Monday, July 23, 2007

கிரீடம்!



விளையாடு விளையாடு..

ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு..



(உங்க ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான்யா இருக்கு.. ஆனா ப்பினிஷிங் சரியில்லையே!)

--
#239

Thursday, July 19, 2007

டாக்டர்!

இனவெறியை எதிர்த்து போராடிய இணையில்லா போராளி, தன்னம்பிகை ஊற்று, இளையசமுதாயாத்தின் வழிகாட்டி, தாய்நாட்டின் பொறுமை குணத்தை வெளிநாட்டிலே தூக்கிநிறுத்திய 'பெரியண்ணன்' புகழ், சில்ப்பாசெட்டி அவர்கள் இனிமேல் டாக்டர்.சில்ப்பாசெட்டி என்று அழைக்கப்படுவார்..








செய்தி

--
#238

நான்.. நான் நானும்

எல்லாரும் பொகைப்படபோட்டியில கலந்துக்கறாங்க.. நாம மட்டும் ச்சும்மா இருந்தா என்னத்துக்கு ஆகறது..

நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன் :)

இதோ என் பங்குக்கு..






ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறதுன்னாக்கூட பரவாயில்ல.. நம்ம சகா'க்கள விட்டு குத்தி தள்ளிரலாம்.. இது என்னமோ 'நடுவர்'க தேர்ந்தெடுக்கிறதாம்.. இதுல நம்ம ரெட்ஃபயர் வேற என்னமோ சலுகை எல்லாம் குடுத்திருக்காரு.. ம்ம் அதுக்காக..
போட்டின்னு வந்துட்டா, நாங்க டவுசர் கழன்டாலும் பரவாயில்லைன்னு ஓடி காட்டிருவமில்ல :)


மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்.

---
#237

Friday, July 13, 2007

மன்சூர்..!!

இப்படி ஒரு போஸ்ட்டர் அடிக்கிற லொல்லு எவனுக்கும் வராது.. :)

அய்யா சாமீ முடியல..



வாரக்கடைசியில சன்ம்யூசிக்'ல மன்சூர் யாராவது பார்த்தீங்களா... ரொம்ப ஓவர் மன்சூர்.. போன் செய்யறவன் கிட்ட.. ஆமா உனக்கெல்லாம் வேலையே இல்லையா சினிமாக்காரன் டீவி'யில வந்தா கூப்பிட்டா நல்லாயிருக்கியான்னு கேக்கற. இல்ல அழகா ஒரு புள்ளை இருந்தா கூப்பிட்டு கல்லை போடுற, எதாவது வேலை வெட்டி இருக்கா இல்லையா'ன்னு இந்தாளு கேக்க கூட நின்ன தொகுப்பாளர்.. பாவம்.. சிரிச்சு சிரிச்சு சமாளிச்சாரு.. :)

இன்றைய படிப்பினை

ஒவ்வொரு நாளும் ஒரு புது விசயம் தெரிஞ்சுக்கனும்னு சின்னவயசில வூட்ல சொல்லி சொல்லி வளத்தாங்க, தினமும் 8.30 மணிக்கு ரேடியோ முன்னாடி உக்காந்து கோவைவானொலி'யில சொல்ற பொது அறிவு வினா எல்லாம் நோட்புக்குள எழுத சொன்னாங்க.. ம்ம்.. நம்ம என்னைக்கு பிறாத்தியார் சொல் கேட்டிருக்கோம்..

அப்படி இருந்தும் தினம் தினம் எதாவது ஒரு படிப்பனைய இந்த ஒலகம் நமக்கு கத்துகுடுத்துகிட்டே தான் இருக்கு.. இப்படித்தான் பாருங்க போன வாரம் சனிக்கிழமை புல்லா 'வட்ட'கணக்கில்லாம கையெழுத்து உள்ள போனதுக்கப்புறம் இனிப்பான பால்கோவா சாப்பிட்டு அப்புறம் ஏற்ப்பட்ட சிலபல பாதிப்புல இருந்து ஒரு படிப்பினை நமக்கு கிட்டுச்சு..
(என்ன ஏதுன்னு ரொம்ப விவரம் வேணும்ங்கிற குழந்தைகளுக்கு எல்லாம்.. இதெல்லாம் வளந்தபசங்க சமாச்சாரம். வயசு வந்ததுக்கு அப்புறம் படிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்.. ஓக்கே!)



சரி அது ஒரு சோக கதை, அதை விடுங்க.. இன்னைக்கு ஒரு படிப்பினை கிடைச்சுது நமக்கு.. உங்களுக்கும் சொல்லலாம்னு ஒரு ஆசை.. இதோ..

நிறையாப்பேர் ஒரே மாதிரி சிந்திச்சா, அதாவது பெருவாரியான மக்கள் நினைக்கறதையே நினைச்சாக்க, அவுங்க எல்லாம் :
ஆட்டுமந்தைகள், சாமானியர்கள், பாமரர்கள், சராசரி மனிதர்கள், கோயிஞ்சாமிகள், சுயசிந்தனையற்று மனிதர்கள் எனும் பேரில் உலாவும் #$^%^^&***'

ஒரு சிலர் மட்டும் ஒரே மாதிரி சிந்தித்தால், அதாவது கண்டிப்பா மெஜாரிட்டி கிடைக்காதுங்கிற கருத்தை நினைச்சா (உறுதி செஞ்சுகிட்டு) அவர்கள்:
இன்டெலக்ச்சுவல்கள், புத்திசாலிகள், எலக்கியவாதிகள்.



நீ எந்த வகைன்னு எல்லாம் கேக்கப்படாது.. அதெல்லாம் நல்லதுக்கில்ல.. ஆமாம்..!! :)

இதை இன்று தன்னுடைய அயரால வேலைப்பளுவிக்கிடையே எனக்கு விளக்கு எனக்கு ஞானோபதேசம் செய்த #$^$^#$^#$^***** நண்பனுக்கு நன்றி..!!

--
#235