Showing posts with label லைஃப்பு. Show all posts
Showing posts with label லைஃப்பு. Show all posts

Monday, January 6, 2014

தொட்டவனை மறந்ததென்ன.. (அவசர குறிப்புகள்)

பத்தாவது வரைக்கும் டீச்சர் பையன் என்ற ஒரு சமூக மிரட்டலில்! படிக்கும் பையன் வேஷத்தை கலைக்கமுடியாமல் கூட்டுப்புழுவாய் இருந்த காரணத்தால் பெரிதாக பாட்டுகீட்டு கேட்கும் வழக்கமெல்லாம் இல்லை.. வீட்டில் இருந்த நேஷனல் டேப்ரிக்கார்ட் எல்லாம் என்றாவது சில வாரயிறுதிகளை தவிர தொட்டு பார்த்தது கூட இல்லை.. அதில் அதிகம் கேட்டது ‘காத்தோடு பூவுரச’வும் ‘மெளனகீதங்கள்’ திரைவசனமும் தான். பாட்டெல்லாம் காலை நேர கோவை/திருச்சி ரேடியோக்களில் மெயின்கார்ட்கேட் சாரதா சில்க்ஸ் விளம்பரத்துக்கும், கேரம்போர்ட்டு விளையாடு பாப்பா’வுக்கும் நடுவில் கேட்டது தான், அதுவும் அதில் காலையில் முதல் பாடலுக்கு முன் வரும் பொது அறிவு வினாவை நோட் புஸ்தவத்தில் எழுதிவைத்து படித்தால் பையன் அறிவாளியாகிவிடுவான் என்று நம்பின எங்கய்யனின் நம்பிக்கையினால் கேட்ட பாடல்கள் தான். எம்ஜிஆர் காலத்தில் எம்.எஸ்.வி இருந்தார், கமல் காலத்தில் இளையராஜா இருந்தார் என்ற அளவில் நம் பொதுஅறிவு இருந்த காலம் அது.

‘அவளுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட்டுடா’பேச்சுக்களை கேட்கவும் எப்படியாவது காலனி க்ரிக்கெட் டீமில் விக்கெட்கீப்பராகவும் பர்ஸ்ட்டவுனாகவும் இடம்பிடித்துவிடவேண்டி அக்கம்பக்கத்து வீட்டு அண்ணன்களுடன் வரித்துக்கொண்ட சகவாசத்தில் அஞ்சலி, சத்ரியன், மைமகாரா, தளபதி, குணா, மீரா, ஆத்மா என்று கலவையாக கார்ஸ்டீரியோக்களில் இருந்து மண்பானைக்குள் வைத்த ஸ்பீக்கர்/ட்வீட்டர்கள் வழியே வரும் இசைக்கெல்லாம் கிதாரை அணைத்தபடி ஒரு பெரிய கருப்புவெள்ளை ப்ளோஅப்பில் அம்சமா இருக்கும் ‘மொட்டை’ என்பவர் தான் காரணம் என்று தெரியவந்தது. கமலுக்கு வேறு க்ளோஸ்ஃப்ரெண்ட் என்றார்கள், ரொம்பவும் பிடித்துபோய்விட்டது.

பத்தாவது முடித்ததும் ‘படிக்கும்பையன் எங்கிருந்தாலும் படிப்பான்’ சித்தாந்தத்தில் நம்பிக்கைவைத்து எங்கய்யன் ’கட் அண்ட் ரைட் டை கட்டி ரைட்’பள்ளியில் இருந்து ’கட்டடிப்பதே ரைட்’ என்றும் 9:15 அட்டெண்டன்ஸ் எடுப்பது மட்டுமே வாத்தியார் வேலை என்ற சிஸ்டத்தின் படி இயங்கிக்கொண்டிருந்த இடத்துக்கு இடம்பெயர்த்துவிட.. அவிழ்த்து விட்ட வீட்டு நாய் பைத்தியம் பிடித்து தெருவில் அலைவது போல் அலைந்து முக்திபெற்ற பிறகு ’அந்த பாட்டுல ஒரு வயலின் பிட் வரும் பாரு’ ரக உரையாடல்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்..
அப்பொழுது தான் ‘கலைஞன்’ வந்தது.. அதுவரை கேட்டமாதிரி இல்லாமல் இந்த மொத்த ஆல்பமும் கொஞ்சம் புதுமாதிரியா தெரிய.. ரஹ்மான் என்று ஒருவர் புதிதாக வந்துவிட்ட சமாச்சரம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. சகஹிருதயர்களுடன் ’என்னவென்று சொல்வதம்மா’ கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து ’பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ கேட்க ஆரம்பித்தேன்.
அந்த இடம் துடிக்க’/ ‘சாயங்காலம் வம்போ வம்போ’ போன்ற வரிகள் இருந்ததால் எங்கள் மேத்ஸ்டீச்சரால் தடைசெய்யப்பட்டு ரஹ்மான் என்று ஒருவர் வந்ததாகவே எங்கள் பள்ளிநண்பர்கள் குழுவில் (முதல் இரண்டு பெஞ்சு மட்டுமே அனுமதி) நவநாகரிக தலைவன்‘ரோகனா’ல் கவனிக்கப்படாமல் இருந்திருந்தது என்ற உண்மை புரிந்த காலகட்டம் அது. அப்புறம் பாலும்யூசிக் லேபிளுடன்ஒரு TDK metallic 60ல் புதியமுகமும் உழவனும் எறங்கி வந்து ஆக்ரமித்தார்கள். ஒரு கோவைப்பயணத்தில் ட்ரைவர் மணி மூலமாக முதல்முறையாக காரில் ‘சிக்குபுக்கு’ போடப்பட்டு, உடன் வந்த அய்யனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் பிடிக்காமல் போக, ரஹ்மானை எனக்கு உடனடியாக பிடித்துப்போனது.. கோவை சென்றதும் பேகிபேண்ட்டும் ஒரிஜினல் ஜெண்டில்மேன் கேசட்டும் வாங்கியதும் வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய நிகழ்ச்சி தான்.

 புதிதாக வந்த கேபிள்டிவியில் ATN channelல் மழையோடு வரும் ’மஸ்த்துமஸ்த்து’களும் ‘குச் தூர் சல்த்தே’களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டு இருந்தாலும், அடுத்தகட்டமாக நெருங்கியவட்டத்தில் காதல் வந்து, முதன்முறையாக வாழ்வில் பொதுநூலகம் வரை சென்று அரைநாள் செலவழித்து காதல்கடிதம் எல்லாம் எழுதிகொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் இன்னொரு TDKல் பம்பாய்/இந்திரா என்று வர ஆரம்பித்திருந்தது.. இன்றும் அந்த கேசட்டில் ‘வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற இடம் மட்டும் கொஞ்சம் சத்தம் கம்மியாகத்தான் ஒலிக்கும், எங்கள்  வீட்டு மொட்டைமாடியும் மாடிப்படியிலுமாக அமர்ந்து அதை அப்படி தேய்த்து உருகிக்கொண்டிருந்தான் என் நண்பன்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா’ என்பதை நான் ரீவைண்ட் - பார்வர்ட் - ப்ளே செய்து கொண்டிருந்தேன்.

கோவைப்பழக்கவழக்கமும் கல்லூரி அறிமுகங்களும் கிடைத்து கஜோலா மாதுரிதீட்சித்தா என்ற பஞ்சாயத்துகளுக்கு நடுவராக இருக்கும் பொருட்டு ‘ப்யார் ஹோத்த்தா ஹெ தீவானா சன’மும் ‘பெஹ்லி பெஹ்லி பார் ஹெ’வும் ஹாஸ்டல் இரவுகளை நிறைத்துக்கொண்டிருந்த வேலையில் அன்றைய இந்திமொக்கை வடஇந்திய பிரசாந்த் அமீர்கான் படத்துடன் ஊர்மிளாவும் ஜாக்கியும் நிற்க்கும் சூப்பர் ஸ்டில்லுடன் ஒரு டைம்ஸ்காஸெட் ஈரோட்டில் வாங்கப்பட்டது. ‘யாரோ சுனோ சரா’வை வால்யூம் ஏத்திவச்சு ‘ஒரே பாட்ட திருப்பி திருப்பி 14 தடவை போட்டு ஹிட்டாக்ககூடாதுடா, அதுவும் எங்க பாலு வாய்ஸ்ல.. இதக்கேளு, எங்காளு பாட்டு’ன்னு காலர தூக்கிவிட்டு  சிக்கிய ஒன்றிரண்டு அமித்துகளை கலாய்த்துக்கொண்டிருந்த பொழுது முழுமையான தலைவனாகிவிட்டிருந்தார் ரஹ்மான்.
லவ்பேர்ட்ஸ், காதல்தேசம், Mr.ரோமியோ, மின்சாரக்கனவு, இருவர், தவுட்.. என்று அப்புறம் சிங்கப்பாதை தான், நடுவில் கொஞ்சம் ஜீன்ஸ், படையப்பா, எல்லாம் இருந்தாலும், காதலர்தினமும், (த்)தால்’ம் கல்லூரி கடைசிகாலத்தில் அன்பாலயா, சூப்பர்குட், சிவசக்தி, மைக்முரளி, விக்கிரமன், அகத்தியன் என்றவர்கள் ஏற்படுத்திய பெரும் அலைகளுக்கு நடுவிலும், காதலுக்கு மரியாதை போன்ற சூராவளியில் எல்லாம் லேசாக்கூடசிக்காமல் ‘வலிக்கலையே வலிக்கலையே’ என்று மகிழவைத்தது.

அப்புறம் வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்த பிறகு, சென்னை வந்து அலைபாயுதே பார்த்ததோட கொஞ்சம் கொஞ்சமாக... அவரும் முழுமுயற்ச்சியாக இந்தி, அமேரிக்கா, லண்டன்  என்று போய்விட்டார்..  அவருடன் சேர்ந்து வளர முடியாமல், அவ்வப்போது வந்த கன்னத்தில்முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, மற்றும் சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் கேட்டு -   கூடவே வளர்ந்து நடுவீதியில் லுங்கி அவிழ விளையாண்ட பழக்கம் இருந்தாலும் இப்ப ஐஏஸ் ஆகிவிட்ட சகா ஊருக்கு வரும்போது மூனாவது சுத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சின்ன இடைவெளி விட்டே பேசிக்க முடியற மாதிரி -  ஆகிப்போச்சு ரஹ்மானுடனான சங்காத்தம்.. நடுவால மாஃபியா டிக்கெட் வேற எடுத்தாச்சு :)

இப்ப எதுக்கு இப்படி நீளமா கொசுவர்த்திசுத்தல்ன்னு கேட்டா.. தெரியாதா என்ன..

Happy Birthday ARR.. you were the biggest darling in those salad days ;)

#Nostalgia 

Thursday, November 5, 2009

சும்மா குறிச்சு வச்சுக்க

நட்பு வட்டத்துல ஒவ்வொருத்தனா கல்யாணம் செஞ்சுக்கா ஆரம்பிச்சப்போ போட்ட பதிவு இது... காலச்சக்கரம் சுத்திட்டே இருக்குங்களே நம்ம மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன, அதுவும் கடந்து போச்சு. அடுத்த கட்டத்துக்கு போகனுமில்லைங்களா. சும்மா ரகளையா "உங்க தங்கச்சி புள்ளை வளைகாப்புக்கெல்லாம் நான் லீவு போட முடியாது, மார்க்கெட் இருக்கிற நிலவரத்துல"ன்னு சலிப்பா விட்டுக்கு போன் பேசிட்டு சுத்திட்டு இருந்த பயலுக எல்லாம், "வீட்டுல அவுங்க அப்பாவுக்கு கேட்ராக்ட் மாதிரி இருக்கும் போல, அரவிந்த் கூட்டிட்டு போகனும், அதுனால அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு"ன்னு 'ஷை'யே படாம பேச ஆரம்பிச்ச காலமும் வந்து தானுங்களே ஆகனும்.. அதுக்கப்புறம் ராத்திரி வெள்ளிக்கிழம ராத்திரி ஒரு பத்து பதினோரு மணி வாக்குல அடுத்தநாள் ஷெட்யூல் கன்பர்ம்ங்க செய்யலாம்னு போன போட்டா.. பாசமா 'மாமா..'ன்னு ஆரம்பிச்சு "அப்புறம் கூப்பிடறன்.. ஜூனியர் அழுவாச்சி ஆரம்பிச்சுருச்சு"ன்னு சொல்லி வைச்சுட்டு, மறுபடி திங்கட்கிழமை காலையில மெசஞ்சர்ல வந்து.. "அப்புறம்.. அன்னைக்கு கூப்பிட்ட, அப்புறம் கூப்பிடலாம்னு அப்படியே மறந்துட்டேன்"னு ஆரம்பிப்பானுக... ம்ம்.. நாமளும் இதுக்கெல்லாம் தப்பிக்க முடியாது பாருங்க.. நமக்கு அதுக்கான் நேரம் வந்துது..

லக்கி எழுதின மாதிரித்தான்னாலும் அந்தளவுக்கு அதிகமா அலைக்கழிக்க படாம, ஒரு சின்ன சுத்துக்கப்புறம் சட்டுன்னு ரெண்டு நாள் வெயிட் பண்ணி கன்பர்ம் ஆனதுல பெரும்பான்மை மாதிரி ஹோம் டெஸ்ட் - ஆஸ்பத்திரி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாம டக்குன்னு 'Dad in waiting' ஸ்டேட்டஸ் வந்திருச்சு..

