Monday, July 29, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 2

ஒரு நல்ல இதமான வெயில்காலத்து மதியத்தில் லால்பாக்’ல ‘இயற்கை’ அழகை திகட்ட திகட்ட காலாற நடந்து ரசிச்சு முடிச்சட்டு மேற்க்கு வாசல் வழியா வெளியேறி எதும் கொறிக்கலாமா’ன்னு யோசிக்கும்போது தான் கூட வந்த ஒரு சகா கேட்டான்.

 ‘திண்டி பீதி போகலாமா?’

லேசான பீதியோட என்னடா அது’ன்னு கேட்டா..  கன்னடத்துல Foot Streetன்னு சொல்றது, chat Streetன்னும் சொல்லுவாங்கன்னான்.

ஒரு வீதியவே நேர்ந்துவிட்டிருக்காங்களா.. அதை கேள்விபட்டதுக்கப்புறம் வேண்டாம்னு நான் யோசிச்சிருக்காமாட்டேன்னு உங்களுக்கே தெரியும்..  

<கட் பண்ணா திண்டிபீதி aka Food Street, VV Puram>

உணவு வீதி’ன்னு சொன்னாலும், அது நிஜத்துல ‘வீதி உணவு’. ஒரு மொத்த வீதியும் இந்த கடைசியில சஜ்ஜன்ராவ் சர்க்கிள்ல இருந்து அடுத்த கடேசி முக்கு வரைக்கும் பூராவும் பலவகையான கையேந்திபவன்கள். இதுதான்னு இல்லாம வடக்கு தெற்க்கு இந்தோசைனீஸ்’ன்னு எல்லாம் வகை உணவுகளுக்கனுமான ஒரு வீதி இது.

வீதிகிட்ட போகும் போது வரும் ஒரு நறுமணம் இருக்கே.. அதுக்காகவே போக வேண்டிய இடம் இது.

வீதியோட ஆரம்பத்துல இருக்கிற VB Bakeryல இருந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும். வழமையான கேக்கு பன்னுன்னு பல ஐட்டங்க நல்லா இருந்தாலும் இவுங்களோட விசேஷ வெரைட்டி தம்ரூட், காரா பன்பட்டர் காங்கிரஸ் KBC.
இந்த KBC ஒரு சுவாரசியமான சாதாரண ஐட்டம், கார/மசால பன்னுல நடுவால வெண்ணையும் வறுத்தகடலையும் கொஞ்சம் மிளகாய்சாஸும் தடவி.. ஒரு மாதிரி குழப்பமா காங்கிரஸ் மாதிரியே இருக்கும்.. ஆனா நல்லா இருக்கும் :) 
இங்க ஆரம்பிச்சு அப்படியே வீதிக்குள்ளார நுழைஞ்சீங்கன்னா.. போண்டா வடை ரவாவடை, மதூர்வடா, பஜ்ஜில ஆரம்பிச்சு, இட்லி, பலவகை தோசை, நம்மூர் தோசை, இந்த ஊர் தோசா, அக்கிரொட்டி, ராகிரொட்டி, சோளரொட்டி,பெர்சரெட்டு எல்லாமே எல்லா வகை சட்னிகளுடன்.
 சில்லி கோபி/மஞ்சூரியன் ஐட்டங்கள், அதுல ரோல்கள்
 இந்த ஐயங்கார் புளியோகரே, நிலக்கடலை போட்ட லெமன் சாதம், பல வகை ‘பாத்’கள், சாட் வகைகள், பாவ்பாஜி மாதிரி அமித்து ஐட்டங்கள்.
 ப்ரூட்சாலட் வித்  குல்கந்த் வித் ஐஸ்க்ரீம், சூடா காரெட்/பாதாம் அல்வா, ஜாமூன், ஜிலேபி மசாலா பால்  குல்ஃபி, மசாலா சோடா / மசாலா கோக் அப்படின்னு அங்க அங்க ஊர்பூராவும் விக்கிற எல்லாமே ஒரே வீதியில பல கடையில எல்லாம் ஃப்ரெஷ்சா இருக்கும்.. the choice is yours and they will make sure to spoil you with the available choices :)
பாத்-தோசா’ன்னு ஒண்ணு உண்டு, அதுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை, ரெகுலர் தோசையில மடிச்சு குடுக்கும்போது நடுவே எலுமிச்சசாதம் வச்சு குடுப்பான், அஷ்ட்டே, விவரம் தெரியாம பந்தாவா அர்டர் பண்ணிட்டு ‘பல்ப்’ வாங்கினேன் முதல்தடவை.

ஆத்தெண்ட்டிக் இந்தோ-ச்சைனீஸு வெரைட்டிகள் இப்ப சமீபத்துல நிறையா சேர்த்திருக்காங்க, 4-5 வருசம் முன்ன அவ்வளவு இல்லை.

அப்படியே இந்த கடேசில KBCயோட ஆரம்பிச்சு நடக்க ஆரம்பிச்சா அந்த கடேசியில மசாலா கோக் குடிக்கும் போது ரெண்டுமணி நேரம் ஆயிருக்கும். 

இந்த உடனடி சாப்பாடு ஐட்டங்கள் மட்டும் இல்லாம, நடுவுல இந்த ‘நிப்பட்டு’ , முறுக்கு, ஹோளிகே மாதிரி வூட்டுக்கு வாங்கிட்டு வந்து அமுக்கற ஐட்டங்களுக்கான கடைகளும் உண்டு.

வீதியில நின்னு சாப்பிட, அந்த வகை உணவுகள் புடிக்கும்ன்னா இந்த வீதிய விட்டுறாதீங்க.. சாயங்காலம் 5:30 / 6  மணிவாக்குல போயிட்டீங்கன்னா நல்லது.. மத்த ஊர் மாதிரி இல்லாம வீதி கடைய 8:30 /9 மணிக்கு அடைச்சிடுற ஊர் இது :)

குடும்பம் குழந்தைகளோட போறதுக்கும் - recommended.
வேடிக்கைபார்க்க போக நினைப்பவர்களுக்கும் ;)  -recommended

எது நல்லாயிருக்கும், அது நல்லாயிருக்காதுன்னு நான் சொல்லவே இல்லை.. நல்லாயில்லை’ன்னு இங்க ஒண்ணு இல்லைன்னு நினைக்கிறேன்.. உங்க சுவை ரசனைக்கு ஒத்துவர்றது வராதது மட்டுமே.. So please explore. :)



வீதியில எங்கயும் மாமிசமோ முட்டையோ கூட கிடைக்காது என்பது ஒரு சின்ன வருத்தம் தான், ஆனா அந்த கவலைய போக வேற வீதிகள் இருக்கு.. அது பின்னாடி.



No comments: