Thursday, September 9, 2004

ஒரு கவிதை எழுதினேன்!!

எனக்கும் என் சகா ஒருத்தனுக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் ஆகிப்போச்சுங்க.. எதோ பெரிய உலக அரசியல், பக்கத்துநாட்டு பிரச்சனைங்கற மாதிரி சின்ன பிரச்சனை இல்லைங்க.. கொஞ்சம் ரொம்பவும் அறிவுபூர்வமான பிரச்சனை..
பிரச்சனை என்னன்னா? "ஒருத்தன் கவிதைன்னு எதாவது எழுதறான்னா அவன் கண்டிப்பா காதல்ல விழுந்திருகனும்"ங்கிறது அவனோட அயிப்பராயம், நான் 'கம்'முன்னா இருப்பேன்?, வழக்கம் போல விதன்டாவாதமா எதாவது பேசாட்டி நமக்கு மண்டை வேடிச்சுடுமே, "அப்படியில்லாம் கிடையாது அது மனசும், புத்தியும் சம்பந்தபட்டது"ன்னு நான் சொல்ல, அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் பேசி, பேசி, பேசி,.. "அப்ப நீ ஒரு காதல் கவிதை எழுது பார்ககலாம்"னு நம்ம தன்மானத்தை(!) உரசி பார்க்கிற மாதிரி ஒரு இடத்துல வந்து பேச்சுவார்த்தை நின்னுருச்சுருங்க.
"என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை"ன்னு நினைச்சுகிட்டு, நானும் டக்குன்னு சரின்னு சொல்லிட்டனுங்க (எதை சொன்னாலும் செய்யறேன்னு சொல்ற இந்த அதிகப்பிரசங்கித்தனம் தான் எனக்கு ஒரு நாள் குழி வெட்ட போகுது). அப்புறம் என்ன வழக்கம் போல ஒரு காரியம் செஞ்சிரலாம்னு ஒத்துகிட்டு, அப்புறம் மூளை குழம்பி போய் சுத்த வேன்டியது தான் வழக்க்மாகிப்போச்சே, இருக்கிறதே கொஞ்சூன்டு மூளை, அதையும் குழம்ப விட்டா, அப்புறம் கள்ளு குடிச்ச குரங்கு, இஞ்சியையும் கடிச்சுகிட்ட மாதிரி ஒரு நிலைமையாகி போச்சுங்க.
நமக்கு இந்த கவிதைகளுக்கும் பொதுவா ஏழாம் பொருத்தம்தான். காலேஜ்ல மூனாவது வருஷம் படிக்கும் போது, அதுவரைக்கு தன் கிளாஸ்ல படிச்சுட்டு இருந்த ஒரு கேரளா பொண்னு மேல பைத்தியமா இருந்த எங்க BBC Gang மணி, அந்த பொண்ணோட தங்கச்சி பர்ஸ்ட் இயர் வந்து சேர்த்ததும், அவ பின்னாடி போனதை நான் (வழக்கம் போல அதிகப்பிரசங்கித்தனமா) எங்க ஹாஸ்டல் போர்ட்ல எழுதி கலாய்க்க, அதை எடுத்து எங்க MIB* கிளப் ஷங்கர், அங்ககங்க கொஞ்சம் வெட்டி சரி செஞ்சு, 'ஷங்கர்-ராஜா' ங்கிற பேருல அதை எங்க காலேஜ் 'yearbook'ல போடவச்சான், (அது அப்புறம் விகடன்' காலேஜ் காம்பவுன்ட்'லயெல்லாம் வந்து, அந்த நாலு வரி கவிதைக்கு! பதினஞ்சு பாட்டில் பீர் செலவு ஆகிபோச்சு) அந்த கவிதை..
' உன்னை கண்டேன்
உலகை மறந்தேன்
உன் சிஸ்டரை கண்டேன்
உன்னை மறந்தேன் '


*(MIB - Men in black, கொஞ்சம் கருப்பா, என்னை மாதிரி, இருக்கிற பசங்க எல்லாரும் சேர்ந்து நடத்துன கேண்டீன் கிளப்)