அப்ப இருந்தே குடும்ப சகா'க்க கூட்டம் சேரும் போதெல்லாம், இதே பேச்சு தான்.. பையனா? பொண்ணா? இது வரைக்கும் பையன் பொறந்த கூட்டாளிக எல்லாத்தையும் "அப்புறம் செஞ்ச அட்டகாசத்துக்கெல்லாம், ஒரு பையன் பொறந்து அதே ஆட்டம் ஆடித்தான தண்டனை குடுக்கனும்".. "எல்லா தல்லவாரிகளுக்கும் பையன் தான்.. அனுபவிக்கனும் இல்ல"ன்னு வம்பாவே பேசிட்டு இருந்தாச்சு. எல்லா கூட்டத்துலயும் எல்லாருமே முடிவாத்தான் இருந்தாங்க.. பையன் தான்.. வயிரு பெருசே ஆகலை பையன் தான்.. அப்படி இருக்கு, இப்படி இருக்கு அதுனால பையன் தான்'னு ஆளாளுக்கு தீர்ப்பு சொல்லிட்டே இருந்தாங்க.. நம்ம வுட்டம்மிணி உட்பட.. உள்ளார இருக்கிறவன் கிட்டத்தான் கம்ப்ளெயின்ட் செய்யிறத எல்லாம்.. உம் கடைசியில நம்மள பத்தி சொல்லிகுடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சு அவுங்களுக்கும்..
இப்படியே பேசிட்டு இருந்த ஒரு நாள் தான், வீட்டுக்கு வந்த ஒரு தோழி, எல்லாரும் பேசு கத்தி கலாய்ச்சு அமைதியான பிறவு சொன்னா.. 'உனக்கு பொண்ணுதான்டா... பொறுப்பான பசங்களுக்கு பொண்ணுதான்.. வேணா பாரு'ன்னா.. அவளுக்கு பையன்.. பாவம் அவ வீட்டுக்காரன் மேல அவளுக்கு என்ன கோவமா.. என்ன இருந்தாலும் இந்த தோழிக தோழிக தான்.. நம்மள சரியா புரிஞ்சுக்கறவங்க அவுங்க தான் :)

நமக்கும் மனசுல.. 'பொண்ணாயிருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு.. மூணு தலைமுறையா எங்க வூட்ல பொண்ணுகளே பிறக்கல.. (அதுக்கு முன்னத்துன வரலாறு எல்லாம் தெரியற அளவுக்கு பாரம்பரிய பலம் இல்லைங்க நமக்கு) நான் பொறந்ததுக்கே எங்காத்தா ஒரு நா கழிச்சு தான் வந்து பாத்துதாம்.. வந்ததும் எங்கம்மா கிட்ட.. 'வாசக்கூட்டி கோலம் போட ஒரு புள்ளை வேணும்னு இருக்கேன்.. நீ பையன பெத்து வச்சிருக்கே'ன்னு புலம்பியிருக்காங்க. அவுங்க விதி அதுக்கப்புறம் வந்த ரெண்டு மருமகளும் கூட அவுங்க ஆசைய நிறைவேத்த முடியல... அந்த ஆசை தான் வேதாளம் மாதிரி எங்காத்தாவோட பெரிய பேரன்'ங்கிற முறையில என் தோள்ல தொங்கிட்டு இருந்துச்சோ என்னவோ.. ஆனா வூட்டம்மிணியும் எங்கய்யனும் கூட்டணி போட்டு ஸ்ட்ராங்கா 'பையன் தான்'ன்னு சொல்லும் போது.. சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டு இருந்தேன்..

நம்ம வாரிசு நம்மள மாதிரி தான் இருக்கும்.. அவசரக்குடுக்கையா.. சொன்ன தேதிக்கு 17 நாள் முன்னாடியே உள்ளார எதோ ரகளைய செஞ்சு, சரி இன்னைக்கே எடுக்கனும்னு உள்ள தள்ளிட்டு போயிட்டாங்க... எல்லாரும் கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தாங்க.. நானும் எங்கய்யனும் வழக்கம் போல.. இப்படி மார்பிள்ஸ் போட்டதுக்கு பதிலா டைல்ஸ் போட்டிருக்கனும் ஆஸ்பத்திரியில எல்லாம் வழுக்கிட்டா கஷ்டமில்லன்னு எங்க சமூக அக்கரைய வெளிக்காட்டிட்டு உக்காந்திருந்தோம்.. அம்மா முறைச்சு பார்க்க.. சரி நாமளும் கொஞ்சம் பொறுப்பா இருப்பம்னு அதுக்கும் முயற்ச்சி செஞ்சேன்.. அதுக்கு புவியியல் சதி செஞ்சு ஒர்க் அவுட் ஆகாம போயிருச்சு..

அப்புறம் 'யாவரும் நலம்'ன்னு கூப்பிட்டு கையில குடுத்துட்டு உடனே வாங்கிட்டாங்க.. நம்ம அம்மணி அரைமயக்கத்துல சிரிக்க முடியாம ஒரு புன்னகையோட படுத்திருக்கு.. என்ன செய்யன்னு தெரியாம.. கங்கிராட்ஸ்'ன்னு மட்டும் கைய அழுத்திட்டு சொல்லிட்டு வந்துட்டேன்.. வெளிய எல்லாருக்கும் ஒரே குஷி.. பெருசு பெருசா ஸ்வீட் பாக்ஸ் வாங்கி எல்லாருக்கும் குடுத்துட்டு, ஒவ்வொரு வட்டத்துலயும் ஒவ்வொரு சகா'க்கு போன போட்டு சொல்லி, எல்லாருக்கும் சொல்லிடு, நான் அப்புறம் பேசுறன்னு வந்துட்டேன்.. பொறுப்பான புருஷனா இருக்கனுமில்ல..

அப்புறம் ஒரு நாலு மணி நேரம் கழிச்சு இணையபக்கம் வந்தா.. ஒரு சகா எல்லாருக்கும் மெயில் போட்டிருக்கான் குரூப்ஸ்ல, "ஒரு சந்தோஷமான வருத்த செய்தி.. ராசு தல்லவாரி இல்ல.. பொறுப்பான ஆள்ன்னு சொல்றம் மாதிரி ஆயிருச்சு"ன்னு ... வயத்தெரிச்ச புடிச்ச பயலுக.. "ஒருத்தன், லைஃப் லாங்கா தல்லவாரியாவேவா இருப்பான்"... திருந்தவே கூடாதா, ப்ளடி ஃபெல்லோஸ்.. அப்புறம் நானே எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன், "நாங்களும் பொறுப்பு தான்.. பொறுப்பு தான்.. எல்லாரும் பார்த்திகிடுங்க.." ரேஞ்சுல..

பிகு:
தகப்பனான சந்தோசத்துல.. சின்னம்மை வந்து பொண்டாட்டி புள்ளைய கண் கொண்டு பார்க்க முடியாம ஒதுக்கி வச்சிருக்காங்க.. வாரிசு நலமா இருக்கிறதா போன்ல தான் க்ஷ்சொல்றாங்க.. 'அப்படியே பெங்களூர் போயிரு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வா'ன்னு உத்தரவு வேற.. ம்ம்.. எங்க போயிரப்போகுது வந்து பார்த்துக்குவோம்..

Friday, September 19, 2008

அப்பா

"ஒன்னு கேக்கனும் தம்பி", 'இன்னைக்கு ராத்திரிக்கு தாங்காதுங்கிறத டாக்டர் பதமான இங்கிலீசுல சொல்லிட்டு போனது ஆஸ்பத்திரி கண்ணாடி கதவுக்கு வெளியே இருந்து சன்னமா கேட்டதுக்கப்புறம் உள்ளார வந்து பக்கத்துல நிக்கிற எம்மவன் கிட்ட கேட்டேன்.

"சொல்லுங்க" கொஞ்சம் குழப்பமா பதட்டமா பார்த்தான்.

" நீ இப்போ இங்க எதுக்கு வந்த?" வத்திபோயிட்டு இருக்கிற சக்தியெல்லாம் சேர்த்து வச்சு, தேவையில்லாத கேள்வி தான் கேட்டேன், ஆனாலும் எனக்கு தெரிஞ்சுக்க ஆசை.

"என்ன கேக்கரீங்க?" கண்ணுல குழப்பம் அதிகமானாலும், உதட்டோரம் சின்ன சிரிப்பு எட்டிப்பாக்குது

"இல்ல.. பதில் சொல்லு" தொண்டை அடைக்கிற மாதிரி இருக்கு, ட்ரிப்ஸ் போட்ட இடத்த லேசா வருடிக்குடுத்துக்கறேன்.

" நீங்க என் அப்பா, நான் இந்த நேரத்துல இங்க இருக்கனும்" கொஞ்சம் அழுத்தமாவே சொன்னான்.

"அதில்ல.. " தலைய ஆட்ட பார்த்தேன், முடியல.

ஒரு பெருமூச்சு அவன்கிட்ட இருந்து, அப்போ நான் இருந்த மாதிரியே நல்லா உடம்ப வச்சிருக்கான், மூச்சுவிடும் போது டீ சர்ட்ட துறுத்திட்டு ஏறி இறங்குது.. என் கிட்ட வந்து "என்ன சொல்ல வர்றீங்க?" என் மணிகட்டை புடிச்சிகிட்டே கேக்கிறான்.

"ஒண்ணுமில்ல விடு" பார்வைய ஜன்னல் பக்கம் திருப்பிகிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியா போச்சு, மருமவபுள்ள துணி மாத்த வீட்டுக்கு போயிருக்கலாம். குழந்தைக எல்லாம் பள்ளிக்கூடத்துல இருந்து களைச்சி போயி வந்திருக்கும்.. அவன் பக்கம் பார்க்காம ஜன்னலுக்கு விட்டத்துக்கும் நடுவால பார்வைய அலையவிட்டேன்.

மனசுக்குள்ளார என்ன என்னமோ ஓடுது. அவன் வழியில நான் எப்பவுமே குறுக்க போனதில்ல, அவன் வாழ்க்கைய அவனே வாழ்ந்துக்க விட்டேன், அவன் முடிவுகள அவனே எடுக்கனும்னு நினைச்சேன். பல பேர் மாதிரி என் வாழ்க்கைய அவன வாழவச்சு பார்க்கனும்னு நினைக்கவே இல்ல நான். என்ன படிக்கிறதுன்னு அவனே தான் முடிவு செஞ்சான், நான் கையெழுத்து மட்டும் தான் போட்டேன், அவனே வேலை தேடிகிட்டான், தப்பான ஒரு ஜோடி கூட தேடிக்கிட்டான். சின்ன புள்ளையா இருக்கும் போது கூட அவன எதிலயுமே தடுத்தது இல்ல, அவன் சேக்காளிகள்ல எவனயாவது புடிக்கலைன்னாகூட, எனக்குள்ளய வச்சுக்குவேன், அவன் கிட்ட சொன்னதே இல்ல. அவன் தப்புகள அவனே தான் தெரிஞ்சு திருத்திகனும்.

"உனக்கு ஞாபகம் இருக்கா.. " பேசனும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு மெதுவா " அப்போ, உனக்கு நான் சைக்கிள் ஓட்ட சொல்லி குடுத்தப்போ.. "

குனிஞ்சு தரைய பார்த்து உக்காந்திருந்தவன், தலை நிமிந்து.. "ம்ம்.. ஞாபகம் இருக்கு, ஒரு நா நீங்க வந்தீங்க.. அப்புறம், நானே தனியா க்ரவுண்ட்டுக்கு எடுத்துட்டு போயி ஓட்ட கத்துகிட்டேனே.." குரல்ல கொஞ்சம் நிறையவே அழுத்தம் இருந்த மாதிரி பட்டுது.

நான் மறுபடி ஜன்னல் பக்கம் பார்வைய திருப்பி, அமைதியாயிட்டேன்.




[pic : http://www.burnside.sa.gov.au]




Friday, September 12, 2008

ஓர் இரவு / ஒரு கேள்வி

"உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்ங்க", ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் மேசையில இருந்து வூட்டம்மிணி தட்டெடுத்துட்டு நகர்ந்ததும் அய்யன் கிட்ட கேட்டேன். ராகி குழாபுட்டும் சுண்டகடல குருமாவும், அவ சமைச்சது, முததடவையா, எங்கய்யனுக்கும் ரொம்ப புடிச்ச ஐட்டம்.., எனக்கும்.

"கேளு" கையத்தொடச்சிகிட்டே கேட்டாரு.

மிச்ச பாத்திரங்கள எடுக்க மறுபடி மேசைக்கு வந்த வூட்டம்மிணிய விலக்க வேண்டி அவசரமா குருமா பாத்திரத்தையும் காலி டம்ளரையும் நகர்த்தி குடுத்தேன். மெலிசா சிரிச்சுகிட்டே வாங்கிட்டு போனா. "கேக்கிறதுக்கு முன்னாடியே சொல்லீறனுங்க, கண்டிசனா சரியான பதில சொல்லோனும்"

" அப்படி என்னத்த கேக்க போற?"

