Friday, June 24, 2005

அரசியல்வாதி


அரசியல்வாதியும் அவர் மகனும்
நான் பார்க்கிற பெண்ணை தான் நீ கட்டிக்கனும்..
அதெல்லாம் முடியாது. நான் தான் என் சம்சாரம் யாருங்கிறத முடிவு செய்வேன்..
டேய், நான் பார்த்திருக்கிற பொண்ணு, நம்ம நாட்டுலயே பெரிய கோடீசுவரர் 'ரவி' பொண்ணுடா..
அப்படின்னா.. சரி.. நான் பொண்ண பார்த்துட்டு சொல்றேன்..

அரசியல்வாதியும் கோடீசுவரர் 'ரவி'யும்
சார், உங்க பொண்ண என் பையனுக்கே குடுக்கனும்..
இல்லீங்க.. நான் இப்போதைக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை..
என் பையன், வேர்ல்ட் பேங்க் பிரதிநிதியா இருக்கான்..
அப்போ, நான் வீட்டுல கலந்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்றேன்..

அரசியல்வாதியும் வேர்ல்ட் பேங்க் ஆபீசரும்
என் பையனுக்கு அந்த உலக வங்கி பிரதிநிதி வேலைய குடுப்பீங்களா மாட்டீங்களா..
சார், அதுக்கு ஏற்க்கனவே நிறையா பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட் கிட்ட இருந்தெல்லாம் சிபாரிசு வந்திருக்கு சார்..
என் பையன், நம்ம நாட்டோட பெரிய கோடீசுவரர் 'ரவி'யோட மருகமன் ஆகப்போறான்..
அப்படியா.. அப்ப நான் இத பத்தி மத்த மெம்பர்ஸ மீட் பண்ணிட்டு, கன்பஃர்ம் பண்னிடறேன்..

--
எனக்கு வந்த மடலோட தமிழாக்கம்.. அந்த மடல்ல இந்த அரசியல்வாதி பேரு 'லாலு', எனகேன்னவோ அப்படி ஒருத்தர மட்டும் சொல்ல தோணலை.. அதுனால பொதுவா 'அரசியல்வாதி'

--
#99

Thursday, June 23, 2005

கல்யாணம் - சம்சாரம் - வேலை - சம்பளம்

பிரம்மச்சாரிகளை விட கல்யாணமான, அதுவும் சம்சாரத்தை வேலைக்கு அனுப்பாம வீட்டுலயே வச்சுக்கிற ஆளுக அதிகமா சம்பாரிப்பாங்களாம்..
பொதுவா கல்யாணம் ஆனவங்க அதிகம் சம்பாரிக்கறாங்க, அதுலயும் வீட்டுக்காரம்மா வேலைக்கு எங்கயும் போகாம, வீட்டு வேலைகள பார்த்துகிட்டா, அவுங்க இன்னும் அதிகம் சம்பாரிக்கறாங்கன்னு ஒரு ஆராய்ச்சியில சொல்லியிருக்காங்க..

அனுபவம் உள்ள ஆளுக இதை பத்தி என்னப்பா நினைக்கரீங்க??
சொன்னீங்கன்னா நமக்கும் பிற்காலத்துல உபயோகம் ஆகும்.. :-)

--
#98

Tuesday, June 21, 2005

வருஷமாகிபோச்சுங்க..!





