Monday, July 23, 2007

கிரீடம்!



விளையாடு விளையாடு..

ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு..



(உங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்யா இருக்கு.. ஆனா ப்பினிஷிங் சரியில்லையே!)

--
#239

Thursday, July 19, 2007

டாக்டர்!

இனவெறியை எதிர்த்து போராடிய இணையில்லா போராளி, தன்னம்பிகை ஊற்று, இளையசமுதாயாத்தின் வழிகாட்டி, தாய்நாட்டின் பொறுமை குணத்தை வெளிநாட்டிலே தூக்கிநிறுத்திய 'பெரியண்ணன்' புகழ், சில்ப்பாசெட்டி அவர்கள் இனிமேல் டாக்டர்.சில்ப்பாசெட்டி என்று அழைக்கப்படுவார்..








செய்தி

--
#238

நான்.. நான் நானும்

எல்லாரும் பொகைப்படபோட்டியில கலந்துக்கறாங்க.. நாம மட்டும் ச்சும்மா இருந்தா என்னத்துக்கு ஆகறது..

நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன் :)

இதோ என் பங்குக்கு..






ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. இது என்னமோ 'நடுவர்'க தேர்ந்தெடுக்கிறதாம்.. இதுல நம்ம ரெட்ஃபயர் வேற என்னமோ சலுகை எல்லாம் குடுத்திருக்காரு.. ம்ம் அதுக்காக..
போட்டின்னு வந்துட்டா, நாங்க டவுசர் கழன்டாலும் பரவாயில்லைன்னு ஓடி காட்டிருவமில்ல :)


மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்.

---
#237

Friday, July 13, 2007

மன்சூர்..!!

இப்படி ஒரு போஸ்ட்டர் அடிக்கிற லொல்லு எவனுக்கும் வராது.. :)

அய்யா சாமீ முடியல..



வாரக்கடைசியில சன்ம்யூசிக்'ல மன்சூர் யாராவது பார்த்தீங்களா... ரொம்ப ஓவர் மன்சூர்.. போன் செய்யறவன் கிட்ட.. ஆமா உனக்கெல்லாம் வேலையே இல்லையா சினிமாக்காரன் டீவி'யில வந்தா கூப்பிட்டா நல்லாயிருக்கியான்னு கேக்கற. இல்ல அழகா ஒரு புள்ளை இருந்தா கூப்பிட்டு கல்லை போடுற, எதாவது வேலை வெட்டி இருக்கா இல்லையா'ன்னு இந்தாளு கேக்க கூட நின்ன தொகுப்பாளர்.. பாவம்.. சிரிச்சு சிரிச்சு சமாளிச்சாரு.. :)

இன்றைய படிப்பினை

ஒவ்வொரு நாளும் ஒரு புது விசயம் தெரிஞ்சுக்கனும்னு சின்னவயசில வூட்ல சொல்லி சொல்லி வளத்தாங்க, தினமும் 8.30 மணிக்கு ரேடியோ முன்னாடி உக்காந்து கோவைவானொலி'யில சொல்ற பொது அறிவு வினா எல்லாம் நோட்புக்குள எழுத சொன்னாங்க.. ம்ம்.. நம்ம என்னைக்கு பிறாத்தியார் சொல் கேட்டிருக்கோம்..

அப்படி இருந்தும் தினம் தினம் எதாவது ஒரு படிப்பனைய இந்த ஒலகம் நமக்கு கத்துகுடுத்துகிட்டே தான் இருக்கு.. இப்படித்தான் பாருங்க போன வாரம் சனிக்கிழமை புல்லா 'வட்ட'கணக்கில்லாம கையெழுத்து உள்ள போனதுக்கப்புறம் இனிப்பான பால்கோவா சாப்பிட்டு அப்புறம் ஏற்ப்பட்ட சிலபல பாதிப்புல இருந்து ஒரு படிப்பினை நமக்கு கிட்டுச்சு..
(என்ன ஏதுன்னு ரொம்ப விவரம் வேணும்ங்கிற குழந்தைகளுக்கு எல்லாம்.. இதெல்லாம் வளந்தபசங்க சமாச்சாரம். வயசு வந்ததுக்கு அப்புறம் படிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்.. ஓக்கே!)



சரி அது ஒரு சோக கதை, அதை விடுங்க.. இன்னைக்கு ஒரு படிப்பினை கிடைச்சுது நமக்கு.. உங்களுக்கும் சொல்லலாம்னு ஒரு ஆசை.. இதோ..