வேகமா தலையாட்டுறேன் "கண்டிசனா சொல்றேன்னு சொல்லுங்க, கேக்குறன்"

கைய தொடச்ச துண்டை மடியில போட்டுகிட்டு நல்லா சாய்ஞ்சு உக்காந்துகிட்டு சரிங்கற மாதிரி தலையாட்டினாரு.

"ரொம்ப நாளாவே கேக்கனும்ன்னு தானுங்க நினைச்சிட்டிருந்தன்.. " கொஞ்சம் தண்ணி குடிச்சிகிட்டேன், "என்னைய பத்தி நிசமாலுமே பெருமையா நினைச்சுக்கறீங்களா...?

....

# 70 [பழைய நினப்பு]



Wednesday, August 13, 2008

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவிஸ்ட்டுகள்

கொஞ்ச நாளா திடீர்ன்னு முளைச்சிருக்கிற இந்த க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டுக [க்ரீன்பீஸ்ன்னா பச்சை பட்டானி தான்னு எல்லாம் கேக்ககூடாது. நான் சொல்றது Green peace Activist' ஓகே.] ரவுசு தாங்க முடியறதில்லைங்க. அவுங்க கொள்கைக எல்லாம் சரிதான், பெரிய விசயம் பேசுறாங்க.. உலகத்தை காப்பாத்தனும்னு சொல்றாங்க.. ரைட்டு, ஒரு பெரிய சலாம் போட்டுறலாம் அதுக்கு. ஆனா இதை சாக்காட்டி வச்சுக்கிட்டு அந்த வேசத்துல இந்த வியபாரிகளுக்கு ப்ரோக்கல் வேல பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க பாருங்க, அது தான் மனுசனுக்கு எரிச்சல குடுக்குது.

லேட்டஸ்ட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிட்டவன் எல்லாம் ஆக்டிவிஸ்ட் ஆயிடரானுக, வேலையிடத்துல தனிசுற்றுக்கு வர்ற வாராந்திரில ஆரம்பிச்சு டெஸ்க்குல போஸ்ட்டர் ஒட்டுற வரைக்கும் இவனுக அலம்பல் ரொம்ப ஓவரா போச்சு. எனக்கு சில சந்தேகம்.. நிசமாவே எலக்ட்ரிக் வண்டிகளால சுகாதரகேடு எதுவும் வராதா என்ன?

1) இதுக ஓடுறதுக்கு கரண்ட் வேணும், அந்த கரண்ட்டும் நிலக்கரியவோ இல்ல இயற்க்கைவாயுவையோ எரிச்சு தான் உருவாக்கறாங்க.. அப்போ அது சுற்றுசூழல பாதிக்காதா. அதுவும் இல்லாட்டி அணுசக்தி, இத பத்தி தான் ஆறு மாசமா ஊரே சிரிசிரியா சிரிக்குதே, அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான்.. நம்மூர்ல பெரும்பகுதி மின்சாரம் தண்ணியில எடுக்கறாங்க, தண்ணின்னா சும்மா வயர்ர தண்ணியில போட்டான்னு எல்லாம் கேக்ககூடாது, அது தாங்க ஹைடல் பவர் ப்ளான்ட். அப்படி கட்டியிருக்கிற உற்பத்தி நிலையம் எல்லாம் சுற்று சூழல அழிக்காம 'தரிசு' நிலத்துல கட்டுனதா என்ன.. அந்த உற்பத்தி நிலயத்த கட்ட இடத்தை குடுத்துட்டு ரெண்டு தலைமுறையா அதுக்கான இழப்பீடும் சரியா கிடைக்காம, அவன் குழந்தைக எல்லாம் ட்ராபிக் சிக்னல்ல நம்ம ஏசி வண்டிய அழுக்காக்கிட்டு சுதந்திர கொடி வித்துட்டு கிடக்கு.. சரி அது வேற கதை.. நம்ம சுற்று சூழம் பாதுகாப்பு பத்தி மட்டும் பேசுவோம்.

2)மின்சாரத்த சேமிக்க அந்த வண்டிகல்ல இருக்கிற பேட்டரி நாளைக்கு அதோட ஆயுசு முடிஞ்சுபோச்சுன்னா என்ன ஆகும், வெளிய தூக்கி போட்டா அதுவும் சுற்றுசூழல பாதிக்கிற விசயம் தான? எங்க ஆத்தா குடிதண்ணி தொட்டிமேல போயி பேட்டரிகட்டைய வைக்காத உள்ளார விழுந்தா விசம்னு சொல்லும், அந்த பேட்டரிகட்டைகள விட இந்த பேட்டரிக வீரியம் வாய்ஞ்சது.. சக்தியிலயும் சுற்று சூழல மாசு படுத்தறதிலயும்..

3) சரி அந்த கிரகத்தையெல்லாம் விடுங்க.. வீட்டு உபயோகத்துக்குன்னு மானிய விலையில குடுக்கற LPGய உங்க வாகனத்துக்கு போட்டாக்க, அது தப்பு, ஜெயில்ல போட்டுறவோம்னு ஒரு கேவலமான டப்பிங்கோட டீவியில கவர்மென்ட்ல விளம்பரம் குடுக்கறாங்க பார்த்திருப்பீங்க.. அப்படி இருக்கப்போ, வீட்டுக்கு மாணியத்துக அரசாங்கம் தர்ற மின்சாரத்துல வண்டிக்கு சக்தியேத்தி ஓட்டுறது மட்டும் தப்பில்லையா என்ன?

இப்படி மூணு கேள்விய இந்த வாரத்துக்கான் உள்வட்டார வாரந்திரி;ல கேட்டிருக்கேன். பார்ப்போம் இந்த ஆக்டிவிஸ்ட்டுக என்ன சொல்றாங்கன்னு..

பி.கு. : அப்புறம் நீ என்ன மசுருக்கு பேட்டரி ஸ்கூட்டர் வாங்கி வச்சிருக்கேன்னு கேட்டீங்கன்னா? நாலு காசு குறையும்ன்னு ஒரே காரணத்துக்காக தான்.. நான் பெரிய க்ரீன் பீஸ் ஆக்டிவிஸ்ட்டும் இல்ல ப்ளாக் க்ராம் ஆக்டிவிஸ்ட்டோ இல்ல.. சத்தியமா :)

Monday, June 23, 2008

வார இறுதி குறிப்புகள்

05:30 - பஃகிள்ராக் பார்க் உலா
[இவ்ளோ மெதுவா நடக்க காலங்காத்தால அலாரம் வச்சு எந்திருச்சு வரனுமா?
நான் நடக்க வந்தேன்னு யாரு சொன்னா?? ]
06.30 - டைம்ஸ் - கொத்துமல்லி டீ
[இந்த பார்டிக்கு போறவங்க எல்லாம் எப்பவும் ஏன் கன்னத்துலகன்னம் வச்ச்சேங்கிற மாதிரியே போஸ் குடுக்கறாங்க..]
07.30 - கடலோரக்கவிதைகள்
[திருட்டு டிவிடி வாழ்க, இளவரசு'க்கு அதே இயல்பான நடிப்பு அப்பவும்..
படத்துக்காக வெள்ளையடிச்ச வீடு, க்ரேன் ஷாட்ல பல்லிளிக்குது.. ஹிஹி.. ]
09.00 - தோசை வெங்காயசட்னி
[போதுமா?..
போதும்ன்னா சொல்லுவேன்.. நீ ஊத்திகிட்டே இரு..]
10.15 - சவுண்ட் ஆஃப் ம்யூசிக்
[பெண்ணுரிமை #%!@, ஐயம் சிக்ஸ்ட்டீன் கோயிங் செவன்ட்டீன்' என்னம*# இருக்கு இதுல]
12.00 - மை ஃபேர் லேடி
[ஆ...வ்]
14.00 - பருப்புஞ்சாதம், கத்திரிக்கா பொறியல், தயிர், பூண்டு ஊறுகாய்
[அடுத்த தடவை ருச்சி தான் எடுக்கனும் ப்ரியா அவ்ளோ சரியில்ல.. ஊறுகாய சொன்னேன்]
14.30 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள்
15.15 - உண்ட மயக்கம்
15.45 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள் - தொடர்ச்சி
16.30 - இஞ்சிடீ, நேந்திரசிப்ஸ், க்ளாசிக் ரெகுலர்
17.00 - கே.ஆர் பார்க், சிறு உலா, வேடிக்கை.. வேடிக்கை..
[வூட்டுக்காரிய பக்கத்துல வச்சுகிட்டு சைட்டடித்தல்ன்னு சொன்னா பொலிட்டிக்கல்லி கரெக்ட்டா இருக்காது)
19.30 - கடைவீதி, பூக்கடை உலா..
20.30 - ஆந்திராஸ்பைஸ் - சப்பாத்தி - தால் - டபுள்ஆம்லெட்
21.15 - ஃக்ளோரி
[டென்ஷல் வாஷிங்க்டன்'க்காக மீண்டும் மீண்டும்.. He a weak white boy, and beatin' on a nigger make him feel strong]
23.00 - சபாபதி
[இணையம் வாழ்க..
எனக்கு ரோஷம் வந்தால் ஒரு போக்கிலே, அவரை டோன்ட் டாக் சார் என்பேன்..
ஒட்டு ப்ளாஸ்த்திரி கோட்டு போடும் வாத்தி.. ஓயாமல் வாங்கி ஓசி பொடி போடுவதும் ஜாஸ்த்தி]
00.30 - ஏலக்காய் வாழைப்பழம் - சோயாபால் - க்ளாசிக் ரெகுலர்
01.30 - சபாபதி - மீள்பார்வை -ரீவைண்ட் ஃபார்வர்ட் ரீவைண்ட்
xx.xx - (தன்னை மறந்த) உறக்கம்
06.30 - கொத்துமல்லி டீ ராகவேந்தரமட புறாக்கள்
07.30 - ஆரவாரமில்லாத சாலை - நடை
08.15 - காராபாத் - வடா - ப்ராமின்ஸ் காஃபி ஃபார்
[நட்பு கூட்டு சேர்ந்துட்டா மட்டும் பாப்பான் ம்$@#ங்கறீங்க.. ஆனா டிபன் சாப்பிட மட்டும் இங்க கூட்டிட்டு வர்றீங்க.. ]
09.00 - டைம்ஸ் - படுக்கை - எஸ்.பி.பி ஜானகி காதல் பாடல்கள் MP3
[கலாசிபாளயா தெருவோரத்தில் முத்துக்கள்]
12.00 - புத்தகம் - சீ.டிக்கள்- ஒழுங்குபடுத்தல்
[ஒரு பாசாங்கு தான்.. நாங்களும் வீட்டு வேலை செய்வோமில்ல]
13.00 - காமத் பஃகிள்ராக் - ஜோவார்பக்ரெ மீல்ஸ்
[இவ்ளோ வெண்ணைய தேய்ச்சு சோளரொட்டி சாப்பிட்டா எப்படி டயட்டாகும்.. ]
14.30 - ஃபோர்த் எஸ்ட்டேட்
[எத்தனையாவது முறைன்னு மறந்துபோச்சு?]
17.00 - லெமன் டீ - மணல் போட்டு வறுத்த நிலக்கடலை
[நம்ம வீட்டுல இதையே வேற.. சரி.. சரி.. இதுவே நல்லாத்தான் இருக்கு]
17.30 - ராகவேந்தரமட புறாக்கள் - க்ளாசிக் ரெகுலர்
18.00 - தி பைரேட்'ஸ் டைலமா
[நானெல்லாம் இந்த காலத்து இளைஞன் இல்லையா??.. பயங்கிர டைலமாவா இருக்கே..]
20.00 - ராகிதோசை - நிலக்கடலை சட்னி
[அம்மா சுடுறது கொஞ்ச வேற மாதி.. இல்ல இதும் நல்லாத்தான் இருக்கு.. ஹி.. ஹி ]
20.30 - கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை
[எஸ்.பி.ரோடு தெருவோர பைரசிக்காரர்கள் வாழ்க]
21.50 - வாழைப்பழம் - க்ளாசிக் ரெகுலர்
22.10 - சாயாவனம்
[தீ மூங்கிலை பொசுக்கிட்டு இருந்துச்சு.. இனி என்னன்னு தெரியல]
23.xx -

Friday, April 25, 2008

ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.


"எல்லா ரிலிஜியனும் பழசாயிடுச்சு, எல்லாமே ஒரு மாதிரி பழைய சம்பிரதாயத்த வச்சுகிட்டு.. ஒரு கூட்டத்தோட கையில.. மோனோபாலியா போச்சு.. பேசாம நம்ம.. புதுசா ஒரு ரிலீஜியன் ப்ரபோஸ் செஞ்சிருவோம்.. ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.. புடிச்சவங்க யாரு வேணும்னானுல் சேரலாம்.. எல்லாரும் சேர்ந்து சரியான நெறிமுறைகளை சொல்லுவோம்.. ஒரு ப்ரெயின்ஸ்ட்ராமர் மாதிரி ரெகுலரா வச்சு ரீஃபைன் பண்ணிட்டே போவோம் எப்படி.. !"


காலங்காத்தால ஆறரை மணிக்கு ஒருத்தன் கைபேசியில கூப்பிட்டு இப்படி சொன்னா, நீங்க என்ன செய்வீங்க?..

நான் என்ன செஞ்சனா..?