'வணக்கமுங்க..!!! - அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன எழுதறதுன்னு தெரியாம, அதையே புலம்பல்'ன்னு தலைப்பு போட்டு புலம்பி, அதுக்கப்புறம் தமிழ்பதிவுகள் பக்கத்துல நம்ம பேரு வந்ததுக்காக சிவப்பு விளக்கு எரியுது'ன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கப்புறம் பைக்ல இருது கீழ விழுந்து கைய உடைச்சுகிட்டத ஒரு (சோகமான) பயணக்குறிப்பு..!!'ன்னு எழுதி, அதை படிச்சு நல்லா தமாசா எழுதறீங்க ராசா, வலைப்பூ பக்கம் வாங்கன்னு மதி கூப்பிட்டு, அங்க நம்மள கடவுள் என்னும் முதலாளி கொடுத்த தொழிலாளி 'ன்னு அறிமுகப்படுத்தி, வலைப்பூவ நம்ம எழுத்தால ஒரு வாரம் சீரழிச்சுட்டு வந்து, சும்மா வெட்டியா எழுதறமேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்!!ன்னு தலைப்பு போட்டு நான் எழுதின கவிதைய போட்டு, சந்தோஷப்பட்டு, அப்புறம் நமக்கு வலைப்பூவில அறிமுகமான சத்யராஜ்குமார் ஊருக்கு வந்தப்போ என்ன கூப்பிட்டு பேசினத ஒரு சினிமா, ஒரு சந்திப்பு!ன்னு எழுதி, அப்படியே ஜாலியா இருந்தப்போ, இந்த காஞ்சி பிரச்சனை வந்து, நான் சும்மா இருக்கமாட்டாம அந்த ஒரு கேள்வின்னு ஒரு பதிவு போட்டு, அதுக்கு பின்னூட்டம் மட்டுமில்லை, மொத்தம் 6 தனிமடல் வந்துச்சு, நல்லா அழகான தமிழ் வார்த்தையில திட்டி, அப்புறம் அந்த பதிவை பத்தி மரத்தடியில விமர்சனம் ஆரம்பிச்சு, அப்புறம் அதுக்காக நான் ஒரு பதில் பதிவு போட்டு விளக்கி, கொஞ்சம் கடுப்பாகி, அந்த சமாச்சாரத்தையெல்லாம் விட்டுபுட்டு கொஞ்சம் கலகலப்பா, கவர்ச்சியா எதாவது போடுவோம்னு, ஒரு மும்பாய்ல வளர்ந்துட்டு இருக்கிற , ஒரு கோயமுத்தூர் தமிழ் பொண்னு, அவளோட வார கடைசியல என்னவெல்லாம் செஞ்சான்னு அவ பதிவுல போட்டிருந்தத நான் மும்பாய் டயரி'ன்னு இங்க போட, ரெண்டே நாள்ல எனக்கு மறுபடி ஒரு மடல், இங்க்லீஸ்ல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு, தமிழ் பொண்ணாச்சே, யாரோ அவளோட உறவுக்காரங்க, என்மூலமா அவளோட பதிவை பார்த்துட்டு, அவளை கண்டிக்க, எனக்கு மெயில்ல வந்தது சனி, (இப்போ அந்த பதிவையே காணோம்.. பாவம் :-( ), அப்புறம் தமிழ்மணம் வந்து, அப்புறம் கொஞ்ச நாள்ல நம்ம இலக்கிய ஆசை கொஞ்சம் ரொம்பவே நம்மள நோண்டிவிட சரி சிறுகதை எதாவது எழுதுவோம்னு வென்னிலா கேக் எழுதி, அதுவேற நல்லாயிருக்குன்னு நாலு பேரு சொல்லி, இப்பொ அடுத்தது எழுதலாமான்னு ஒரு யோசனை இருக்கு, நடுவால கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியானதுல, சும்மா அதையும் இதையும் எழுதி பதிவ ஓட்டிட்டு, கடைசியா நிஜமா..??ன்னு 17ம் தேதி எழுதிட்டு போனது, இன்னைக்கு வந்து பார்த்தா.. அப்பு 19ம் தேதியோட நான் வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிருக்கு..

நான் முன்னமே வலைப்பூவில சொன்ன மாதிரி உருப்படியா எதும் எழுதனும்னு ஆசைபட்டு வரலைங்க, சும்மா பதிவுகள் படிக்க வந்த ஆளு தான் நான், சரி, பள்ளிக்கூடத்தோட தமிழ் எழுதறதுக்கு ஜூட் விட்டுடமே, சும்மா ஒரு பதிவுன்னு வச்சு எதாசது எழுதுவோம்னு விளையாட்ட ஆரம்பிச்சது.. இன்னைக்கு ஒரு வருஷம் ஆகிபோச்சு, இன்னமும் ஆரம்பிச்சப்போ என்ன எழுதறதுன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு பாருங்க, அந்த குழப்பம் அப்படியே இருக்குதுங்க.

இவனெல்லாம் பதிவு வச்சுகிட்டு, நம்மள தொல்லை பண்றானே, இதுல ஒரு வருஷம் ஆச்சுன்னு சந்தோஷம் வேற படுறானேன்னு, உங்களுக்கு என் மேல எதும் கோவம் வந்தாக்க.. நான் தமிழ்பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்க காரணமான ஐகாரஸ்பிரகாஷ், காசி , கே.வி.ராஜா, பி.கே.எஸ் என் பதிவுல முதல் முதலா பின்னூட்டம் குடுத்த மதி, 'மழை'ஷ்ரேயா, இன்னும் யாருனே தெரியாத ஆதித்யா, இவுங்களயெல்லாம் திட்டிக்கோங்க.






--
#97

Friday, June 17, 2005

நிஜமா..??

சன் டி.வி.'காரங்க 'தினகரன்க்ரூப்'பை வாங்கிட்டாங்களாம்??.. புதன்கிழமையே டீல் முடிஞ்சிருச்சாம்.. சன்.டி.வீ'யில இருக்கிற என் சகா ஒருத்தன் கிட்ட மதியம் பேசிட்டு இருந்தப்ப அவன் சொன்னது.. 99% உண்மையா இருக்கக்கூடய வாய்ப்பு இருக்கு..