நிறையாப்பேர் ஒரே மாதிரி சிந்திச்சா, அதாவது பெருவாரியான மக்கள் நினைக்கறதையே நினைச்சாக்க, அவுங்க எல்லாம் :
ஆட்டுமந்தைகள், சாமானியர்கள், பாமரர்கள், சராசரி மனிதர்கள், கோயிஞ்சாமிகள், சுயசிந்தனையற்று மனிதர்கள் எனும் பேரில் உலாவும் #$^%^^&***'

ஒரு சிலர் மட்டும் ஒரே மாதிரி சிந்தித்தால், அதாவது கண்டிப்பா மெஜாரிட்டி கிடைக்காதுங்கிற கருத்தை நினைச்சா (உறுதி செஞ்சுகிட்டு) அவர்கள்:
இன்டெலக்ச்சுவல்கள், புத்திசாலிகள், எலக்கியவாதிகள்.



நீ எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது.. அதெல்லாம் நல்லதுக்கில்ல.. ஆமாம்..!! :)

இதை இன்று தன்னுடைய அயரால வேலைப்பளுவிக்கிடையே எனக்கு விளக்கு எனக்கு ஞானோபதேசம் செய்த #$^$^#$^#$^***** நண்பனுக்கு நன்றி..!!

--
#235

Wednesday, July 11, 2007

'வாழக்கா பச்சி' - சமைப்பது எப்படி?

ஊரு உலகத்துல இப்போதைக்கு சமையல் பதிவு போடுறது தான் வழக்கா இருக்கு, நம்ம தான் எப்பவும் ஊரோட ஒட்டாத பயன்னு விலக்கி விலக்கி விட்டுறானுகளே, அதுனால இந்த தடவை ஊரோட ஒட்டி நானும் ஒரு சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போட்டுறலாம்ன்னு பார்க்கிறேன்.

உனக்கு சமைக்கிறது பத்தி என்ன தெரியும்னு நீ இப்ப சமைப்பது எப்படின்னு எழுதப்போற?, அதுவும் பஜ்ஜி சமைக்கிறது பத்தி!!

இந்த லோலாயி பேச்செல்லாம் எல்லாம் எங்கிட்ட வேனாம், நம்ம சூப்பர் ரைட்டரு கூடத்தான் திரைக்கத எழுதறது எப்படின்னு புஸ்த்தகம் போட்டிருக்காரு, அவரு சோலோவா எத்தன வெற்றிகரமான திரைக்கத எழுதியிரருக்காரு சொல்லுங்க பார்ப்போம், அனுபவிச்சு எழுதறது ஒரு வகைன்னா அனுபவத்துல எழுதறதும் ஒரு வகை, நான் ரெண்டாவது வகையரான்னு வச்சுக்கோங்க.

ஒரு வாழக்கா பஜ்ஜி'க்கு இவ்ளோ பெரிய பேர இழுக்கறதெல்லாம் நல்லாயில்ல, பிரகாசரு சப்பாட்டிகல்ல இருக்காருங்கிற தகிரியமா? சரி அத விடு, அப்படி என்ன பஜ்ஜி அனுபவம் இருக்கு உனக்கு.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலுக்கு பொறவால இருக்கற போண்டா செட்டியார் கடையில ஆரம்பிச்சு கோயமுத்தூர் மரக்கடை மலையாளத்தான் கடை, மாம்பலம் ஆரியகவுடா வீதி, இன்னைக்கு மடிவாலா ஐயப்பன் கோவில் கிட்ட நிக்குற தள்ளுவண்டி, காந்திபஜார் டீ.வீ.ஜீ ரோடு கடைசியில இருக்கிற ஐயர் கடை, ஹனுமந்த்நகர் பஸ்டாப்புல ரஜினி வூட்டுக்கு திரும்புற திருப்பத்துல ராத்திரி பத்து மணிக்கு சூடா கிடைக்கிற பஜ்ஜி வரைக்கும் என்னோட பஜ்ஜி வரலாறு சொல்ல ஆரம்பிச்சா அப்புறம் இன்னைக்கு பூராவும் முடியாது, ஆனா என்ன படிக்கறவங்க பாவம், அதுக்காக பூகோள சுருக்கத்தோட நிப்பாட்டிக்கிடுறேன்

சரி பேசிகிட்டே இருக்காத 'எப்படி சமைக்கிறது'ங்கிற சமாச்சாரத்துக்கு வா

வந்தாச்சு வந்தாச்சு. முதல்ல பஜ்ஜி மாவை அளவா உப்பு போட்டு நல்ல தண்ணி வுட்டு கொஞ்சம் கெட்டியா கரைச்சுக்கனும்

பஜ்ஜி மாவா? அதென்னடா அது, அது எங்க கிடைக்கும்.