"இதுக்கு தான் நைட்டே சோடா நிறையா ஊத்திக்கோ ஊதிக்கோன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. தங்கச்சி எந்திருச்சிருந்தா சுடுதண்ணி விளாவிவச்சுட்டு சூடா ஒரு லெமன்கட்டன் சாயவோட ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பச்சொல்லிட்டு மறுபடி இறுக்கமா போத்தி தூங்கு மாப்ள"ன்னு சொல்லிட்டு நம்ம அம்மணி குடுத்த லெமன் கட்டன் சாயாவோட பால்கனியில போயி கொஞ்ச நேரம் காத்தார நின்னேன்..

'சாப்டும்' போது கண்டதையும் படிச்சுட்டு பேசாதீங்கடான்னா எவன் கேக்குறான்.. இப்படி நமக்கு காலங்காத்தால வெறி ஏத்தறானுக..

--
#266

Tuesday, March 4, 2008

முதுமை!!



பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுகுள்ளே சொர்கம் இருக்கு
அட சின்னச்சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்திற்க்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும்கண்ணே காசு பணம் என்னத்துக்கு

அந்த விண்ணில் ஆனந்தம்.. இந்த மண்ணில் ஆனந்தம்
அடிப்பூமிப் பந்தில் முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்- அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவி என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்
என் காது வரைக்கும் கம்பிளி போர்த்தும் கருனை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்..

--

சில நாளாவே பொட்டியில உறங்கிகிடந்த படம் இது.. ஒரு மந்தமான ஞாயிறு மதியானம் கோபால்சாமிபெட்டா'வில் எடுத்த படம்.
இப்படி தனியா விட்டுட்டு தூரதேசம் போயிட்ட புள்ளைகள பத்தி பேசிட்டிருக்காம.. " பழைய நினப்புடா பேராண்டி.. பழைய நினப்புடா"ன்னு சிறு வயசுல தனியா யாருக்கும் தெரியாம குளக்கரையில உக்காந்திருந்தத பத்தி தான் அவுங்க பேசிட்டிருந்திருக்கனும்னு விரும்பறேன்....

--
#265

Tuesday, February 26, 2008

பொழப்பத்த @#$^#&

"கொஞ்சம் சீக்கிரமாவே வேலையிடத்தை விட்டு வந்தாச்சு..என்ன செய்ய.. தனியா 'சாப்ட்டு' நாளாச்சு போலாம.." யோசித்து கொண்டிருந்த நொடியில் எதிரில் அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சி அமைதியானது.. பிடி ரோட் தாண்டிபோய்கொண்டிருந்தேன் (வீட்டை பூட்டினது, சாலைய கடக்கும் போது என்னை தாண்டிப்போன நீலதுப்பட்டாவ பத்தியெல்லாம் விலாவரியா சொல்லிட்டு இருக்க முடியாது.. இது ஆன்டனி' டைப் எடிட்டிங் காலகட்டம்).

பஃகிள்ராக் ரோட்டில் விரைந்து எதிரே வரும் வாகணங்கள் இரைச்சலிலையும் மீறிக்கொண்டு கேட்கும் கூட்டுக்குவிரைந்துவிட்ட பறவைகள் கூப்பாட்டுக்கும் முகத்தை மோதும் மெலிதான குளிர்காற்றுக்கும் புன்னகைத்து கொள்கிறேன். லேசாக மணிக்கட்டை சாய்த்ததும் பச்சை விளக்கெரிந்து மணிகாட்டும் என் 'கேசியோ'வில் ஏழை தாண்டிவிட்ட சின்னமுள்ளை பெரிய முள் நெருங்கிகொண்டிருந்தது. "எங்க போயி சாப்டலாம்" யோசிக்க தேவையே இல்லாமல் நியான் விளக்கொளி வரவேற்றது.

'குடீவ்னிங்' சொன்னவன விறைப்பா பார்த்து சல்யூட் அடிச்ச செக்யூரிட்டிய தாண்டி முதல்மாடி கதவை திறந்தால்.. தாம்தூம் சத்தத்துடன் கசகசவென்று கூட்டம். மீண்டும் ஒரே நொடி, சட்டென்று ஒரு வெள்ளுடை சேவகன், இரண்டாம் தளத்துக்கு வழி சொன்னார்.. அவ்ளோ தெளிவா பிரதிபலிக்குதா என் முகம்.. ஊரே 'அமுக்கன்'னு கூப்பிடுற எனக்கு?? இரண்டாம் தளத்தின் வளைவுக்கு முன் நின்று திரும்பி பார்த்தேன்.. வெள்ளுடை சேவகன் எவரையும் காணவில்லை.. "மேஜிக்கல் ரியலிசமா.. ?? இன்னும் சாப்டவே இல்ல, அதுக்குள்ளாரயா"ன்னு எனக்குள் அலுத்து கொண்டேன்.

இரண்டாம் தளம் கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே அமைதியாக இருந்தது. தள்ளி தனிதனித்தீவாக கிடக்கும் மேஜைகள். ஒரு ஓரத்தில் உயரமான மேடையில் 'உதயா'வின் புண்ணியத்தில க்ரேஸிஸ்டார் ரவிச்சந்திரன் யாரோ ஒரு 'மைதாமாவை' கட்டிபுரண்டு கொண்டிருந்தது கண்ணில் பட்டது. நேர்கீழே இரண்டு பொடியன்கள் நின்று பார்த்துகொண்டிருந்தனர். அந்த இடத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளுடை இல்லை, அழுக்குநீளம்.

ஓரமாக ஒரு மேஜையில் என் முதல் சுற்றில் கவனமாக இருந்தேன். நான்கடி தள்ளி ஒரு மேஜையில் இரண்டு பேர், நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் 'சாப்ட்டு' கொண்டிருந்தனர்.. அரை மணி நேரமாக பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, ஆர்டர் தரும் போது கலந்துபேசிக் கொண்டது தவிர. கடமையாக ஒவ்வொரு தம்ளரையும் ஒரே வேகத்தில் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.. ம்ம் குடும்பஸ்த்தர்கள் போல.. வீட்டுக்கு வீடு வாசப்படி..

'எக் புதினா'வை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திரும்பினேன், இடப்புற மேஜையில் ஒரு சற்றே பருத்தவர், முழுக்கையும், தளர்த்திவிடப்பட்ட டையும், லெதர் பேக்கும் முகத்தில் நிறைந்து கிடக்கும் சோர்வையும் பார்த்தால் நாள் முழுதும் சுற்றி அலையும் வேலை போல.. ஒவ்வொரு மிடிருக்கும் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தார், சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மேசை விரிப்ப்பின் அழுக்கை நிமிண்டிக்கொண்டிருந்தார். மதியம் சந்தித்த வியாபாரியையோ, நாளைய டார்க்கெட்டையோ அல்லது ஊரில் இருக்கும் உறவுகளை பற்றிய நினைப்போ என்னவோ.

வகை வகையாக எத்தனை பதார்த்தம் வாங்கினாலும், லெமன் பிக்கிள் சுவை தனிதான். எதிர்மூலையில் விடாமல் பேசிக்கொண்டே இருந்த இருவரும் எழுந்து விட்டனர். அதில் ஒருவர் போகும்முன் மேஜைக்கு மேலும் கீழுமாக தேடியதை பார்த்து நான் மட்டுமல்ல, அவர் கூட வந்தவரும் புன்னகைத்து கொண்டார். 'எதிலையும் ஜாக்கிரதையா இருக்கனும்' என்று படியிறங்கும் போது கூட வந்தவரிடம் கண்டிப்பாக சொல்லுவார் என்று பட்டது. இப்படி மேஜையை புரட்டி பார்துவிட்டு போகிறவர்கள் பெரும்பாலும் அடுத்த தெருத்திருப்பத்தில் லத்தியும் குறிப்பு நோட்டுமாக காத்திருக்கும் காவலரிடம் கண்டிப்பாக கப்பம் கட்டுவார்கள்.

பச்சை வெள்ளிரியும் தக்காளியும் கொஞ்சம் போல குருமிளகும் உப்பும் தூவப்பட்டு, இதற்க்கு காசு இல்லை, இலவசம்.. இருந்தபோதும் நன்றாகவே இருந்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், 'உதயா'வையாவது பார்ப்போம் என்று பார்வையை திருப்பினேன், ஒரு தாடிக்கார கணவான் கோட்சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வெகுவாக 'கேப்'விட்டு சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் மூக்கை தேய்த்து கொண்டிருந்தார் அந்த பெண்ணும் வெட்கபடாவிட்டால் பண்பாட்டு காவலர்கள் வந்துவிடுவார்களோ என்று வராத வெட்கத்தை கைவைத்து மறைத்து கொண்டிருந்தது. பாவம் இயக்குனர் என்று தோன்றியது.

சலித்து போய், உடைத்து வைத்த சோடா பாட்டிலில் பொங்கிக்கொண்டிருக்கும் குமிழ்களில் பார்வையை செலுத்தினேன். லெஹர் சோடாவில் மேலெழும்பும் காற்று குமிழ்கள் எப்பொழுதுமே அழகு தான். ஏனோ எனக்கு பிடிரோட்டில் என்னை தாண்டி போன நீளத்துப்பட்டா ஞாபகம் வந்தது, அவசரத்தில் முகத்தை பார்க்கவில்லை என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மடக்கென்று அடுத்த சுற்றை முடித்தேன். 'பாட்டம்ஸ் அப்'. முடித்ததாக கைகாட்டிவிட்டு தீப்பெட்டு கேட்டு வாங்கிகொண்டேன்.

வாகண இரைச்சல் அடங்கிவிட்ட இரவில் லேசான குளிரில் மெதுவாக சீட்டியடித்தபடி நடந்து வந்த போது என்னவென்று தெரியாமல் 'கோடைகால காற்றே' ஞாபகம் வந்தது.. கூடவே சாந்திகிருஷ்ணா'வின் முகமும். எதற்க்கோ கீழே கிடந்த ஒரு கல்லை வேகமாக உதைததேன், தரையோடு தரையாக தேய்த்து கொண்டு சென்று குவிந்து கிடந்த சருகுகளோடு சத்தத்தோடு ஐக்கியமானது.

துணி மாற்றக்கூட தோன்றவில்லை, சன்ம்யூசிக்கில் வீஜே தொல்லை இல்லாமல் பாட்டு போட்டுகொண்டிருந்தார்கள். மேஜை மீது இன்னும் உயிருடன் என் மடிக்கணினி.. எதுவுமே யோசிக்காமல் திட்டமிடாமல் மடியில் எடுத்து வைத்துகொண்டு உள்ளிட ஆரம்பித்தேன்..



பி.கு.: அப்படி என்னத்த உள்ளிட்டேன்ன்னு தெரியனும்னா இந்த பதிவை மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் :)

Wednesday, December 19, 2007

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!

அனுப்பப்படாத ஒரு கடிதம்!!


இன்றும் உன்னை மனதார விரும்புகிறேன்..
சிலநேரங்களில்...
உன்னுடன் சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பது எப்படி இருந்திருக்குமென்று எண்ணி வியக்கிறேன்.

ஒரு முறை ஒரே முறை 'நீ'யும் 'நானு'ம் என்பதை விட்டு மனம்திறந்து பேசியிருக்கலாம்.
ஆனால்,
நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த வெறுப்பு அதை செய்ய விடவில்லை.
இளரத்தம்.. கொஞ்சம் முரடனாய்தான் இருந்தேன்.
இன்னும் அந்த மிச்சம் இருக்கிறது.

என்னை முழுவதுமாக உன்னிடம் கொடுத்தேன், உன் அன்பினால் என்னை பாதுகாப்பாய் என்று,
உன்னை நம்பியதற்க்காக வருத்தபட வைத்தாய்,
கண நேரத்தில்
நம் வாழ்க்கையை சிக்கலாக்கினாய்.

நீயும் உன் அம்மாவும் நலம் என்று அறிந்தேன்.. யாரோ சொன்னார்கள்,
நீ மிகவும் சந்தோசமாக நல்ல வேலையில நல்ல முறையில் இருப்பதாக.
எனக்கு இன்னும் சந்தேகமுண்டு,
நானில்லாமல் நீ சந்தோசமாக இருப்பாயா என்ன?
தினம் தினம் உன் வாழ்க்கையில் நான் இல்லாமல், தனிமையில்..?

என்னை தவிக்கவிட்டிருக்கிறாய்..
ஓடவிட்டு
அலையவிட்டு,
மனம்குறுகச்செய்து..
நீ எக்காளமிட்டு கொண்டிருப்பாய்..
உள்ளே 'ஆண்பிள்ளை' கொதித்தெழுவான்..வெளியே புன்னகைப்பேன்..
நீ செய்த அத்தனையும் வெறுத்தேன்..
ஆனால்
உன்னை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்று மனதார நினைத்தேன்.

உன் அம்மாவும் நலமாக சந்தோசமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்..
ம்ம்... கண்டிப்பாக இருப்பார்கள்,
நான் உன்னைவிட்டு வெகுதூரம் தள்ளிவந்துவிட்டேனே, அதை தான் அவரும் விரும்பினார்.
உன் அம்மாவுக்காக தான் அத்தனையும் செய்தாய், என்னை நீ என்னை விட அதிகம் விரும்பியபோதும்.
சில நேரம் உனக்காக பரிதாபப்படுகிறேன்.. பாவப்பட்ட ஜென்மம் நீ!
உன்னால் உனக்கு கூட உதவிசெய்ய முடிவதில்லை, அவர்கள் மேல் நீ வைத்திருக்கிற அன்பினால்.

ஒரு நாள் நீ உணர்வாய் என்று நம்புகிறேன்..
நீ என்னை தவிக்கவிட்டதை,
என் வலியை..

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..
மனம்திறந்து நீ மன்னிப்பு கேட்பாய் என்று எண்ணி..
நடக்காத ஒன்று தான்..
இருந்தாலும் காத்திருக்கிறேன்..

அப்புறம் கடைசியாக..

நானும் நலமாக இருக்கிறேனென்று கேள்விபட்டிருப்பாய்..
அது நிஜம் தான்!!

--
வேறொரு 'நட்பு 'ஆங்கிலத்தில் எழுதியதை தழுவி எழுதியது.. !!

Thursday, October 18, 2007

கற்றது தமிழ்

சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி ஐஸ்கட்டிகளுக்கு நடுவால முன்னாடி போட்டத விட சின்ன டவுசர் போடவிட்டு இடுப்புல் இடுப்புல சேர்த்திவச்சு ஒரு குத்தப்போடுறத விட்டுட்டு, இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..

நாலு வயசுல இருந்து தொடைய தட்டி 'சரிகமபத்நி' கத்துகிட்ட தினவுல ராஜா என்னைக்குத்தான் சுதி விலகாம பாடுவாரோன்னு பேசுன நம்ம சகா மூஞ்சிய பார்த்து "நல்ல" வார்த்தையா நறுக்குன்னு சொல்லிட்டு 'பறவையே எங்கு இருக்கிறாய்'ன்னு நாமளும் கண்ண திறந்துட்டே எங்கயோ பறக்கும் போதும் நல்லாத்தான் இருக்கு..

ஆனா, படம் எப்படின்னு கேட்டீங்கன்னு.. 'போடா லூசு'ன்னு தான் சொல்லனும்.

"அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்
பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து :-) ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று."
அப்படின்னு நம்ம ப்ரகாஷ் சொல்றாரு..

எனக்கு தெரிஞ்சு பராசக்தி காலத்துல இருந்து divided society ப்ரச்சனைய பத்தி எடுத்துட்டு தான் இருக்காங்க... இப்போ என்ன புதுசா.??? எதோ ஐடி'னால மட்டும் தான் இப்படிங்கற மாதிரி நிறையா பேரு எழுதறாங்க, பேசறாங்க.. என்னங்க இது அநியாயம்.. மொத்தமா இந்தியாவ எடுத்துகிட்டா.. சரி வேண்டாம், அது பெரிய ஏரியா.. தமிழ்நாட்டை எடுத்திகிட்ட.. சென்னை'ங்கிற ஒரு பெரு நகரத்துல தான் ஐடி மக்கள் இருக்காங்க.. கோவையில இருக்காங்க. அது ரொம்ப கொஞ்சம்.. மதுரையுல அதைவிட கொஞ்சம்.. இந்த மூணு ஊரையும் விட்டிருவோம்.. இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு தெக்கத்திகுக்கிராமத்த எடுத்துக்குவோம், (அது தான் இப்ப ஃபேஷன், சவுத்துல ஒரு வில்லேஜ்'ன்னு ஆரம்பிச்சா உடனே கோடம்பாக்கத்துல கதை சொல்ல வர சொல்றாங்களாம்.. ) அங்க இந்த மாதிரி சமுதாய பிரிவினை இருக்ககூடாதில்ல.. தினம் தினம் கோழியடிச்சு விருந்து வச்சு கொண்டாடுற விவசாயியும் உண்டு, வருசத்துல அறுபது எழுபது நாள் மட்டும் அரிசி கஞ்சி சாப்புடுற விவசாயியும் உண்டு, அவுங்க economicial status differece'க்கும் ஐடி தான் காரணமா?? என்ன சாமி இது அநியாயம், மாசம் பூராவும் நைட்ஷிப்ட் பார்த்து மாசக்டைசியில 20-25ரூவா சம்பளம் வாங்கி அதுல 10ரூ வாடகைய குடுத்துட்டு பாதிபணத்த ஊருல கூலி வேலைக்கு கூட போக முடியாம கிடக்குற குடும்பத்துக்கு அனுப்பற பலபேரை எனக்கு தெரியும். நானே கிட்டத்தட்ட ஒரு 15-20 பேரை "வெறும் டிகிரி வச்சுகிட்டு என்னங்க செய்யிறது"ன்னு லாரியில க்ளீன்ராவும், சந்தையில லாரிக்கு டோக்கன் போட்டுட்டும் இருந்த ஆளுகள கூட்டுட்டு வந்து BPO'ல தள்ளி விட்டிருக்கேன். அவுங்க வூட்ல எல்லாம் மூணு நேரம் இப்ப அரிசிச்சோறு சாப்பிடுறாங்க.. ஒரு நோம்பிநொடின்னா குடும்பமே சென்னைசில்க்ஸ் போயி நல்ல துணி எடுத்து போடுது. அவன் இங்க ஐடி'யில வேலை பார்க்கிறது தான் குத்தமா படுது உங்களுக்கு.. என்ன சிந்தனை கர்ம்மம்ங்க இது.

இதுல ":சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான
தீர்வுகள் சொல்லாமல்"
ன்னு வேற ப்ரகாஷ் சொல்றாரு.. கண்டிப்பா ஷங்கர் படத்துல சொல்ற தீர்வு எல்லாம் அபத்தம் தான், ஆனா அதே நேரத்துல

"B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு கேக்கிறதும் நீ மட்டும் உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிருக்கே, நான் பிஞ்ச செருப்பு போட்டிருக்கேன்னு, போயி சண்டை புடிக்கிறதும்" எந்த வகையில அபத்தம் இல்லைன்னு என்ககு புரியவே மாட்டேங்குதுங்க.

[ஷங்கர் படத்துல அவர் சொல்ற அபத்த தீர்வுகளாது ஒத்த மனுசன் மொத்த லஞ்சத்தையும் அழிக்கறதுங்கிற மாதிரி மேட்டர், நம்ம பய கவுந்தடிச்சு படுத்துட்டு கனவுல அதை செஞ்சு பார்த்துட்டு, காலையில எழுந்திருச்சு வழக்கம் போல வேலைய பார்க்க போயிடுவான்]

இந்த ஐடி'ங்கிற ஒரு வார்த்தை எனக்கெல்லாம் தெரியவர்றதுக்கு முன்னாடியே வெறும் pucயோ இல்ல +2வோ diplamoவாதான் படிச்சதுனால கடைவீதியில செட்டியார் கடையில கணக்குபுள்ளையாவோ, இல்ல லாட்டிரி கடையில போர்டு எழுதவோ இல்ல சிப்காட்'ல லேத்' ஓட்டவோ போன ஆளுகளுக்கும் டிகிரி முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி கவர்மென்டுலயோ, இல்ல பேங்க்லயோ, எல்.ஐ.சி'யிலயோ வேலைபார்த்தவங்களுக்கும் இடையே economical inequality இருந்துட்டு தான் இருந்துச்சு, 800ரூ/1000ரூ சம்பளம் வாங்கிற ஆளுக 7/8ஆயிரம் சம்பளம் வாங்கிறவங்களால ஏறிப்போன வீட்டு வாடகையும் காய்கறி விலையாலயும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தாங்க.. ஒவ்வொரு தடவை சம்பளகமிஷன் இப்பவும் அதே நிலமைதான்.. எதோ புதுசா ஐடி'ன்னு ஒன்னு வந்திட்டதால தான் இந்த நிலமைன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டிட்டு இருக்கம்னு தான் தோணுது.

Social inequalityங்கிறது தவறான அரசு கொள்கைகளும்ம், தனிமனித சுயநலமும் தான் காரணமா இருந்திருக்கு, இருந்திட்டிருக்கு.. ITன்னால மட்டும் புதுசா எதுவும் ஆயிடல.. 'எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்'னு டீசன்ட்டா சொல்லுவாங்க நம்ம சுத்துவட்டாரத்துல அந்த கதையா சும்மா சும்மா ஐடி'ய மட்டம் தட்டாம.. உருப்படியா எதாவது யாராவது செய்யுங்க.. மொத்த ஐடி சனமும் உங்களுக்கு உறுதுணையாத்தான் இருக்கும் :)

மொத்தத்துல முத்து சொல்ற மாதிரி
"இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்க"

இந்த பந்தா பகட்டெல்லாம் வேண்டாம்னா, தமிழ் படிச்சுட்டு, வாழ்க்கைக்கு (bread winning) எதாவது ஒரு கடையில பொட்டலம் கட்டிட்டு, தனக்கு புடிச்ச தமிழ் மேல நேசத்தோட நாலு பேருக்கு தமிழ் கத்து குடுத்துட்டு இருக்கனும். ஒரு வேளை தமிழே கூட க்ளிக் ஆயிட்டா அப்புறம் கவியரசு மாதிரி அதையும் வித்து பொழைக்கலாம்.. [BPO'ல சேர்ந்து பொட்டிதட்டிட்டு உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிகிட்டு இணையத்துல தமிழ் வளர்க்க கூட வந்திருக்கலாம்] அதை விட்டுட்டு இந்த படத்துல கூட நம்ம ஹீரோ சும்மா சுத்திட்டு ஊருக்கெல்லாம் கிடைச்சது நமக்கு ஏன் கிடைக்கலைன்னு ஒரு போறாமையால, சுயநலத்தால தான் இப்படி லூசுத்தனமெல்லாம் செய்யறது எல்லாம் நல்ல சிந்தனையுமில்ல வெங்காயமும் இல்ல.

Growing economical imbalance is not good.. ஆனா IT is not the (sole) reason for that..
நல்லா கவனிங்க 'Growing'.. இப்ப ஐடி வந்து தான் இதைய புதுசா உருவாக்கிடல.. நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நம்ம ஊருல இருந்திருக்காங்க..

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு 'அபத்தம்' தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

[ பொதுவா திருட்டு சிடி'யில படம் பார்க்கிறது இல்லைன்னாலும், ஒரு வாரம் முன்னாடி எத்தேசையா ஒரு சகா வீட்டு இந்த படம் பார்க்க கிடைச்சது.. பார்த்ததுமே எழுதனும்னு தோனுச்சு.. ஆனா எப்படியோ தள்ளிப்போயிருச்சு. நேத்து வேலையிடத்துல ஆணி கம்மியானதுல சட்டுன்னு எதோ தோணி, கூட இருந்து ரெண்டு தடியனுகள கூட்டிட்டு பார்டர் தாண்டி ஒசூர்ல படத்த போயி பார்த்துட்டு வந்தாச்சு, அதுனால சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்.. மன்னிக்கறவன் மனுசன்.. மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுசன்னு விருமாண்டி கூட சொல்லியிருக்காரு.. மனுசனா நடந்துக்கங்க, ஆமா :) ]

--
#251

Tuesday, October 9, 2007

எனக்கு 'ஹேப்பி பர்த்டே ' :)

மூணு நாளு மாசம் முன்னாடியிருந்தே எனக்கு 'ஹேப்பி பர்த்டே வருது'ன்னு ஊரெல்லாம் சொல்லி திரிஞ்சுட்டு இருந்தது ஒரு காலம்.. புரட்டாசி கடைசியில வர்ற அந்த கிரகத்துக்கு நம்ம வூட்ல 'ஆடி தள்ளுபடி'யில ஒப்பனக்கார வீதியில அங்கராக்கு வாங்கிட்டு வந்துருவாங்களா, அப்ப இருந்து பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் 'எனக்கு ஹேப்பி பர்த்டே வருது' புராணம் தான்.

'க்வீ'பாலீஷ் பளபளக்க பாட்டா ஷூ போட்டுட்டு, முதுகுல புத்தகபொதியும், ஒரு கையில சாப்பாட்டு பையும், மறுகையில முட்டாய்பொட்டியுமா பள்ளிக்கூடம் போயி பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் எனக்கு ஹேப்பி பர்த்டே'ன்னு சொல்லி முட்டாயி குடுத்து, ரெண்டு மூணு முட்டாய் எடுத்துக்கிற மிஸ்'கள எல்லாம் மனசுகுள்ளாரயே திட்டிகிட்டு, இன்னைக்கு பூராவும் யாரும் நம்மள 'ஷோ யுவர் ஹான்ட்'ன்னு 'ஸ்டிக்' எடுக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல க்ளாஸ் லீடர் பேர் எழுதிவச்சாலும் பரவாயில்லைன்னு பக்கத்துல உக்காந்திருக்கிற சிவா'னையும், சுதா'வையும் வம்பிழுத்து பேசிகிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு போறதுகுள்ளார தீர்ந்துட போகுதுன்னு முட்டய் போட்டியில இருந்து ஒரு கை அள்ளி புத்தக பையில போட்டு வச்ச சரக்க அப்ப அப்ப தொட்டு தொட்டு பார்த்துட்டே சந்தோசமா போயிடும் ஒரு நாள் முழுசும்..

அப்புறம் ஒரு காலத்துல ஆடித்தள்ளுபடியில ஓடிப்போயி வாங்க வேண்டியதெல்லாம் இல்லாம என்னைய கூட்டிட்டு போயி புடிச்ச மாதிரி கோட்டும் டையும் 'பிங்கி ரெடிமேட்ஸ்'ல எடுக்கிற காலத்துல தான் புதுசா சாயங்கால நேரத்துல காலனியில சுத்துற எல்லா குரங்குளையும் கூப்பிட்டு 'ப்ரெட்டிஹவுஸ்'ல ஆர்டர் செஞ்ச கேக்கு மேல மெழுகுவர்த்தி எல்லாம் கொளுத்தி வச்சு அப்புறம் அதை ஊதி அணைச்சுட்டு கேக் வெட்டுற சடங்கெல்லாம்..

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வயசு ஏற ஏற, 'வயசு ஏற ஏற அறிவு ஏறும்னு' நாலு பேரு சொன்னதுல, நம்மளா நமக்கு அறிவு வந்திருச்சுன்னு நினைச்சுகிட்டு, பொறந்தநாளும் அதுவுமா இதென்ன ஊதி அணைக்கிற பழக்கம்னு 'வெவரமா' பேசி புரட்சியா கெளம்பி 'அன்னை இல்லத்து'க்கு போயி டொனேசன் ரசீது வாங்கிட்டு வந்திட்டிருந்தேன்..

இன்னும் கொஞ்சம் வயசு ஏறிப்போயி பொறந்தநாள் அன்னைக்கு வூட்ல இருக்க வேண்டியதில்லைன்னு ஆனதுக்கப்புறம் நடுராத்திரி 12 மணிக்கு புரட்சி பீர்பாட்டில்ல பொங்கிவர ஆரம்பிச்சுது..

மெதுமெதுவா.. நம்ம பொறந்த நாள நம்மளே கொண்டாட கூடாது, நம்மள சுத்தி நாலு பேரு அதை ஞாபக வச்சு கொண்டாடனும்னு தத்துவம் பேசிட்டு திரிஞ்சது சமீபகாலம் வரைக்கும்.. இன்னும் அப்படித்தான் நெனச்சாலும்.. 20 வருசம் முன்னாடி இருந்த கதை தான் இன்னைக்கும் ரிப்பீட் ஆகுது.. என்ன முன்ன நானே போயி ஊரெல்லாம் எனக்கு 'ஹேப்பி பர்த் டே'ன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இப்போ அந்த வேலைய எனக்கு பதிலா 'ஆர்க்குட்' செய்யுது :)

'வாழ்த்து சொன்ன சங்கத்து சிங்கங்களுக்கு, நண்பர்களுக்கும் நன்றி..

Friday, September 28, 2007

அன்றும்! இன்றும்.!

அன்று




இன்று:


மக்கள் தீர்ப்பு .. :)
(விளங்கிடும்)

நாளைக்கு.. என்ன செய்வாங்களோ..? Dhoni's boys பத்தி சொல்லைலைங்க.. நம்ம மக்கள பத்தி சொல்றேன்.

--
#247

Monday, August 13, 2007

ர்ரிப்பீட்டு

கடைசியா அஞ்சு வருஷம் முன்னாடி ஒரு தை மாசத்து நிறைஞ்ச முகூர்த்த நாள்ல, வடக்கத்திக்காரங்க பாணியில கட்டுன ஒரு பஞ்சுமுட்டாய் கலர் பட்டுபுடவையில, லார்ட்ஸ் ஹாஸ்பிடல் சர்ஜன் 'ரஞ்சித்'கூட ஜோடியா நம்மூர் வழக்கப்படி 'வரவேற்ப்பு'க்கு நின்னப்ப பார்த்தது, அதுக்கப்புறம் இப்பத்தாங்க, நேத்து சகா ஒருத்தன வண்டி ஏத்திவிட போனப்ப எத்தேசையா சுமி'ய பார்த்தேன். கொஞ்சம் பூசினாப்புல ஆயிட்டா.




'ஹேய்..எப்படிப்பா இருக்கே?' இன்னும் கண்ணுல அதே சிரிப்பு..
'ரஞ்ச், இது ராஜ், என் ஸ்கூல்மேட், நம்ம மேரேஜ்ல மீட் பண்ணினது, டு யூ ரிமம்பர்?'.. டாக்டர் அப்ப மாதிரியே ட்ரிம்மா இருக்காரு.முன்னந்தலை தான் கொஞ்சம் ஏறியிருக்கு. கல்யாணத்தன்னைக்கு ஒரு பூங்கொத்து குடுத்து சம்பிரதாயமா பேசுனது, அதுவும் ஆறு வருஷம் முன்னாடி, பாவம் அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இருந்தாலும் 'யா!யா!..ஹவ் டு யு டூ?'ன்னு ஒரு ஆச்சிரிய புன்னகையோட கைகுடுத்தாரு.

ஒரு மாச லீவுல வந்திருக்காங்களாம், சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் போயிட்டு, அப்படியே கொஞ்சம் ஊர்சுத்தல், இப்ப ரஞ்ச்'க்கு எதொ கான்ஃப்ரன்ஸ் அட்டன்ட் பண்ணனுமாம், அதுனால சுமி'மட்டும் சென்னையில இன்-லா வீட்டுக்கு போறதுனால ட்ராப் பண்ண வந்திருக்காராம்..
சுமி சொன்னத சுருக்கி குடுத்திருக்கேன், சரியான வாயாடி.. ஸ்கூல் படிக்கும் போது சுமி, மரக்கடை செட்டியார் பொண்ணு பொன்னரசி, நான், அப்புறம் துரை எல்லாரும் ஒரே பெஞ்ச். (ஃபார் யுவர் இன்போ : நாங்க படிச்சப்போ எங்க ஸ்கூல்ல நாலாவது வரைக்கும் தான் கோ-எட்) பக்கத்துல உக்காந்துட்டு, பெஞ்ச், டேபிள் எல்லாம் பென்சில்ல கோடு போட்டு, இதை தாண்டி உன் நோட்டு, பென்சில்பாக்ஸ் எதுவும் வரக்கூடாதுன்னு என்னையும் துரையனையும் ஒரு வழி பண்ணிருவா.. மிஸ் கிட்ட சொன்னாலும் கடைசியில எங்களுக்கு தான் திட்டு விழும், சில நேரங்கள்ல அடியும்.. ஏன்னா இவ வாய் சாமார்த்தியம் அப்படி, அது போக நம்ம துரையன் ட்ராக் ரெக்கார்ட் அப்படி..(நான் குட்பாய்!)

நாலாவதோட ஸ்கூல் மாறி போயிட்டாலும், அடுத்த வீதியில தான் சுமி'யும் இருந்தாங்கிறதுனால அந்த நட்பு மட்டும் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு.. நமக்கு சும்மா புஸ்தகத்தை பார்த்தாலே எதோ பேயடிச்ச மாதிரி ஆயிடும், தினமும் 'இப்படியே போனா நீ சினிமா கொட்டாயில முறுக்கு விக்கத்தான் போக போற'ன்னு தினமும் வீட்டுல சாபம் குடுப்பாங்க.. நமக்கு மனசுகுள்ள ஒரே சந்தோஷம், அப்படி போன தினமும் சினிமா பார்க்கலாமேன்னு, அதுனால நம்ம வீட்டாளுக எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி நான், சிவா, ஸ்ரீ, மங்கை அப்படின்னு ஒரு கூட்டத்தை உருவாக்கி பத்தாவது படிக்கும் போது எல்லாம் சுமி வீட்டுல தான் க்ரூப் ஸ்டடி..
எல்லாரும் ஒழுங்கா படிக்க, நான் மட்டும் மும்முரமா புஸ்தகத்தோட பின்னட்டையில படம் வரைஞ்சுகிட்டு இருப்பேன், சுமி' பயங்கிற தொணதொணப்பு, எதாவது பேசிகிட்டே இருப்பா. 'நான் இன்னைக்கு கருப்பு பென்சில் வாங்கினேன், கருப்பு பேனா வாங்கினேன், கருப்பு டாப்ஸ் வாங்க போறேன்னு, ஒரே கருப்பு புராணமா இருக்கும்..அவளுக்கு கருப்பு ரொம்ப புடிக்க ஆரம்பிச்சிருக்காம், 'ஐ ஹாவ் ஸ்டார்டர்ட் லவ்விங் ப்ளாக்'ன்னு அவ சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் தெரியும் அவ கண்ணுல.. கருப்பா ஒருத்தன தான் கட்டிக்குவேன்னு வேற சொல்லுவா..

நமக்கு வீட்டுல் உக்காந்து வரைஞ்சாத்தான் எங்க அம்மா 'படிக்கறத வுட்டுபோட்டு என்னடா எப்பப்பாரு கிறுக்கிட்டே கிடக்கற'ன்னு தொணதொனக்க ஆரம்பிச்சிருவாங்கன்னு இங்க வந்தா, இவ வேறன்னு ஒரே எரிச்சலா இருக்கும்.. இதுக்கு நடுவால மத்தவங்க வேற பயங்கிர படிப்பாளிக நம்மள இவகிட்ட விட்டுட்டு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டாங்கன்னா அவ்ளோ தான், சுமி'யோட அம்மா காம்ப்ளான் கொண்டு வந்தாத்தான் புஸ்தகத்துகுள்ளார இருந்து தலைய எடுக்குங்க.. அன்னைக்கு புஸ்தகத்துகுள்ளார தலைய விட்டது, இன்னைக்கும் கம்ப்யூட்டருக்குள்ளார தலையவிட்டுட்டு கிட்க்கறாங்க.. ஒரு வித்தியாசமும் இல்ல..

அப்படி இருந்த நாங்க இந்த அஞ்சு வருஷமா மட்டுமில்லீங்க, அதுக்கு முன்னாலயும் ஒரு நாலு வருஷம் எந்த தொடர்புமில்லாம தான் இருந்தோம்.. அதுக்கு காரணம் 'சந்துரு', அவனும் எங்க செட்' தான். அவனுக்கு சுமி' மேல 'தெய்வீக' காதல், அப்படித்தான் எங்கிட்ட சொன்னான்!.. நான் இன்னொன்னு சொல்லலையே, சுமி' எங்க ஏரியாவும ரொம்ப பிரபலமான் 'பிகர்', தெரு முக்குல ஒரு கூட்டமே அவ தரிசனத்துக்கு நிக்கும், ஆனா நம்ம தான் பள்ளிகூடம் தாண்டுற வரைக்கும் பச்சபுள்ளையாவே இருந்துட்டமா, அதுனால அந்த தெரு முக்குல நிக்கிற சமாச்சாரத்துல எல்லாம் நான் (அப்போ!) கலந்துகிட்டதில்லைங்க..
(அவங்களும் நம்மள சேத்திக்கலைங்கிறது வேற விஷயம்)

அந்த கூட்டத்துல முக்கியமான் ஆள் இந்த சந்துரு'. நம்மகிட்ட வந்து 'மாப்ளே, நீ தான்எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்'ன்னு சொல்ல, அதுவரைக்கும் நம்மள ஒரு பொருட்டா கூட சீன்டாத பசங்க, நம்மள வந்து மாப்ளே'ங்கிறானுகன்னு ஒரு மிதப்பாகி நானும் பெருமையா அவன்கிட்ட இருந்து 'லவ்லெட்டர்' வாங்கி போஸ்ட்மேன் வேலை பார்த்தேன், அப்படியே இதை சாக்கா வச்சு, அவனுக கூட்டத்துல கலந்துடனும், நாமளும் அப்படியே ஒரு ஜமாவா தெருமுக்குல நிக்கனும்னு ஒரு நப்பாசை. எவ்ளோ நாள் தான் குட்பாய்'யாவே இருக்கிறது.. !

நம்மள எதோ அல்லக்கை வேலைக்கு அவனுக பயன்படுத்திருக்கானுகங்கிறதெல்லாம் பிற்காலத்துல தான் நமக்கு தெரிஞ்சுது.. அப்படி ஒரு கேடுகெட்ட போஸ்ட்மேன் வேலை பார்த்ததுல தான் சுமி'க்கு பயங்கிற கோபம், என்னை கிட்டத்தட்ட சட்டைய புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிட்டா,எப்படிடா நீ இதை செய்யலாம், உன் மூஞ்சியிலயே இனிமேல் முழிக்க மாட்டேன்னு அழுது சத்தம் போட்டுட்டு போயிட்டா...எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு, ச்சே அந்த பெரிய பசங்க கூட்டத்துல சேர ஒரு சான்ஸ் கிடைச்சுது. இவ இப்படி அதை கெடுத்துட்டாலேன்னு.. நல்ல வேளை வீட்டுல யாரு கிட்டயும் சொல்லாம விட்டாளேன்னு ஒரு சந்தோஷம்..

அப்புறம் அப்படியே கொஞ்ச நாள்ல அவுங்க வீட்டுல வேற பக்கம் வீடுகட்டி அங்க குடி போயிட்டாங்க, நாமளும் அப்புறம் +2 பிசி, வெளியூர்ல காலேஜ்ன்னு அப்படியே வேற மாதிரி போயிட்டோம். அப்புறம் அவ கல்யாணத்துக்கு எங்கய்யன் எங்கயோ வேற வேலையா போனதுனால எங்கம்மாவுக்கு சாரதியா போயி, ரிசப்ஷன்ல வாழ்த்து சொல்லிட்டு வந்ததோட சரி.. அதுக்கப்புறம் நேத்து தான் பார்க்கிறேன்...