அதுக்கப்புறம் ரெண்டு மூனு தடவை, அந்த மாதிரி முயற்ச்சியில இறங்கி, அப்புறம் நம்ம கூட்டாளிக கிட்ட இருந்து கிடைச்ச 'பெட்ஷீட்பூசை'க்கு பயந்த்துகிட்டு, நான் அந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுல இறங்கிறது இல்லைங்க, (நாம என்ன 'மீனாக்ஸ்'ஆ?, மனுஷன், பசங்க தண்ணியடிக்கும் போது, சும்மா கூட போய் சும்மா உக்காந்துட்டு வந்து படுற அவஸ்த்தைய பத்தியெல்லாம் கூட அழகாக எழுதறாருங்க).
இருந்தாலும், நம்ம கிட்ட ஒருத்தன் சவால் விட்டுடானேன்னு, இந்த தடவை அந்த ஆபத்தான விளையாட்டுல இறங்கிட்டேன்ங்க. ராத்திரியெல்லாம் யோசிச்சு யோசிச்சு, (பேனாவை கன்னத்துல வச்சுகிட்டு கவிஞர்க மாதிரி யோசிச்சா ஒரு வேளை எதாவது தோனுமோன்னு, அப்படி கூட யோசிச்சேன்) கஷ்டப்பட்டு ஒரு 6-7 வரி எழுதினேன்.. எழுதினதை படிச்சு பார்த்தா எனக்கே ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப ஆர்வமா நம்ம சகா கிட்ட காட்டினேன், அதை படிச்சுட்டு அவன் ஒரு இடியை போட்டான் பாருங்க, நொந்து போயிட்டன் நான். நானா யோசிச்சு எழுதினதை படிச்சுட்டு, அவன் "இது நான் ஏற்க்கனவே படிச்சிருக்கேன், எங்கேன்னு தான் ஞாபகம் இல்லை, எங்க இருந்து சுட்டேன்னு ஒழுங்கா சொல்லு"ன்னு ஒரே அடியா அடிச்சுட்டானுங்க. எதோ பெரிய, கவிதையெல்லாம் எழுதிட்டம்னு ஒரு மிதப்பா இருந்தேன், இப்படி ஒருத்தர்(ன்) எனக்கு முன்னாடியே அதை எழுதியிருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ 'சத்தியாமா நான் தான் எழுதினேன், எனக்கு யாரும் எழுதி தரலைன்னு' திருவிளையாடல் தருமி மாதிரி புலம்பிட்டு இருக்கேன்..

எனக்கு ஒரு உதவி செய்யுங்க சாமிகளா!!
யாரவது இதை படிச்சு பார்த்துட்டு, நம்ம சகா சொன்னது நிசமான்னு சொல்லுங்க... (அப்படி ஏதும் இருக்காதுன்னு இன்னும் எனக்கு ஒரு சின்ன நம்பிக்கை!!)
---------------

உனக்காக
காத்திருக்கும் நேரங்களில்
காத்திருப்பதை விட
சாவதே மேல் என்று தோன்றும்.

ஆனால்,

நெடுநேரம் காத்திருந்து
பின்
உன்னை பார்த்தவுடன்
எழும் சந்தோஷத்திற்க்காக..

மீண்டுமொருமுறை
முதலில் இருந்து
காத்திருக்க தோன்றும்.

--------------
TheSadClown_90_100

டேய்! சகா!!.. இப்படி என்னை தனியா புலம்பற நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டியே!!

