Wednesday, February 21, 2007

ஒரு கிளி உண்டு


ஒரு மாலையில் பலவித மலருண்டு
ஒரு மனதினில் ஆயிரம் நினைவுண்டு
அந்த ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு
அது காதல் என்றால் அதில் கனிவுண்டு
இந்த நெஞ்சிலும் ஒரு நிழலுண்டு
அதில் நீல பூவிழி மயிலுண்டு
எந்தன் தோட்டத்திலும் ஒரு துணையுண்டு
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு


<<செவிக்கு>>



Pics from:
http://artfiles.art.com
http://www.artbylt.com


---
#217

Thursday, February 15, 2007

பொழுதுபோகாத........


திரைச்சீலை விலகிய ஜன்னல்
அதனூடே பாயும் கதிரவன்


பாதி திறந்து கிடக்கும் கதவு
அதன் மேல் தொங்கும் அழுக்கு 'ந்யூபோர்ட்'


மெல்ல சுழலும் 'கேத்தான்'
மூலையில் சுற்றும் சாம்பல்


கலைந்து கிடக்கும் மேசை
விளம்பர நேரம் காட்டும் கடிகாரம்


கசங்கி கிடக்கும் படுக்கை
கழுத்து வரை போர்வை...

..
..


இது..

'நீ'
இல்லாத ஞாயிறு காலை..






மேற்சொன்ன கவுஜை(?) இந்த 'பொறவிக்கவுஜ'னின் சார்பாக 'கவிமட'த்துக்கு அர்பணிக்க்ப்படுகிறது.. கவிமடத்து கண்மணிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால்.. மீண்டும் மீண்டும் கவுஜை முயற்ச்சி தொடரும்.. (ஸ்மைலி எல்லாம் கிடையாது)

--
#216

Wednesday, February 14, 2007

காதலர்தினம் !@#$#@%^@#$$^#

காதலர்தினமாம்.. காதலர்தினம்.. நல்லா வருது வாயுல..




















காதலர்தினத்தன்னைக்கு மறக்காம பூவோ, முசுமுசுகரடிகுட்டியோ, முதஎழுத்து பதிச்ச சாவிக்கொத்தோ இல்லாட்டி இதயவடிவுல சாக்லெட் டப்பாவோ வாங்கி குடுத்துதான் என் அன்பை நிலைநிறுத்திக்க வேணும்ங்கிற நிலை எல்லாம் நான் கடந்து வந்தாச்சுன்னு நினைச்சேன்..


ம்ஹும்.. :(
























மீ டோட்டல் டேமேஜ்..

மீண்டும் 'ஒரு தென்றல் புயலாகி வருதே..!'.. கதையாயிபோச்சு.. மறுபடியும் 'எப்படித்தான் சகிச்சுக்கறயோ?'ன்னு எதாவது எழுதி கவுத்திரலாமா.. ??

ம்ம்... எத்தனை பேரு குடுத்த சாபமோ.. ஒரு கூட்ட விசேஷத்துக்கு போனா நம்ம முன்னோடி மக்கள் எல்லாம் 'அப்புறம்? எப்படி போகுது வாழ்க்கை?'ன்னு ஒரு வில்லத்தனமான சிரிப்போட ஏன் கேக்கிறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா புரியுது..


---
#215


Tuesday, November 28, 2006

என் வீட்டு தோட்டத்தில



சும்மா, பிரபலமான பாட்டுங்கிறதால 'என் வீட்டு தோட்டத்தில்'ன்னு தலைப்பு வச்சுட்டேன்.. நிஜத்துல இது 'என் தோட்டத்து வீட்டில்' எடுத்த படம்.. எத்தனை விதமான வண்ணங்கள்ல பூத்தாலும் செம்பருத்தி அழகு.. அதுவும் காலைப்பனித்துளியை தாங்கி நிக்கிற செம்பருத்தி.. அழகோ அழகு..

