Saturday, June 19, 2004

மழை பேய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணி.....

பார்வைகள்..


ஆச்சு... இப்படி ஊருல குளம் குட்டை..கம்மாயெல்லம் தண்ணி நிரம்பி பார்த்து.. 6-7 வருஷம் ஆச்சு எல்லாம் மாரியம்மன் நோம்பி சாட்டுன நேரம்...
-- எங்க வீட்டு பெருசு

எல்லாம் எங்க ஆளுக ஜெயிச்சு.. டெல்லி போன நேரம் தான் பங்காளி...
-- கழக ஈடுபாடுள்ள என் நண்பன்..

இனி இவனுக ஆடுர ஆட்டம் தாங்க முடியதுப்பா.. சும்மா டீ குடிக்க 'ப்ளஷர்ர' எடுத்துட்டு கோயமுத்தூர் போவனுக...
-- மழை கொஞ்சம் கம்மியான பக்கத்து ஊர்காரர்

ம்ஹும்.... இனி அவ்ளோதான்.. வண்டி எல்லம் மறுபடி குஜராத், மஹாரஷ்ட்ரா பக்கம் தான் ஒட்டனும்..
-- ரிக் வண்டிக்காரரின் கவலை

இந்த மழை எல்லம் சும்மா.. கேரளாவுல பேய்யர மழையோட சாரல்ப்பா...இதெல்லம் பத்தாது...
--எப்பவும் புலம்பும் எங்க ஊரு வாத்தியார்

No comments: