Wednesday, September 15, 2004

புதுசு கண்ணா புதுசு!!

என்னடா கொஞ்ச நாளா காணாத போயிருந்தான், திடீர்ன்னு இப்ப "புதுசு கண்ணா புதுசு!!"ன்னு எதோ விளம்பர பாணியில சொல்லிட்டு வர்ரானே, எதாவது புதுசா கவிதை, கிவிதை எழுதிட்டானான்னு யாரும் பயந்துராதீங்க, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை, ஒரு 'பெயில்' மேட்டருல நம்ம ஆளுக ஒரு புதுசு செஞ்சிருக்காங்க, அதை பத்தி தான் இந்த பதிவு
(கடைசி வரை படிச்சுட்டு, ஏண்டா வெட்டியா எங்க நேரத்தை வீணாக்குறேன்னு தனி மடல்ல நம்ம ஆளுக கோவிசுக்கராங்க, அதான் இந்த திகில் படமெல்லாம் பார்க்க போன, முதல்லயே எச்சரிக்கை போடுவாங்களே அது மாதிரி ஒரு எச்சரிக்கையா முதல்லயே சொல்லிடறேன், இந்த தடவை கவிதை எல்லாம் ஒன்னும் எழுதலை சாமிகளா!!)

குஜராஜ் கலவரத்துக்கு வழி வகுத்த கோத்ராவில நடந்த ரயில் எரிப்பு விவகாரத்துக்காக (அது திட்டமிட்ட எரிப்பு இல்லை, எதோ கரண்ட் ஷார்ட்சர்க்யூட் காராணமா ஏற்ப்பட்ட விபத்துன்னு இப்போ சொல்லிகிட்டிருக்காங்க) நிறையா ஆட்களை, கிட்டத்தட்ட 95 பேரை கைது செஞ்சு ஜாமீன்ல வெளிவராதபடி உள்ள வச்சிருக்காங்க. அதுல 'ஃப்ரோஸ்கான்'ன்னு ஒருத்தர் சார்பா பெயில்ல வெளிய போறதுக்காக ஒரு மனு தாக்கல் செஞ்சிருக்காங்க. இதுல என்னடா புதுசு இருக்கு, ஒருத்தனை கைது செஞ்சா, அவன் பெயில் மனு போடுற்து வழக்கம் தானங்கரீங்களா? அதெல்லாம் வழக்கம்தானுங்க, ஆனா அவன் பெயில் கேக்குற காரணம் தான் புதுசு, பெயில்ல வெளிய போய் அம்மாவை பார்க்கனும், குழந்தைய பார்க்கனும், (சினிமாவுல வர்ற மாதிரி) பெயில்ல வெளிய போய் கல்யானம் செஞ்சுக்கனும்னெல்லால் கேப்பாங்க, இதெல்லாம் தான் நாம ஏற்க்கனவே கேள்விபட்டிருக்கோம், ஆனா இவர் புதுசா ஒரு மேட்டருக்காக பெயில் கேட்டிருக்கருங்க. அவரோட பெயில் மனுவில அவர் என்ன சொல்லியிருக்காருனா "கடந்த 30 மாசாமா நான் ஜெயிலுக்குள்ளயே இருக்கேன், இவ்வளவு நாளா செக்ஸே வெச்சுக்காம என்னொட மனநிலை ரொம்பவும் பாதிக்கபட்டிருக்கு, என்னோட கலாச்சார(!) முறை வேற நான் என் மனைவி தவிர வேர யார்கூடயும் செக்ஸ் வச்சுக்க அனுமதி தரமாட்டேங்குது, அதுனால மனிதாபிமான அடிப்படையில எனக்கு ஒரு 2 நாள் பெயில் குடுத்தீங்கன்னா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்'ன்னு கேட்டிருக்கான்.

இதை பத்தி என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலைங்க (நம்ம கருத்த எதிர்பார்த்து இங்க யாரும் காத்து கிடக்கலைங்கிறது வேற விஷயம்!!) , ஆனா கடைசியா நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செஞ்சிட்டாருன்னு செய்தி பார்த்தேன். நீதிபதி " இந்த மனுவை ஏத்துகிட்டு இவனுக்கு பெயில் குடுத்தா, அது ஒரு தவறான முன்னுதாரனமா ஆகிடும்"ன்னு சொல்லியிக்காங்க.

அவன் பெயில் கேட்ட காரணம் சரியா? அதை நீதிபதிக தள்ளுபடி செஞ்சது சரியா? இங்க நம்ம சகாக்கள் கிட்ட பேசுனா வழக்கம் போல ரெண்டு பக்கமும் பேசறானுக, நமக்கும் ஒன்னும் தீர்மானமா புரியா மாட்டேங்குது, அதான் இந்த சமாச்சாரத்த பத்தி நம்ம 'வலை'மக்கள் என்ன நினைக்கராங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆசைப்பட்டு இங்க எழுதிட்டேன்,

இந்த பெயில் மனுவில் சொல்லப்பட்ட காரணம் 'கொழுப்பா!' இல்லை 'நியாமனதுதானா' ... என்ன நினைக்கரீங்கன்னு சொல்லுங்களேன்....!

இந்த விஷயம் பத்தி BBCயோட சுட்டி

confusion

2 comments:

Unknown said...

அவனை எல்லாம் சவுதிலே கொண்டு வந்து அஞ்சு வருஷம் ஊர்பக்கம் தலை காட்ட முடியாம உட்காரவச்சா என்ன பண்ணுவான்?

Boston Bala said...

நியாயாமான கோரிக்கை மாதிரிதான் தோணுது :-?