


இப்படிஏத்தி விட்டு, எத்தி விட்டுதாங்க.. இப்படி ரணகளமா இருக்கு..
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது..!! அய்யோ.. அய்யோ..!!

---
#148







என் இனிய தமிழ் வலைப்பூ மக்களே..
இதோ உங்கள் பாசத்துக்குறிய கொங்குராசா, இந்த வாரம் அவள்விகடனி'ல் வந்திருக்கிறேன்..
அலோ.. யாருங்க அது.. டபாருன்னு ப்ரொளஸர மூட போறது..
சும்மா ஒரு பில்ட அப்புக்காக, இப்படி பாரதிராஜா எபக்ட்டுல சொன்னேன்.. அதுக்குள்ளார பயந்துட்டீங்களே..ம்..ம்.. சரி விஷயத்துக்கு வருவோம்..
ஒரு தமாசான சமாச்சாரம்ங்க.. நம்ம முன்னாடி போட்ட காதல் கடிதம் & பதில் கடிதம் பதிவை 'அவள் விகடன்'ல நம்ம பதிவு முகவரியோட போட்டிருக்காங்கலாம்.. எல்லாரும் இங்க போயி பார்த்துட்டு ராசாவுக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வீங்களாம்..
(ஞான்ஸ்... காது கேக்குதுங்களா..?)
என்னதான் நான் சும்மா மொழிபெயர்த்து போட்டேன்னாலும்.. அது ஒன்னும் பெரிய தப்பில்லீங்களே.. நம்மூருல கதை கட்டுரை சினிமா இதெல்லாம் சுட்டு போட்டுட்டு.. நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதும்.. இதெல்லாம் 'நான் கடந்து வந்த வலிகள்'அப்படின்னு ஆரம்பிச்சு அப்படியே.. ஒரு ரேஞ்சுக்கு எடுத்து விடுறதில்லையா..
அதுனால.. சும்மா ஆளாளுக்கு பின்னூட்டத்துல வாழ்த்து சொல்ல்றத விட்டுபுட்டு.. ஒரு பாராட்டு கூட்டம் நடட்த்திடுங்க.. உலகத்துல எந்த மூலையில நடத்துலாஉம், உங்க அன்புக்கு கட்டுபட்டு நான் வந்து கலந்துக்குவேன்..
(ஃப்ளைட் டிக்கெட் நீங்க குடுத்துருவீங்கள்ள??)
--
#143




போன வாரம் பாருங்க, பெங்களூர் வரைக்கும் போக ராத்திரி ட்ரெயின்'ல டிக்கெட் கிடைக்காம, பகல்ல நிஜாமுதீன்'ல போக வேண்டியதாபோச்சுங்க. நைட் ட்ரெயின்ல போயிருந்தாலாவது இந்த மாதிரி எதாவது சுவாரசியமா எதாவது நடக்கும் ;-), பகல் வண்டியா போச்சுங்களா, எல்லாரும், வீட்டுல இருந்து கட்டிட்டு வந்த முறுக்கு, ஸ்வீட்டெல்லாம் ப்ரிச்சு வச்சு சாப்பிட்டுட்டு இருப்பாங்க, நம்ம ஆளுகளுக்கு வண்டி ஏறினதும் உடனே சாப்பிட எதாவது வேணும், இல்லாட்டி கஷ்டம். நான் தனியா வேற போயிட்டெஇருந்தேன், அதுனால ஜங்க்ஷன் போறதுக்கு முன்னாடியே எதாவது புஸ்த்தகம் வாங்கிட்டு போகனும்னு முடிசு செஞ்சுட்டு தான் போனேன்.