Monday, July 19, 2004

எழுத்து திருட்டு..

இலக்கிய உலகத்தில தான் என் எழுத்தை அவர்(ன்) பேருல வெளியிட்டுடான், என் எழுத்தை அவர்(ன்) காப்பியடிச்சுட்டான்னு அடிக்கடி பரபரப்பு ஆகும் (பெரிய அடிதடி எல்லம் நடக்குது இந்த மேட்டருக்கு!!)..ஆனா அது இலக்கிய எழுத்துக்கு மட்டுமில்ல எல்லா வகை எழுத்துக்கும் பொருந்தும் போல இருக்குங்க.. உலகம் பூராவும் வியாபாரத்தில சக்க போடு போட்ட 'you can win' எழுதின நம்ம ஊரு 'ஷிவ்கேரா' இப்ப அப்படி ஒரு ப்ரச்சனையில மாட்டியிருக்காரு.. அவரு லேட்டஸ்டா எழுதி(!) வெளியிட்டுருக்கிற Freedom is Not Free'ங்கிற புஸ்தகம் தான் பல பிரச்சனைய கிளப்பிவிட்டுருக்கு.
அம்ரித்லால்'ன்னு ஒருத்தர், ரிட்டயரான நம்ம ஊரு ரயில்வே ஆபிசர், (இவரும் கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டு புஸ்தகம் எழுதியிருக்காரு,பாவம் நம்ம ஆளுக யாரும் பெருசா அதுக்கு ஆதரவு குடுக்கல). இருந்து இருந்தாப்புல ஒரு நாள் இவருக்கு நம்ம ஷிவ்கேர கிட்ட இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கு, இவரும் போய் பார்த்து பேசியிருக்காரு. அப்போ ஷிவ்கேர நம்ம பிற்காலத்தில 'ஒட்டுக்கா சேர்ந்து வேலை பார்ப்போம்'னு சொல்லியிருக்காரு, இவரும் தலைய ஆட்டிட்டு வந்திட்டாரு, அங்கே இருந்து வந்ததும்,வரும் போது ஷிவ்கேர இவருக்கு கிஃப்டா குடுத்த அவரோட Freedom is Not Free'ங்கிர புஸ்தகத்த படிச்சதும் தான் இந்த மனுஷனுக்கு ஷிவ்கேர 'ஒட்டுக்கா சேர்ந்து வேலை பார்ப்போம்'ன்னு சொன்னதோட அர்த்தம் புரிஞ்சிருக்கு.. அந்த புஸ்தகத்தில பல இடங்கள்ல, நம்ம அம்ரித்லால் ஒரு 9 வருஷத்துக்கு முன்னாடி எழுதி பெருசா விற்ப்பனையில சாதிக்காத India—Enough is Enough'ல இருந்து ரொம்ப சர்வ சாதரணமா ஷிவ்கேர பல மேட்டர சுட்டிருக்காரு, அதுவும் எந்த விதமான acknowledgement'ம் இல்லாம.. மேட்டர சுட்டது மட்டும் இல்லாம, அப்படியே வரிக்கு வரி 'ஈ-யடிச்சான் காப்பி' மாதிரி அம்ரித்லால் புஸ்தகத்தில எழுதினத அப்படியே அவரோட எழுத்தா எழுதியிருக்காரு.
அம்ரித்லால் பயங்கிர கடுப்பு ஆகி ஷிவ்கேரவோட அந்த புஸ்த்கத்த வெளியிட்ட McMillanக்கு 'நான் கோர்ட்டுக்கு போவேன்னு' காட்டமா ஒரு மெயில்'ல தட்டி விட்டிருக்காரு, அப்புறம் பல முயற்ச்சிக்கு பிறகு ஷிவ்கேர'வை கோர்ட்டுக்கு இழுக்காம இருக்க ஒரு பெரிய தொகைக்கு சமரசம் ஆகியிருக்காரு (25 லட்சம்ன்னு பேசிக்கிறாங்க!!)
இதுல ஷிவ்கேர என்ன சொல்றாரருன்னா, 'நான் அப்பப்ப படிக்கிற, கேள்விப்படுற, எனக்கா தோணுற விஷயம் எல்லாத்தையும் உடனே கம்ப்யூட்டருல ஏத்தி வெச்சுக்குவேன், இது என்னோட 25 வருஷ பழக்கம், அப்புறம் ஒரு புக் எழுதும் போது அந்த விஷயங்களை எல்லாம் ரெஃபர் பண்ணிப்பேன், அதுனால என்னோட எல்லா எழுத்துக்கும் நான் தனித்தனியா acknowledgement குடுக்கிறதுங்கிறது நடக்குர காரியம் இல்லை'ங்கிறார். இதுமட்டுமில்லாம இன்னும் ஒரு சமாச்சாரம் சொல்றார் 'பேடண்ட் வாங்காத எழுத்துல இருந்து எதாவது விஷயங்களை எடுத்து உபயோகப்படுத்தறது ஒன்னும் சட்ட ரீதியா தப்பு இல்லா'ங்கிறாரு.

ஊருல இருக்கவனுக்கு எல்லாம் எப்படி நேர்மையா முன்னுக்கு வர்றதுன்னு சொல்றதுக்கு புஸ்தகம் எழுதற ஆளு, அதெப்படிங்க இன்னொருத்தர் எழுத்த எடுத்து தன் பேருல எழுதிட்டு அது ஒன்னும் சட்டரீதியா தப்பு இல்லைன்னு, பெருமையா சொல்றாரு..???
ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது..

இது பத்தி இன்னும் விலாவாரியா தெரிஞ்சுக்க ஆசைப்படுறவங்க.. இங்க போய் பாருங்க
(acknowledgement'க்கு நல்ல தமிழ் வார்த்தை என்னன்னு யாரவது, ஈழநாதன் மாதிரி, விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..)


1 comment:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நான் இப்பிடி http://raasaa.blogpsot.com/ உங்க முகவரி தட்டச்சிபோனேனா.. என்னாடா இது விவசாயத்தை விட்டு எப்படா ராசா ஆராய்ச்சியெல்லாம் பண்ணப் போனார் என்று கொஞ்சம் குழம்பிட்டேன்.பிறகு பார்த்தா அது typo! போய் பாருங்க அங்கே