Tuesday, July 12, 2005

எப்படித்தான் சகிச்சுக்கறயோ?




வர்ற பதினோராம் தேதி அவ பிறந்தநாள்..


ரிமைண்டர் போட்டு ராத்திரி 12.00 மணிக்கு மறக்காம முதல் ஆளா போன் பண்ணிடனும்,

ப்ளவர்மார்ட்'ல சொல்லி கலர்கலரா வெறும் ரோஜாப்பூவா வச்சு காலையில ஒரு பொக்கே அனுப்பனும்..

அவளுக்கு புடிச்ச அந்த டார்க்ப்ளூ ஆஃப்-ஸ்லாக்கும், ஐவரி கார்கோ'வயும் பெட்டி போட்டு வாங்கி வைக்கனும்..

ரொம்ப நாளா கூட கோயிலுக்கு வரசொல்லிட்டே இருக்கா, அன்னைக்கு கண்டிப்பா கூட போகனும்..

அன்னைக்கு முழுசும் அவகிட்ட எதுக்கும் கோவிச்சுக்காம இருக்கனும், அவ கோவப்படாத மாதிரி நடந்துக்கனும்..

எல்லாம் சரியா திட்டம் போட்டாச்சு, கலக்கிடனும்..
திட்டம் எல்லாம் ரெண்டு நாளா மனசுல ஓடிகிட்டே இருக்கு,
.
.
.
.
.
.
மூனாவது லோடு இன்னைக்கு அனுப்பனும், அப்பத்தான் அவன்கிட்ட முதல் லோடு பேமண்ட் கேக்கமுடியும்..

எங்கயோ குண்டு வெடிச்சா, இங்க எல்லா ஷேரும் கலங்குது.. டெர்மினலக்கு போயி பார்க்கனும்..

மழையோட மழையா மேக்கால காட்டுல உரம் வச்சு விட்றனும், ஒரு வேலை முடியும்..

.
.
.
.
.
.
.

காலையில ஜாகிங் போயிட்டு வந்து அருகம்புல் டீயோட..

நேத்து செய்ய நினைச்ச வேலை எதுவுமே முழுசா முடிக்கலயே, ச்சே..

யோசிச்சுகிட்டே,
காலையில பேப்பர் புரட்டும் போது தான் கவனிச்சேன்..

இன்னைக்கு தேதி பன்னிரெண்டு..

எப்படித்தான் என்னை சகிச்சிக்கறயோ!!

இனி எப்படி மன்னிப்பு கேக்கிறதுன்னு ஒரு வாரம் திட்டம் போடனும்... :-(

---
#106

Sunday, July 10, 2005

sms siரிப்பு

ஏற்க்கனவே எனக்கு வந்த ஒரு sms பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன், அதை படிச்சுட்டு நம்ம வலை வாழ் தமிழர்கள் எல்லாரும் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தனும்னு ஆசைப்பட்டாங்க, நான் தான் அப்ப கொஞ்சம் வேலையா இருந்ததால, இப்ப டயமில்லை பிற்காலத்துல பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன், சரி அது பழைய கதை, விடுங்க..
இந்த தடவை, மறுபடியும் அதே மாதிரி ஒரு பதிவு. படிச்சு பார்த்து சிரிப்பு வந்தா சிரிங்க.. எனக்கு சிரிப்பு வந்துச்சு, உங்களுக்கும் சிரிப்பு வரலைன்னா என்ன கோவிச்சுக்காதீங்க.. :-(

--
குடும்பத்துல பிரச்சனையா??
'மெட்டிஒலி' பாரு
அண்ணன் தம்பிக்குள்ளார பிரச்சனையா??
'ஆனந்தம்' பாரு
புருஷம் பொஞ்சாதிக்குள்ளார பிரச்சனையா??
'கணவருக்காக' பாரு
நீங்க சைட் அடிக்கிற பொண்ணுகூட பிரச்சனையா??
அப்போ அவ தங்கச்சிய பாரு
--
(சிரிப்பு வந்துச்சா??)

