்கற புள்ளைக, ஒழுங்க தூங்கனும்.. அப்புறம் தான எந்திருச்சு படிக்கறது எல்லாம். ம்ம் எல்லாம் நம்மள மாதிரி அலாரம் வச்சு எந்திருச்சு மொட்ட மாடி லைட்ட போட்டுவிட்டு தூங்கியே படிச்சதா பேரு பண்ணிக்க முடியுமா, இன்னைக்கு அம்மாக்க எல்லாம் உஷாரா இருக்காங்க.. கூடவே வந்து உக்காந்துக்கறாங்களாம்.

"பகல் கூட பரவாயில்லை, ராத்திரியில ரெண்டு மணி நேரம் எல்லாம் ரொம்ப ஓவர்"ப்பான்னு எதார்த்தமா சொன்னேன், "உனக்கென்ன, மாசம் ரெண்டு தடவை வந்துட்டு ஓடிருவ, இங்க தொழில் செய்யரவனுக்கு தான் தெரியும் கதை"ன்னு ஆரம்பிச்சு கொட்டி தீர்த்துட்டான் கூட வந்த ஒரு தொழிலதிபர் சகா. "ஒரு நாள் ஆள் கூலி குடுத்தா வேலை செய்ய மூணு மணி நேரம் தான் கரண்ட் இருக்கு.. 300 பீசு ரெடியாகனும் பாம்பே ஆர்டர், இவனுக எல்லாம் என்ன கவர்மென்ட் நடத்துறானுகளோ, சரி மெஷ்ன் ஓடாத நேரம் கவர்மென்ட் வேலைய முடிக்கலாம்னு டாக்ஸ் ஆபீஸ் பக்கம் போனா,  எல்லாம் கம்ப்யூட்டர் மயம் செஞ்சாச்சு, அதுனால கரண்ட் இருக்கும் போது வாங்கன்னு வாசலோட அனுப்பிடுறாங்க.."ன்னு ஒரு மணி நேரம் திட்டி தீர்த்தாரு.. "கேரளாவுல பாருங்க இந்த பவர்ஷெட்டிங்'கெல்லாம் ஒண்ணுமே கிடையாது" - தோழர் ஒருத்தர் பெருமையா சொன்னாரு.. நம்ம உள்ளூர் தொழிலதிபர் கடுப்பாகி.. "ஆமா, அங்க என்ன தொழில் செய்ய விடறீங்க.. பூராப்பயலையும் கொடியபுடிச்சு தொரத்திருங்க.. எல்லாரும் இங்க பார்டர் தாண்டி வந்து தொழில்செய்யறான்.. அதான் இங்க பத்தாகுறையா இருக்கு"  பத்து நிமிசம் முன்னாடி இதே தொழிலதிபர் பேசுன பேச்ச நினைச்சா.. ம்ம்.. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு.

"ஆயிரம் சொன்னாலும் கேரளாக்காரம் வேக்யானமானவன் தான்.. இத்தனை வருசமா பொள்ளாச்சி ரயில்வே மதுரைக்கு கீழ தான் இருந்துச்சு, என்னத்த கழட்டுனாங்க.. இப்போ பாருங்க கேரளாவூக்கு தள்ளி விட்டதும் அவுங்க வந்து ப்ராட்கேஜ் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. ஒட்டஞ்சத்திரம், பொள்ளாச்சி சந்தைகளும் பழனிக்கு வர்ற பாலக்காட்டு கூட்டமும் அவங்களுக்கு சவுரியமா தெரியுது -   அங்க எதாவது ஒன்னு இலவசமா தர்றானா.. இங்க 1300கோடி சம்ஸ்டேஷன் வேல மூணு வருசமா பெண்டிங், ஆனா 6500கோடி செல்வௌ செஞ்சு டி.வி பொட்டி குடுக்கறாங்க.."தோழர் அடுக்கிட்டே போனாரு, சரி வெளியூர் கதைய விடுங்கப்பா, நம்மூர் கதையே ஆயிரமிருக்குன்னு ஒரு வழியா முடிச்சு வைச்சேன்.

ஆற்க்காடு வீராஸ்வாமிய தான் இன்னைய தேதிக்கு தமிழகத்தின் கெட்ட வார்த்தைன்னு நினைக்கிறேன், அந்தளவுக்கு மரியாதை அய்யா பேர சொன்னாலே :) தயாநிதிய தூக்கினப்போ சில சில்பான்ஸுக "அய்யகோ எல்லாம் போச்சே"ன்னு அலறுனதும், அறச்சீற்றம் கொண்டு எழுந்து "மந்திரி என்னையா மந்திரி, எல்லாம் சீஃப் செக்ரட்டரி தான்"னு சொன்னவங்க கூட இன்னைக்கு அதிகாரிகளவிட்டுட்டு ஆற்க்காட்டார தான் காரணம் காட்டிட்டு இருக்காங்க.. பாவம்.

பேசிகிட்டே "கத்திகப்பல்" ஓடுற தியேட்டர் பக்கம் வந்துட்டோம்.. அந்த தியேட்டர்ல நம்ம எப்பவும் டிக்கெட் வாங்கறதில்லை, அய்யன் சிநேகிதம், "மணிரத்னம் அசிச்டெண்ட்டாம், போலாமா?"ன்னு தொழிலதிபர் கேட்டதும், சரின்னு உள்ள போனோம், உள்ள நுளையும் போதே எதோ தப்பா தெரிஞ்சுது, ஒரு பரபரப்பே இல்ல, ஒரு நா முன்னாடி தான் படம் ரிலீஸுன்னாங்க.. தியேட்டர் மேனேஜர் வெளிய நின்னிகிட்டிருந்தாரு,  "எப்படின்னே? பார்க்கலாமா?" .. சிரிச்சாரு.. "மார்னிங்ஷோ ஒரு ஆள் கூட வரலை.. இப்போ ரெண்டு டிக்கெட் குடுத்திருக்கோம், மூணாவதா நீ வந்திருக்கே".. 40 வருட தியெட்டர் வரலாற்றில் முதல்முறையாக ஒரு புது ரிலீஸ் படத்துக்கு, ரெண்டாவது நாளே இந்த கதியாம்..  ஆஹா சாமி ஆள விடுங்க, அந்த பாவத்தை வேற நான் சுமக்கனுமான்னு ஒடியாந்துட்டோம்.

பொட்டி தட்ட திரும்ப கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன்'ல நின்னோம், வழக்கம் போல ஐலேண்ட் லேட்டு தான், ஆனா இன்னைக்கு அரைமணி நேரம் தான் டிலே.. ப்ளாட்பாரத்துல ஐபாடும், செல்ஃபோனுமா சிணுங்கிட்டு இருந்தவங்கள வேடிக்க பார்த்துகிட்டே சுத்தறப்போ, 10.30 மணிக்கு சரியா பவர்கட், ஒரு நிமிசம் இருட்டாகி, பேட்டரி லைட்டுக மறுபடியும் வெளிச்சம் கொண்டுவந்துச்சு.. கூட வந்த சகா சொன்னான் "இப்படி பவர் கட் ஆச்சுன்னா அப்புறம் ரயில் எல்லாம் எப்படி நேரத்துக்கு வரும்?" .. "உனக்கெல்லாம் எவன்டா அத்தாப்பெரிய கம்பெனியில மேனேஜர் போஸ்ட் குடுத்தானுக"ன்னு கேட்டேன், விடலையே அவன்,  மறுபடியும் கேட்டான் "கரெண்ட் போனா உடனே டீசலுக்கு மாத்திக்குவாங்களோ"..  ஸ்ஸப்ப்பா.. ராமா, என்னை ஏன்தான் இப்படிபட்ட ஆளுக கூடவே கூட்டு சேர்த்தரயோ..

Tuesday, October 7, 2008

♫ ஆண்பாவம் - கொல்லங்குடி கருப்பாயி ♫


கூத்து பார்க்க அவரு போன.. தன்னானேனானே..
கோடி சனம் கூட வரும் தில்லேல்லேலேலே

ஆத்து பக்கம் அவரு போனா தன்னானேனானே..
ஆதவன் கொடப்புடிக்கும் தில்லேல்லேலேலே

திருப்பதில நிப்பாரு பாரு தன்னானேனானே..
அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவரு பேரு தானே ..

பாட்டு கேக்க

Friday, October 3, 2008

கருத்து

வழக்கமா மாசம் ரெண்டு தடவை வந்து போகும் அதே ஏசி செமிஸ்லீப்பர் பஸ்.. 10.00 மணி'க்கு கிளம்பறதா டிக்கெட்டுல போட்டிருப்பாங்க, வழக்கமா 10.30க்கு தான் வண்டி கிளம்பும், அன்னைக்கு அதிசியமா 10.05'க்கு எல்லாம் கிளம்பிருச்சு. பெங்களூர் ட்ராஃபிக் தெரியும் தான, பொம்மனஹள்ளி போயி சேரவே 40 நிமிசம்.. அங்க தான் பெரும்பாலும் நம்ம பொட்டி தட்டுற மக்கள் எல்லாம் ஏறுவாங்க.. பொம்மனஹள்ளி'யில பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது பார்த்து, பழகி.. இப்போ ஐப்பசி'ல கல்யாணம்.. ஒரு சகா'க்கு.. ஆனா இந்த பதிவு அதை பத்தி இல்லை. :)

பொட்டிதட்டுற மக்கள் எல்லாம் ஏறி, கூகிள் உதவியில்லாம டிக்கெட்ல இருக்கிற சீட்டு நம்பர ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு குழப்பி குழம்பி, ஒரு வழியா உக்காந்து.. வண்டி  எடுச்சாச்சு..

ஒசூர் தாண்டி ராயக்கோட்டை வழியா விட்டுட்டானுக அன்னைக்கு.. ஹைவேஸ்ல ரோட்டு வேலை நடக்கறதால, பெரும்பாலும் அந்த வழி தான் இப்போ எல்லாம்.. முன்னாடி சீட்டுல உக்காந்திருந்த தலைவர் நல்லா தலை வரைக்கும் கம்பிளிய போர்த்திகிட்டு தூங்கியாச்சு..  ஆனாலும் அவர் மொபைல் ஹெட்போன்ல இருந்து பாட்டு எனக்கு நல்லாவே கேக்குது..

திடீர்னு தூக்கம் கலைஞ்சிருச்சு..  எனக்கு ஒரு பழக்கம், வண்டி நிக்கும் போது தூங்க முடியாது.. மூவிங்ல இருந்துட்டா ஓகே.. ஆனா நின்னுட்டா தூக்கம் கலைஞ்சிரும்..  ஏசி பஸ் வேறைங்களா.. ஜன்னல திறக்கவும் வழி இல்ல.. வெளிய இருட்டுல நிறைய வண்டி நின்ன மாதிரி இருந்துச்சு.. சரி  எதோ ட்ராஃபிக் போல'ன்னு மறுபடி தூங்க முயற்ச்சி செஞ்சேன். ஒரு அரை மணி நேரம், தூங்கவும் முடியல.. வண்டியும் நகரலை.. மெதுவா எந்திருச்சு யார் தூக்கத்தையும் கலைக்க கூடாது இல்ல.. முன்சீட்டு தலைவர் வேற லைட்டா குறட்டையோட சுகமா தூங்கறாரு..

வண்டிய விட்டு இறங்குனா. எதோ மெப்கோ'க்கு போறா சரக்கு லாரிபோல.. நடு ரோட்டுல தலைகீழா பார்க் ஆயிருந்துது.. நம்ம மக்கள் வழக்கம் போல. ரிக்கவரி வேன் கூட ஸ்பாட்டுக்கு வர முடியாத மாதிரி ரெண்டு பக்கமும் வண்டிய போட்டுவச்சுட்டு நின்னிருந்தாங்க..  இவனுகள திருத்தவே முடியாது.. சரியா நாலுமணிநேரம்.. ஒரு வழியா மேட்டுர்ல இருந்து  க்ரேன் வந்து, இழுத்து போட்டு, தாறுமாரா நின்னிருந்த வண்டிகள  எல்லாம் ஒழுங்கு பண்ணி.. வண்டி கிழம்புறதுக்குள்ள நமக்கு போதும் போதும்னு ஆயிருச்சு.. சும்மா நின்னு டிரைவர் கிட்ட வாங்கின 'ஸ்மால்'ஊதிட்டு வேடிக்கை பார்க்கவே..

வண்டி எடுத்ததும் சீட்டுக்கு வந்தா.. முன்சீட்டு தலைவர் ஆனந்த சயனம்.. ஹெட்ஃபோன் காதுல இருந்து நழுவி வெளிய தொங்குது.. கொடுத்து வச்சன்னு நினைச்சுகிட்டேன்..

வழக்கமா 7 மணி வாக்குல பொள்ளாச்சி கொண்டு போயி சேர்த்துவாங்க.. இன்னைக்கு இங்கயே நாலு மணிநேரம் லேட்டு..  எப்படியும் மதிய சோத்துக்கு தான் நினைச்சுகிட்டே தூங்கி போயிட்டேன்..

காலையில ஒரு 6.30 மணிக்கு தூக்கம் கலைஞ்சு பார்க்கும் போது திருப்பூர நெருங்கிட்டு இருந்துச்சு வண்டி.. பரவாயில்ல அடிச்சு ஓட்டிட்டு வந்துட்டார் போலன்னு.. சந்தோசப்பட்டுகிட்டேன்..

மணி 7.20. திருப்பூர்ல எறங்கவேண்டிய ஆளுக எல்லாம் இறங்கியாச்சு.. டிரைவர் எதோ இன்வாய்ஸ் பேப்பரோட கீழ இறங்கி நின்னுட்டிருக்காரு.. மொத்தமா திருப்பூர்ல வண்டி நின்னே ஒரு 3 நிமிசம் தான் இருக்கும்..  அப்பத்தான் முன்சீட்டுக்காரர் செல்ஃபோன் அலறுச்சு..  எதோ ஒரு mp3 ரிங்டோன்.. தடாபுடான்னு தூக்கம் கலைஞ்சு  எந்திருச்சு கம்பிளிய விலக்கி.. ஹெட்ஃபோன கழட்டி, தடவி, ஒரு வழியா பட்டன அமுக்கி பேசுனாரு.. பாவம் நல்ல தூக்கத்துல இருந்தாரு போல..

எல்லாம் வூட்ல இருந்துதான் போல..   7 மணிக்கெல்லாம் வந்திரவேண்டிய வண்டி இன்னும் வரலைன்னு கூப்பிட்டுருப்பாங்க, தலைவர் ஸ்க்ரீன விலக்கி வெளிய எட்டி பார்த்தாரு, சுத்தி முத்தி பதட்டமா பார்த்தாரு.. அப்புறம் போன்ல ஒரு கருத்து சொன்னாரு பாருங்க.. " இந்த கருமம் புடிச்ச வண்டில வந்தாலே இப்படித்தான், அங்க அங்க நிறுத்தி வச்சுக்குவான்..  இப்போ திருப்பூர்ல நிறுத்தி வச்சிருக்கான்.. டிரைவர வேற காணோம், அதுக்கு தான் நான் இந்த வண்டில வர்றதே இல்ல.."ன்னு ஆரம்பிச்சு..அப்புறம் அதுக்குமேல எனக்கு ஒன்னுமே கேக்கல..

பயபுள்ளைக எப்படியெல்லாம் 'கருத்து சொல்றானுக..

நாலுமணி நேரம் ஒரே இடத்துல நின்னும்.. சமாளிச்சு ஓட்டி ரெண்டுமணி நேர டிலே'ல கொண்டுவந்துட்டிருக்காங்க.. இவரு சூப்பரா தூங்கிட்டு, சட்டுன்னு எந்திருச்சு ஒரே நிமிசம் வெளியபார்த்துட்டு போட்டு தாக்குறாரு..