Tuesday, January 10, 2006

நமக்குன்னே வாறாய்ங்க..!!

நம்மாளு ஒருத்தரு ஒரு வேலைய செஞ்சு முடிக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தாருங்க. எப்படியாவது அந்த விஷயத்துல ஜெயிக்கனும்னு ரொம்ப போராடிட்டு இருந்தாரு, ஆனா அவரு நேரமோ என்னமோ, அவருக்கு தோல்வியா இருந்துச்சு, எனக்கு அவர் எங்க தப்பு செய்ய்றாருன்னு கொஞ்சம் விளங்குச்சு, ஆனா நாம போயி சொன்னா அவர் எதும் தப்பா எடுத்துக்க போறாருன்னு, நானும் அமைதியா இருந்துட்டேன்.
என் நேரம், அவர் எந்த வேலைய செய்ய படாதபாடு பட்டாரு, அதே வேலைய நான் செய்ய வேண்டியதா போச்சுங்க, நமக்கு தான் அவர் ஏற்க்கன்வே எங்க தப்பு செஞ்சாருன்னு தெரியுமே, கொஞ்சம் உசாரா பார்த்து சல்லிசா அந்த வேலைய முடிச்சுட்டேன். நான் அந்த வேலைய முடிச்சுட்டேன்னு தெரிஞ்சதும், நம்மாளு என்னை தேடி வந்தாரு, 'எப்படிங்க, நானும் நாலு மாசமா படாதபாடு படுறேன் ஒன்னுங்குதிர மாட்டேங்குது, நீங்க பாட்டுக்கு சட்டுன்னு முடிச்சுட்டீங்க'ன்னு ஒரே புலம்பல்.
நானும், சரி பாவம் மனுஷன் ரொம்ப நொந்து போயிருக்காரேன்னு, அவர் செஞ்ச தப்பெல்லாம் சொல்லி, சரியான வழிய காட்டி விட்டேன். ஒரு நல்ல காரியம் செஞ்சோம்னு நிம்மதியா இருந்தனுங்க..
ஆனா அது ரொம்ப நேரம் நிலைக்கலைங்க.. இப்பத்தான் என் சகா ஒருத்தன் கூப்பிட்டான், அவன் கிட்ட நம்மாளு சொன்னாராம் 'என்னமோ அவனுக்குத்தான் எல்லம் தெரியும்னு பேசாறான் ராசு, இத்தன தலைக்கனம் ஆகாது மனுசனுக்கு'ன்னு, எம்மேல பெரிய குற்ற பத்திரிக்கையே வாசிச்சிருக்காரு.. :-(

அடப்பாவிகளா.. உங்களுக்கு நல்லது செஞ்சாலும் தப்பு. எவனோ எப்படியோ செத்து ஒழிங்கடான்னு விட்டுட்டாலும் திட்டுவீங்க.. ஆனா அது பரவாயில்லையே, இப்படி நம்ம வேலைய விட்டுபுட்டு அடுத்தவனுக்கு சகாயம் செய்யபோயி அவன் வாயால திட்டு வாங்கிறதுக்கு..
இதைத்தான் 'பாத்திரம் அறிந்து இடு'ன்னு சொல்லியிருக்காங்க போல..

இவனுக்கு சொல்லிகுடுக்க போயி எங்கய்யன் ஒரு வேலை குடுத்தாரு, அதையும் பாக்கலை, இனி அவர் கிட்ட வேற பேச்சு வாங்கனும்..ம். சரி.. அது ஒன்னும் நமக்கு புதுசில்லைதான்.. இருந்தாலும்....

அடப்போங்கப்பா.. நமக்குன்னே வாறாய்ங்க..!! :-(


--#131

1 comment:

Unknown said...

Enna velainnu sollave illaiye ?!?!