Tuesday, January 31, 2006

சீசருடன் ஒரு நாள் - சில குறிப்புகள்!!

நாயே.. நாயே!!

சும்மா சும்மா திட்றவங்க எல்லாரும் நாயே நாயேன்னு திட்றாங்க.. அப்படி நாய் கிட்ட என்னதான் கெட்ட புத்தி இருக்குதுன்னு பார்க்கலாம்னு, நம்ம வீட்டு 'சீசர்'கூட ஒரு நாள் பூரா உக்காந்து, ஒரு பெரிய ஆராய்ச்சி செஞ்சனுங்க.

ஒரு நாள் பூராவும் மெனக்கெட்டு ஆராய்ச்சி செஞ்சதுல, என்னோட முடிவு என்னன்னா, நாய்கிட்ட இருந்து நம்ம கத்துக்க வேண்டியது தான் நிறையா இருக்குனு தோணுது.




என்னோட நாய் ஆராய்ச்சியின் கண்டுபுடிப்புகள இங்க லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேன். வேற யாராவது மேற்க்கொண்டு இந்த ஆராய்ச்சிக்கு அவுங்களோட கண்டுபுடிப்பிகள குடுத்தாலும், ஏத்துக்க தயாரா இருக்கேன்..


  1. நம்மாளுக யாரும் வீட்டுக்கு வந்தா வாசலுக்கு ஓடிப்போயி வரவேற்க்கனும்.
  2. வேற யாரும் உங்க எல்லைய கடந்து வந்தா, உடனே அவுங்களுக்கு அதை தெரிவிக்கனும்
  3. தூங்கி எந்திருச்சதும், கை காலை எல்லாம் நல்லா நீட்டி நெட்டி முறிச்சு சுறுசுறுப்பாகனும்
  4. தினமும் அங்கயும் இங்கயும் ஓடி ஆடி விளையாடனும்
  5. நல்லா ரசிச்சு ருசிச்சு ஆசையா சாப்பிடனும்
  6. விசுவாசமா இருக்கனும்
  7. வேஷம் போடாமா நீங்க நீங்களாவே இருக்கனும்
  8. உங்களுக்கு தேவையானது மண்ணுக்குள்ள இருந்தாலும் தோண்டி எடுத்தறனும்.
  9. சும்மா சத்தம் போட்டோ இல்லை எதாவது சேட்டை செஞ்சோ உங்களுக்கு வேண்டியவங்க கவனைத்தை கவரனும்.
  10. சும்மா சத்தம் போட்டாலே போதும்ங்கிற இடத்துல தேவையில்லாம கடிக்க கூடாது.
  11. வேய்யில் காலத்துல நிறைய தண்ணி குடிச்சுட்டு, எக்டாவது நிழல்ல போயி படுத்தகனும்.
  12. சந்தோஷமான நேரத்துல சும்மா குதிச்சு கும்மாளம் போடனும்
  13. யாரு எவ்ளோ திட்டுனாலும், சட்டுன்னு அதை மறந்துட்டு, ஓடிப்போயி மறுபடியும் அவுங்கள நட்பாக்கிக்கனும்.
  14. எவ்ளோ வேலை இருந்தாலும், சும்மா ஒரு வாக் போயிட்டு வந்தாலே உற்சாகமாயிடனும்

-----

யார் யாருக்கோ டாக்டர் பட்டம் பத்மபூஷம் பட்டம் எல்லாம் குடுக்கிறாங்க.. யாருக்காவது, இவ்ளோ ஆராய்ச்சி செய்யிற இந்த ராசாவுக்கு ஒரு பட்டம் குடுக்கலாம்னு தோனுதா..?

என்ன செய்யிறது?

ஆத்து நிறையா வெள்ளம் போனாலும், நாய் நக்கித்தானே குடிக்கனும் !!!

---
#139

6 comments:

ILA (a) இளா said...

நாய் இருக்கேன் ராசா, சே நான் இருக்கேன் ராசா.

இந்தாங்க பட்டம்

"மருத்துவர்(கால்நடை). ராசா"

நிலா said...

:-)

கைப்புள்ள said...

நா(ய்)வுக்கரசர்...இந்த பட்டம் நல்லா இருக்குதா ராசா?

Pavals said...

வாங்க இளா, கடைசியில நீங்களாவது நமக்கு மருத்துவர் பட்டம் குடுத்தீங்களே.. ரொம்ப சந்தோஷம்.. :-)

என்னங்க நிலா.. ஒரே ஸ்மைலிய பொட்டிருக்கீங்க... ரசிச்ச சிரிப்பா.. இல்லை நக்கல் சிரிப்பா அதுன்னு தெரியலையே..?

கைப்புள்ள...நம்மள மாதிரி வருத்தப்படாத வாலிபர் சங்க ஆளுக எல்லாம் மாத்தி மாத்தி நமக்குள்ளார பட்டம் குடுத்துகிட்டாதான் உண்டு.. நீங்க பாத்து என்ன பட்டம் குடுத்தாலும் சரி.. நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//என்ன செய்யிறது?

ஆத்து நிறையா வெள்ளம் போனாலும், நாய் நக்கித்தானே குடிக்கனும் !!!

---
//

pullarikku Raasaa... :)

-MAthy

விஜயன் said...

ராத்திரியிலே திருடன் வர்ற நேரம் பார்த்து தூங்கிடனும்.

தெருவுல போற வரவங்களை கடிக்கணும்( எனக்கு நேர்ந்த அனுபவம்)

அப்புறம் ராசா எக்குத் தப்பா பதிவை போடாம பாத்துக்கனும்.