Tuesday, March 4, 2008

முதுமை!!



பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுகுள்ளே சொர்கம் இருக்கு
அட சின்னச்சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்திற்க்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும்கண்ணே காசு பணம் என்னத்துக்கு

அந்த விண்ணில் ஆனந்தம்.. இந்த மண்ணில் ஆனந்தம்
அடிப்பூமிப் பந்தில் முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்- அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவி என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்
என் காது வரைக்கும் கம்பிளி போர்த்தும் கருனை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்..

--

சில நாளாவே பொட்டியில உறங்கிகிடந்த படம் இது.. ஒரு மந்தமான ஞாயிறு மதியானம் கோபால்சாமிபெட்டா'வில் எடுத்த படம்.
இப்படி தனியா விட்டுட்டு தூரதேசம் போயிட்ட புள்ளைகள பத்தி பேசிட்டிருக்காம.. " பழைய நினப்புடா பேராண்டி.. பழைய நினப்புடா"ன்னு சிறு வயசுல தனியா யாருக்கும் தெரியாம குளக்கரையில உக்காந்திருந்தத பத்தி தான் அவுங்க பேசிட்டிருந்திருக்கனும்னு விரும்பறேன்....

--
#265