Monday, September 6, 2004

கிருஷ்னர் ஜாதகம்

ஒவ்வொரு எலக்ஷ்சனுக்கும் முன்னாடி, அரசியல் தலைவர்களோட ஜாதகமும், அவுங்க கட்சி ஜாதகமும் எல்லா பத்திரிக்கையிலையும் போட்டு, அவங்களோட வெற்றி வாய்ப்பு, அவுங்களோட எதிர்காலம்னு பலதையும் பத்தி நம்ம பிரபல(!)ஜோசியர்களோட கருத்தெல்லாம் வரும். சிலநேரம் இது நம்ம கோடம்பாக்கத்து தெய்வங்களுக்கும் பொருந்தும். இப்பொ அந்த வரிசையில 'கிருஷ்ன' பரமாத்மாவோட ஜாதகத்தையும் கம்ப்யூட்டர் உதவியோட கணிச்சிருக்காங்களாம். அவரோட பிறந்த நாள் July 21, 3228 BCனு சொல்லியிருக்காரு பிரபல ஜோசியர் அருன்.கே.பன்ஸால். பிருந்தாவனத்துல வாழ்ந்த கிருஷ்னரும், மகாபாரத கிருஷ்னரும் ஒரே ஆளா(!) இல்லை வேற வேறயாங்கிற குழப்பத்துக்கே இன்னும் முழுசா பதில் தெரியலை, இதுல இவர் வேற புதுசா பிறந்ததேதி எல்லாம் சொல்றாரு, இதை வெச்சு புதுசா யாராவது ஒரு பிரச்சனைய கிளப்பாம இருந்தா சரி.. (கிருஷ்னர் ஜாதகம்)

இன்னொரு ஜோசியர், சோனியாவோட அரசியால் வாழ்க்கை இந்த வருஷத்தோட முடிஞ்சுரும்னு சொல்றாரு, இவர் ஏற்கனவே வாஜ்பாயி, சோனியா ரெண்டு பேருமே பிரிதமர் ஆக மாட்டாங்ன்கன்னு எலக்ஷ்சனக்கு முன்னடியே கரெக்ட்டா கணிச்சு சொன்னாருன்னு சொல்றாங்க..., அது நடக்காது, இது நடக்காதுன்னு மட்டும் சொல்றாங்க, ஆனனா என்ன நடக்கும்னு சொல்லமாட்டேங்கிறாங்களே!!

Saturday, September 4, 2004

பதில் கடிதம்.

கேள்வி பதில் பாணியில நம்ம பையன் குடுத்த காதல் கடிதத்துக்கு அந்த பொண்ணோட பதில் கடிதம்:
---------------------------------------------------------------

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு.

1) கிளாஸ்ல முதல் பெஞ்சுல யாராவது உக்காந்திருந்தா, உள்ளே வர்ரவங்க அவங்களை பார்கிறது சகஜம்
அ) ஆம்
ஆ) இல்லை

2) ஒரு பொண்ணு சிரிச்சுட்டு, ஒருத்தரை பார்த்த்தா அதுக்கு பேரு காதல்
அ) ஆம்
ஆ) இல்லை

3) பாட்டு பாடும் போது, திடீர்ன்னு பாட்டு வரி மறந்துபோயிட்டா, பாடுறவங்க பாடுறத பாதியில நிறுத்திருவாங்க
அ) ஆம்
ஆ) இல்லை

4) நான் என்னோட சின்ன வயசு போட்டோவை என்னோட நன்பர்கள்கிட்ட காமிச்சிட்டு இருக்கும்போது, நீ நடுவுல வந்து மூக்க நுழைச்சிட்ட
அ) ஆம்
ஆ) இல்லை

5) பிக்னிக்ல உன் கைய புடிச்சு மேடு ஏறுரத நான் தவிர்த்தேன். அது ஏன்னு உனக்கு இன்னும் புரியல
அ) ஆம்
ஆ) இல்லை

6) நான் என்னோட (பெண்)நண்பருக்காக பஸ்ஸ்டான்ட்ல காத்திட்டு இருக்ககூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

7) உன்னை நான் என்னோட அப்பாகிட்ட 'நண்பன்'னு அறிமுகப்படுத்த கூடாதா?
அ) ஆம்
ஆ) இல்லை

8)உனக்கு ரோஜா மட்டுமில்லை, தாமரை, மேஃப்ளவர், காலிப்ளவர், கூட புடிக்கும்னு சொன்னியே, அது உண்மை தானே?
அ) ஆம்
ஆ) இல்லை

