Friday, December 31, 2004

ஆண்டொன்று போனால...

புது நாள், புது வருஷம், இன்னொரு புது ஆரம்பம்..

ம்.ம்... இந்த வருஷமும் எப்பவும் போல எந்த புதுவருஷ தீர்மானமெல்லாம் எடுக்காமத்தான் இருக்கப்போறனுங்க. எனக்கென்னவோ இந்த மாதிரி எடுக்கிற தீர்மானங்கள்ல எல்லாம் பெருசா நம்பிக்கையில்லைங்க, அதுவுமில்லாம, என்னால அப்படியெல்லாம் ஒரு தீர்மானம் எடுத்து அதை கெட்டியா புடிச்சுகிட்டு நம்மால நடக்கமுடியாதுங்கிறது முக்கியமான் விஷயம்ங்க.

நானும் ஒரு நாலு வருஷம் முன்னாடி, இதே மாதிரி ஒரு புது வருஷ நாள்ல தான், 'இனிமேல் தம்மடிக்க கூடாதுன்னு', 'சைட் அடிக்ககூடாது',... அப்படி இப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே போட்டேன், எப்படியோ அன்னைக்கு ஒரு நாள் பூராவும் எதையும் அடிக்காமத்தான் இருந்தேன், அப்புறம்.. ம்..ம்.. அது ஒரு தொடர்கதை... தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க..

இப்பவெல்லாம், ஜனவரி ஒன்னாம் தேதி விடுமுறையெல்லாம் இல்லை, எல்லாரும் ஒழுங்கா வந்து வேலைய பாருங்கன்னு 'அம்மா' சொல்லிட்டதுனால, எல்லாப்பயலும் ராத்திரி நேரத்தோட தூங்க போயிடறானுக. சீக்கிரமா போறானுக அவ்ளோதாம், அதுக்காக அமைதியா போரானுகன்னு அர்த்தம் இல்லீங்க. எல்லாரும் எப்படியும் 'கையெழுத்து' போட்டுட்டு தான் போவாங்க ('கையெழுத்து'கெல்லாம் விளக்கம் கேக்க மாட்டீங்கள்ல..??)

வழக்கமா, நம்ம சகாக்கள் எல்லாரும் சேர்ந்து காசு போட்டு புதுவருஷ பார்ட்டி நடத்துவோம், இந்த வருஷம் அந்த காசையெல்லாம் 'சுனாமி'நிதிக்கு அனுப்பிடலாம்னு முடிவு செஞ்சதுல, வழக்கமா கலெக்ட் ஆகிறத விட மூனு மடங்கு அதிகம் வசூலாச்சு.. அனுப்பி வச்சாச்சுங்க..

"ஆண்டொன்று போனால்.. வயதொன்று போகும்.."

No comments: