Saturday, April 16, 2005

இரும்படிக்கிற இடத்துக்கு போன 'ஈ'

நிறையா பேரு வேடிக்கையா சொல்லுவாங்க 'மழைக்கு கூட ஒதுங்கினதில்லை'ன்னு, அந்த மாதிரி, நிஜம்மாவே நான் மழைக்கு கூட இந்த புத்தக கண்காட்சி பக்கமெல்லாம் போனதில்லீங்க, ஆனா நேத்து பாருங்க, அந்த அதிசியம் நடந்தே நடந்திருச்சு..
நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு கடை பகடி சம்பந்தமா பேசறதுக்காக என்னை பார்க்கனும்னு சொன்னாருங்க. அவுர வீட்டுக்கு வர சொன்னா அப்புறம் அவுரு கூட பேசி முடியவே எப்படியும் ஏழு எட்டு ஆயிடும்.. நம்ம வேற ராத்திரி ஆட்டத்துக்கு 'சந்திரமுகி' டிக்கெட் எடுத்து வச்சிருக்கோம், அப்புறம் அந்த வேலை கெட்டு போயிருமேன்னு, (படம் எப்படியும் 9.30 மணிக்குதான் போடுவான், ஆனா தலைவர் படம் ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போகனுமே) அவர்கிட்ட "எனக்கு கொஞ்சம் வேலையிருக்குதுங்க மாமா, ஒரு 5.30 மணி வாக்குல புதுரோட்டுல இருப்பேன், நீங்க அந்த பக்கம் எதும் வந்தா அப்படியே 'கிரவுன்'ல உக்காந்து பேசிருவமே"ன்னு சொல்லிவச்சனுங்க (அவரு வசூலுக்கு எப்படியும் அந்த பக்கம் வருவாருன்னு தான் நமக்கு முன்னாடியே தெரியுமே!!).. அவரும் சரீன்னு சொன்னாருங்க.
ஒரு அஞ்சு மணிக்கு அப்படியே வீட்டுல 'வெளிய கொஞ்சம் வேலை இருக்குதுங்க, ரங்கசாமி மாமாவ வேற பார்க்கனும், பார்த்துட்டு அப்படியே படத்துக்கு போலாம்னு இருக்கேன்'ன்னு சொல்லிட்டு கிளம்பி போயி 'கிரவுன்' வாசல்ல நின்னனுங்க. நான் போயி நிக்கவும் நம்ம 'செல்' அடிக்கவும் சரியா இருந்ததுச்சுங்க. 'ரங்கசாமி மாமா'. எங்கண்ணு நான் வர ஒரு ஆறரை ஏழாகும், சித்த நேரம் வெயிட் பண்ணுப்பா'ன்னு சொல்லிட்டு வச்சுட்டாரு. நமக்கும் ஒரு மணி நேரம் என்ன செய்யறதுன்னே தெரியலைங்க.. சரின்னு ஒரு 'ராஜா'வ முடிச்சுட்டு வண்டி எடுக்க போனா, எதுதாப்புல 'மயூரா'வுல 'புத்தக கண்காட்சி'ன்னு பெருசா நோட்டீஸ் ஒட்டி பேனரெல்லாம் கட்டியிருக்காங்க.. நான் வழக்கமா அந்த பக்கமெல்லாம் போற பழக்கமில்லீங்க, ஆனா பாருங்க.. இப்ப இந்த 'ப்ளாக்'கெல்லம் எழுதறமா, இங்க எல்லாரும் பெரிய இலக்கியவாதிகளா இருக்காங்க, புதுசு புதுசா வாசிப்பனுபவம் அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் கேட்டு பழகிட்டமா, சரி நாமளும் கொஞ்சம் இலக்கிய வாசம் புடிச்சு பார்ப்பமேன்னு டக்குன்னு வண்டிய உள்ளார விட்டுட்டனுங்க.. (எதோ, வாசம்னு சொல்லிட்டங்கிறதுக்காக, யாராவது 'கழுதைக்கு தெரியமா..' அது இதுன்னு பின்னூட்டம் போட்டுராதீங்க..)

