Monday, July 29, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 2

ஒரு நல்ல இதமான வெயில்காலத்து மதியத்தில் லால்பாக்’ல ‘இயற்கை’ அழகை திகட்ட திகட்ட காலாற நடந்து ரசிச்சு முடிச்சட்டு மேற்க்கு வாசல் வழியா வெளியேறி எதும் கொறிக்கலாமா’ன்னு யோசிக்கும்போது தான் கூட வந்த ஒரு சகா கேட்டான்.

 ‘திண்டி பீதி போகலாமா?’

லேசான பீதியோட என்னடா அது’ன்னு கேட்டா..  கன்னடத்துல Foot Streetன்னு சொல்றது, chat Streetன்னும் சொல்லுவாங்கன்னான்.

ஒரு வீதியவே நேர்ந்துவிட்டிருக்காங்களா.. அதை கேள்விபட்டதுக்கப்புறம் வேண்டாம்னு நான் யோசிச்சிருக்காமாட்டேன்னு உங்களுக்கே தெரியும்..  

<கட் பண்ணா திண்டிபீதி aka Food Street, VV Puram>

உணவு வீதி’ன்னு சொன்னாலும், அது நிஜத்துல ‘வீதி உணவு’. ஒரு மொத்த வீதியும் இந்த கடைசியில சஜ்ஜன்ராவ் சர்க்கிள்ல இருந்து அடுத்த கடேசி முக்கு வரைக்கும் பூராவும் பலவகையான கையேந்திபவன்கள். இதுதான்னு இல்லாம வடக்கு தெற்க்கு இந்தோசைனீஸ்’ன்னு எல்லாம் வகை உணவுகளுக்கனுமான ஒரு வீதி இது.

வீதிகிட்ட போகும் போது வரும் ஒரு நறுமணம் இருக்கே.. அதுக்காகவே போக வேண்டிய இடம் இது.

வீதியோட ஆரம்பத்துல இருக்கிற VB Bakeryல இருந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும். வழமையான கேக்கு பன்னுன்னு பல ஐட்டங்க நல்லா இருந்தாலும் இவுங்களோட விசேஷ வெரைட்டி தம்ரூட், காரா பன்பட்டர் காங்கிரஸ் KBC.
இந்த KBC ஒரு சுவாரசியமான சாதாரண ஐட்டம், கார/மசால பன்னுல நடுவால வெண்ணையும் வறுத்தகடலையும் கொஞ்சம் மிளகாய்சாஸும் தடவி.. ஒரு மாதிரி குழப்பமா காங்கிரஸ் மாதிரியே இருக்கும்.. ஆனா நல்லா இருக்கும் :) 
இங்க ஆரம்பிச்சு அப்படியே வீதிக்குள்ளார நுழைஞ்சீங்கன்னா.. போண்டா வடை ரவாவடை, மதூர்வடா, பஜ்ஜில ஆரம்பிச்சு, இட்லி, பலவகை தோசை, நம்மூர் தோசை, இந்த ஊர் தோசா, அக்கிரொட்டி, ராகிரொட்டி, சோளரொட்டி,பெர்சரெட்டு எல்லாமே எல்லா வகை சட்னிகளுடன்.
 சில்லி கோபி/மஞ்சூரியன் ஐட்டங்கள், அதுல ரோல்கள்
 இந்த ஐயங்கார் புளியோகரே, நிலக்கடலை போட்ட லெமன் சாதம், பல வகை ‘பாத்’கள், சாட் வகைகள், பாவ்பாஜி மாதிரி அமித்து ஐட்டங்கள்.
 ப்ரூட்சாலட் வித்  குல்கந்த் வித் ஐஸ்க்ரீம், சூடா காரெட்/பாதாம் அல்வா, ஜாமூன், ஜிலேபி மசாலா பால்  குல்ஃபி, மசாலா சோடா / மசாலா கோக் அப்படின்னு அங்க அங்க ஊர்பூராவும் விக்கிற எல்லாமே ஒரே வீதியில பல கடையில எல்லாம் ஃப்ரெஷ்சா இருக்கும்.. the choice is yours and they will make sure to spoil you with the available choices :)
பாத்-தோசா’ன்னு ஒண்ணு உண்டு, அதுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை, ரெகுலர் தோசையில மடிச்சு குடுக்கும்போது நடுவே எலுமிச்சசாதம் வச்சு குடுப்பான், அஷ்ட்டே, விவரம் தெரியாம பந்தாவா அர்டர் பண்ணிட்டு ‘பல்ப்’ வாங்கினேன் முதல்தடவை.

