Sunday, July 11, 2004

ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!

நான் வலைப்பதிவு செய்ய ஆரம்பிசிச்சு பிரபலமானதுனால (?) கண்ணு பட்டிருச்சு போல.. போன வாரம் கிணத்து மோட்டாருக்கு ரிப்பேர் சாமானம் வாங்க, எங்க அய்யா சொல்லியும் கேக்காம, அவர் நான் காலேஜ் போக ஆசையா வாங்கி குடுத்த என்னோட செல்ல பைக்'க எடுத்துட்டு போயிருந்தனுங்க. போன காரியம் எல்லம் ஒழுங்கா முடிச்சுட்டு, வழக்கம்போல, வர்ற வழியில உக்கடத்துல பானி பூரி சாப்பிட்டுட்டு சந்தோஷமா வந்துட்டிருந்தனுங்க.. அது வரைக்கும் எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க..நான் பாட்டுக்கு டீவி விளம்பரத்துல வற்ர மாதிரி பாட்டு பாடிட்டடு ஒழுங்கா வந்துட்டிருந்தேன், திடீர்னு ஒரு எழுமிச்சை உருண்டை (அதாங்க.. மஞச கலர்ல குட்டியா இருக்குமே.. மாருதி வண்டி.. 'ஜென்') சர்ருன்னு நம்மல சைட்டுகட்டி முன்ணாண்ட போச்சுங்க.. (அப்பவே என் மனசுகுள்ளே ஒரு திகில் தான்). அந்த வண்டியில பின்னாடி ஒரு அழகான பொண்ணு வேற இருந்ததும் நம்ம வண்டி அதுவா ஸ்பீடு எடுத்ததுது பாருங்க..(நிஜம்மா.. நான் ஒண்ணுமே செய்யல!!) சும்மா 80-90ல அப்படியே பறந்துட்டு இருந்தேன்.. முன்னாடி போன வண்டியும் சும்மா சொல்ல கூடாதுங்க, பட்டய கிளப்பிட்டு போகுது.. (அப்புறம் நம்ம ஓட்ட வண்டியே அவ்ளோ வேகம் போன அவுங்க வண்டி போகாதா??) நானும் வேகமா போய் எப்படியாவது அந்த புள்ள முகத்த பார்க்கணும்னு பார்க்கிறேன்..ம்ஹூம் ஒண்ணும் வேலைக்கு ஆகல..நானும் போறேன் அவங்களும் போறங்க.. என்னமோ சினிமாவுல வில்லன் கிட்ட மாட்டியிருக்கிற கதாநாயகிய காப்பாத்தபோற ஹீரோ மாதிரி போய்க்கிட்டே இருந்ததேன். ஒரு கட்டத்துல எதிர்ப்பார்ட்டி வண்டி கொஞ்சம் வேகம் குறைஞ்ச மாதிரி இருந்தது.. ஆஹா.. 'ராசா.. நீ சிங்கம்டா.. நினைச்சத முடிக்காம விடமாட்டியே"ன்னு எனக்கு நானே தட்டி குடுத்துட்டு இன்னும் கொஞ்சம் வேகம் ஏத்தினேன்.. அப்புறம் தாங்க வினையே.. 2-3 வருஷமா தோட்டத்துல கட்டை வண்டியலயும், எங்க அய்யனோட 'நம்ம ஊரு வண்டி'யலயுமே போய் வந்துட்டு இருந்ந்துட்டு. பைக்'க சீண்டாத கோவத்துலயோ என்னமோ.. படீர்னு ஒரு சத்தம், ஒழுங்கா ரோட்டுல ஒரு ஒரமா போய்யிட்டிருந்த வண்டி திடீர்னு ரோட்டுல குறுக்கும் நெடுக்குமா.. ரோட்டு அகலம் அளக்கற மாதிரி போக ஆரம்பிச்சுது.. என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு சுதாரிக்கறதுகுள்ளே.. நான் ரோட்டுக்கு மறுபக்கம் கிடக்கிறேன், நம்ம வண்டி ஒரு 5 அடி தள்ளி அங்கபிரதட்சனம் பண்ணிட்டிருந்தது. அந்த நிலமையிலும் நான் முன்னாடி போன எழுமிச்சை உருண்டைய பார்க்கிறேன்.. அதுபாட்டுக்கு போய்கிட்டே இருக்குது. (அப்புறம்..அவன் ஏன் பின்னாடி பார்க்கிறான்??) ஒரு வழியா எழுந்து வண்டிய போய் பார்த்தா.. பஞ்சர்ர்ர்.. (பின்ன 5 வருஷம் ஆன டயர வச்சுகிட்டு அவ்ளோ வேகம் வந்தா?).. சரி இன்னைக்கு 'நடராசா சர்வீஸ்' தான்னு முடிவு பண்ணி வண்டிய தூக்கப்பார்த்தேன்..முடியல.. வலது மணிக்கட்டு எதோ பழிப்பு காட்டுற சின்னபுள்ள வாய் மாதிரி ஒருபக்கமா திரும்பி இருக்கு....

(இப்போதைக்கு நம்ம ஊருல இரண்டாம் பாகம் போடுறது தான் லேட்டஸ்ட் ஸ்டைல்..!! hyderabad blues'ல இருந்து.. நம்ம 'ரமணா' வரைக்கும்.. அந்த ஸ்டைல பின்பற்றி..)

தொடரும்.... இன்னும் சில மணிநேரங்களில்...
(ஒத்த கையில எவ்ளோ நேரம்தான் தட்டுறது..!!!)

1 comment:

ஈழநாதன்(Eelanathan) said...

ஏன் ஒத்த கையில் தட்டுகிறீர்கள் மற்ற கையையும் துணைக்குக் கூப்பிடவேண்டியதுதானே