Tuesday, October 5, 2004

குழப்பமய்யா குழப்பம்

gandhi


அக்டோபர் 2ம் தேதி காலையில எந்திரிச்சு பேப்பர் பார்த்த ஜார்க்கண்ட் மாநிலத்துக்கரங்களுக்கு ஒரே குழப்பம். ஏன்னா காந்தி ஜெயந்திக்காக இன்னைக்கு லீவுன்னு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு, அவுங்க மாநில முதல்வர் ' அர்ஜுன்முண்டே' சார்பாவும், கவர்னர் 'ப்ரகாஷ்மார்வா' சார்பாவும், எல்லாப்பேப்பருலயும் வந்திருந்த வாழ்த்து செய்திதான். எதாவது திருவுழா, விசேஷம்னா இந்த அரசியல் தலைவர்கள் மந்திரிக எல்லாரும் மக்கள் செலவுல மக்களுக்கு வாழ்த்து சொல்றது ஒன்னும் புதுசில்லியேங்கரீங்களா?. வாழ்த்து சொன்னதுல குழப்பம் இல்லைங்க, வாழ்த்துல வந்திருந்த மேட்டருல தான் குழப்பம்.
பேப்பர்ல கவர்னர் சார்பா குடுத்த வாழ்த்து விளம்பரத்துல 'ராஷ்ட்ரபதி'மகாத்மாகாந்தின்னும், முதல்வர் சார்பா வந்த விளம்பரத்துல 'மகாத்மாவின் நினைவுநாளை' முன்னிட்டுன்னு வந்திருந்ததாம்.
பாவம், லீவு நாளும் அதுவுமா கொஞ்சம் லேட்டா எந்திருச்சு தூக்க கலக்கத்துலயே பேப்பர் பார்த்தவங்க்களுக்கு,என்னடா நம்ம அக்டோபர் 1ம் தேதி நைட்தூங்கி ஜனவரி 30ம்தேதி தான் எந்திரிச்சிருக்கமோன்னு கண்டிப்பா ஒரு குழப்பம் வந்திருக்கும்.
விளம்பரம் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் 'நாங்க ராஷ்ட்டிரப்பிதா'ன்னு (தேசதந்தை) தான் குடுத்தோம் அவுங்க ராஷ்ட்ரபதின்னு போட்டிட்டாங்கன்னு எதோ ஒரு சப்பை காரணம் சொல்றாங்க, இருந்தாலும் தப்புக்கு அவுங்க தான பொறுப்பு.
இதுக்கு கண்டிப்பா அந்த முதல்வரோ, இல்லை கவர்னரோ, பொறுப்பாக முடியாதுதான், இருந்தாலும் ஒரு பொறுப்புல இருக்கிறவங்க பேருல வந்த ஒரு விளம்பரம் இவ்வளவு பொறுப்பில்லாம இருந்தா, அந்த பொறுப்பான பதிவியில உக்காந்து அவுங்களோட பொறுப்புகளை எவ்வளவு பொறுப்பா பார்த்துக்குவாங்கன்னு பொறுப்பான மக்களுக்கு கொஞ்சம் கலக்கமாத்தான இருக்கும்.
செய்தி சுட்டி

1 comment:

அன்பு said...

கொடுக்கிறவன் கொடுத்த, எதைக்குடுத்தாலும் பேப்பர்ல போட்டுறவாங்களா? அவங்க அதை பார்க மாட்டாங்கள. அவங்களே பேப்பர்ல போட்டுட்டு, அவங்களே செய்தியாகவும் ஆக்கிடுறாங்கப்பா...