ஆத்தெண்ட்டிக் இந்தோ-ச்சைனீஸு வெரைட்டிகள் இப்ப சமீபத்துல நிறையா சேர்த்திருக்காங்க, 4-5 வருசம் முன்ன அவ்வளவு இல்லை.

அப்படியே இந்த கடேசில KBCயோட ஆரம்பிச்சு நடக்க ஆரம்பிச்சா அந்த கடேசியில மசாலா கோக் குடிக்கும் போது ரெண்டுமணி நேரம் ஆயிருக்கும். 

இந்த உடனடி சாப்பாடு ஐட்டங்கள் மட்டும் இல்லாம, நடுவுல இந்த ‘நிப்பட்டு’ , முறுக்கு, ஹோளிகே மாதிரி வூட்டுக்கு வாங்கிட்டு வந்து அமுக்கற ஐட்டங்களுக்கான கடைகளும் உண்டு.

வீதியில நின்னு சாப்பிட, அந்த வகை உணவுகள் புடிக்கும்ன்னா இந்த வீதிய விட்டுறாதீங்க.. சாயங்காலம் 5:30 / 6  மணிவாக்குல போயிட்டீங்கன்னா நல்லது.. மத்த ஊர் மாதிரி இல்லாம வீதி கடைய 8:30 /9 மணிக்கு அடைச்சிடுற ஊர் இது :)

குடும்பம் குழந்தைகளோட போறதுக்கும் - recommended.
வேடிக்கைபார்க்க போக நினைப்பவர்களுக்கும் ;)  -recommended

எது நல்லாயிருக்கும், அது நல்லாயிருக்காதுன்னு நான் சொல்லவே இல்லை.. நல்லாயில்லை’ன்னு இங்க ஒண்ணு இல்லைன்னு நினைக்கிறேன்.. உங்க சுவை ரசனைக்கு ஒத்துவர்றது வராதது மட்டுமே.. So please explore. :)



வீதியில எங்கயும் மாமிசமோ முட்டையோ கூட கிடைக்காது என்பது ஒரு சின்ன வருத்தம் தான், ஆனா அந்த கவலைய போக வேற வீதிகள் இருக்கு.. அது பின்னாடி.



Thursday, July 25, 2013

பெண்களூரு வயித்து குறிப்பு - 1

”நம்மூர் ஹோட்டல்ல தோசைன்னு சொன்னா ரோஸ்ட் தான இதென்ன இப்படி ஊத்தாப்பமும் இல்லாம கல்தோசையும் இல்லாம ஒரு கிரகத்தை குடுக்கறான்”

”அது தோசை, இது தோசா” - என்று ஒரு மாபெரும் ரகசியத்தை சகநட்பு விளக்கி சொல்லி் முதன்முதலில் ஒரு அதிகாலையில் பெங்களுர் உணவகங்களிடன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான், தோசா’வை தொடர்ந்து இந்த ஊரில் புளிச்சட்னி/வெங்காயசட்னி என்பதோ யாரும் கேள்வியேபட்டிராத ஒரு வஸ்து என்பதை தெரிந்தகொண்டபோது ‘ஐயகோ’ என்று இருந்தது.

ஐயகோ’க்கள் அத்துடன் நிற்கவில்லை, ஏறக்குறைய கஞ்சி பக்குவத்தில் தயிர்பச்சிடியுடன்  பரிமாறப்படும் வெண் பொங்கலும், எதாவது ஒரு ‘நீர்க்காய்’ போட்டு வெல்லத்தில்‘அசட்டு தித்திப்பு’டன் வழிந்து ஓடும் சாம்பாருமாக, ‘தப்பு பண்ணிட்டயே ராசா’ என்று உள்ளூர ஒரு உதறுல் ஏற்படுத்திவிட்டன.