'மெட்டிஒலி', 'ஆனந்தம்','கணவருக்காக'.. இதெல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா.. வேண்டாம், கேக்க மாட்டீங்க..
'தமிழர் இருக்குமிடமெல்லாம் தமிழ் சீரியல்களும் இருக்கும்'னு யாரோ 'ஸ்ரீ ஸ்ரீ சீரியலாணந்தா'ன்னு ஒரு மகாகுரு சொல்லியிருக்காராம், ஊருக்குள்ளார சொன்னாங்க..

அப்புறம், இந்த smsக்கும் நான் முன்ன ஒரு நாள் சொன்ன 'கவிதை'(?)க்கும் எதோ விட்டகுறை தொட்டகுறை இருக்கிற மாதிரி தோணுச்சு, ...ஒரு வேளை அதுனால தான் எனக்கு இது புடிச்சிருக்கோ என்னவோ ?

--
#105

Wednesday, July 6, 2005

அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்.

வெளிய போனா ஒரே குப்பை, சகதி, ஒரே கிருமி கன்றாவியா இருக்குன்னு வூட்டுகுள்ளாரயே உக்காந்துடறோம், ஆனா அப்பவும் முடியுதுங்களா?? ஜன்னல் வழியா, கதவு வழியா, நம்ம வூட்டு அசிங்கம் வெளிய போற ஜலதாரி வழியான்னு, பல வழியில எல்லாம் அசிங்கமும் உள்ளயே வந்திருது, சரி ஜன்னலையும் கதவையும் சாத்தி வச்சிரலாம்னு நினைச்சா??.. அது எத்தனை நாளைக்கு, ஃபேன் காத்தும், ட்யூப்லைட் வெளிச்சமும் பத்தாது, இயற்க்கையான காத்தும், வெளிச்சமும் வேனும்னு மனசும் உடம்பும் பரபரக்குதுங்களே!

அதுக்கு என்ன செய்யறது?? வாழ பழகிக்க வேண்டியதுதான், குப்பைய பார்த்தா நம்ம பாட்டுக்கு உடனே சங்கடப்பட்டு, அருவருத்துப்போய் அது மேல காறித்துப்பி அந்த இடத்த மறுபடியும் அசிங்கப்படுத்தாம, என்ன நாத்தம்'?ன்னு பொருமலோட சொல்லிட்டு டக்குன்னு காறிதுப்புவாங்க பாருங்க.. இப்படி ஒவ்வொருத்தனு துப்பிதுப்பி தான்டா இத்தன நாத்தம்'ன்னு அப்படியே அந்நியன் ஸ்டைல்ல பாயலாம்னு கூட தொணுது.. கருட புராணம் முழுசா படிச்சுபுட்டு அதை செய்யவோம்', .. எங்க விட்டேன்.. ஆங்!! மறுபடியும் அசிங்கப்படுத்தாம.. ஒதுங்கி போயிர வேண்டியதுதான்.. ஆரம்பத்துல கஷ்டம் தான், ஆனா கொஞ்சம் கொஞ்சமா நாமளும் பழகிடுவோம்.. எப்படின்னா?? இந்த எக்களக்ஸ் தெரியும்ங்களா??
அதாங்க எக்களக்ஸ் மாவீரன்னு முன்ன தூர்தர்ஷன்ல விளம்பரம் வருமே, பூச்சுகொல்லி மருந்து, செடிகளுக்கு அடிக்கிற மருந்துங்க, நீங்க பாட்டுக்கு வயத்துல இருக்கிற பூச்சிக்கெல்லாம், நான் சொன்னேன்னு எக்களக்ஸ் குடிச்சராதீங்க. இதை குடிச்சவனும் ஒருத்தன் இருக்கான், அது வேற கதை.. நம்ம கதைக்கு வருவோம்.. ஆரம்பத்துல எக்களக்ஸ் வந்தப்போ தென்னை மரத்துல வண்டுப்பூச்சிய தடுக்க அதத்தான் ஊத்துவோம், யாருங்க அது வண்டுபூச்சுயோட பயாலஜிக்கல் நேம், ஜியோகரபிகள் ப்ரபர்ட்டியெல்லாம் கேக்கிறது, அதெல்லாம் யாராவது புரபசர கேளுங்க, நான் வெறும் விவசாயி, ச்சே மறுபடியும் ட்ராக் மாறிட்டனா..??
அந்த வண்டுபூச்சிய கொல்றதுக்காக ஒரு போசி எக்களக்ஸ ஒரு பக்கெட் தண்ணியில கலந்து, வாசம் படாம இருக்க நம்மாளுக மூஞ்சியில ஈரலதுண்டு கட்டிகிட்டு மரத்துல ஏறி ஊத்துவாங்க.. அந்த வாசம் பட்டஉடனே, மரத்து மேல இருந்து குண்டு குண்டா வண்டு கீழ விழுகும்.. அதெல்லாம் முன்னே, ப்ளாஷ்பேக்.. இப்பவெல்லாம் ஒரு போசி எக்களக்ஸும் ஒரு பக்கெட் தண்ணியும் கலக்கி வச்சுகிட்டு, காய் போடும் போது கீழ விழுந்த வண்டை எடுத்து அதுக்குள்ளார போட்டா.. சும்மா குற்றாலீசுவரமன் மாதிரி கலக்கலா நீந்தி வெளிய வந்திருது.. அந்தளவுக்கு அதுக்கு எதிர்ப்பு சக்திய அதிகம் செஞ்சு வச்சிருக்கோம்.. (ஆனா, அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு 350ml குடிச்சா, நம்மாளுக வயிறு எரிஞ்சு செத்துபோயிட்டு தான் இருக்காங்க). ஆமா இப்ப எதுக்கு மரவண்டை பத்தி பேசுனோம்!.. நாம காத்துல வர்ற தூசி கிருமிய பத்திதான ஆரம்பிச்சோம்.. அதுல எக்களக்ஸ் எங்க வந்துச்சு.. ம்ம்..
தெரியலையே.. என்னமோ சொல்ல வந்தேன் என்னமோ சொல்லிட்டு இருக்கேன்.. ஆங்.. ஞாபகம் வந்திருச்சு, அந்த எக்களக்ஸோட தீவிரத்த எதிர்த்து வாழ பழகிட்ட மரவண்டு மாதிரி.. குப்பையும், கிருமியையும் சகிச்சுகிட்டு, அது நம்மள ஒன்னும் பண்ண முடியாத மாதிரி வாழ்ந்திடவேண்டியதுதான்.. அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதானா?'ன்னு அம்மாஞ்சி ஹீரோ அடிபட்டு கிடக்கிற தங்கச்சிய நினைச்சு கத்துற மாதிரி இங்க கத்தாதீங்க.. ஒன்னும் செய்ய முடியாது.. காத்துல வர கிருமிய என்ன செய்வீங்க.. நேரடியா மல்லுக்கு நின்னா, நம்மளும் ஒரு கை பார்க்கலாம்.. கையில சிக்குனாலும், சத்தியமா நானில்லைன்னு சொல்றவன என்ன செய்யறது.. விட்ற வேண்டியத்துதான்.. நம்ம ஆளுக பாதிக்க படறாங்களேன்னா?? சரிதான், நம்ம வூட்டுபுள்ளைக முகம் சுழிக்குதேன்னா?? அதுவும் சரிதான். ஆனா, நாலு எடத்துக்கு போயி பழகனும், நாலு விஷயம் தெரிஞ்சுக்கனும்னா, அப்புறம் இப்படித்தான இருக்கு இன்னையதேதிக்கு.. கிருமியே இல்லாத காத்து எங்கயும் இல்ல.. இமய மலை மேல கூட எதோ காத்து மண்டலம் கெட்டுபோயிருக்காம், நிஜம்மாங்க, இந்த வாரம் அவுட்லுக்ல சொல்றாங்க, நம்மூரெல்லாம் எம்மாத்திரம்..
சும்மா குணா மாதிரி 'அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்'ன்னு சொல்லாம,
வாழபழகிக்க வேண்டியதுதான்..(யப்பா, எப்படியோ டைட்டில் வந்திருச்சு) இது பயந்தாங்கொளித்தன்ம்ன்னா, ஆமா பயந்தாங்கொளித்தனம் தான்.. அவனவன் வாழ்க்கையில எது முக்கியமோ, அதுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியதுதான்.. !!, உனக்கு நிம்மதி முக்கியமா, அதுக்கு அடுத்தவன் சந்தோஷமா இருக்கனுமா வேண்டாமா, அதுவும் அவனவன் கையிலதான்.. அவனவன் நினப்புல தான்..

