Wednesday, October 5, 2005

இடைவேளை..!!



வாழ்க்கையில மாற்றம்ங்கிறது மட்டுமே மாற்றமில்லாதது'ன்னு சொல்லுவாங்க, அதுவும் என்னை பொருத்த வரை மாற்றங்கலுக்கு நடுவால தான் நான் ஓடிட்டே இருந்திருக்கேன்.. முன்னால ஒரு நாள் ஒருநாள் வலைப்பூ'வில அறிமுகத்துக்காக மதி எங்கிட்ட என்னை பத்தி கேட்டப்ப, சும்மா சரசரன்னு ஒரு பக்கம் எழுதிட்டு, அப்புறம் அதை படிச்சு பார்த்ததுல எனக்கே ஒரு மாதிரி சிரிப்பா வந்துருச்சுங்க.. அவ்வளவு 'U' டர்ன் அடிச்சிருக்கேன் நான்.. அந்த மாற்றங்கள் வழியில இப்ப இன்னொரு மாற்றம்.. இந்த முறை ஆசைக்காக இல்லாம, சில சொந்த காரணங்களுக்காக.

என் சகா ஒருத்தன் சொல்லுவான் 'குழந்தையாவே இருந்திருக்கலாம்டா, என்ன அடிக்கடி கீழ மேல விழுந்து கை கால்ல காயம் பண்ணிபோம் அவ்வளவுதான, இப்ப வளர்ந்துட்டு கை கால பத்திரமா வச்சுகறோம், ஆனா மனசுல காயம் பண்ணிக்கறோம்'ன்னு, கரெக்ட்டுதான்.. ஆனா அதுக்காக வளராம குழந்தையாவே இருக்க முடியுமா..என்ன? .. மனவளர்ச்சி குன்றியவன்'ன்னு சொல்லி தூக்கி பைத்தியகார ஆஸ்பத்திரியில போட்டுர மாட்டாய்ங்க.
மாற்றம் என்னதான் வளர்ச்சிய குடுக்குதுன்னாலும் சில நேரம் சங்கடம் தான்.. சரி.. சரி..!! வழக்கம் போல சொல்ல வந்தத சொல்லாம வெட்டி கதை பேச ஆரம்பிச்சுட்டன் பார்ட்தீங்களா... இந்த பழக்கம் மட்டும் மாறவே மாட்டேங்குது .. மாற்றமில்லாததும் உண்டுங்கிறதுக்கு இது ஒரு சாட்சி.. ;-)..
சரி.. சொல்ல வந்தத சொல்லிடறேன்..
இந்த மாற்றம் முடிஞ்சு ஒரு மாதிரி செட்டில் ஆகி, அதாவது அடுத்த மாற்றத்த எதிர்கொள்ள தயார் ஆகிற வரைக்கும் ;-), இந்த பக்கம் வந்து என் 'ராசபார்வை'ய செலுத்த முடியாது போல இருக்குங்க.. நானும் எவ்வளவு நாள் தான் வெட்டியா ஒரு படத்தையும் பாட்டையுமே போட்டுகிட்டு இருக்கிறது.. அதான் யாரும் கல்விட்டு எரியறதுக்கு முன்னாடி நானே மரியாதையா உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு போயிரலாம்னு வந்திருக்கேன். நான் பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போயிட்டா அப்புறம் பயபுள்ள இவத்தையே திரிஞ்சுகிட்டு இருந்தான், திடீர்ன்னு காணாத போயிட்டான்னு நீங்க யாரும் விசனப்பட கூடாது பாருங்க, அதான்.. சொல்லிட்டேன். 'ராசபார்வை' வராதே ஒழிய, நான் தமிழ்மணம் மூலமா உங்களை மேல எல்லாம் என் பார்வைய வீசிகிட்டே தான் இருப்பேன்.. ;-)

எப்ப திரும்பி வருவே?ன்னு கேட்டீங்கன்னா..

இந்த சினிமாபடத்துல எல்லாம் கோட்டும் கண்ணாடியும் போட்ட டாக்டருக கோமா பேஷண்ட்டுகள பத்தி சொல்ற மாதிரி.. 'இந்த பதிவு எப்ப வேணா பழைய நிலமைக்கு வரலாம், ஒரு வாரத்துல, ஒரு மாசத்துல, ஒரு வருஷத்துல, ஏன் நாளைக்கே கூட அது நடக்கலாம்.. ஒரு வேளை பழைய நிலமைக்கு வராம கூட போயிரலாம்.. நம்ம கையில எதுவுமே இல்லைங்க..'

நன்றி மக்களே.. மீண்டும் சந்திப்போம்..!!



--
#124

Thursday, September 22, 2005

:-(



மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை...
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை..
என்னை நீ தேடி... இணைந்தது பாவம்..
எல்லாம் நீயே எழுதிய கோலம்...

இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்

காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாறோ ....

--
#123

Wednesday, September 14, 2005

ஏகாந்தம்



தரையின் ஈரம் நெற்றி வரை சில்லிடுகிறது..
வெண்மேகங்கள் பார்வையை மறைக்கின்றன..
சிறு சத்தமும் எதிரொலியாய் கேட்கிறது..
உலகமே என்னை சுற்றி வருவது போல் இருக்கிறது..
வெளிச்சம் கொஞ்சமாய் கண்ணாமூச்சி காட்டுகிறது..
அருகாமையில் நடக்கும் எதுவும் என்னை கவரவில்லை..
மனது கட்டவிழ்ந்து தொலை தூரம் பறக்கிறது..


'சார் பில் பண்ணிரலாமா!!'
மெதுவா வெள்ளை சட்டையும் கருப்பு 'போ-டை'யும் கட்டிகிட்ட ஆள் வந்து கேட்டதும்தான் தோனுச்சு.. ரொம்ப நாள் கழிச்சு எல்லா பயலும் வந்திருக்காங்கன்னு உக்காந்து.. நாலு ரவுண்ட் ஜாஸ்தியா போயிருச்சு போல.. விடியக்காலையில அஞ்சரைக்கு முகூர்த்தம்.. எவன் எந்திரிக்கலைன்னாலும் நம்ம எப்படியாவது எந்திருச்சு போயிடனும்.. இல்ல, மாப்ள அசிங்கமா திட்டுவான், கிளம்பும் போதே சொல்லியனுப்பிச்சான்.. :-(

--
#122

Tuesday, September 13, 2005

வெற்றி / தோல்வி


6-3, 2-6, 7-6 (1), 6-1'ன்னு ஜெயிச்சு மொட்டை'யோட ஆசைய தகர்த்து Federer மறுபடியும் யூ.எஸ். ஓபன் சாம்பியன் ஆயிட்டாரு. அந்த ஆட்டம் ஆடிட்டு கடைசியில ரொம்ப சாதரணமா..
"I wonder why I always play so well, especially on the big occasions" ன்னு சொல்லிட்டு போறயே ரோஜர் கண்ணு..ம்..
மொட்டையும் பெருந்தன்மையா 'he's the best I've ever played against'ன்னு சொல்லிட்டு போயிருச்சு...
நம்மாளு தோத்துருவாருன்னு ஆரம்பத்துலயே தோணினாலும், இவ்வளவு ட்ஃப் குடுப்பாருன்னு எதிர்பார்க்கலைங்க.. செம ஆட்டம்..!!

------

'இயங்காத வாழ்க்கையில்
இன்பமில்லை.
இயங்கு. இயங்கு
மனிதனே. இயங்கு.
வெற்றியை
நோக்கியாவது - தோல்வியை
நோக்கியாவது
இயங்கிக்கொண்டே இரு.
இயக்கமே வாழ்க்கையின்
முதல் அடையாளம்.'

- வைரமுத்து (தண்ணீர் தேசம்)


--
#121

Friday, September 9, 2005

ஓரு கல்லுரியின் (வெட்டி) கதை..




அஞ்சு வருஷமா, ஒரே இடத்துல சிக்கிட்ட கேசட் மாதிரி, மனநிலை பாதிக்கப்பட்டு தவிக்கிற நண்பனுக்காக, அவன் காலேஜ்ல படிச்ச அத்தனை பேரும் சேர்ந்து மறுபடியும் ஒரு சூழல் உருவாக்கி, அதே மாதிரி காலேஜ், அதே பசங்க, அதே கலாட்டா, அதே சண்டை, அதே காதல்'ன்னு கேசட் ரீவைண்ட் செய்யிற மாதிரி செஞ்சு, அவனை குணமாக்கிற கதை.. ம்ம்.. இப்படி ரெண்டு வரியில சொல்லும் போது நல்லாத்தான் இருக்கு.. ஆனா தியேட்டர்ல உக்கார முடியலையே சாமி..
யுவன், நா.முத்துகுமார்'ன்னு ஆசைபட்டு மழையில இந்த படத்துக்கு போனதுக்கு பதிலா பேசாம வீட்டுல உக்காந்து மொட்டை ஆட்டத்தை பார்த்திருக்கலாம்.



தல செமியில நுழைஞ்சுட்டாரு.. என்ன வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்..!! ஒரு வேளை ஸ்டெபியக்காவோட பலத்துல பாதிய வாங்கிட்டு ஆடுறாரோ என்னவோ.. எப்படியாவது இந்த தடவை ஜெயிச்சுட்டு ரிடையர் ஆகலாம்னு இருப்பரு போல.. செமி'யில 'ரோபி'தான்.. பைனல்ஸ்ல தான் இருக்கு.. ம்ம்.. பார்ப்போம்

--
#120