பின் மெதுவாக காலையில் உடுப்பிசாம்பாரும் அதில் மிதக்கவிட்ட உளுந்துவடையும் இட்லியும் - மதிய நேரத்து ரைஸ்பாத் / மொசுரு அன்னா - இரவுக்கு ரொட்டி-கறி அல்லது செட்தோசை (பல்யா பேடா, சட்னி எக்ஸ்ட்ரா கப் கொடி) என்று ஒரு டிசிப்ளின் உருவாகி அந்த உதறலை மட்டுபடுத்தின.
பின்னர் 6 மாசம் கழித்து யாராவது புதிதாக வந்து ’ஐயோ பெங்களூர்ல சாப்பாடு ஒத்துவராதே எப்படி சமாளிக்கற’ன்னு கேட்டா ஒரு மணி நேரம் உக்கார வச்சு காதுல ரத்தம் வர்ற அளவுக்கு கதற கதற பெங்களூர் சாப்பாட்டு புராணங்களை பொழிந்துதள்ளும் அளவுக்கு முன்னேறியாச்சு. :) அந்த புராணங்களை எல்லாம் ஆவனப்படுத்தி கல்வெட்டுல வெட்டிவச்சுட்டா நமக்கு பின்னாடி வர்ற சந்ததியினர் அதை பார்த்து படிச்சு தெரிஞ்சு தெளிவா நடந்துக்கவாங்கன்னு.. இதோ...

(புதிய நாகரிக, கார்ப்பரேட் கார்டுகளை தேய்க்க மட்டுமே என பல இடங்கள் உண்டு, அதெல்லாம் வெள்ளிக்கிழமை TOIல வரும் பார்த்துகிடுங்க, இந்த தொகுப்பு பழைய / சின்ன / உள்ளூர் / சுவையான, இடங்கள் மட்டும்)
@venkiraja கேட்டமாதிரி 

காலை :

நகரெங்கும் வியாபித்திருக்கும் SLV, சாகர், காமத், அ.ஆ.ப, உடுப்பி மாதிரியான வழமையான இடங்களை தாண்டி விசேஷமான (நான் போன) சிலது மட்டும்

# ப்ராமின்ஸ் காஃபி பார்
கொஞ்சம் பழைய பெங்களூர் வாசத்தோட, பசவனகுடி’க்கும் சாம்ராஜ்பேட்’க்கும் நடுவால சங்கரமடத்துக்கு பக்கத்துல இருக்கும் ஒரு பழைய கடை. 50வருசமா இருக்காம், பெஸ்ட் இட்லி அவார்ட் எல்லாம் வாங்கியிருக்காங்களாம். அருமையான இட்லி, பொதுவா இந்த ஊர் சாகர்’களில் கிடைக்கும் அரிசி ஜாஸ்த்தி போட்ட உதிரிப்போகும் இட்லியா இல்லாம, நல்ல மல்லிப்பூ மாதிரியான இட்லி, நிறையா நெய்யும் முந்திரியும் மிதக்கும் கேசரி, காரபாத் (வெள்ளைரவை தான் கொஞ்சம் கேரட்டும் பட்டானியும் போட்டு டகால்டி வேல காட்டுனது) , அவ்ளோ தான் மொத்த கடையோட மெனுவுமே, வேற ஒண்ணும் கிடைக்காது, சாம்பாரும் கிடையாது, சட்னி மட்டுமே (அன்லிமிட்டட்). இங்க வழக்கமா வர்ற ஆசாமிகள் மேல காசுகுடுத்து ஒரு துண்டு வெண்ணைய வாங்கி இட்லிமேல தடவிக்கறாங்க, நமக்கு அதுல உவப்பில்லை, நல்ல மொறுமொறுப்பான வடையும் அந்த அளவுகாரம் போட்ட சட்னியும், சுவையில ஆகாஓகோ தான், பில்டர் காப்பி குறை சொல்ல முடியாது, டீ’யும் உண்டு.
கையிலேந்தி தெருவில் நிற்க்கும் வசதி மட்டுமே உண்டு, உக்காரவெல்லாம் முடியாத்

#NMH (ந்யூ மார்டன் ஹோட்டல்) http://www.newmodernhotel.com/
இதுவும் ஒரு பழைய இடம், பழைய காங்கிரஸ் தலைவர்கள் படம் எல்லாம் வச்சிருப்பாங்க (அது ஜனதா கட்சிக்காரங்கன்னு ஒருத்தன் சொல்றான், நம்ம வேலைய நம்ம பார்ப்போம்),
அதே இட்லி வடை காரபாத் ஐட்டங்கள். கூடவே தோசையும் உண்டு. ’பட்டர் காலி’, தட்டே இட்லி, மசாலா தோசா எல்லாம் ரொம்ப விசேஷம். அதிலும் முக்கியனாம விசேசம் ‘இருளி சாம்பார்’ - சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் பக்கெட்ட கொண்டாந்து உங்க டேபிள்ல வச்சதும் நாக்கு கொஞ்சம் கங்கம்டான்ஸ் ஆடிரும். இங்க காப்பி குடிச்சுட்டே தான் பல பழைய கன்னட படங்களுக்கான திரைக்கதை உருவாச்சாம்,
பாதாம் அல்வா / பெனி / சிரொட்டி - சிறப்பு. MTR மாதிரி காலைடிபனுக்கு காத்துநிக்க வேண்டியிருக்காது
மதியம் மீல்ஸும் உண்டு, அதுல இஞ்சி கொத்துமல்லி போட்ட மோர் தான் ஹைலைட்டு.
விவி.புரம் - மினர்வா சர்கிள் பக்கம் - MTRல இருந்து 1 - 1.5 கிமி, அந்த தோசையை பிச்சு வாயுல போட்டுகிட்டு ஸ்பூன்ல சாம்பாரை டேஸ்ட்டும்‘இதர் ஆவோ’அமித்துகள் கூட்டம் இல்லாமல் சாப்டலாம் ;)

#வித்யார்ததிபவன்
90களில் ஷகீலா படத்துக்கு தியேட்டர்வாசல்ல நின்னா மாதிரி ஒரே பெருசுக கூட்டமா இருக்கும், மணியடிச்சா தான் கடைதிறப்பாங்க, ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு இவுங்க :) 7 -11, 2-8 மட்டுமே
காந்திபஜார், பூஜைசாமான் கடைகளுக்கும் பூக்கடைகளுக்கு மத்தியில ஒரு சின்ன இடம். ரொம்ப ‘பாடல் பெற்ற’ இடம்.
மசால்தோசா = வி.பவன். அஷ்ட்டே.. நோ சாம்பார், ஒன்லி சட்னி, மத்த இடம் மாதிரி இல்லாம கொஞ்சம் பொட்டுகடலை அதிகம் போட்ட தேங்காச்சட்னி. ஒரு டஜன் தோசை தட்டை சர்க்கஸ்க்காரன் மாதிரி எடுத்துட்டு வர்ற சர்வர போட்டோ எடுத்துதள்ளும் ஆப்பிளர்களும், கிட்ட வந்ததும் மேல வச்சிருந்த தட்டு தன்னோட தோசையில பட்டு சுகாதரக்கேடு விளைவிக்குமோன்னு யோசிச்சுட்டே சாப்பிடும் ஆட்களும் சூழ்ந்த இடம். NHM பழைய சினிமாக்காரங்கன்னா, இது அந்தக்கால பெரியாப்பீசர்களும் ப்ரொபசர்களும் வரும் இடம்.
இட்லி கிடையாது, ரவா வடா உண்டு. காப்பி - இந்த கள்ளிச்சொட்டு வகையறா.

#த்வாரகாபவன்
என்.ஆர்.காலனி.
பெங்களூரின் பெஸ்ட் ‘பட்டர் காலி’ கிடைக்கிறது இங்க தான்.

#உடுப்பி க்ருஷ்ணபவன்
பாலபெட்/சிக்பெட் - 1926ல இருந்து இந்த கட்டடம் 1902ல இருந்து வியாபரம் இருக்காம்.
ரவா இட்லி, சாகுமசால்தோசை - விசேஷம். காப்பி - உன்னதம்.. ஒரிஜினல் உடுப்பிசாம்பாரில் மிதக்கும் வடை. வாழையிலையில் சுத்தின இட்லி.
காலையில என்னடா க்யூ நிக்கிறாங்கன்னு யோசிக்காம வாங்கி அடிச்சிருங்க - சூப்பர் ஷேவிகேகீர் (பாதாம் சேமியா பாயாசம்)

#CTR (செண்ட்ரல் டிபன் ரூம்) - மல்லேஸ்வரம்.
இதுதான் MTR விட பெஸ்ட்டுன்னு துண்டைபோட்டு தாண்டுற மண்ணின் மைந்தர்கள் உண்டு. வெங்காயம்/பூண்டு சேர்க்காத சமைக்கிற இடம்.

#வீணாஸ்டோர்ஸ் - மல்லேஸ்வரம்
பாத்திரகடைன்னு நினைச்சுறாதீங்க. கையேந்தி நிக்கும் இட்லிவடை காப்பி கடைதான். கூட்டம் மட்டும் எதோ ஆடிதள்ளுபடி சென்னைசில்க்ஸ் அளவுக்கு இருக்கும்

என்னடா ஒரே மாதிரி போகுதே, ஒரு மசாலா வாசமே வரலைன்னு நினைக்கறீங்களா.. ஹிஹி.. இத்தோட இத முடிச்சு அங்க போயிடுவோம்.

