Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Tuesday, March 4, 2008

முதுமை!!



பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மணியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுகுள்ளே சொர்கம் இருக்கு
அட சின்னச்சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்திற்க்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும்கண்ணே காசு பணம் என்னத்துக்கு

அந்த விண்ணில் ஆனந்தம்.. இந்த மண்ணில் ஆனந்தம்
அடிப்பூமிப் பந்தில் முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்- அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவி என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்
என் காது வரைக்கும் கம்பிளி போர்த்தும் கருனை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்..

--

சில நாளாவே பொட்டியில உறங்கிகிடந்த படம் இது.. ஒரு மந்தமான ஞாயிறு மதியானம் கோபால்சாமிபெட்டா'வில் எடுத்த படம்.
இப்படி தனியா விட்டுட்டு தூரதேசம் போயிட்ட புள்ளைகள பத்தி பேசிட்டிருக்காம.. " பழைய நினப்புடா பேராண்டி.. பழைய நினப்புடா"ன்னு சிறு வயசுல தனியா யாருக்கும் தெரியாம குளக்கரையில உக்காந்திருந்தத பத்தி தான் அவுங்க பேசிட்டிருந்திருக்கனும்னு விரும்பறேன்....

--
#265

Thursday, September 6, 2007

நிலவு


பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

பூவிலே ஒரு பாய் போட்டு
பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல்
பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத சாபம்
தனிமையே போ
இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு


காவலில் நிலை கொள்ளாமல்
தாவுதே மனது
காரணம் துணையில்லாமல்
வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்
விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப் போது
பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு

--

மேல போட்டிருக்கிற 'நிலா' படம் நம்ம வூட்டம்மிணி போன வாரம் எடுத்தது.. கீழ போட்டிருக்கிற பாட்டு 1986'ல மெளனராகம் படத்துக்கு கவிஞர் வாலி எழுதினது :)


நீ என்ன செஞ்சேன்னு கேக்கிறவங்களுக்கு.. 'கேமிரா வாங்கி குடுத்திருக்கேன்.. இப்போ பதிவு போட்டிருக்கேன்' பத்தாதா?

--
#244

Thursday, July 19, 2007

நான்.. நான் நானும்

எல்லாரும் பொகைப்படபோட்டியில கலந்துக்கறாங்க.. நாம மட்டும் ச்சும்மா இருந்தா என்னத்துக்கு ஆகறது..

நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன் :)

இதோ என் பங்குக்கு..






ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. இது என்னமோ 'நடுவர்'க தேர்ந்தெடுக்கிறதாம்.. இதுல நம்ம ரெட்ஃபயர் வேற என்னமோ சலுகை எல்லாம் குடுத்திருக்காரு.. ம்ம் அதுக்காக..
போட்டின்னு வந்துட்டா, நாங்க டவுசர் கழன்டாலும் பரவாயில்லைன்னு ஓடி காட்டிருவமில்ல :)


மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்.

---
#237

Thursday, July 5, 2007

அன்னமே, மது கிண்ணமே!











அன்னம் போல ஆடையணிஞ்சு
அழகாக வந்தாயே.. இப்படி
அரையிறுதி கூட பார்க்காம
அவசரமாய் போயிட்டியே ..!!

--
#233

Tuesday, July 3, 2007

மழை!






செய்தி 1: கோவைமாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
(அதான் மழை எல்லாம் நல்லா பேயுதே, ஊருலயே இருந்திடறது'ங்கிற சத்தம் இந்த வருசம் கொஞ்சம் கூடுதல் ஆகலாம்)

செய்தி 2: பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிடும்.
( ஏற்க்கனவே PAP திட்டத்தை ஒத்தக்கால் மண்டபம் வரை இழுத்துட்டீங்க, இதைய சாக்காட்டி இன்னும் இழுத்துறாதீங்கப்பு, அப்புறம் பாசனமண்டலத்துல வர்ற எல்லாருக்கும் உயிர் தண்ணி மட்டும் தான் விடமுடியும்)

செய்தி 3: வழக்கம் போல மழைக்காலத்தில் எங்கய்யன்னோடா பாட்டுக்கு நடுவே சொல்லாம கொள்ளாம 'மழையில் ஒரு மலைசவாரி' இந்த தடவையும் செஞ்சாச்சு
(கூடவே கட்டுனவ பாட்டும் இந்த தடவை கூடுதல் சேர்த்தி)

செய்தி 4: எங்க கிட்டயும் ஒரு டிஜிட்டல் கேமிரா சும்மாவே இருக்குது:)
(ஹி.ஹி)

(படங்களை அமுக்கி பெருசா பார்த்துக்கோங்க)

--
#232

Tuesday, May 15, 2007

சுகமோ சுகம்..