9) ஓ! அன்னைக்கு உன் பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயில் பக்கம் பார்த்தேனா?. நான் தினமும் காலையில கோயிலுக்கு வருவேன், அது உனக்கு தெரியுமா?
அ) ஆம்
ஆ) இல்லை

மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'ஆம்'னு சொல்லியிருந்தா "நான் உன்னை காதலிக்கலை"
மேல சொன்ன கேள்விகள்ல, ஒரு கேள்விக்காவது நீ 'இல்லை'னு சொல்லியிருந்தா "உனக்கு காதல்னா என்னன்னே தெரியலை"

--விஜி
------

பதில் கடிதத்தை படிச்சு பார்த்துட்டு நம்ம பையன் எதோ பேயடிச்ச மாதிரி சுத்திட்டு இருக்கான்.. பாவம்..!!

Friday, September 3, 2004

ஒரு காதல் கடிதம்..

நம்ம பையன் ஒருத்தனுக்கு, அவன் கூட படிக்கிற பொண்ணு மேல திடீர்ன்னு பயங்கிறமா 'தெய்வீககாதல்' (அவன் இப்படித்தான் சொன்னான்) வந்திருசச்சுங்க. நம்ம கிட்ட வந்து "ஒரு லவ்லெட்டர் எழுதனும், வித்தியாசமா எதாவது ஒரு ஐடியா குடுங்க"ன்னு ஒரே தொல்லை. (இந்த வித்தியாச வியாதி சினிமாக்காரங்ககிட்ட இருந்து இப்போ எல்லாருக்கும் தொத்திகிருச்சு போல) நமக்கும் என்னங்க தெரியும் அதை பத்தி, காதலுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே!!. "ஆளை விடுறா சாமி"ன்னு எஸ்கேப் ஆயிட்டேன். அவன் ம்னசு தளராம அவ்னே ஒரு வித்தியாசமான(!) கடிதம் எழுதி அதை எங்கிட்ட காமிச்சான். இதோ அந்த கடிதம்...

-------
அன்பே விஜி,

கீழே குடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கு உனக்கு சரின்னு படுற பதிலை செலக்ட் பண்ணு

1) நீ நம்ம க்ளாஸுக்கு உள்ள வரும்போதெல்லாம், கண்டிப்பா உன் பார்வை எம்மேல விழுது, அதுக்கு காரணம்:
அ) "காதல்"
ஆ) "என்னால உன்னை பார்க்காம இருக்க முடியல"
இ) "நிஜம்மாவா..!!அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை"

2) யாராவது க்ளாஸ்ல ஜோக்கடிச்சா, உடனே நீ சிர்ச்சுகிட்டே என்னை திரும்பி பார்க்குற, அதுக்கு காரணம்:
அ) "நீ சிரிச்சிட்டு இருக்கிறதை நான் பார்க்கனும்"
ஆ) "உனக்கு இந்த மாதிரி ஜோக்கெல்லாம் புடிக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்"
இ) "உன் சிரிப்பு எனக்கு புடிச்சிருக்கு"

3)நீ ஒரு நாள் கிளாஸ்ல பாடிட்டு இருந்த, அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன், நீ உடனே பாடுறத நிறுத்திட்ட, அதுக்கு காரணம்:
அ) "உன் முன்னாடி பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்தது"
ஆ) "நீ திடீர்ன்னு உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு"
இ) "நான் பாடிட்டு இருந்தது உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு எனக்கு பயமாயிருச்சு"

4) உன்னோட சின்ன வயசு புகைப்படத்தை நீ எல்லாருக்கும் சாமிச்சுட்டி இருந்த, ஆன நான் கேட்டதும், நீ அதை மறச்சுட்ட, அதுக்கு காரணம்:
அ) "எனக்கு வெட்கமா இருந்துச்சு"
ஆ) "உன்கிட்ட காமிக்கிறதுக்கு எனக்கு எதோ ஒரு சங்கடம்"
இ) "எனக்கு தெரியலை"