#SG ராவ் மிலிட்டரி ஹோட்டல்.
நூறு வயசு தாண்டியாச்சுன்னு சொல்றாங்க, இந்த ஸ்டீம் குக்கிங்/ கேஸ் குக்கிங் எல்லாம் கிடையாது, விறகு அடுப்பு தான். பழையகாலத்து வீடு மாதிரியான இடம்.
சிக்கன்புலாவ், மட்டன்புலாவ் (பிரியானி தான்). கொஞ்சம் குழைஞ்சாப்புல இருக்கும். சாப்ஸ், கீமா
முதல்தடவை காலையில 6 மணிக்கு கூட்டமா வரிசையில நின்னு பிரியாணி வாங்கிறத பார்த்தேன், பெரும்பாலும் பார்சல், 8 மணிக்கு போன, மதியானம் வா’ன்னு சொல்லிடுவாங்க :( மதியம் ராகிகளிஉருண்டை கிடைக்குமாம்.
முன்னொருகாலத்தில் நைட் அவுட் அடிக்கும் பல சனியிரவுகளின் நீண்ட பயணம் ஞாயிறு காலையில் இங்க முடிவதுண்டு

#தனபால் மிலிட்டரி
சின்னயன்பாளையா, அடுகோடி
இட்லி-பாயா / போட்டி - யோசிக்காம நேரா போயிடுங்க. கார் எல்லாம் வேண்டாம், ரெண்டுசக்கரம் தான் ஆகும்.

#சிவாஜிமிலிட்டரி ஹோட்டல் - பனஷங்க்கரி
காலையில தோசை, ஆட்டுக்கால் சூப், கீமா, பிரியாணி (ஆனா மதியம் கிடைக்கிறது இதைவிட பெட்டர் வெர்ஷன்)
#ரங்கன்னா மிலிட்டரி - கே.ஆர்.ரோடு
இட்லி, தோசை, ராகிமுத்தே, சாப்ஸ் -

மேல சொன்ன ரெண்டும் அகில உலக பேமஸ் ‘தொன்ன’ பிரியாணி கிடைக்குமிடங்கள் :)

இதை அப்படியே ஒரு தொடரா கொண்டுபோக ஆசை, அதை நம்பி தான் தலைப்புல -1-ன்னு போட்டிருக்கேன்..
பயங்கிற பிசி, நேரமில்லைன்னு ஸ்டைலா பேசலாம், ஆனா உண்மை என்னான்னா.. “பேசிக்கல்லி ஐயம் ஏ சோம்பேறி - லெட்ஸ் சீ”..

அப்புறம் முக்கியமா.. நீண்டு நெளிந்து மணிக்கணக்கில் சென்ற கஸ்டமர் காலுக்கு இந்த பதிவு சமர்பணம் ;)






Thursday, November 5, 2009

சும்மா குறிச்சு வச்சுக்க

நட்பு வட்டத்துல ஒவ்வொருத்தனா கல்யாணம் செஞ்சுக்கா ஆரம்பிச்சப்போ போட்ட பதிவு இது... காலச்சக்கரம் சுத்திட்டே இருக்குங்களே நம்ம மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன, அதுவும் கடந்து போச்சு. அடுத்த கட்டத்துக்கு போகனுமில்லைங்களா. சும்மா ரகளையா "உங்க தங்கச்சி புள்ளை வளைகாப்புக்கெல்லாம் நான் லீவு போட முடியாது, மார்க்கெட் இருக்கிற நிலவரத்துல"ன்னு சலிப்பா விட்டுக்கு போன் பேசிட்டு சுத்திட்டு இருந்த பயலுக எல்லாம், "வீட்டுல அவுங்க அப்பாவுக்கு கேட்ராக்ட் மாதிரி இருக்கும் போல, அரவிந்த் கூட்டிட்டு போகனும், அதுனால அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு"ன்னு 'ஷை'யே படாம பேச ஆரம்பிச்ச காலமும் வந்து தானுங்களே ஆகனும்.. அதுக்கப்புறம் ராத்திரி வெள்ளிக்கிழம ராத்திரி ஒரு பத்து பதினோரு மணி வாக்குல அடுத்தநாள் ஷெட்யூல் கன்பர்ம்ங்க செய்யலாம்னு போன போட்டா.. பாசமா 'மாமா..'ன்னு ஆரம்பிச்சு "அப்புறம் கூப்பிடறன்.. ஜூனியர் அழுவாச்சி ஆரம்பிச்சுருச்சு"ன்னு சொல்லி வைச்சுட்டு, மறுபடி திங்கட்கிழமை காலையில மெசஞ்சர்ல வந்து.. "அப்புறம்.. அன்னைக்கு கூப்பிட்ட, அப்புறம் கூப்பிடலாம்னு அப்படியே மறந்துட்டேன்"னு ஆரம்பிப்பானுக... ம்ம்.. நாமளும் இதுக்கெல்லாம் தப்பிக்க முடியாது பாருங்க.. நமக்கு அதுக்கான் நேரம் வந்துது..

