Monday, August 2, 2004

சில விமர்சனங்கள் !!

சில விமர்சனங்கள் !!
சில கேள்விகள்!!
சில தீர்க்கதரிசனங்கள்!!
இந்த மூணுல எதை தலைப்பா வைக்கறதுன்னு பயங்கர குழப்பத்துக்கப்புறம்,
எண், கனித, நாடி, கைரேகை, முகரேகை, வாஸ்த்து (நம்ம ஊரு முறை, சைனீஸ் முறை ரெண்டும்!!), 'ன்னு எல்லா வகை ஜோஸியத்ததையும் பார்த்து (கிளி ஜோஸியம் மட்டும் விட்டு போச்சு.. மன்னிச்சுக்குங்க!!), கடைசியா எங்க ஊரு மாரியம்மன் கோவில்ல பூக்கேட்டு சில விமர்சனங்கள் !! அப்படிங்கிற இந்த தலைப்பை வெச்சிருக்கேன் (யப்பா!! இதுக்கே மூச்சு வாங்குது..)

போனதடவை கடைசியா கேள்வியை சொன்னது மாதிரி இல்லாம .. இந்த தடவை ஒரே கேள்விகள் தான் போங்க... ஆனா பதில் மட்டும் கடைசியா!!


கேள்வி 1:
பள்ளிகூடத்தில ஒழுங்கா கணக்கு போடாம "இந்த சாதாரன கணக்கு கூட உன்னால போடமுடியலயே, நீயெல்லம் வாழ்க்கையில எந்த நேரத்திலும் உருப்படவே மாட்டே"ன்னு டீச்சரி கிட்ட பேச்சு வாங்கின பையன், பிற்காலத்தில பெரிய விஞ்ஞானி ஆயிட்டராம்.. யாரு அந்த பையன்??

கேள்வி 2:
நாலு வயசுல நிமோனியா காய்ச்சல் வந்து, இடது கால் பாதிக்கப்பட்டு கம்பி கட்டி நடந்துட்டு இருந்த புள்ள, திடீர்ன்னு ஒரு 13 வயசுல கம்பிய கழட்டி வீசீட்டு இனிமேல் நான் இப்படியே நடப்பேன்னு சொன்னதோட மட்டுமில்லாம ஒட்டபந்தயங்களிலுல் கலந்துக்க ஆரம்பிச்சா. கொஞ்ச காலத்தில் தான் ஓடுன எல்லா பந்தயதிலும் அந்த புள்ளையே ஜெயிச்சதா சரித்திரம் சொல்லுது.. யாரு அந்த பொண்னு??

கேள்வி 3:
1940ல செஸ்டெர்கார்ல்ஸன்'னு ஒருத்தர் அவரோட கண்டுபிடிப்பை எடுத்துகிட்டு அமேரிக்காவுல இருக்கிற பெரிய பெரிய கம்பெனிக்கு போனாரு, கிட்டத்தட்ட ஒரு 20 கம்பெனிக்காரங்க அவரோட கண்டுபிடிப்பை ஒதுக்கீட்டாங்க, அப்புரம் ஹலாய்ட்'ன்னு நியுயார்க்'ல ஒரு சின்ன கம்பெனி அவரோட கண்டுபிடிப்பை விலை கொடுத்து வாங்கிருச்சு, அதை சந்தையில அறிமுகம் செஞ்சு, பின்னாடி ஹலாய்ட்'ங்கிர அவுங்க கம்பெனிய அந்த கண்டுபிடிப்பு பேருக்கே மாத்திட்டாங்க... அந்த கம்பெனி பேரு என்ன??

கேள்வி 4:
1962ல 4 சின்ன பசங்க 'டெக்காரெகார்டிங்' கம்பெனியில அவுங்களோட முதல் record audition(இதை எப்படீங்க தமிழ்ல சொல்றது..- அய்யா ஈழநாதன் please help!! குரல்வளபரிட்ச்சை'ன்னு சொல்லலாமா??) முடிஞ்சதும், அங்க இருந்த ஒருத்தர் சொன்னாரு 'என்னமோ ஆளுக்கு ஒரு கிதார வெச்சுகீட்டு சும்மா எதோ ச்வ்ய்ண்ட் உடுறானுகாப்பா, இது போணியாகாது'.. யாரு அந்த 4 சின்ன பசங்க??

கேள்வி 5:
ரேடியோவில செய்தி வாசிக்க போய், 'இந்த குரலையெல்லாம் மக்கள் கேக்க பிரியபடமாட்டங்க, அதுவும் இப்படி ஒரு நீளமான பேரு வெச்சுகிட்டு பிரபலம் ஆக ஏம்ப்பா நீ ஆசப்படுறது தப்பு'ன்னு, விமர்சணம் செய்யப்ப்ட்டா ஆளு யாரு?