ஒரளவுக்கு நம்ம புகைப்பட திறமைய உபயோகம் செஞ்சு அந்த அழகு கெடாம படம் புடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. :)

oOo

செம்பருத்தியோட சம்பந்தப்பட்ட செல்வரா'ஜோட ஒரு பழைய பதிவு.
நம்ம தோட்டத்துல செவ்வந்தியும் உண்டு.. :)


--
#214

Monday, November 27, 2006

இதுவும் கடந்து போகும்

வழக்கம் போல பின்னிரவு சாப்பாடா இல்லாம, இன்னைக்கு கொஞ்சம் நேரமே எழரை மணிக்கெல்லாம் உக்காந்தாச்சுங்க. வழக்கமெல்லாம் மாறுது :)
சப்பாத்தி குருமா. சப்பாத்தியுல கொஞ்சம் உப்புதூக்கல், மெதுமெதுன்னு இருக்க சேர்த்துன தயிர் வாசம் கொஞ்சம், முதநாள் ஆச்சே, ஆர்வத்துல தாளிக்கும்போது அள்ளிபோட்ட கடுகு குருமாவுல பட்டானிக்கு சமமா மிதக்குது. சாப்பிட்டுமுடிச்சுட்டு மெல்ல கண்ணை உயர்த்தி சிரிச்சுகிட்டே 'ம்'ன்னு தலையாட்டுறவன, பழிப்பு காட்டி 'அதை வாய திறந்துதான் சொல்லேன், தட்டை வை, நான் எடுத்துக்கிறேன்.. போய் கைய கழுவு'ன்னு சொல்லிட்டு சமையல் ரூம்பக்கம் போறவள பார்த்து சிரிச்சுகிட்டே எழுந்திருக்கும் போது, மேசை மேல இருந்த கைப்பேசியில 'ஆசை நூறு வகை'. நம்ம சகா வட்டத்து ரிங்டோன்..
நம்ம பய தான்..

'சொல்லு மாப்ள'

'டேய், சாப்பிட வரமாட்டேன், கால் இருக்கு.. எனக்கு சேர்த்து செய்யாத.. ' வழக்கம் போல அவசரக்குரல்.

'.... '

'ஹலோ.. ?'

'நான் இப்பத்தான் சாப்பிட்டேன்'

'அதுக்குள்ளயே...... ச்சே.. மறந்துட்டேன் பார்த்தியா.. நீ எங்க கூட இருக்கிற நினப்புலயே கூப்பிட்டுட்டேன்.'

'வேலையா?'

'ஆமான்டா, நை நைங்கிறானுக, அப்புறம் பேசறேன் உங்கிட்ட.. குட் நைட்!'

'டேய், நாளைக்கு இங்க வந்திரு சாப்பிட.'

'சொல்லாட்டியும் அங்கதான்.. அம்மணி மதியமே கூப்பிட்டு பேசிருச்சு.. நான்தான் இப்ப வேலை அவசரத்துல மறந்து, தங்கான கூப்பிடறதுக்கு பதிலா உன்னைய கூப்பிட்டுட்டேன்'

'.. சரி.. காலையில கூப்பிடுறேன்'

'ம்ம்.. .. டேய்'

'என்ன?'

'கதவுல ஒட்டி வச்சிருந்தியே..'

'என்னது..?'

' "இதுவும் கடந்து போகும்"ன்னு.. போகுமா.'

'போடாங்க... வாயுல நல்லா வருது.. போ, போய் வேலைய பாரு.. காலையில பேசலாம்... '




அழைப்பை துண்டிச்ச பிறகும்.. கைய கூட கழுவாம அப்படியே விட்டத்தை பார்த்து உக்காந்திருக்கறவன, தட்டு கழுவிவச்சுட்டு வந்து, சுவத்துல சாஞ்சுகிட்டு புருவத்தை தூக்கி, கண்ணாலயே 'என்ன?'ன்னு ஒரு கேள்வி..
என்னன்னுங்க சொல்றது..




'எதுவும் கடந்து போகும்'..
...நட்பு?


pic : http://redshift.shutterchance.com/


--
#213