லக்கி எழுதின மாதிரித்தான்னாலும் அந்தளவுக்கு அதிகமா அலைக்கழிக்க படாம, ஒரு சின்ன சுத்துக்கப்புறம் சட்டுன்னு ரெண்டு நாள் வெயிட் பண்ணி கன்பர்ம் ஆனதுல பெரும்பான்மை மாதிரி ஹோம் டெஸ்ட் - ஆஸ்பத்திரி சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாம டக்குன்னு 'Dad in waiting' ஸ்டேட்டஸ் வந்திருச்சு..

அப்ப இருந்தே குடும்ப சகா'க்க கூட்டம் சேரும் போதெல்லாம், இதே பேச்சு தான்.. பையனா? பொண்ணா? இது வரைக்கும் பையன் பொறந்த கூட்டாளிக எல்லாத்தையும் "அப்புறம் செஞ்ச அட்டகாசத்துக்கெல்லாம், ஒரு பையன் பொறந்து அதே ஆட்டம் ஆடித்தான தண்டனை குடுக்கனும்".. "எல்லா தல்லவாரிகளுக்கும் பையன் தான்.. அனுபவிக்கனும் இல்ல"ன்னு வம்பாவே பேசிட்டு இருந்தாச்சு. எல்லா கூட்டத்துலயும் எல்லாருமே முடிவாத்தான் இருந்தாங்க.. பையன் தான்.. வயிரு பெருசே ஆகலை பையன் தான்.. அப்படி இருக்கு, இப்படி இருக்கு அதுனால பையன் தான்'னு ஆளாளுக்கு தீர்ப்பு சொல்லிட்டே இருந்தாங்க.. நம்ம வுட்டம்மிணி உட்பட.. உள்ளார இருக்கிறவன் கிட்டத்தான் கம்ப்ளெயின்ட் செய்யிறத எல்லாம்.. உம் கடைசியில நம்மள பத்தி சொல்லிகுடுக்க ஒரு ஆள் கிடைச்சிருச்சு அவுங்களுக்கும்..
இப்படியே பேசிட்டு இருந்த ஒரு நாள் தான், வீட்டுக்கு வந்த ஒரு தோழி, எல்லாரும் பேசு கத்தி கலாய்ச்சு அமைதியான பிறவு சொன்னா.. 'உனக்கு பொண்ணுதான்டா... பொறுப்பான பசங்களுக்கு பொண்ணுதான்.. வேணா பாரு'ன்னா.. அவளுக்கு பையன்.. பாவம் அவ வீட்டுக்காரன் மேல அவளுக்கு என்ன கோவமா.. என்ன இருந்தாலும் இந்த தோழிக தோழிக தான்.. நம்மள சரியா புரிஞ்சுக்கறவங்க அவுங்க தான் :)

நமக்கும் மனசுல.. 'பொண்ணாயிருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு.. மூணு தலைமுறையா எங்க வூட்ல பொண்ணுகளே பிறக்கல.. (அதுக்கு முன்னத்துன வரலாறு எல்லாம் தெரியற அளவுக்கு பாரம்பரிய பலம் இல்லைங்க நமக்கு) நான் பொறந்ததுக்கே எங்காத்தா ஒரு நா கழிச்சு தான் வந்து பாத்துதாம்.. வந்ததும் எங்கம்மா கிட்ட.. 'வாசக்கூட்டி கோலம் போட ஒரு புள்ளை வேணும்னு இருக்கேன்.. நீ பையன பெத்து வச்சிருக்கே'ன்னு புலம்பியிருக்காங்க. அவுங்க விதி அதுக்கப்புறம் வந்த ரெண்டு மருமகளும் கூட அவுங்க ஆசைய நிறைவேத்த முடியல... அந்த ஆசை தான் வேதாளம் மாதிரி எங்காத்தாவோட பெரிய பேரன்'ங்கிற முறையில என் தோள்ல தொங்கிட்டு இருந்துச்சோ என்னவோ.. ஆனா வூட்டம்மிணியும் எங்கய்யனும் கூட்டணி போட்டு ஸ்ட்ராங்கா 'பையன் தான்'ன்னு சொல்லும் போது.. சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டு இருந்தேன்..