மழையை பார்ப்பதும் சுகம்
மழையில் நனைவதும் சுகம்
மழையை பற்றி எழுதுவதும் சுகம்
மழையை பற்றி பேசுவதும் சுகம்
மழையை படம் புடிப்பதும் சுகம்..



வெளிய வெய்யில் போட்டுதள்ளுற சோம்பலான ஒரு விடுமுறையில மதியத்துக்கு வூட்டம்மிணி வச்ச மோர்க்குழம்பும் வெண்டக்காய் பொரியலும் தக்காளிரசமும் ஒரு கட்டு கட்டிட்டு மூணுபக்கமும் தலைகானி வச்சுகிட்டு அரை மயக்கத்துல எந்த மொழின்னே தெரியாம ஒரு பாடாவதி படத்தை பார்த்துக்கிட்டு இருக்கும் போது லேசா இருட்டி மண்வாசனைய கிளப்பி சட்டுன்னு பெருமழையாகிற இந்த கோடைமழை சுகமோ சுகம்..




அதுக்கு அப்புறம் வந்த வெங்காய பக்கோடா வாசம் இன்னும் சுகம்.. :)

--
#226

Thursday, April 19, 2007

அழகே அழகு..

நான் பாட்டுக்கு எழுத்துலக சேவை எல்லாம் செய்யாம அமைதியா ஒரு வழிப்போக்கனா பராக்கு பார்த்துட்டு உக்காந்திருந்தா.. நம்ம அனு வந்து அழகை பத்தி எழுதுங்கன்னு இழுத்து விட்டுட்டாங்க.. ம்ம்.. விதி யாரை விட்டுது.. :)


அழகை பத்தி எழுதறதுன்னு நினைச்சதும்.. எல்லாமே அழகா தெரியுதுங்க.. 'என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு.."ன்னு பாடாத குறை தான்..

நமக்கு எல்லாமே அழகு தான், பதினேழு இன்ச்ல தட்டையா அடக்கமா எதிர்தாப்புல இருக்கிற கணிணி திரை, அதுல ஒரு ஓரத்துல பணியிடம் மாறி வேற தேசம் போன ஒரு தோழி 'மார்க்கர்'ல கிறுக்கி வச்சுட்டு போயிருக்கிற 'bye-bye dumbo'ங்கிற வாழ்த்துரை, பின்பக்கம் விசாலமான நடைபாதையில ஒரு ஓரத்துல இருக்கிற கண்ணாடி தொட்டியில சாவித்ரி, ஜமுனா'ல இருந்து ஷில்பாசெட்டி, சிம்ரன், ஏன் ஷக்கீரா வரைக்கும் எல்லாருமே தோத்துபோற அளவுக்கு நெளிவு சுளிவோட வளையவர்ற சீனத்து தங்கமீன், காலையில வீட்டை விட்டு கிளம்பும்போது, அவசர அவசரமா புத்தகத்தை ஒரு கையால புரட்டிகிட்டு தலைமுடிய ஒதுக்கிவிட்டுகிட்டே நம்ம வூட்டு பக்கம் இருக்கிற மைனா-காலேஜுக்கு போயிட்டிருந்த ஒரு மைனாவோட தொங்கட்டான், நம்ம கண்ணு மைனா பக்கம் போறத தலைக்கவசத்தை மீறியும் கண்டுபுடிச்சு நங்'குன்னு கவசத்துமேல ஒரு கொட்டு கொட்டி 'ஒழுக்கமா போயிட்டு வா'ன்னு நம்ம அம்மணி காமிச்ச செல்லகோவம், அவசரத்துக்கு காலைப்பசிய போக்க போகும் உடுப்பி கடை மசால் தோசை மேல மின்னுற வெண்ணை கட்டி, மாசக்கணக்கா தண்ணியோ துணியோ பார்க்காத என் செல்ல RX, நம்ம சகா கூட்டத்துக்குன்னு வச்சிருக்கிற 'ஆசை நூறு வகைய' தினமும் நாலு தடவையாவது எனக்கு பாடிக்காட்டுற கைப்பேசி, ஒரு விடுமுறையில அதிரப்பள்ளி அருவியில ஒரு நிமிச அஜாக்கிரதையில தண்ணியில அடிச்சுட்டு போயி எதோ ஒரு மரவேரை புடிச்சிட்டு தத்தளிச்சத, கரையில இருந்து என்ன செய்யிறதுன்னு தெரியாம, என் சகா ஒருத்தன் புடிச்ச வச்ச புகைப்படம், 'இதெல்லாம் ஒரு படம், இதையும் பார்க்கிறானுக, ஹிட் ஆகுது'ன்னு புலம்பும் போது, பத்து வருசம் முன்னாடி ஒரு 'குப்பை' படம் பார்க்க முதநா கூட்டத்துல கம்பிய புடிச்சு அடுத்தவன் தோள் மேல ஏறி டிக்கட் வாங்கும்போது பின்னங்கழுத்துல கம்பி அறுத்து ரத்தக்காயத்தோட விடாம போயி படம் பார்த்தத நினப்பக்கூட்டும் பின்னங்கழுத்துதழும்பு, வூட்டு வாசல்ல சீசனுக்கு முதமுதலா பூக்கிற மேஃப்ளவர் மரம், கூடவே போட்டி போடுற வேப்பம்பூ மணம், நல்ல வெய்யில்ல மாறான் வெட்டி தர்ற கீழ்தோட்டத்து செவ்விழநி, தென்னங்கீத்துக்கு நடுவால விழுகற பெளர்ணமி நிலா வெளிச்சம், கூடவே வழிஞ்சு ஓடுற 'மொட்டை', உச்சிவெயில்ல முள்ளுப்பாடி கேட்டுல நிக்கும் போது, வேலை செய்யாத ஏசிக்காக எங்கய்யனை கறுவிக்கிட்டே, சாப்பிடுற உப்புமிளாகாப்பொடி தடவுன வெள்ளரிபிஞ்சு, நம்ம மக்க கூட ஜமா சேர்ந்து பொங்கும் போது மட்டும் வாங்கும் 'சங்கு' ப்ராண்டு லெமன் ஊறுகாய் பாக்கெட், சீக்கிரமா தூக்கம் கலைஞ்ச விடுமுறைகள்ல சூரியன் உதிக்கப்பாக்குற நேரத்துல யாருமே இல்லாம நமக்கே நமக்கு மட்டும்னு சில்லுன்னு தெரிக்கிற ஆழியார் குரங்கு அருவி, வரப்புல நடக்கும் போது ஒரு நிமிசம் பயங்காட்டிட்டு, சரசரன்னு நெளிஞ்சு ஓடி வேலியோரம திரும்பி படம் புடிக்கும் மஞ்சக்கோடு விரியன் பாம்பு, ஊரையே ரெண்டாக்கிட்டு திரியர என் சகா 'செந்தான' சும்மா அடிச்சு மிதிச்சு பணிய வச்சிடுற 'அவன பெத்த' ஒன்னரைவயசு 'மித்து', முன்ன ஒரு நாள் கரண்ட் இல்லாத முன்னிரவுல இடி மின்னல் இல்லாம ஆர்பாட்டமா பெய்ஞ்ச மழை, எல்லா விசேஷத்துக்கும் நான் கட்டிட்டு திரியும் எங்கய்யனோட கல்யாண பட்டு வேட்டி, இப்படி ஒரு வரைமுறையே இல்லாம அரைப்புள்ளி அரைப்புள்ளியா வச்சு நான் எழுதறது.. இதுவும் அழகு தான். (ஒத்துகோங்க.. இல்லாட்டி இன்னும் ஒரு பக்கம் இதே மாதிரி அரைப்புள்ளி தொடரும்.. ஆமா)

இது அத்தனையும் விட "எம்பத்துமூணு வயசாச்சு, இதுல இந்த சிக்கன்குனி வேற வந்து படுத்திபோடுச்சு, உக்காந்தா எந்திருக்க முடியல.. ரொம்ப நேரம் கால தொங்கப்போட்டவாக்குல உக்கார முடியல"ன்னு ஆயிரம் வேதனை இருந்தாலும் பேரன் குடித்தனம் செய்யுற அழகை பார்க்கனும்னு புடிவாதமா சில நூறு கிலோமீட்டர் பயணஞ்செஞ்சு வந்து, 'நம்மூட்டு ஆசாரத்தை வுட வூடு சிறுசா இருக்கு, இதுக்கு இத்தனை வாடகையா'ன்னு அங்கலாய்ப்போடவே சமையக்கட்டுல சேர் போட்டு உக்காந்து வெங்காயம் உரிச்சுகிட்டே 'உம்மச்சானுக்கு பருப்புஞ்சோத்துக்கு கத்திரிக்கா பொரியல் வச்சீன்னா நொம்ப புடிக்கும்'னு நம்ம அம்மணிக்கு 'டிப்ஸ்' குடுத்துகிட்டே நம்ம சின்னவயசு அடாவடிகள 'போட்டுகுடுத்துட்டு' இருக்கிற எங்க அம்முச்சி எனக்கு "அழகு .. பேரழகு".





----


மூணு பேரை கூப்படனுமா..??
யாரு சிக்குவா.. ??
ரைட்டு நம்ம பங்குக்கு இவுங்க..

-வித்யாசாகரன் (ஆளையே காணோம்.. இழுத்து விடுவோம்)
-மோகன்தாஸ (நல்ல அழகான் சினிமா எதாவது கிடைக்கலாம்)
-ஆசிஃப்மீரான் (நல்ல 'அழகான' படம் கிடைக்கலாம்.. ஹீ..ஹி)

--
#221