'வண்டி வேற ஒரு மணிநேரம் லேட்டு, ரஞ்சித்துக்கு எதோ அப்பாயின்ட்மென்ட் இருக்காம், ஒரே போர்ப்பா'ங்க, நான் 'ஃப்ரி தான், நான் இருக்கேன், வண்டி கிளம்பர வரைக்கும்னு' சொல்லி ரஞ்சித்த அனுபிச்சுட்டு நாங்க ரெண்டு பேரும் காபிஷாப்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்..
மலரும் நினைவுகள் எல்லாம் பேசிட்டு இருந்தோம், அப்போத்தான் சுமி கேட்டா, 'கல்யாணம் எப்படா?'. வர வர யாரை பார்த்தாலும் இதே கேள்விய தான் கேக்குறாங்க, நானும் வழக்கம் போல சிரிச்சுகிட்டே 'பண்ணிக்கலாம்னு' வழக்கம் போல சொன்னேன்.. 'யாராவது பார்த்து வச்சிருக்கியா?' இது அடுத்த கேள்வி.. நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவளே 'உன்கிட்ட போயி இதை கேக்குறேன் பாரு , நீ எங்க போயி...'
'ஏன் அப்படி, என்னை பார்த்தா அவ்ளோ இளக்காரமா இருக்கா என்ன?'
'பின்ன என்ன, உனக்கு என்னைக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்கு.. சரி அதை விடு.. சிவா,எப்படி இருக்கான்'ன்னு அப்படியே பேச்ச மாத்திட்டா... நானும் கண்டுக்கல.. அப்புறம் ஒரு மணி நேரம் லேட்டுன்ன வண்டி ஒன்னரை மணி நேரம் கழிச்சு கிளம்ப தயாராக, (என்னைக்காவது ஏர்-டெக்கான் நேரத்துக்கு கிளம்புமா.. ஒரு போட்டியே வைக்கலாம் போல அதுக்கு) நாங்க பரஸ்பரம் போன் நம்பர், ஈமெயில் ஐடி எல்லாம் குறிச்சுகிட்டோம்.

போகும் போது கடைசியா 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, இப்ப பார்க்க கொஞ்சம் கலராயிட்ட'ன்னு சிரிச்சுகிட்டே கிளம்புனா.. 'ம்ம்.. அப்படியா'ன்னு பக்கத்துல இருந்த கண்ணாடியில பெருமையா பார்த்துகிட்டேன்.. 'அநியாயத்துக்கு பழமா இருக்காதடா, growup man! ஆல் தி பெஸ்ட்'ன்னு சொல்லிட்டு டாடா காமிச்சுட்டு போயிட்டா..



திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சுகிட்டே வந்தேன்.. 'growup man'?.. நம்மள பார்த்து எதுக்கு அப்படி சொன்னா?? நல்லா வளர்ந்து மலமாடு மாதிரித்தான இருக்கோம்... ம்ம்.. அப்படியே யோசிக்கிட்டே போயி சிக்னல்ல வண்டிய நிறுத்துனேன். இந்த 200 செகன்ட் சிக்னல்ல நிக்கிறது மாதிரி ஒரு கொடுமையே இல்லீங்க.. எப்எம்'ல எதோ இங்க்லீஸ் பாட்டு.. ஆயிரம் இருந்தாலும் நம்மூரு ரெயின்போ மாதிரி வராதுன்னு மனசுகுள்ள சொல்ல சொல்ல.. டக்குன்னு
அவ சொன்னது ஞாபகம் வந்துச்சுங்க 'நீ அப்ப மாதிரி கருப்பு இல்லடா, கொஞ்சம் கலராயிட்ட'..

நமக்கு எல்லாமே லேட்டாத்தான் புரியுது.. இன்னும்..!!



(ஏற்க்கனவே எழுதினது தான்.. ஏன் இங்க மறுபடியும்னு கேட்டீங்கன்னா.. இதுக்கு பேரு தான் நினைவுகுப்பைகள கிளருறது :) )

pic :http://www.martinejardin.com/:


---
#241

Tuesday, August 7, 2007

சொகம்!

ஊருக்கு தெக்கால நெருக்கிட்டு நிக்கிற தென்னந்தோப்புகள தாண்டி, பருவகாலத்துல மட்டும் செவையேன்னு செம்மண்ணு தண்ணி ஓடுற சூலக்கல் ஓடக்கரைக்கு பக்கமா, கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் ஆள்ஆரவம் எதுவுமேயில்லாம வத்தலும் தொத்தலுமா விரிஞ்சு கிடக்கற சோளக்காட்டுக்கு நடுவால, பெரிய சந்தையில தக்காளி கூடை இறக்க போனப்போ ஒட்டஞ்சத்திர துலுக்கன் கிட்ட விடாப்பிடியா பேரம் பேசி மோனக்காரரு வாங்கிட்டு வந்த அந்த நஞ்சுபோன கனகாம்பரக்கலர் ஃபுல்கை அங்கராக்கும் வெளிரிப்போயி நூலெல்லாம் பிரிஞ்ச யானைக்கால் குழாயக்கும் ஊடால பிதுங்கிக்கிட்டு எட்டிப்பார்க்கிற வக்கப்புல்லும், ஒறட்டான் கையில எந்தி கிடக்கற கரித்துணியும், மண்சட்டியில காவியும் கரியும் குழைச்சு போட்ட தல வேசமுமா தன்னந்தனியா வரப்புக்கு நடுவே மூங்ககழியில தொக்கி நின்னுகிட்டிருக்கான் அவன்.


டவுன்கார இஞ்சினீரு தோட்டத்து சாலையில எப்பவும் இளைப்போட கயித்துகட்டில்ல கிடக்கற அவுங்க அப்பாரு மாதிரி, "இப்படி பேச்சு துணைக்கு கூட யாருமில்லாம ரவும்பகலும் காட்டுக்கு நடுவால நின்னு நின்னு சடஞ்சு போயிருப்பே, பாவம் நீயு"ன்னு ஒரு சோலிய அவன தாண்டி போகும் போது கேட்டு வச்சேன்.
"அப்படியெல்லாம் இல்ல.. நாலு உசுர பயமுறுத்தறுதல இருக்கற சொகம் இருக்கே, அது கிடைக்கிற வரைக்கும் ஒரு பொழுது கூட நான் சடஞ்சுக்கமாட்டேன்"
"ஆமாமா, அதென்னமோ நிசம் தான், எனக்கும் அந்த சொகம் தெரியும்" ஒரு நிமிசம் ரோசணையா அவன பார்த்து சிரிச்சுகிட்டே சொல்லிவச்சேன்.
"காஞ்ச வக்கப்புல்ல இப்படி உள்ளார தினிச்சு என்னைய மூங்கிகழியில தூக்கி நிப்பாட்டினவங்களுக்குத்தான் அது தெரியும்" - சட்டுன்னு பதில் வந்துச்சு.
அந்த பதில் நான் சொன்னத ஆமோதிச்சு சொன்னதா இல்ல நம்மள குத்திக்காட்டவா'ன்னு விவரம் புரியாம குழப்பத்தோட சோலிய பார்க்க போயிட்டேன்.
வருசமாச்சு அவன பார்த்து. பின்னாடி ஒரு நாள் வேறொரு சோலியா அந்தபக்கம் போனப்போ தான் கவனிச்சேன், பருவமழையில சாயம் கரைஞ்சு காவியும் கருப்புமா கலந்து கிடந்த அவன் சட்டித்தலைக்கு கீழே, அந்த கனகாம்பர கலர் வெளுத்து போன அங்கராக்கு இன்னும் கொஞ்சம் பெருசா கிழிஞ்சு, வெளியே தெரிஞ்ச வக்கபுல்லுல... ஒரு காக்கா கூடு கட்டி குஞ்சு பொறிச்சிருந்தது.. 'ம்ம் எல்லாப்பயலும் ஒரு நா சடஞ்சு போயித்தான ஆகனும்'.



நன்றி : கலீல்ஜிப்ரன் (கொஞ்சம் ஓவராத்தான் போறனோ!)

--
#240

Tuesday, July 3, 2007

மழை!






செய்தி 1: கோவைமாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
(அதான் மழை எல்லாம் நல்லா பேயுதே, ஊருலயே இருந்திடறது'ங்கிற சத்தம் இந்த வருசம் கொஞ்சம் கூடுதல் ஆகலாம்)

செய்தி 2: பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிடும்.
( ஏற்க்கனவே PAP திட்டத்தை ஒத்தக்கால் மண்டபம் வரை இழுத்துட்டீங்க, இதைய சாக்காட்டி இன்னும் இழுத்துறாதீங்கப்பு, அப்புறம் பாசனமண்டலத்துல வர்ற எல்லாருக்கும் உயிர் தண்ணி மட்டும் தான் விடமுடியும்)

செய்தி 3: வழக்கம் போல மழைக்காலத்தில் எங்கய்யன்னோடா பாட்டுக்கு நடுவே சொல்லாம கொள்ளாம 'மழையில் ஒரு மலைசவாரி' இந்த தடவையும் செஞ்சாச்சு
(கூடவே கட்டுனவ பாட்டும் இந்த தடவை கூடுதல் சேர்த்தி)

செய்தி 4: எங்க கிட்டயும் ஒரு டிஜிட்டல் கேமிரா சும்மாவே இருக்குது:)
(ஹி.ஹி)

(படங்களை அமுக்கி பெருசா பார்த்துக்கோங்க)

--
#232

Monday, July 2, 2007

பலிகுடுத்தா என்ன??




மிச்ச மீதி இருந்த ஆணியெல்லாம் புடுங்கிதள்ளிட்டு, புடுங்கிட்டதா பேரு பண்ணிட்டு, ராவோட ராவா கிடைச்ச வண்டியில ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா நின்னு நின்னு ஊருக்கு போயி, வழியில வர்ற சொந்தபந்தங்களையெல்லாம் பார்த்து ஒரு டீத்தண்ணி குடிச்சுட்டு, தோட்டத்து பக்கம் ஒரு சுத்து சுத்தி வந்து மழைக்காலத்து மராமத்து வேலைக்கு ஆள் சொல்லிவிட்டு, கிடைச்ச நேரத்துல நம்ம அம்மிணி வூட்டுக்கு வேற போயி நலம் விசாரிச்சு, குதூகலப்படுத்தி, பக்கத்துலயே நடக்கிற இணையநண்பர்கள் சந்திப்புக்கு கூட போகமுடியாம அடிச்சு தாக்குற மழைக்கு நடுவால பொறுப்பா எல்லா வேலையும் முடிச்சு, கடைசி சீட்டு கிடைச்சாலும் பரவாயில்லை நாளைக்கு காலையில கூலிக்கு போயே ஆகனும்னு ராத்திரி சொகுசுபேருந்துல ஏறி, நல்லவேளை இப்ப எல்லாம் இந்த தெருமுக்குல வாங்கின இந்த இழவெடுத்த டிவிடி'ய போட்டு இவனுக தூக்கத்த கெடுக்கறதில்லைன்னு நினைச்சுகிட்டே கொஞ்சம் சந்தோஷமா, தூக்கி தூக்கி போடுற கடைசியில உக்காந்தா, ஆப்பீஸ்ல குடுத்த ஏசர்'ல கசகசன்னு பாதிபடம், அதுவும் ஒரு கோணத்துல கேவலமா தெரியற இணையத்துல திருட்டுதனமா இறக்குன 'போக்கிரி'ய போட்டு உக்காந்து சீன் குடுத்தானே.. முன்சீட்டுல இருந்த ஒரு 'மாப்ள' அப்ப தோணுச்சுங்க.. இவனுகள எல்லாம் பலிகுடுத்தா என்ன??

--
#231

Wednesday, June 27, 2007

நான் செய்த அருஞ்சாதனை..

இங்க ஒரு எட்டு வந்து எட்டு போட்டுட்டு போங்கன்னு ப்ரசன்னா நம்மள கூப்பிட்டுருக்காரு.. கொஞ்ச நாளா அதிகம் இந்த பக்கம் வராதவனுக்கு ஒரு புடி கிடைச்சிருக்கு.. இத வச்சு எப்படியும் ஒரு பதிவை போட்டு மக்களை மகிழ்ச்சி கடல்ல இறக்கி விட்டுறதுன்னு முடிவு செஞ்ட்டேன்..

நான் செயத அருஞ்சாதனைகள் என்னன்னு உக்காந்துட்டு யோசிக்கிறேன்.. நடந்துட்டு யோசிக்கிறேன்.. படுத்துட்டு யோசிக்கிறேன்... விடிய விடிய யோசிக்கிறேன், ஒரு கிரகமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்க மாட்டேங்குது.. இதென்றா வம்பா போச்சு அந்தளவுக்கா நம்ம ஞாபகமறதி அதிகமாயிருச்சுன்னு விசனத்தோட உக்காந்திருக்கவன் கொமட்டுல இடிச்சு "நீ எதாவது சாதிச்சிருந்தாத்தானே ஞாபகம் வரும்ன்னு வூட்டம்மிணி சொன்னதும் தான் எனக்கே தெரியுது.. நிசமாலுமே நம்ம ஒரு சாதனையும் செய்யலைன்னு :(.. என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு மனசு வெறுத்து போயி டீவி பொட்டி முன்னாடி போயி உக்காந்தனுங்க.. அதுல கனா காணும் காலங்கள்' சட்டுன்னு அந்த படத்துல நம்ம 'திவ்யா'ம்மா உலுக்குவாங்களே 'அது எப்படிடா ஒன்னுமே தெரியாம ஒருத்தன் இருப்பான்னு' அந்த காட்சி நம்ம முன்னாடி வருது.. ஆஹா அந்த மாதிரி எம்புட்டு சாதனை செஞ்சிருப்போம்.. அதை லிஸ்ட் போட்டு குடுக்கறதவிட்புட்டு இப்படி இடிஞ்சு போயி உக்காந்திருக்கயே ராசா'ன்னு சட்டுன்னு ஒரு.. அது என்னாங்க சொல்லுவாங்க. .. ஞானமா.. ம்ம் அதுதான் அது கிட்டிருச்சுன்னு வையுங்களேன்..

எழுத ஆரம்பிச்சா லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது.. எட்டு தான் போடனுமாமே, நாம பொதுவா எந்த சட்டதிட்டத்தையும் மதிக்கறதில்லைன்னாலும்.. கூப்பிட்டவங்க சொல்லியிருக்காங்க.. அந்த மரியாதைக்காக நான் செஞ்ச சாதனைகள்ல பெரிய சாதனையா ஒரு எட்டு மட்டும் இங்க.. (முழு சாதனை லிஸ்ட்டும் கேட்டு 'சுகப்படனும்னு நினைக்கிறவங்க, தனியா ஒரு மயில் தட்டிவுடுங்க)


1. என் வாழ்க்கையில ஒரே ஒரு முறை தான் மேடை ஏறி பாடியிருக்கேன்.. நாலாப்பு படிக்கும் போது, ஈரமான ரோஜாவே :) அதுல நமக்கு கிடைச்ச முதபரிசு.. அதுக்கப்புறம் அந்த கொடுமைய என் கல்யாணத்துல மட்டும் தான் செஞ்சேன்.. வேறஎப்பவுமே மேடையேறி பாடினதே கிடையாது.
(உங்கம்மா டீச்சரு அதுனால உனக்கு முதபரிசு குடுத்துட்டாங்கன்னு இன்னைக்கு வரை சொல்லி சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்கான் ஒருத்தன்)

2. ஊர் உலகத்துல நாய் கடிச்சவன், தேள்கடிச்சவன் இருக்கான்.. ஏன் புலி சிங்கம் கடிச்சவன் கூட இருக்கான்.. ஆனா பெருச்சாளி கடிச்ச முத ஆள் நீதான்டா'ன்னு எங்க தெருடாக்டர் (குடும்பத்துக்கு வைத்தியம் பார்த்த குடும்படாக்டர், தெருமுச்சூடுக்கும் இவரே அத்தாரிட்டி அதுனால தெருடாக்டர்) என்னைய பார்த்து ராத்திரி ரெண்டு மணிக்கு விழுந்து விழுந்து சிரிச்சது ஒரு சாதனை.
(நான் செஞ்ச சாதனையா இல்ல பெருச்சாளி செஞ்ச சாதனையான்னு தெரியல..எப்படியோ ஒரு சாதனை)

3. முதமுதலா கியர் வண்டி -பைக் ஓட்டி பழகறீங்க, எங்க ஓட்டுவீங்க.. ஒரு க்ரவுண்ட்லயோ இல்லா அதிகம் போக்குவரத்து இல்லாத வீதியா பார்த்து ஓட்டுவீங்க.. நாம அதுல ஒரு சாதனை செஞ்சோம்.. முதல்முறையா கியர் வண்டி ஓட்டுனது தொடர்ந்து 55கிமி, வால்பாறை டவுன்ல இருந்து ஆளியார் வரைக்கும். 40+ கொண்டைஊசி வளைவுக இருக்கிற மலைப்பாதை. சமீபத்துல கூட ரெண்டு நாள்ல 1300 கிமி தூரம் பைக்ல சுத்திட்டு வந்தேன்னாலும், முத தடவை பை ஓட்டத்தெரியும்னு பொய் சொல்லி பைக் எடுத்துட்டு அந்த பாதைய எப்படி தனியா, அதுவரைக்கும் கியர் வண்டி ஓட்டாத நான் ஓட்டிட்டு வந்தேங்கிறது இன்னைக்கு வரைக்கும் எனக்கே ஆச்சிரியம் குடுக்கிற சாதனை.
(பொள்ளாச்சி வரைக்கும் வராம ஏன் ஆளியார் வரைக்கும்தான் வந்தேன்னு தோணலாம்.. அது ஏன்னா.. மலைப்பாதையில ஒழுங்கா வந்த நான் சமவெளிக்கு வந்ததும் தடுமாறி விழுந்து ஹேன்டில்பார் திரும்பி.. அப்புறம் அங்க இருந்து வண்டிய தள்ளிட்டு வந்து போன் போட்டு ஒரு சகாவ வரசொல்லி ஊருக்கு வந்து சேர்ந்தேன்)

4. தமிழகத்தின் மாபெரும் பொழுதுபோக்கான 'சீரியல் பார்க்கிறதுங்கிற சமாச்சாரத்துல இது வரைக்கும் ஈடுபட்டதே இல்லை.. வெளிமாநிலத்துல /நாட்டுல பொட்டிதட்டுற ஜென்டில்மேன்-லேடீஸ் எல்லாம் இருப்பீங்க இந்த லிஸ்ட்ல், ஆனா நான் வூட்ல இருந்த காலத்துலயும், வூட்டாளுக சீரியல் பார்த்த காலத்துலயும் சரி, இன்னைக்கு வரை எந்த டீவியலயும் எந்த மெகா தொடரையும் ஒரு எபிசோட் கூட முழுசா பார்த்ததில்லை.
(எங்கம்மா சின்ன வயசுல 'ரயில்சினேகம்' முச்சூடும் பார்த்தியேன்னு சொல்றாங்க.. நமக்கு 'இந்த வீனைக்கு..' பாட்டை தவிற வேற எதுவும் ஞாபகம் இல்லை. அப்படியே இருந்தாலும்.. அது அறியாத வயசு, இப்போ தினமும் காய்கறி அரிஞ்சு குடுக்கற வயசு)

5. வலையுலகத்துலயே, ரிலீஸ் ஆவறதுக்கு முன்னாடியே மாபெரும் வெற்றி பெற்ற 'அந்த' படத்தை பத்தி பதிவு எழுதாத ஆள் நான் ஒருத்தன் தான்ன்னு நினைக்கிறேன், இதுவும் ஒரு சாதனை.
(ஆனா படத்தை மட்டும் வக்கனையா ரெண்டு தடவை பார்த்து தொலைச்சுட்டேன்.. என்ன செய்யறது நம்மள ஓசியில பார்க்க விடுற ரெண்டு தியேட்டர்லயும் ஓடுதே)

6. தீபாவளிக்கு ரிலீஸ் ஆனா அஞ்சு படத்துல நாலு படத்தை ஒரே நாள்ல பார்த்துட்டு, அடுத்த நாள் செமஸ்டர் பரிட்ச்சை முடிஞ்சதும் அவசரமா மெஸ்ல கொட்டிகிட்டு விட்டுபோன அந்த அஞ்சாவது படத்தையும் மேட்னி பார்த்தது. இது தனி மனித சாதனை இல்லைங்க.. இந்த தேசத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமுதாயத்துல இருந்து 'நாலு' பேர் சேர்ந்து செஞ்சது.
(நாலாவது படத்துக்கு அஞ்சாவது படத்துக்கும் நடுவால ஒரு பேப்பர் எழுதினனே, அது ஒன்னு மட்டும் ஏழாவது செமஸ்ட்டர் வரைக்கும் கூடவே வந்து காட்டுன 'த்ரில்' இருக்கே அது அந்த நாலு படம் பார்க்க ஒவ்வொரு தியேட்ட்ர்ல இருந்து அடுத்த தியேட்டர் வரைக்கும் ப்ரூட்டி குடிச்சுகிட்டே ஓடுனப்பா கூட கிடைக்கலைங்க)

7. உலக வரலாறுலயே ஒரு செமஸ்ட்டர்ல துவைச்சுகாயப்போட்டுட்டு (வாஷஅவுட் ஹி ஹி) ஆயிட்டு அதுக்கு அடுத்த செமஸ்ட்டர்ல வழக்கம்போல ப்ராக்டிக்கல்ல ஆப்பு அடிச்சும், க்ளாஸ் பர்ஸ்ட் எடுத்து சாதனை செஞ்சது நான் மட்டும் தான்னு எங்க 'தல' (HOD) பெருமையா சொன்னாரு.. எங்கய்யன்கிட்ட.
(ஆனா, நான் வாஷஅவுட் ஆன விவரம் அதுக்கு முன்னாடி எங்கய்யனுக்கு தெரியாதுங்கிறது தான் இதுல கொடுமை :( )

8. தனியா படிக்க ஒரு புஸ்த்தகம் இல்லாம, பாட்டு கேக்காம, பேச கூடமாட ஒருத்தர் இல்லாம, அட புட்டியோ, புகையோ கூட இல்லாம, சும்மாவே மூணு நாள் இருந்திருக்கீங்களா.. வெளிய அடிச்சு கொட்டுற மழைய பார்த்துகிட்டு, ரெண்டு பாக்கெட் ப்ரட்டை அப்பப்போ சிம்னிவிளக்கு மேல ஈயத்தட்டை வச்சு டோஸ்ட் செஞ்சு சாப்டுகிட்டு, இளநி குடிச்சுகிட்டே மூணு நாள் உக்காந்திருக்கேன் எங்க தோட்டத்து சாலையில.. :)
(இதுக்கு பேரு சாதனையா, கிறுக்குபுடிச்சு கிடந்திருப்பன்னு சொல்றீங்களா.. இருக்கலாம்.. அந்த கிறுக்கு இப்பவும் தெளிஞ்சதா எனக்கு தெரியல :). ஒரு போட்டிக்காக செஞ்ச வேலை அது.. ஜெயிச்சதுல எனக்கு கிடைச்சது இன்னைக்கு தேதியில சவுத்ல most charming'ன்னு என் பக்கத்து கூட்டு திருப்பதி இளஞ்சிட்டு மெச்சறவனோட நட்பு )


அப்பா எப்படியோ முக்கி தக்கி நான் செஞ்ச சாதனைக லிஸ்ட்ல இருந்து ஒரு எட்டே எட்டை எடுத்து விட்டிருக்கேன்.. நேரம் கிடைக்கும் போது மிச்ச சொச்சத்தையும் லிஸ்ட் போடுறேன். ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதா :)

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.




நான் கொஞ்சம் தமிழ்பதிவு உலகத்தை க்ளோசா ஃபாலோ செய்யலை கொஞ்ச நளா,, அதுனால யாரு இன்னும் சாதனைய சொல்லல, இன்னும் யாருமே கூப்பிடாம இருக்காங்களோ, அப்படி யாரும் இருந்தா, இந்த பதிவ படிச்சா.. சட்டுன்னு பின்னுட்டத்துல சொல்லிட்டு நிங்களே இந்த சங்கிலிய இழுத்திருவீங்களாம் . சரியா.. (உன் சோம்பேரித்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லாம போகுது ராசா)

--
#230

Monday, June 18, 2007

ஒரே கேள்வி!

புதுசா ஒன்னுமில்லைங்க..
ரொம்ப நாளாவே மனசுல இருக்கிற கேள்விதான்..
இன்னைக்கு பொதுவில கேக்குறேன் அவ்ளோ தான்..




" இவுங்களுக்கெல்லாம் நிசமாலுமே அறிவு இல்லையா..
இல்ல, அறிவு இல்லாத மாதிரி நடிக்கறாங்களா "



--
#230


Thursday, June 14, 2007

நான் தான் பேசுறேன்

ஒருத்தரை தொலைபேசியில கூப்பிட்டு, அவர் அந்த பக்கம் ஹலோ'ன்னு சொன்னதும் 'டேய், நான் தான் பேசுறேன்' / 'நான் தாம்பா பேசுறேன்' / நான் தாங்க பேசறேன்'னோ சொல்றவங்க அத்தனை பேரும் நரகத்துல அரக்கன் கையால எண்ணைச்சட்டியில வறுபடுவாங்கன்னு யாராவது ஒரு ஸ்ரீ ஸ்ரீ டகால்டியானந்தா சுவாமிகள் மாதிரியான ஆளுகலாவது அறிவிச்சிடுங்கப்பா..

:(



இவுங்க ரவுசு தாங்கமுடியல.

மத்த நேரத்துல கூட சரிங்க, ஆனா, காலங்காத்தால பெங்களூர் ட்ராபிக்க நொந்துகிட்டு சிக்னல்ல கியரும் க்ளட்ச்சுமா நிக்கும் போது சுத்தியும் அத்தனை சத்தத்துக்கு நடுவால காதுல மாட்டியிருக்கிற ஈயர்போன்ல 'நான் தான் பேசுறேன்'னு சொன்னா.. ங்ஙொய்யால.. நல்லா வருது வாயுல..
சில நேரம் நம்ம மாமனார் வீட்டு ஆளுகலும் இப்படித்தான் ஆரம்பிக்கறாங்க.. அதுனால 'நா காக்க' வேண்டியிருக்கு..

மனுசனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பாருங்க.. ச்சே :)

img : http://www.jezblog.com/

--
#228