நம்ம வாரிசு நம்மள மாதிரி தான் இருக்கும்.. அவசரக்குடுக்கையா.. சொன்ன தேதிக்கு 17 நாள் முன்னாடியே உள்ளார எதோ ரகளைய செஞ்சு, சரி இன்னைக்கே எடுக்கனும்னு உள்ள தள்ளிட்டு போயிட்டாங்க... எல்லாரும் கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்தாங்க.. நானும் எங்கய்யனும் வழக்கம் போல.. இப்படி மார்பிள்ஸ் போட்டதுக்கு பதிலா டைல்ஸ் போட்டிருக்கனும் ஆஸ்பத்திரியில எல்லாம் வழுக்கிட்டா கஷ்டமில்லன்னு எங்க சமூக அக்கரைய வெளிக்காட்டிட்டு உக்காந்திருந்தோம்.. அம்மா முறைச்சு பார்க்க.. சரி நாமளும் கொஞ்சம் பொறுப்பா இருப்பம்னு அதுக்கும் முயற்ச்சி செஞ்சேன்.. அதுக்கு புவியியல் சதி செஞ்சு ஒர்க் அவுட் ஆகாம போயிருச்சு..

அப்புறம் 'யாவரும் நலம்'ன்னு கூப்பிட்டு கையில குடுத்துட்டு உடனே வாங்கிட்டாங்க.. நம்ம அம்மணி அரைமயக்கத்துல சிரிக்க முடியாம ஒரு புன்னகையோட படுத்திருக்கு.. என்ன செய்யன்னு தெரியாம.. கங்கிராட்ஸ்'ன்னு மட்டும் கைய அழுத்திட்டு சொல்லிட்டு வந்துட்டேன்.. வெளிய எல்லாருக்கும் ஒரே குஷி.. பெருசு பெருசா ஸ்வீட் பாக்ஸ் வாங்கி எல்லாருக்கும் குடுத்துட்டு, ஒவ்வொரு வட்டத்துலயும் ஒவ்வொரு சகா'க்கு போன போட்டு சொல்லி, எல்லாருக்கும் சொல்லிடு, நான் அப்புறம் பேசுறன்னு வந்துட்டேன்.. பொறுப்பான புருஷனா இருக்கனுமில்ல..

அப்புறம் ஒரு நாலு மணி நேரம் கழிச்சு இணையபக்கம் வந்தா.. ஒரு சகா எல்லாருக்கும் மெயில் போட்டிருக்கான் குரூப்ஸ்ல, "ஒரு சந்தோஷமான வருத்த செய்தி.. ராசு தல்லவாரி இல்ல.. பொறுப்பான ஆள்ன்னு சொல்றம் மாதிரி ஆயிருச்சு"ன்னு ... வயத்தெரிச்ச புடிச்ச பயலுக.. "ஒருத்தன், லைஃப் லாங்கா தல்லவாரியாவேவா இருப்பான்"... திருந்தவே கூடாதா, ப்ளடி ஃபெல்லோஸ்.. அப்புறம் நானே எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன், "நாங்களும் பொறுப்பு தான்.. பொறுப்பு தான்.. எல்லாரும் பார்த்திகிடுங்க.." ரேஞ்சுல..

பிகு:
தகப்பனான சந்தோசத்துல.. சின்னம்மை வந்து பொண்டாட்டி புள்ளைய கண் கொண்டு பார்க்க முடியாம ஒதுக்கி வச்சிருக்காங்க.. வாரிசு நலமா இருக்கிறதா போன்ல தான் க்ஷ்சொல்றாங்க.. 'அப்படியே பெங்களூர் போயிரு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு வா'ன்னு உத்தரவு வேற.. ம்ம்.. எங்க போயிரப்போகுது வந்து பார்த்துக்குவோம்..

Wednesday, May 20, 2009

♬ இதெல்லாம் டூப்பு ♬ - கந்தசாமி

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுன்டகஞ்சி, சுட்டவடை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரிதண்ணி, இளநி, இராதொக்கு, உப்புகண்டம், பழையசோறு, டிகிரிகாப்பி, இஞ்சிமொறப்பா, கடலமுட்டாய், கம்மர்கட்டு, வெள்ளரிக்கா, இழந்தபழம், குச்சிஐசு, கோலிசோடா, முறுக்கு, பஞ்சுமுட்டாய், கரும்புசாறு, மொளகாபஜ்ஜி, எள்ளுவடை, பொரிஉருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத்தண்ணி, ஜவ்வுமுட்டாய், கீரவடை, கிர்னிபழம், அவுச்சமுட்டை, ஆஃப்பாயில், பல்லிமுட்டை, பப்பாளி, புகையிலை, போதைபாக்கு, புண்ணாக்க்கு..

இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, பிட்சா தான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனார், மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுபேத்தி, பேரன், கொள்ளுபேரன், பொண்டாட்டி, வப்பாட்டி, நல்லபுருஷன், கள்ளபுருஷன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி, அக்காப்பொண்ணு, அத்தைபொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகலை, சம்பந்தி, முறைமாமன், முறைபொண்ணு, தலைச்சன்புள்ள, இளையபுள்ள, இளையதாரம், தொடுப்பு, ஒண்ணுவிட்டது, ரெண்டுவிட்டது, ரத்தசொந்தம், மத்தசொந்தம், ஜாதிக்காரன், பொண்ணெடுத்தவன், பொண்ணுதந்தவன்..

இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, நண்பன் தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல, காதல்தோல்வி, கடுப்பு, எக்ஸாம்பெயிலு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம், போட்டுகுடுத்தல், பொறாமை, கிண்டல், இளப்பம், எச்சபுத்தி, இறுமாப்பு, சகுனிவேல, சதிச்செயல், கோழ்மூட்டல், குறுக்குபுத்தி, ஒட்டுகேட்டல், ஓரவஞ்சனை, பொய், புழுகுமூட்டை, டகுல்வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து, கொள்ளிகண்ணு, குசும்பு, சின்னத்தனம், சின்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேறுமாறு, டிமிக்கி, ஊழ உதாரு, ஒப்பாரி, ஜால்ரா, ஜெர்க்கடித்தல், திருட்டுவேலை, தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, ஜாலி தான் டாப்பு

குப்புசாமி, கோயிஞ்சாமி, முனுசாமி, முத்துசாமி, க்ருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராச்சாமி, கன்னுச்சாமி, கருப்புசாமி, வெள்ளச்சாமி, பழனிச்சாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுச்சாமி, அழகுச்சாமி, அப்பாச்சாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கிடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவச்சாமி, சீறுச்சாமி, சடையச்சாமி, சந்தரசாமி, வெள்ளச்சாமி, குயில்சாமி, குமாரசாமி, கொதண்டசாமி, அங்குசாமி, துரைச்சாமி, பொன்னுச்சாமி, அய்யாச்சாமி, அண்ணாச்சமி, நல்லசாமி...

இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு
இதெல்லாம் டூப்பு, கந்தசாமி தான் டாப்பு

:: கந்தசாமி :: விகரம் :: விவேகா :: தேவிஸ்ரீப்ரசாத் :: சுசிகணேசன் ::

# கேட்க #

Tuesday, February 17, 2009

ஒரு கணம்

விழிப்பு தட்டிவிட்ட வாரயிறுதி அதிகாலையில்
பிடித்த கட்டங்காபியும் மெல்லிசையுமாய் சிலநேரம்

நேரம் பார்க்காமல் காட்டோடையில் மூழ்கி திளைத்து 
ஈரம் சொட்ட சொட்ட கரையில் அமர்ந்து சிலநேரம்

மின்சாரமில்லா மழைநேரத்து மாலையில்
வாசலில் தெறிக்கும் சாரலோடு தனிமையில் சிலநேரம்

உறக்கமில்லா நெடுந்தூர இரவு பயணத்தில்
ஆளில்லா அத்துவான சாலையோரங்களில் சிலநேரம்

கலோரி கணக்கு பார்க்காமல் மனசு நிறைய உண்டுவிட்டு 
கொழுந்து வெற்றிலையோடு தென்னந்தோப்பில் சிலநேரம்

வெட்டிப்பேச்சும் போதையுமாய் போகும் நட்புகூட்டம்
சட்டென்று அமைதியாகி மெளனம் நிறைக்கும் சிலநேரம்

காமம் கொண்டாடி கரைந்து களைத்துவிட்ட பிறகு
சாளரம் வழியே நட்சத்திரங்களை பார்த்தபடி சிலநேரம்

இப்படி ரசித்து புகைத்த நேரங்கள் பல உண்டு

இத்தனையையும் விஞ்சி விட்டது 

நேற்று

அணைக்காமல் விட்டெறிந்த அந்த
கடைசி சிகரெட்டின் ஒரு கணம்.