Tuesday, October 17, 2006

அழைப்பு __/\__

All Men are not fools..
some are not married

நான் அடிக்கடி போட்டுகிட்டு திரியும் டீசர்ட் ஒன்னுல இருக்கிற வாசகம் இது. இனிமேல் இதெல்லாம் போட்டுக்க அனுமதி கிடைக்குமான்னு தெரியலைங்க.. :)




மக்களே, சில பல அலுவல் வேலைகளுக்கு மத்தியில சிக்கி சுழன்று ஓடிக்கிட்டு இருக்கிறதால, நான் நினைச்ச மாதிரி உங்க ஒவ்வொருத்தருக்கும் தனிதனியே அழைப்பு வைக்க முடியலைங்க. அதுனால, இங்க, உங்ககிட்ட எல்லாம் நான் அறிமுகமான இதே பதிவுல என்னோட அழைப்பை வச்சிடுறேன்.


உங்களின் வாழ்த்துக்களையும் வரவையும் நட்புடன் எதிர்பார்க்கும்
~கொங்குராசா

Monday, October 16, 2006

போகாத பாதை



Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I--
I took the one less traveled by,
And that has made all the difference.

-- Robert Frost


ஒம்பதாப்பு படிச்சப்போ பரிட்ச்சைக்காக மட்டுமே படிச்சதுங்க, இந்த் The Road Not Taken. மறுபடியும் பத்தாப்பு படிக்கும் போது பாலுசாமி சார் இதைய மறுபடியும் ஒரு தடவை எங்களுக்காக ஸ்பெஷலா நடத்துனதுல இருந்து.. இன்னைக்கு வரைக்கும் அடிதவறாம மனசுல இருக்கிற கவிதைங்க இது.

நம்ம பதிவு பக்கம் நம்மளும் புதுசா எதும் எழுத தோனாம இருந்ததுல திடீர்ன்னு ஒரு விவகாரமான யோசனை வந்துச்சுங்க.. இதைய தமிழ்படுத்தி போடுவமான்னு, சட்டுன்னு பேப்பரும் பேனாவுமா உக்காந்தேன்.. உக்காந்தேன், அவ்வளவுதான்.. அரைமணி நேரம் கண்டபடி யோசிச்சும்.. ஒன்னும் விளங்கல.. (தப்பிச்சீங்க!).

சரி, நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் முடிவு பண்ணி, போன வாரம் 'அர்க்காவதி-காவேரி சங்கம ஆற்று படுகை'யில கால்நடையா சுத்தி திரிஞ்சப்போ எடுத்த ஒரு படத்தை, லேசா 'பிக்காசா'வுல தொட்டு ஒத்தி, இங்க, அந்த கவிதையோட போட்டிருக்கேன்..

கவிதை நல்லா இருக்கும் தெரிஞ்சது தான்.. படம் நல்லாயிருந்தா சொல்லுங்க.. :)

--
#209

Monday, October 9, 2006

உள்ளேன் ஐயா

போன நாலு வாரத்தில மட்டும்,
மூணு தடவை வடக்க அரசியல் தலைநகரம் பக்கம் அடிச்சு தாக்குற வெய்யில்ல வீதியில நின்னுகிட்டு அலுமினிய காகிதத்துல சுத்தின முர்க்டிக்காவும், எக்ரோலுமா உள்ள தள்ளிகிட்டு,
அஞ்சு தடவை மத்தியில பொருளாதர தலைநகரம் பக்கம் நவராத்திரிக்கு போட்ட கோதுமைலட்டு, பால்கோவான்னு பாசமழையில நனைஞ்சுட்டு,
மிச்ச நேரத்துல வழக்கம் போல வெண்ணை மிதக்கிற செட்தோசையும், ஆந்திராமீல்ஸுமா சுத்திட்டு,
நடுவால ரெண்டு நாள் ஊருபக்கம் ஒதுங்கி அச்சாப்பீஸ், துணிக்கடைகன்னு சுத்தி.
"இப்படி அவசரமா ஓடறதுக்கு, இப்ப எதுக்கு வந்த? வந்தது வந்த, சொல்லிட்டாவது வந்திருக்கலாம், இப்பப்பாரு முததடவை என்கையால இதை சாப்பிடற".. ன்னு கோவமும் வருத்தமும் கலந்து ஊத்தி குடுத்த சோளதோசைய காரப்பொடி தொட்டு சாப்பிட்டுட்டு, அதைய "இதுவே சூப்பரா இருக்கு, இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை"ன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லியும் மசியாம.. மறுபடியும் மூக்கு உடைஞ்ச கையோட விடிய விடிய கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர்'ன்னு ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா செளக்கியம் விசாரிச்சு, ஒருவழியா இங்க வந்து சேர்ந்து, மூணு நாளா கதவடைச்சு வச்சுகிட்டு வெள்ளைக்கார துரைக பேசுனதுக்கெல்லாம் ஆமாம் போட்டு, நல்ல மழைநேரத்து சாயங்காலத்துல எல்லாப்பயலும் கையெழுத்து போட்டு தொலைஞ்சு.. அப்பாடான்னு மக்கள கூட்டிகிட்டு 'ஃக்குஃபா'ல போயி 'பழையகாலத்து' கூட கொண்டாடி.. (இப்ப எல்லாம் கையெழுத்து கிடையாது ஒரே நீலக்கலர் பழையகாலம் தான்)... ஸ்ஸ்ஸப்பா....

அதாவது ராசா என்ன சொல்ல வர்றாருன்னா.. அவரு ஒரு மாசமா பயங்கிற 'பிசி'யாம்.. அவ்ளோதான்.. காணதயெல்லாம் போயிடல. :) இவத்தயே தான் சுத்திகிட்டு இருக்காரு.. வருவாரு..

--
#208