உள்ள போனா முக்கால்வாசி சித்த மருத்துவம், ஜோசியம், சுய முன்னேற்றம் இப்படியே அடுக்கி வச்சிருந்தாங்க.. இந்த சுயமுன்னேற்ற புஸ்தகங்க இருக்குதுங்களே.. சரி வேண்டம் அதை பத்தி இன்னொரு நாளைக்கு பேசுவோம். எங்கயாவது நம்ம பதிவுகள்ல யாராவது பேசுன புஸ்த்தகங்க இருக்குதான்னு பார்த்துட்டெ வந்தேன்.. அடிக்கடி 'JJ சில குறிப்புகள்' பத்தி எல்லாரும் பேசறாங்க, அதை இன்னைக்கு வாங்கிபுடனும்னு அங்க இருந்த ஒரு உதவியாளர கேட்டேன் அவரு டக்குன்னு திரும்பி 'JJ-கரண்தப்பார் பேட்டி'ன்னு ஒரு புஸ்த்தகத்த எடுத்து குடுத்தார்.. 'டேய்!!..'ன்னு மனசுக்குள்ள திட்டிட்டு, நானே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு, ஒரு சுத்து வந்தேன்.. நிறையா குழந்தைக புஸ்த்தகம் வச்சிருந்தாங்க.. லீவு விட்டாட்ங்க இல்ல, நிறைய பொடிசுக தாத்தாவோட வந்து காமிக்ஸ் வாங்கிட்டு இருந்தாங்க..
இப்படியே வெட்டியா சுத்தி வந்தப்போ.. 'கிழக்குபதிப்பகம்'ன்னு ஒரு பேனர் பட்டுது.. ஆஹா.. 'கண்டுகொண்டேன் சீதையை'ங்கிற மாதிரி டக்குன்னு அந்த டேபிள் பக்கமா போயிட்டேன்.. நிறையா புஸ்த்தகம் வச்சிருந்தாங்க.. டாலர்தேசம், 9/11, அள்ள அள்ள பணம், ரஜினி புக்கு, காகித மலர்கள்'ன்னு ஒரு பெரிய வரிசையே இருந்துச்சு, அங்க தான் நமக்கு குழப்பம் ஜாஸ்த்தியாயிடுச்சுங்க, ஏதோ பேரு கேள்விபட்டு இருக்கொம்ங்கிறதுக்கா பக்கத்துல போயி நின்னுட்டனே ஒழிய, எந்த புஸ்த்தகம் வாங்கலாம்ங்கிறத முடிவு செய்யிற அளவுக்கு நமக்கு பத்தாதுங்க.. கவிதை புஸ்த்தகம் வாங்கலாம்னு பார்த்தா.. ஒவ்வொரு பக்கத்துலயும் வெரும் நாலு வரி போட்டு 50 ரூபா வாங்கிடறாங்க.. அதுனால வேற எதாவது வாங்குவோம்னு சுத்தி சுத்தி வந்தேன்.. ஆனா ஒன்னும் முடிவு பண்ண முடியலைங்க.. கடைசியில 'சுட்டாச்சு சுட்டாச்சு'ம், 'ஜனகனமன'வும் வாங்கிட்டு வெளிய வந்துட்டேன்..
அந்த கண்காட்சி இன்னும் 15 நாளைக்கு இருக்கும் போலிருக்குதுங்க, யாராவது வெவரமானவங்க, எதாவது நாலு புஸ்த்தகம் சொல்லுங்களேன்,, வாங்கி படிச்சு நானும் 'இலக்கிய கடல்ல தொபக்கடீர்ர்னு விழுந்து நீச்சலிடிச்சு பார்க்கிறனுங்க..'

அங்க விசாரிச்சதுல குழந்தைக புஸ்த்தகம், ஜோசியம், அதுக்கப்புறம் 'கிழக்குபதிப்பக'புஸ்த்தகம் தான் அதிகமா போகுதுன்னு சொன்னாங்க.. பத்ரி சார்.. உங்க பதிப்பக புஸ்தகமெல்லாமே அட்டை சூப்பரா இருக்குதுங்க..

---


எல்லாஞ்சரி 'சந்திரமுகி' பார்த்த கதை என்னாசுங்கரீங்களா.. அது வழக்கம் போல ஆட்டம் பாட்டம் தான்.. இன்னைக்கு நேத்தைக்கா.. 'பாயும்புலி'ல ஆரம்பிச்ச ஆட்டம் தான இன்னைக்கு சந்திரமுகி வரைக்கும் அதே ஆட்டம் தான்... என்ன இப்பெல்லாம் கொஞ்சம் வ்யசு ஜாஸ்த்தியா போனதுனால.. கொஞ்சம் கூச்சபட்டுகிட்டு, சீட்ட விட்டு எந்திருக்கறதில்லை அவ்ளோதான்.....
ஆனா.. ரஜினி படம்ங்கிறதெல்லாம் முதல் அரை மணி நேரம் தானுங்க.. அப்புறம் வெறும் 'சாதா'காமெடி, சாதா'த்ரில்லர்' தான்... :-(

3 comments:

சத்யராஜ்குமார் said...

//
என்ன இப்பெல்லாம் கொஞ்சம் வ்யசு ஜாஸ்த்தியா போனதுனால.. //

யாருக்கு? உங்களுக்கா, ரஜினிக்கா?
:)

இராதாகிருஷ்ணன் said...

//கவிதை புஸ்த்தகம் வாங்கலாம்னு பார்த்தா.. ஒவ்வொரு பக்கத்துலயும் வெரும் நாலு வரி போட்டு 50 ரூபா வாங்கிடறாங்க.. // பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டியது ;-)

Pavals said...

//யாருக்கு? உங்களுக்கா, ரஜினிக்கா?

ரஜினி'க்கு வயசாயிடுச்சுன்னா அடிக்க வந்திருவாங்க.. நமக்குத்தான்..!!