ஏற்கனவே பாதி மக்களுக்கு சன் நியூஸ் தான் கதி, இனி பேப்பரும்..
scv'n கேபிள் நெட்வொர்க் துணையோட ஏற்க்கனவே எலக்ட்ரானிக் மீடியாவ கையகபடுத்தியாச்சு, இனி ப்ரிண்ட் மீடியாவுமா??

யாராவது உருப்படியா ஒரு போட்டியாளர் வாங்கப்பா.. இல்லாட்டி கூடிய சீக்கிரம் 'Tommorow never dies'ல வந்த மாதிரி கூட ஆகலாம்.. :-)

--
#96

Tuesday, June 14, 2005

ஆள் கூட்டத்தில தனியே :-)

'ஆள் கூட்டத்தில தனியே',... மம்முட்டி, மோஹன்லால், சீமா எல்லாம் நடிச்சு, எம்.டி-I.V.சசி காம்பினேஷன்ல வந்த மலையாள படம் அது. இந்த பதிவு அந்த படத்தை பத்தி இல்லைங்க, அதை பத்தி இன்னொரு நாளைக்கு எழுதுவோம். (நான் எழுதறத விட கே.வி.ஆர் எழுதினா நல்லா இருக்கும்..) சும்மா ஒரு விளம்பரத்துக்காக இந்த டைட்டில் அவ்ளோதான்.
ஊரு உலகத்துல பதிவு வச்சிருககிறவங்க எல்லாரும் ஆளாளுக்கு அஞ்சு பேரை கட்டி இழுத்து book meme வெளையாட்டு விளையாடி ஓஞ்சுட்டாங்க.
நம்மள யாரும் அந்த விளையாட்டுக்கு கூப்பிடலை, :-(, அதுக்காக..., நம்ம சும்மா விட்டுற முடியுமா என்ன, சொல்லுங்க?
நம்ம என்னைக்கு கூப்பிட்டு ஒரு பக்கம் போனோம், நம்மளா போயி 'நானும் வருவேன், ஆட்டைய கலைப்பேன்'ன்னு நிக்கிற ஆளு தான, அதுனால என் சார்பா என்னோட 'பொஸ்தக வாசிப்பு புலமை'ய நானும் ஊரு உலகத்துக்கு சொல்லிடலாம்னு முடிவு செஞ்சுட்டனுங்க.
(வேற வழி, பதிவுன்னு ஒன்னு வச்சுகிட்டு, அப்புறம் அதுல எதாவது உருப்படியா(..?) போடனுமில்ல, எத்தன நாளைக்கு தான் சும்மா வெறும் படமா போட்டு தள்ளுறது..?)

ஆகவே மகாஜனங்களே, இதோ உங்கள் பார்வைக்கு என்னுடைய 'புஸ்தக மீமீ'

---

என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை

இன்றைய நிலவரம் சரியா 46.
(எப்படியும் மாசம் ஒரு தடவை கோவை டவுன்ஹால் 'செல்வி' - பழையபுஸ்தககடைக்கும் நமக்கும் குடுக்கல் வாங்கல் இருக்கும்)

கடைசியாக வாங்கிய புத்தகம்

'புதுசு' :
மாலனின் சிறுகதை தொகுப்பு (எழில் செய்த சிபாரிசு)
காடு - ஜெயமோகன் (படிக்கலாமா வேண்டாமான்னு ஒரே யோசனையா இருக்கு)

'பழசு' :(செல்வி கடை உபயம்)
The Forerunner - Kahlil Gibran (மீனாக்ஸோட பதிவுகள்ல தான் இவர் நமக்கு அறிமுகமே)

வாசித்து கொண்டிருக்கும் புத்தகம்

காக்டெயில்
The Alchemy of Desire (இந்த ரெண்டையும் வச்சு என்னை பத்தி தப்பான அபிப்பராயத்துக்கு வந்துராதீங்க..:-( , எத்தேசயா நடந்த விஷயம் அது)
இந்த வார ஆனந்தவிகடன்
இந்த வார அவுட்லுக்
புதுசா நம்ம வண்டியில மாட்டுன பயோனீர் DEH-P6700MP சிஸ்டத்தோட யூசர் மேனுவல் (ஒன்னும் புரியவே மாட்டேங்குது..!)