"I think everybody has brokenness. There's no doubt about that. We live in a fallen world. This is not heaven. Everybody has scars. Everybody is hurting somewhere, I guarantee you that. Everyone has a hidden hurt" - RickWarren



சரி.. இப்போ எதுக்கு இத்தன பழமை பேசிட்டுகிடக்கிற?ன்னு கேட்டீங்கன்னா.. என்னத்த சொலறது போங்க.. இந்த கிரகமே வேண்டாம்னு நாம ஒதுங்கி போனாலும், நம்ம போற பக்கம், வர்ற பக்கம் போயி ஆகாத நாயம் பேசறாங்க, டக்குன்னு சட்டைய புடிச்சு உலுக்கினா, சத்தியமா நானில்லைங்கிறாங்க.. அந்த கடுப்புல எதோ புலம்பிட்டேன், அவ்ளவு தான்.. சத்தியமா இவுங்கெல்லாம் (கீழ வரிசையா சுட்டி போட்டிருக்கனே, அவுங்க) இப்படி சொல்றாங்களேன்னு நான் போட்டிக்கெல்லாம் சொல்லலைங்க..
1

2

3

4

5


---
# 104

Monday, July 4, 2005

மழை நேர மாலை


----
ஞாபகமிருக்கிறதா..?

அந்த ஜூலை மாதத்து
மழை நேரத்து மாலை

நான்..

உன்னை கண்டுகொண்டதும்..
என்னை தொலைத்ததும்..
அன்றுதான்..

----
(எங்கயோ, எப்பவோ படிச்ச ஒரு ஆங்கில கவிதையை தழுவி..)

ஒண்ணுமில்லீங்க, வெளிய சாரல் மழை.. அதான்..!! வேற ஒன்னுமில்லீங்க..!! :-)

குறிப்பு: ஈஸ்வர், இந்த படமும் நான் எடுத்தது தான்.

---
#103

Saturday, July 2, 2005

பத்த்த்தாயிரம்ம்ம்...!!




அதோ, இதோன்னு கடைசியில எப்படியோ பத்தாயிரம் பார்வையாளர்கள் வந்தாச்சுங்க. 'ராசபார்வை'க்கு வந்த பத்தாயிரமாவது நண்பரோட விவரங்க இதுதான்..

Domain Name planet.nl ? (Netherlands Map | Flag | Facts)
IP Address 80.60.36.# (RIPE NCC)
Language Dutch nl
Operating System Microsoft WinXP
Browser Internet Explorer 6.0 Mozilla/4.0 (compatible; MSIE 6.0; Windows NT 5.1; SV1)
Monitor Resolution 1024 x 768
Monitor Color Depth 32 bits
Time of Visit Jul 2 2005 3:55:55 pm
Last Page View Jul 2 2005 3:56:13 pm
Visit Length 18 seconds
Page Views 2
Referring URL http://www.thamizman...lblogs/userpanel.php
Visit Entry Page http://raasaa.blogspot.com/
Visit Exit Page http://raasaa.blogspot.com/
Time Zone UTC+1:00 CET - Central European Time
Visitor's Time Jul 2 2005 11:55:55 am
Visit Number 10,000


ஒரு வருஷம்..
100வது பதிவு..
10000 பேர் வருகை.. .. ம்ம்.. என்னவோ போடா ராசா.. எல்லாம் மாயை.. ஒன்னுமே புரியல உலகத்தில.. என்னவோ நடக்குது.. மர்மமாய் இருக்குது

யாருங்க அது 'விளக்கு அணையும் போது பிரகாசமா எரியும்'னு அபசகுணமா பேசறது.. :-(

--
#102