Monday, June 13, 2005

smsல் ஒரு தமிழ் கவிதை

இன்னைக்கு காலையில கூட்டுறவு பேங்கில ஒரு வேளையா உக்காந்திருக்கும் போது, எனக்கு வந்த ஒரு SMS

---
தமிழ் கவிதை # 3

ஜானி.. ஜானி..

இன்னா நைனா..

சீனி துன்றயா..??

இல்ல நைனா..

டபாய்க்கரியா..??

இல்ல நைனா...

வாய தொற..

ஹா..ஹா...

---


தமிழ வளர்க்கராங்களாம்.. :-)

சின்ன வயசுல படிச்ச மாதிரி ஜானி ஜானி எஸ் பாப்பா'ன்னு அதே ரிதம்ல படிச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சேன் பாருங்க், சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிடாங்க. சும்மாவே நான் எப்ப போனாலும் அங்க ஒரு மாதிரியாதான் பார்பாங்க, இதுல தனியா உக்காந்து சிரிச்சுகிட்டு இருந்தா.. :-(
#3 தான் எனக்கு வந்தது, 1,2ம் என்ன மாதிரி கவிதைன்னு தெரியலைங்க..

எப்படி இப்படி பொறுமையா உக்காந்து டைப் பண்ணி, அதுவும் தங்க்லீஷ்'ல, அனுப்பறாங்கன்னே புரியல.. நமக்கு வரும் போது forwarded msgஆ தான் வருது, ஆனா யாரோ ஒருத்தர் டைப் பண்ணியிருக்கனுமில்லை..

--
#93

4 comments:

அன்பு said...

உங்களுக்கு வந்தது fwd msgதான் ஆனால் அத உக்காந்து உள்ளிட்டு பதித்த எங்க ராசாவை என்ன சொல்றது கண்ணு:)

Pavals said...

//என்ன சொல்றது கண்ணு:) //
என்னத்த சொல்றது.. 'வேலையத்த நாசுவன் என்னமோ செஞ்சானாம்.. அப்படியா?? ;-).. நீங்க இந்த ஒரு பதிவை சொல்றீங்க.. நான் பதிவு எழுதறதயே இப்படி தான் நிறையா பேரு சொல்றாங்க.. :-(

Anonymous said...

porumaiya SMS mulamaa type panni avunga valathuvitta thamizha ipdi ellarukkum blog mulamaa parapiya raasavukku nandri.

Vijayakumar said...

இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் கவிதைகளை வச்சி கூட சன் டீவியில செவ்வாய்கிழமை 8:30-க்கு போடும் டாப் 10 ஓட்டுவாங்க போல