கடைசியாக படித்து முடித்த புத்தகம்

ஜனகனமன - மாலன்
Glaucoma பத்தி அரவிந்த் ஹாஸ்பிடல்ல குடுத்த 6 பக்க 'துண்டு' பிரசுரம்


மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள்

என் செல்ல Rxன் RCபுக் (என் சுய சம்பாத்தியத்துல என் பேருல நான் ஆசைய வாங்கினது). என் பேங்க பாஸ்புக், இது ரெண்டும் தான் இதுல டாப் 1,2'ல வர வேண்டியது, ஆனா உங்க கோவத்துக்கு ஆளாக வேண்டாம்ங்கிறதுக்காக அதை விட்டுட்டு என் லிஸ்டை சொல்றேன்.

1.வாஷிங்டனில் திருமணம்
(அனேகமா டபுள் செஞ்சுரி அடிச்சிருப்பேன், அத்தனை தடவை படிச்சாலும் மறுபடியும் படிக்க சொல்லுது)

2.இரும்புக்குதிரைகள்
(twinkle, gokulam, ராணிகாமிக்ஸ்'ல இருந்து தடாலடியா 90ல இதுல இறங்கினேன். அதுக்கப்புறம் தான் ராஜேஷ்குமார், சுபா, பட்டுகோட்டை பக்கமெல்லாம் கூட போனேன்.. 2000க்கு அப்புறம் பாலகுமாரன் எழுதினத படிக்கிறதில்லைன்னு ஒரு சபதம் எடுத்திருக்கேன், கடைசியா 'வாஞ்சிநாதன்' பார்த்ததுக்கப்புறம் விஜயகாந்த் படங்களுக்கும் இதே நிலைமை தான்)

2.Yusuf Khan- Rebel Commander
(சேப்பாக்கத்துல சாயித் அன்வர் 194 அடிச்ச அன்னைக்கு திருவெல்லிகேணி ரோட்டுகடையில வாங்கின புஸ்தகம், ஒரு ரெண்டு மாசம் முன்னாடி வரை இருந்துச்சு, இப்போ எங்க வச்சேன்னு தெரியாம தேடிட்டு இருக்கேன், அதுல கிளார்க், யுசுப்கான், அவுங்க மேல்/கீழ் அதிகாரிகளுக்கு நடுவே எழுதிகிட்ட கடிதங்கள்... ம்ம்.. எப்படியாவது கண்டு புடிக்கனும்.. எடுத்து வச்சுகிட்டா 'மருதநாயகம்' வரும் போது உபயோகமா இருக்கும்)

3.Doctors - Erichsegal
(வேற ஒரு 'விஷயத்து'க்காக, சும்மா பிலிம் காட்ட வாங்கின புஸ்தகம்,..;-) , இன்னைக்கு வரைக்கும் பேவரிட் லிஸ்ட்'ல இருக்கு)

4.Kane & Abel - Jeffrey
(நிறைய பேருக்கு புடிச்ச புஸ்தகம், எனக்கும் புடிச்சிருக்கு, எங்கய்யனுக்கும்..!)

6.பொன்னியின்செல்வன்
( எனக்கென்னவோ இதைவிட 'பார்த்திபன் கனவு' ரொம்ப புடிக்கும்னாலும், ஹிஸ்ட்ரி மேடம் மனசு வருத்தப்படுமேன்னு இதை இங்க ஆறாவதா சேர்த்திருக்கேன்.. ஹிஸ்ட்ரிமேடம் - எங்கம்மா!!)

புடிக்காத புத்தகங்கள் (இது நம்ம சொந்த சரக்கு)

சுய முன்னேற்றம் பத்தின புத்தகங்கள். நமக்கும் இந்த மாதிரி புத்தகங்க ரொம்பவுமே அலர்ஜிங்க..
எல்லாரும் பெருமையா பேசி, நீ இன்னும் படிக்கலையா'ன்னு கொஞ்சம் கேவலமா கேட்டதுனால தான் 'you can win - shivkera' படிச்சேன்னா பாருங்களேன்..
(ஒரு வேளை நமக்கு புடிக்காத 'முன்னேற்றம்' பத்தி இருக்கிறதுனாலயோ என்னவோ ;-) )

கடைசியா ஒரு அஞ்சு பேர இதுல இழுத்து விடனுமாம்.... யாரு விட்டு போயிருக்காங்க கூப்பிட.. போங்கப்பா..

--
அப்பா.. இப்பத்தான் நிம்மதி.. !!

--
#95

--

அப்டேட்:

(சற்று முன் வந்த நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...)

அஞ்சு நாள் முன்னாடியே கோபி நம்மள இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டிருக்காரு, அதை கவனிக்காம யாரும் கூப்பிடலைன்னு புலம்பியிருக்கேன்.. .. ச்சே.. ஒரே பப்பி ஷேம்மா இருக்குதுங்க.. :-(