அட அன்னைக்கு இடுப்பு வரைக்கும் ஒத்த பின்னலும் டைட் ஜீன்ஸுமா ஒரு புள்ளைய பார்த்தமோ, அந்த கடையி பேரு என்ன

இந்தியன் ஸ்டோரு

ஆங். அதேதான் அந்த கடையில கூட வடக்க மூணாவது சந்துல நாலாவது ராக்குல மேல் வரிசையில கூட பஜ்ஜி மாவு வச்சிருந்தாங்க, அதுவும் அனில் மார்க், அங்கயெல்லாம் கிடைக்குது, உனக்கு கிடைக்காத, தெருமுக்கு அண்ணாச்சி கடையில போயி கேளு தருவாரு.

சரி விடு, அண்ணாச்சி கடையில அக்காச்சி சாயங்காலமா தான் வரும், அப்ப போயி வாங்கிட்டு வந்திடுறேன், நீ மேல சொல்லு

நல்ல வாழக்காயா வாங்கிட்டு வந்து தோலை லேசா சீவிட்டு அரிஞ்சு வச்சுகிற. வடக்கஞ்சேரிக்காரன் சிப்ஸ்'க்கு போடுற மாதிரி அரிஞ்சுடாத, நல்ல நீளமா அயிர மீனு அரியற மாதிரி அரியனும். அப்புறம் கரைச்சு வச்சிருக்கிற மாவுல உங்க எளையதளபதி அந்த சூ.. ச்சே யூத்து படத்துல சொல்லுவாரே 'அப்படியே லேசா வயசு பொண்ணு உதட்டுல முத்தம் குடுக்கற மாதிரி பட்டும் படாம மாவுல முக்கி எடுத்து எண்ணையில போடனும்'

ஆமா, அதெப்படி பட்டும் படாம முத்தம் குடுக்கறது

அடப்பாவிகளா! ஏதோ ஜனரஞ்சகமா சொல்லுவமேன்னு எளைய தளபதி வசனத்த சொன்னேன், நான் எதோ ஹாலிடே ப்ரைம் டைம்'ல கேப் ஃபில்லிங்க்கு சமையல் ப்ரோக்ராம் சொன்னா நீ சனிக்கிழமை ராத்திரி லேட்நைட் ஸ்பாட்டுக்கு ப்ரோக்ராம் செய்ய சொல்லுவ போல இருக்கு. அதுக்கெல்லாம் வேற ஆளுக இருக்காங்க.. நமக்கு அந்தளவுக்கு அனுபவம் பத்தாது அதுல..

உனக்கு எதுல தான் பத்துற அளவுக்கு இருக்குது, சரி, பஜ்ஜி சமாச்சாரத்துக்கு வா..

இன்னும் என்னத்த வர்றது.. அதான் எண்ணையில போட்டாச்சே.. நல்லா செவந்து பொறிஞ்சதும் எடுத்து சல்லடை பாத்திரத்துல போட்டு வை. வீட்டுல என்ன பேப்பர் வாங்கற.

ஒன்னாம் நம்பர் தான்

ஒன்னாம் நம்பரா, நீ ரத்தத்தின் ரத்தமாச்சேடா,, நீயுமா? சரி நீயெல்லாம் சகாயத்துல கிடைச்சா சாணிபவுடர கூட சரஞ்சரமா சாக்குல கட்டி வாங்கிற சல்லிபயலாச்சே வேற எத வாங்குவ.
(ஆஹா தொடர்ந்து எத்தன 'ச', மடிச்சு போட்டு எழுதனா அடுத்து கவித எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு கூட வரும் போல இருக்கே)

அதெல்லாம் நீ பேசாத, பேப்பர் வச்சு என்ன செய்யறதுன்னு மட்டும் சொல்லு

பேப்பர் வச்சு எண்ணைய இழு. அந்த பேப்பர் என்னைய இழுக்கலைன்னாலும் எண்ணை நல்லா இழுக்கும். இழுத்ததும், வரமிளகாய் போட்டு ஆட்டுன தேங்காய் சட்னிய தொட்டுகிட்டு கணக்கு பார்க்காம சாப்பிடு, மழை காலத்துல இதமா இருக்கும்.

