Wednesday, February 23, 2005

நலம்தானா??

எல்லாரும் நல்லா இருக்கீங்களா??
கொஞ்ச நாளாவே இணையபக்கம் வர முடியாம போச்சுதுங்க.
தேவையில்லாம ஒரு பஞ்சாயத்துக்கு மத்தியஸ்த்தம் செய்ய போயி, கடைசியில 'இருக்கிறதெல்லம் கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வை'ங்கிற கதையா, பிரச்சனைய தீர்க்க போனவன்கிட்டயே பிரச்சனைய செஞ்சுட்டாங்க, நாமளும் சாதரண ஆளு கிடையாது பாருங்க, 'நாங்கெல்லாம் பிரச்சனைய போர்வையா போத்திட்டு படுக்கிறவங்க'டான்னு வீராப்பு பேசி.. சரி அதை விடுங்க, எதுக்கு பழைய கதை, இப்போ 20 நாளா ஊரவிட்டு ஒதுங்கி தலைமறைவா இருந்துட்டு,.. மறுபடியும் வந்திருக்கனுங்க.
இங்க அதுக்குள்ள என்னென்னவோ ஆகிப்போயிருக்குதுங்க, புதுசா நம்ம தமிழ்மணத்துல 'நட்சத்திரம்' எல்லாம் குடுக்கிறாங்க, நாமளும் ஒன்னு மாட்டிக்குவோம்னு நினைச்சேன், ஆனா, "நமக்கு எதுக்கு, அதெல்லாம் 'இலக்கியம்' படைக்கிறவங்களுக்கு, நம்ம சும்ம சொந்த கதை எழுதற ஆளுக்கு அது வேண்டாம்"னு விட்டுடனுங்க,.. இன்னும் நிறையா என்னன்ன்வே நடந்திருச்சு.. நம்ம வலைபக்கமா 'ரதி', 'PVS', 'கங்ஸ'ன்னு புதுபுதுசா ஆளுக வந்திருக்காங்க, ம்ம்... நம்ம ஒதுங்கி உக்காந்திருக்கம்ங்கிறதுக்காக, உலகம் நின்னு போயிருமா என்னங்க, அது அது பாட்டுக்கு ஒடிட்டு தான இருக்கும்..
சரி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு அப்புறமா வர்றனுங்க, அது வரைக்கும் நிம்மதியா இருங்க..

3 comments:

Anonymous said...

// நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...//

அதெல்லாம் இருக்கட்டும் ராசா.. யாரு அந்த நாலு பேரு?

Anonymous said...

// நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...//

அதெல்லாம் இருக்கட்டும் ராசா.. யாரு அந்த நாலு பேரு?

Pavals said...

அது ஒரு பெரிய கதைங்க கோபி.. .. படிச்சுபுட்டு விவசாயம் பார்க்கிறவன அப்படித்தான சொல்றாங்க ஊருக்குள்ள..