Monday, April 25, 2005

காதல்..??

எல்லாரும் எழுதறாங்களே, நாமளும் ஒரு கதை எழுதித்தான் பார்ப்பமேன்னு திடீர்ன்னு ஒருநாள் விபரீதமா தோணி.. அதோட விளைவு தான் 'வென்னிலா கேக்'. சரி அது தான் எழுதி முடிச்சிட்டயே,, நாங்களும் தெரியாம படிச்சு தொலைச்சுட்டம்... இப்ப என்னங்கரீங்களா..??
அந்த கதை தான் இப்பொ எனக்கு வினையா போச்சுங்க.. ஆளாளுக்கு என்னவோ அது என்னொட சொந்தகதை'ன்னு நினைச்சுடாங்க போல... அப்ப அதை நீ எழுதலையாங்கரீங்களா? அவசரப்படாதீங்க.., அது நானே சொந்தமா எழுதின கதைதானுங்க, யாரும் மண்டபத்துல எழுதி குடுக்கலை அதை.. நான் சொல்ல வந்ததே வேற விஷயம்ங்க.. சும்மா இருக்காம கதை எழுதரேன்னு சொல்லி எழுதி, அதை இங்க பதிவா போட்டது இல்லாம மரத்தடி குழுமத்துல வேற போட்டுவிட்டேன்.. (அங்க நம்மள யாரும் கண்டுக்கவே இல்லைங்கிறது வேற விஷயம்), அதுல வர்ற 'ரஞ்சி' இப்போ எங்க இருக்காங்க, ஏன் அவுங்கள பிரிஞ்சுட்ட, அதுனால தான் மறுபடியும் பொள்ளாச்சி'க்கு போயிட்டியா?? ன்னு ஏகப்பட்ட கேள்வி வந்து விழுந்திருச்சு நம்ம second circle நண்பர்கள் கிட்ட இருந்தும்.. இணையத்துல பழக்கமான சில நண்பர்கள் கிட்ட இருந்தும்.. நானே கொஞ்சம் சலிச்சு போயிட்டனுங்க.. ஆனாலும் மனசுக்குள்ள, நாம அந்தளவுக்கு இயல்பா எழுதியிருக்கம் போலன்னு கொஞ்சம் மிதப்பா இருந்தது உண்மை தான்.. :-)
நல்ல வேளை நான் ஒரு காதல் கதை எழுதினேன், நம்ம சத்யராஜ்குமார் ஸ்டைல்ல ஒரு க்ரைம்ஸ்டோரி எழுதியிருந்தா.. சாமி, அப்ப என்னைய என்ன நினைச்சிருப்பாங்க.. "வெளியூர்ல பெரிய கொலை எல்லாம் செஞ்சுட்டு ஊருக்குள்ள வந்து அமைதியா வெவசாயம் பார்ப்பாரே நம்ம ஹீரோ" எல்லாம், அந்த மாதிரி கிரிமினல் லிஸ்ட்'ல சேர்த்திருப்பாங்களா..



இனிமேல் இப்படி கதை எழுதறதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா இருக்கனும்.. பயப்படாதீங்க.. உடனடியா கதை எதும் எழுதிற மாதிரி ஐடியா இல்லை.. கொஞ்ச நாளைக்கு எல்லாரும் தப்பிச்சீங்க..
அப்புறம்.. நான் காலேஜ் மூனாவது வருஷம் படிக்கும் போது எங்க காலேஜ் மேகசின்ல எழுதின ஒரு துணுக்கு ஒண்ணு..

L O V E

L - Loss
O - of
V - Valuable
E - Energy..

காலேஜ் மூனாவது வருஷம் படிக்கும் போதே.. 7-8 வருஷம் முன்னாடியே, எவ்வளவு தெளிவா இருந்திருக்கேன் பார்த்தீங்களா..?

1 comment:

U.P.Tharsan said...

பயப்படாதீங்க.. உடனடியா கதை எதும் எழுதிற மாதிரி ஐடியா இல்லை.. கொஞ்ச நாளைக்கு எல்லாரும் தப்பிச்சீங்க..


நல்ல விடயம் Keep it Up .. :-))