Thursday, July 29, 2004

விடை கிடைச்சிருச்சேய்...!!!!

இத்தனை நாளா எம்மனசை அரிச்சுகிட்டு இருந்த அந்த கேள்விக்கு விடை கிடச்சிருச்சு. அதை உங்களுக்கும் சொல்லாம்னுதான் இந்த பதிவு. எந்த கேள்வின்னு சொல்லுடா மடையாங்கரீங்களா?? அதை தான சொல்ல வர்றேன், அதுக்குள்ள அவசரப்படுரீங்களே, கேள்வியை விட, அதுக்கு எப்படி விடை கிடைச்சுதுங்கிரது தான் முக்கியம். அதுனால அங்கே இருந்து வர்ரேன், கடைசியா கேள்வி என்னன்னு பார்ப்போம்..(இந்த இடத்துல ஒரு கொசுவர்த்தி சுருள் சுத்துர மாதிரி எபக்ட்டு குடுத்துட்டு மேற்க்கொண்டு படிங்க..)
நேத்து நம்ம காலேஜ் கூட்டாளி ஒருத்தன பார்த்து பேசிட்டு இருந்தேன் . ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் ஊருப்பக்கம் வர்ரான். philadelphia'ல உக்காந்து கணிப்பொறிய பிரிச்சு மேயுற வேலை, அவுங்க அப்புச்சி பாஷையில சொன்னா 'அமேரிக்காவுல கம்பிஓட்டுற எஞ்சினீரா இருக்கான்'. கொஞ்சம் என் கலர்ல இருந்தவன் இப்போ சனிக்கிழமையன்னைக்கு கோயமுத்தூர் க்ராஸ் கட் ரோட்டுல ஃபிகர் பார்க்க போற காலேஜ் பசங்க மாதிரி சும்மா பளபள'ன்னு ஜம்முன்னு ஆயிட்டான் (அதெப்படி சனிக்கிழமை மட்டும், க்ராஸ்கட் ரோடு வர்ற பசங்க அவ்ளோ கலக்கலா இருக்காங்க??.. சரி அந்த மேட்டர் இன்னொரு பதிவுக்கு வெச்சுக்குவோம்..!!). வந்தவங்கூட பேசுன மேட்டர்ல ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டன் பாருங்க.. ச்சே இதுதானுங்க, இந்த எழுத்தாளர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். எதை சொல்ல வந்தமோ அதைவிட்டுபுட்டு எல்லா விஷயத்தையும் சொல்றது. சரி விஷயத்துக்கு வர்ரேன்.
ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்னு சொல்றதுனால தப்பா எடுத்துக்கதீங்க.. நேர்ல பார்க்கிறது மட்டும் தான் ரெண்டு வருஷம் கழிச்சு, ஆனா தினம் ஒரு தடவையாவது யாஹூ'ல எப்படிடா இருக்கேன்னு கேட்டுகிட்டு தான் இருப்போம், அதுனால, ரொம்ப நாள் கழிச்சு வெளியூருல இருந்து வர்றவங்களை பார்த்ததும் 'எப்படிரா இருக்கிற? உடம்பு பாதியா போச்சு, ஒழுங்க சாப்பிடுறயா? அங்கேல்லாம் சோறு கிடைக்குமா?ன்னு அடுக்கு அடுக்கா கேள்வி கேக்குறதோ, இல்லை, வந்தவுங்க 'நம்ம ஊரு இன்னும் மாறவே இல்ல மாப்ள.. அங்கேயெல்லம் வந்து பாரு'ன்னு ஆரம்பிச்சு அவுங்க ஊரு பத்தி அடிச்சு விடுறத நம்மளும் வாய தொறந்துட்டு(கொஞ்சம் பொறாமாயோட..!) கேக்குற வாய்ப்போ இல்லாம போச்சு. 'பிரயாணம் சொளக்கியமா இருந்துதா?, பிளைட்டுல எதாவது ..ம்.ம் ??, கஸ்டம்ஸ்ல எவ்ளோ புடுங்கினாங்க?,'ங்கிரதை தவிற வேற ஒன்னும் புதுசா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது இல்லாம போச்சு. (எனக்கு என்ன வங்கிட்டு வந்தேன்னு கேக்க மாட்டனே, கேட்டா கிருபாஷங்கர் அண்ணாச்சி மரத்தடியில உக்காந்து பீல் ஆகிடுவாரு)
'அப்ப என்னத்ததாண்ட பேசுனீங்க', சும்மா வெட்டியா அதையும் இதையும் சொல்லிட்டு இருக்கிற..நற நற.... ரொம்ப பல்ல கடிக்காதீங்க, அதத்தான சொல்ல வர்றேன்..
தினம் தினம் யாஹூல பேசுனாலும், மாசம் ஒருதடவை போன்ல கூப்பிட்டு பேசுனாலும், நேர்ல பார்த்தா பேச பல விஷயம் இருக்குதானுங்களே..!! நாங்களும் பேசினோம், பேசினோம், சூர்யன் எப்.எம்'ல 'கிட்டுமாமா-சூசிமாமி' போடும் போது ஆரம்பிச்ச பேச்சு, கடிநேரம் தாண்டி, இல்லத்தரசிகள் நேரம், சிறுவர் நேரம், காதலர்கள் நேரம்ன்னு எல்லா நேரத்தையும் தாண்டி, சென்னை சில்க்ஸ்'சின் என்றும் இனியவை முடியற வரைக்கும் பேசிட்டே இருந்தோம். இந்த பழங்கதை பேசுறதுங்கிறது அப்படி ஒரு சுகமான விஷயம் போங்க, அதுவும் கல்லூரி கால லூட்டிகளை அசை போடுறது எப்பவுமே சலிக்காது போல. இதுக்கும் நாங்க படிச்சு முடிச்சு ரொம்ப நாளெல்லாம் ஆகுல, இப்பத்தான், ஒரு 5 வருஷம் தான் ஆச்சு, (இன்னும், முன்னாடி போற வண்டியில இருக்கிற பிகர பார்க்க போய் கீழே விழுந்து கைய ஒடிச்சுகிர வயசுல தான் இருக்கோம்!!)
எல்லாம் பேசிட்டு, கடைசியா பொழுதோட வூட்டுக்கு போனதும், எங்கம்மா 'அப்படி என்னத்தடா இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீங்க, அதுவும் பொழுது சாயுர நேரத்தில பாலத்துல உக்காந்துட்டு ?'ன்னு கேட்டுது, நானும் யோசிச்சு பார்த்தேன், என்ன தான் பேசுனோம், 'முதன்முதலா கோவை குற்றாலம் போய் பீர் அடிச்சதுல இருந்து, TCS IPOவிடுறது வரைக்கும்' பேசியிருக்கோம், என்னன்னு சொல்றது 'பேசுனோம், அவ்ளோதான்'ன்னுட்டு போய்ட்டேன். அதுக்கு எங்கம்மா 'ஆமா வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருக்கறது தான் உங்களுக்கு ஸ்கூல் போற காலத்துல இருந்தே வழக்கம் ஆச்சே'ன்னுட்டே கொல்லை பக்கம் மாட்டுக்கு தீவனம் வைக்க போயிட்டங்க. சடார்ன்னு, அப்பத்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது, , தினம் தினம் எங்க ஊரு மாரியாத்தா கோயில தாண்டி போகும்போதெல்லம், அங்க கோவில் திண்ணையில உக்காந்து பேசிட்டு இருக்கிற பெருசுகளை பார்க்கும் போதெல்லாம், அந்த கேள்வி என்மனசுகுள்ள தோணும்.'அப்படி பொழுதுக்கும் என்னத்த தான் இதுக பேசும்?ன்னு..(அப்பா ஒருவழியா விஷயத்துக்கு வந்தாச்சு!!). இப்போ அதுக்கு விடை கிடைச்சுருச்சு.. அதுக்கு பேரு 'வெட்டி அரட்டை'. இப்பத்தான் எனமனசுல ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குதுங்க, இத்தனை நாளா என்மனசை அரிச்சுட்டு இருந்த அந்த கேள்விக்கு விடை கிடச்சிருச்சு. (மேலே சொன்னதை அப்படியே நடிகர்திலகம் செவாலியே சிவாஜி கணேசன் குரல்ல படிச்சுக்கோங்க) அதை உங்களுக்கும் சொல்லாம்னுதான் இந்த பதிவு. அப்பா எப்படியோ கஷ்டப்பட்டு சொல்லி முடிச்சுட்டேன்.. போய்டு மறுக்கா வரனுங்க..!!!

( அமேரிக்கா ரிட்டர்ன் இஞ்சினீயர்ல ஆரம்பிச்சு, சூரியன் எப்.எம் வழியா, க்ராஸ்கட் ரோட்டுக்கு போய், கல்லூரி வாழ்க்கை பத்தியெல்லாம் பேசிட்டு வந்து, இப்படி சப்புன்னு முடிச்சுட்டியேடா பாவி, இதுக்கா நாங்க இதை படிசோம்னு கோவப்படுரவங்க எல்லாரும், இதுக்கு முன்னாடி நான் எழுதின பதிவை பாருங்கோவ்....)

ஒன்னுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'

1 comment:

அன்பு said...

அதுவேணா 'வெட்டி அரட்டை'யா இருக்கலாம்,
ஆனா ஒங்க எழுத்து வெட்டியில்ல ராஆசா... வெட்டியில்ல...
நம்ப கிருபாவோட 'திரைகடல் ஓடியும்' கதையக்காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ராசா... ரொம்ப்ப்ப்பப நன்றி....
மரத்தடில கிருபா பீல்பட்டத எழுதுனானோ(ரோ... வேணுமா நைனா!?)
பீல்பட்டதா சொன்னத எழுதுனானோ(ரோ...)
மெய்யாலுமே எனக்கு பீல் ஆயிருச்சுப்பா,
பீலாயருச்சு.

கொடும கொடும எனக்கென்ன வாங்கிட்டு வந்தேங்கிற கேள்வி!
அதனிலும் கொடுமை: இதைத்தான் வாங்கிட்டு வந்தியா?