கேள்வி 6:
1944'ல ஒரு மாடாலிங் ஏஜன்சிக்கு வேலைகேட்டு போய்,' நீ கம்முன்னு செக்ரட்டரி வேலை கத்துக்கோ, இல்லை கல்யாணம் பன்னிக்கோ, நீ எல்லாம் மாடலிங்க்கு லாயக்கு இல்லை'ன்னு அறிவுறை வாங்கிட்டு வந்தது யாரு?

கேள்வி 7:
1954'ல ஒரு இசைசங்கத்துல இவர் பாடுன முதல் கச்சேரியோட வெளியனுப்பினதுமில்லாம, அந்த மெனேஜர் கிட்ட 'நீ எல்லாம் லாரி ஓட்டத்தான் லாயக்கு'ன்னு பாராட்டு வாங்குனது யாரு?

கேள்வி 8:
தொலைத்தொடர்ப்புக்கு இவர் கண்டுபிடிச்சதை பார்த்துட்டு ரூதர்ஃபோர்ட் (அப்போதைய அமேரிக்க ஜனாதிபதி) ' அற்புதமான கண்டுபிடிப்பு, ஆனா யாரு இதை உபயோகப்படுத்தபோறங்க'ன்னு சொன்னராம். யாரு அவரு, அவர் என்ன கண்டுபுடிச்சாரு?




பதில் 1:
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (இவரே கணக்குல வீக்குதானா, ஸ்கூல் படிக்கும் போது தெரியாம போச்சு!!!)

பதில் 2:
3 தடவை ஒலிம்பிக்குல தங்கம் ஜெயிச்ச 'வில்மா ருடொல்ஃப்'

பதில் 3:
அந்த கம்பெனி 'ஜெராக்ஸ் கார்ப்பரேஷன், அந்த கண்டுபிடிப்பு தான் 'எலெக்ட்ரோஸ்டேட் பேப்பர் காப்பியிங்'

பதில் 4: அந்த நாலு சின்ன பசங்களைத்தான் பின்னாடி உலகம் 'பீட்டில்ஸ்'ன்னு கொண்டாடுச்சு (இப்பவும் அடிக்கடி poggo சேனல்ல பாட்டு பொடறாங்க)

பதில் 5:
அமித்தாப்பச்சன் (இவரு எகிப்து போனப்போ அந்த நாட்டோட பாதி மிலிட்டரி இவரோட பாதுகாப்புக்கு போச்சாமே??)

பதில் 6: இன்னைக்கு வரைக்கும் காத்துல பாவாடை பறக்குறதும் அதை ஹீரோயின் ஸ்டைலா புடிக்கறதும் எல்லா படதுலயும் வருதே.. அந்த சீனுக்கு பிதாமகள் மார்லின்மன்ரோ

பதில் 7:
எல்விஸ்ப்ரஸ்லீ (நம்ம ஊரு 'ஐயம் ஏ டிஸ்கோ டான்சர்களோட பிதாமகன்)

பதில் 8:
டெலிஃபோன் கண்டுபுடிச்ச 'அலக்ஸாண்டர் கிரகாம் பெல்'க்கு கிடைச்ச பாராட்டு அது.

நம்ம ஆளுக தீர்க்கதரிசனத்தை நினைச்சா அப்படியே எனக்கு புல்லரிக்குது போங்க.. இந்த மாதிரி விமர்சனங்களால எத்தனை பேரு வீணாப்போனங்களோ???

என்னைக்கூட இப்படித்தான்.. எங்கய்யன் " நீ எல்லாம் எங்க உருப்படப்போற, மாடு மேய்க்க கூட லயக்கு இல்லாத ஆளு நீ" அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருக்காரு.. "சரித்திரம் நாளைக்கு உங்களுக்கு பதில் சொல்லும்"னு வீறாப்பா சொல்லீட்டு திரியறேன்... இதுக்கு நடுவால எங்கம்மா வேற "டேய் உங்கய்யனுக்கு கருநாக்கு, அவரு சொன்னா பலிச்சுரும்டா"ன்னு பயங்காட்டுறாங்க....

ஒன்னுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது

3 comments:

Unknown said...

எனக்கென்னமோ ராசா இணைய உலகத்திலே ஒரு பெரிய நகைச்சுவை எழுத்தாளரா வருவாருன்னு தோணுதே. FYI, எனக்கும் கருநாக்கு தான் :-).

Pavals said...

இவ்ளோ சீரியஸா ஒரு விஷயம் சொல்லியிருக்கோம்னு நினைச்சுட்டு இருக்கேன், இப்படி டக்குன்னு நகைச்சுவைன்னு சொல்லீட்டீங்களே?? :-(

Unknown said...

தல, இந்த மேட்டர நகைச்சுவைன்னு சொல்லலைபா. இதுக்கு முன்னேல்லாம் எழுதுவதை வெச்சி சொன்னேன். தப்பா புர்ஞ்சிக்கின்னிங்களே. மன்ஸு ஃபீலாவுதுபா...