அடப்பாவி இந்த குறிப்பு சொல்லவா இந்த பாடு படுத்துன.. நாங்கெல்லாம் மழை காலத்துக்கு அடுத்த வீதி கவுடாஷாப்'ல போயி ஒரு பாட்டிலும் கூடவே சூடா ஒரு பொட்டலம் சில்லி'யும் வாங்கிட்டு வந்து சன்னலோரம் உக்காந்தே சொர்க்கத்த பார்துருவோம், பஜ்ஜி சாப்பிட்ட இதமா இருக்குமாம.. திருவாத்தானோட்ட பேசிட்டு கிடக்காத போயி ஆகிற வேலைய பாரு, சும்மா மொக்கைய போடாம..

(வேலையிடத்துல அழுத்தம் கொஞ்சம் ஓவராப்போச்சு அவ்ளோ தான், வேற ஒன்னுமில்ல, ஹி. ஹி.. )

---
#234

Thursday, July 5, 2007

அன்னமே, மது கிண்ணமே!











அன்னம் போல ஆடையணிஞ்சு
அழகாக வந்தாயே.. இப்படி
அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

--
#233

Tuesday, July 3, 2007

மழை!






செய்தி 1: கோவைமாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
(அதான் மழை எல்லாம் நல்லா பேயுதே, ஊருலயே இருந்திடறது'ங்கிற சத்தம் இந்த வருசம் கொஞ்சம் கூடுதல் ஆகலாம்)

செய்தி 2: பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிடும்.
( ஏற்க்கனவே PAP திட்டத்தை ஒத்தக்கால் மண்டபம் வரை இழுத்துட்டீங்க, இதைய சாக்காட்டி இன்னும் இழுத்துறாதீங்கப்பு, அப்புறம் பாசனமண்டலத்துல வர்ற எல்லாருக்கும் உயிர் தண்ணி மட்டும் தான் விடமுடியும்)

செய்தி 3: வழக்கம் போல மழைக்காலத்தில் எங்கய்யன்னோடா பாட்டுக்கு நடுவே சொல்லாம கொள்ளாம 'மழையில் ஒரு மலைசவாரி' இந்த தடவையும் செஞ்சாச்சு
(கூடவே கட்டுனவ பாட்டும் இந்த தடவை கூடுதல் சேர்த்தி)

செய்தி 4: எங்க கிட்டயும் ஒரு டிஜிட்டல் கேமிரா சும்மாவே இருக்குது:)
(ஹி.ஹி)

(படங்களை அமுக்கி பெருசா பார்த்துக்கோங்க)

--
#232

Monday, July 2, 2007

பலிகுடுத்தா என்ன??




மிச்ச மீதி இருந்த ஆணியெல்லாம் புடுங்கிதள்ளிட்டு, புடுங்கிட்டதா பேரு பண்ணிட்டு, ராவோட ராவா கிடைச்ச வண்டியில ஒவ்வொரு பஸ்ஸ்டான்டா நின்னு நின்னு ஊருக்கு போயி, வழியில வர்ற சொந்தபந்தங்களையெல்லாம் பார்த்து ஒரு டீத்தண்ணி குடிச்சுட்டு, தோட்டத்து பக்கம் ஒரு சுத்து சுத்தி வந்து மழைக்காலத்து மராமத்து வேலைக்கு ஆள் சொல்லிவிட்டு, கிடைச்ச நேரத்துல நம்ம அம்மிணி வூட்டுக்கு வேற போயி நலம் விசாரிச்சு, குதூகலப்படுத்தி, பக்கத்துலயே நடக்கிற இணையநண்பர்கள் சந்திப்புக்கு கூட போகமுடியாம அடிச்சு தாக்குற மழைக்கு நடுவால பொறுப்பா எல்லா வேலையும் முடிச்சு, கடைசி சீட்டு கிடைச்சாலும் பரவாயில்லை நாளைக்கு காலையில கூலிக்கு போயே ஆகனும்னு ராத்திரி சொகுசுபேருந்துல ஏறி, நல்லவேளை இப்ப எல்லாம் இந்த தெருமுக்குல வாங்கின இந்த இழவெடுத்த டிவிடி'ய போட்டு இவனுக தூக்கத்த கெடுக்கறதில்லைன்னு நினைச்சுகிட்டே கொஞ்சம் சந்தோஷமா, தூக்கி தூக்கி போடுற கடைசியில உக்காந்தா, ஆப்பீஸ்ல குடுத்த ஏசர்'ல கசகசன்னு பாதிபடம், அதுவும் ஒரு கோணத்துல கேவலமா தெரியற இணையத்துல திருட்டுதனமா இறக்குன 'போக்கிரி'ய போட்டு உக்காந்து சீன் குடுத்தானே.. முன்சீட்டுல இருந்த ஒரு 'மாப்ள' அப்ப தோணுச்சுங்க.. இவனுகள எல்லாம் பலிகுடுத்தா என்ன??

--
#231