5) நாம அருவிக்கு பிக்னிக் போனப்போ, ஒரு மேடு ஏறும் போது, நானும் என் கூட இருந்த நண்பனும் உனக்கு கை குடுக்க வந்தோம், நீ அவனோட கைய புடிச்சு மேல ஏறி வந்த, அதுக்கு காரணம்:
அ) "உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்"
ஆ) "உன் கைய புடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது"
இ) " எனக்கு தெரியல "

6) நீ நேத்து பஸ் ஸ்டாப்புல காத்திட்டு இருந்த, ஆனா பஸ்ஸுல ஏறுல, அதுக்கு காரணம்:
அ) "உனக்காக காத்திட்டு இருந்தேன்"
ஆ) "உன்னை நினைச்சிட்டு நின்னதுல, பஸ் வந்ததை கவனிக்கலை"
இ) "பஸ் கூட்டமா இருந்தது"

7) உங்க அப்பா காலேஜுக்கு வந் தப்ப, நீ என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வச்ச, அதுக்கு காரணம்:
அ) "நீ தான் என்னோட வருங்காலம்னு சொல்ல ஆசைப்பட்டேன்"
ஆ) "எங்கப்பாவுக்கு உன்னை புடிக்குதாஅன்னு தெரிஞ்சுக்க"
இ) "சும்மா, அறிமுகப்படுத்தனும்னு தோனுச்சு"

8) எனக்கு ரோஜாப்பூ புடிக்கும்ன்னு ஒரு நாள் சொன்னேன், அடுத்த நாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சுகிட்ட வந்த அதுக்கு காரணம்:
அ) "உன் ஆசைக்காகத்தான்"
ஆ) "உனக்குத்தான் ரோஜாப்பூ புடிக்குமே அதுக்காக"
இ) "அது தற்செயலா நடந்தது"

9) என் பிறந்த நாளன்னைக்கு காலையில 5 மணிக்கு நான் கோவிலுக்கு வந்தேன், நீயும் அன்னைக்கு கலையில கோயிலுக்கு வந்திருந்த, அதுக்கு காரணம்:
அ) "உன் பிறந்த நாளன்னைக்கு உன் கூட சாமி கும்பிடலாம்னு"
ஆ) "உன் பிறந்த நாளன்னைக்கு எல்லாருக்கும் முதல்ல, நான் உன்னை பார்க்கனும்னு"
இ) "உனக்கு கோயில்ல வச்சு வாழ்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்"

எந்த பதிலும் தப்பில்லை, எல்லா பதில்களுக்கு ஒரு மார்க் இருக்குது
(அ)10, (ஆ)5, (இ)3 மார்க்.

40 மார்க்குக்கு மேல வாங்கியிருந்தா, "நீ என்னை காதலிக்கிற, ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிற"
30க்கும் 40க்கு இடையில இருந்தா, "உனக்கு எம்மேல காதல் வர ஆரம்பிச்சிருச்சு"
30க்கும் கீழ இருந்தா, "உனக்கு என்னை புடிச்சிருக்கு, ஆனா காதலிக்கலாமா, வேண்டாமான்னு யோசிக்கிற"


உன்னோட பரிட்சை முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
--உன் அன்பு காதலன்(?).

-------------------------------------------------------------------
இதை எடுத்துட்டு அவனும், ஒரு நல்ல நாள் பார்த்து, சாமி எல்லாம் கும்பிட்டு, அந்த பொண்ணுகிட்ட குடுத்திருக்கான், அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு, அப்புறம் தான்ங்க கிளைமாக்ஸே!! . இவன் குடுத்த கேள்விக்கு நேரிடையா பதில் குடுக்காம அந்த பொண்ணும் ஒரு கேள்வித்தாள் எழுதி குடுத்திருச்சு, அது அடுத்த பதிவுல... :-)

Wednesday, September 1, 2004

ஒரு எச்சரிக்கை!

கொஞ்சம் தோட்டத்துல வேலை ஜாஸ்த்தியா போச்சுங்க, அவ்ளோதான், சீக்கிரம் வந்துருவேன்.
நான் வரமாட்டேன்னு நினைச்சு எங்கயாவது போனீங்க...


a
<